சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்துத் துன்புறுத்தப்பட்டு படுகொலையான தந்தை, மகன் வழக்கில், 105 சாட்சிகள், 38 சான்றாவணங்களை உள்ளடக்கிய 2027 மற்றும் 400 பக்கங்கள் கொண்ட இரு வேறு குற்றப்பத்திரிகைகளை சி.பி.ஐ. தாக்கல் செய்ய, வழக்கு விசாரணையைத் தொடங்கியது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம். 50 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், 51வது சாட்சியாக ஆஜரானார் சி.பி.சி.ஐ.டி. அதிகாரி அனில்குமார். இவரின் சாட்சியம் பல அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

ss

கொரோனா காலத்தில் நிபந்தனையை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் 19.6.2020 அன்று விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலை யத்தார் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கைது நடவடிக்கைக்குப் பிறகு, கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் இருவரும் அடைக்கப் பட்டனர். சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், மாவட்ட எஸ்.பி., கலெக்டர் மற்றும் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், "மூச்சுத்திணறலால்' இறந்தனர் என மூடி மறைத்தனர். நக்கீரனோ, சிறைச் சாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உடம்பிலுள்ள காயங்கள் குறித்த மருத்துவரின் சிறைக்குறிப்பை வெளியிட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டதாலேயே இருவரும் இறந்தனர் என்றது. அதன்பின் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கி, சி.பி.ஐ. விசாரணையாக மாறி, கொலைக்குற்றவாளிகளாக ஸ்ரீதர், பாலகிருஷ் ணன், ரகுகணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ்பிரான்சிஸ், வெயிலுமுத்து மற்றும் பால்துரை ஆகியோர் அடையாளம் கண்டறியப்பட்டனர். இதில், கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பால்துரை மரணமடைந்தார்.

ss

Advertisment

இதேவேளையில், "ஸ்டேஷனில் சம்பவத் தின்போது முதலில் பென்னிக்ஸ் மீது தாக்குதல் நடத்தியவர் பால்துரை. தனக்கு கீழிருந்த அதிகாரிகளை இருவர் மீதும் தாக்குதல் நடத்தத் தூண்டியவர் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர். ரத்தம் வரும் வரைக்கும் மட்டுமல்லாது, ரத்தம் வந்த பின்னரும் நிறுத்தாமல் கொடூரமாகத் தாக்கியது எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ். காவலர்கள் முருகன், தாமஸ், முத்து ராஜா, சாமதுரை, வெயிலுமுத்து ஆகியோர் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனின் கொடூரத் தாக்குத லுக்கு உதவியுள்ளனர் (பிடித்துக் கொள்வது). மேலும், காவலர்கள் முருகன், தாமஸ், முத்து ராஜா, சாமதுரை, வெயிலுமுத்து ஆகியோரும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது தொடர்ச்சி யாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.' எனக் கோவில்பட்டி ஜே.எம்.1 பாரதிதாசனின் விசாரணை அறிக்கை தங்களுக்கு உதவியதாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது சி.பி.ஐ.

கொடூரக் கொலை வழக்கில் 07.02.2024 அன்று 51வது சாட்சியாக அழைக்கப்பட்டார் அப்போதைய சி.பி.சி.ஐ.டி.யின் டி.எஸ்.பி.யும், ssதற்போதைய திருப்பூர் மாநகர உதவி ஆணையரு மான அனில்குமார். ஆனால், 29.02.2024 அன்றே அவர் ஆஜரானார். ஏறக்குறைய 36 தடவை சாட்சிக்காக அழைக்கப்பட்டும், வேலை இருக் கின்றது என அவர் தட்டிக்கழித்திருக்கிறார். இந்த நிலையில், வழக்கினை நீர்த்துப்போகச் செய்யும் முடிவில் இருக்கின்றார் டி.எஸ்.பி. அனில்குமார் என டி.ஜி.பி.க்கு புகாரைத் தட்டியிருக்கிறார்கள் கொலையுண்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர். இது டி.எஸ்.பி. அனில்குமாரை சிக்கலில் ஆழ்த்த, கடைசியாக 26.09.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, தன்னுடைய சாட்சியத்தை முடித்துக் கொடுத்திருக்கின்றார். இன்னென்ன தேதிகள் எனப் பல தடவை விசாரணைக்கு அழைக்கப் பட்டும், 17 முறை மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவரின் சாட்சியம் வழக்கிற்கு வலு சேர்த்துள் ளது என்பது மறுக்கவியலாத உண்மை. அவ ருடைய சாட்சியம் மற்றும் குறுக்கு விசாரணை யிலிருந்து, "01-07-2020ஆம் தேதியன்று சாத்தான்குளம் காவல் நிலையத்தில் எந்தெந்த காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள் என்ற விபரத்தை தெரிந்துகொண்டேன். டி.எஸ்.பி. கலைக்கதிரவன்தான் இந்த வழக்கின் முதல் புலன் விசாரணை அதிகாரி. 28-06-2020ஆம் தேதி முதல் 30-06-2020ஆம் தேதிவரை கலைக்கதிரவன் விசாரணை செய் துள்ளார். அவருடைய விசாரணை கால கட்டத்தில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் முகாமிட்டு விசாரித்து வருவதாகவும், அதனால் கலைக் கதிரவன் சாட்சிகளை விசாரணை செய்ய வில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ss

Advertisment

கோவில்பட்டி சிறைச்சாலை கண்காணிப் பாளர் சங்கரிடம், ஜெயராஜ் மற்றும் பென் னிக்ஸ் ஆகியோர் சிறையில் எந்த அறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும், அடைக்கப்பட்ட காலகட்டத்தில் முறையாக உணவு எடுத்தார்களா எனவும் தெரிந்துகொண் டேன். இரவுச் சாப்பாடு மாலை 5.00 மணிக்கு கொடுக்கும்போது மேற்படி சிறைவாசிகள் நடந்துவந்து சாப்பாடு வாங்கிச் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார். 19-06-2020 முதல் 22-06-2020 வரை கொரோனா தொற்று கடுமையாக நிலவிவந்த காலம். கோவில்பட்டி கிளைச்சிறையானது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கொரோனா குவாரண்டைன் சிறையாக மாற்றப்பட்டிருந்தது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்படும் சிறைவாசிகள், 15 நாட்கள் கோவில்பட்டி கிளைச்சிறையிலடைக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என்று தெரிந்த பின்புதான் அவர்கள் பாளையங் கோட்டை சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று சங்கர் கூறியுள்ளார். சிறைவாசிகள் அனுமதிப் பதிவேட்டில் கண்டுள்ள சரத்துக்கள் குறித்துப் பதிவு செய்துள்ளேன்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் 20.06.2020ஆம் தேதியன்று கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்ட போது பென்னிக்ஸுக்கு இரண்டு புட்டத்திலும் ரத்தம் கசிந்த நிலையில் உள்ளது என்றும், இரண்டு கை மணிக்கட்டிலும், கால் பாதத் திலும் வீக்கம் காணப்படுகிறது என்றும், ஜெயராஜுக்கு இரண்டு புட்டத்திலும் ரத்தம் கசிந்த நிலையில் காயமும், உயர் இரத்த அழுத்தம் இருப்பதாகவும், நீரிழிவு நோய் இருப்பதாகவும் கூறியதாகக் காணப்படுகிறது என்று சொன்னது சரிதான். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவருடைய பிணக் கூராய்வு அறிக்கையை நான் பார்வையிட்டேன். சிறைவாசிகள் அனுமதிப் பதிவேட்டில் ஜெய ராஜ், பென்னிக்ஸ் இருவருக்கும் காணப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள காயங்களைத் தவிர முதல் நிலை பிணக்கூராய்வு அறிக்கையில் அதிகமான காயங்கள் காணப் பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட் டுள்ளது. அவர்கள் லுங்கியில் ரத்தக்கறை காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

ss

காவல் நிலையத்தில்அனைத்து காவலர் களையும் அழைத்து, எதுவும் நடக்காதது போல் காண்பித்துக்கொள்ள வேண்டும் என்றும், ஸ்டேசனில் யாரும் அடிக்காதது போல் காண்பித்துக் கொள்ள வேண்டுமென் றும், 1ஆம் எதிரியான ஸ்ரீதர் சொன்னதாக சாட்சி ரேவதி என்னுடைய விசாரணையில் கூறவில்லை. கோவில்பட்டி கிளைச் சிறைச் சாலையில் சம்பவம் நடந்ததாக இருக்கட்டும் என்றும், அங்குதான் அவர்கள் இறந்துள்ளார் கள் என்றும், 1ஆம் எதிரியான ஸ்ரீதர் கூறியதாக சாட்சி ரேவதி என்னுடைய விசாரணையில் கூறவில்லை. சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை அழித்துவிட வேண்டுமென்று ஸ்ரீதர், தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயிலு முத்து ஆகியோ ரிடம் கூறியதாக சாட்சி ரேவதி என்னுடைய விசாரணையின் போது கூறவில்லை. ஆனால் அன்று இரவு 9.30 மணிக்கு கோவில்பட்டி ஜெயிலிலிருந்து பென்னிக்ஸ் இறந்துவிட்டதாக போன்வந்தது, ஸ்டேசனில் இருந்த இன்ஸ்பெக் டர் வெளியே வந்து, பாலகிருஷ்ணன் எஸ்.ஐயிடம் சொன்னாரு, ஏதாவது பிரச்சனை வருமுன்னு வீடியோ, கேமரா எங்கே என்று கேட்டார் என்று சாட்சி ரேவதி எனது விசாரணையில் கூறியுள்ளார்'' என்றுள்ளது.

"வழக்கில் ஜெயிக்க வேண்டாம். இப்போ தைக்கு ஜாமீன் கிடைத்தாலே போதுமானது' என சாத்தன்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதானவர்கள் போராடி வந்த நிலையில், தற்போது அதற்கும் வாய்ப்பில்லை என்பதாகவுள்ளது திருப்பூர் மாநகர உதவி ஆணையர் அனில் குமாரின் சாட்சியம்!