""ஹலோ தலைவரே, வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையா, எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான பவர் யுத்தம் மறுபடியும் உச்சத்தை எட்டியிருக்கு.''

""இரண்டு பேருமே, சந்தர்ப்ப வசத்தால் முதல்வர் பதவியை எளிதாக அடைஞ்சவங்க. அதனால, ஒருத்தருக்கொருத்தர் முதல்வர் யுத்தத்தில் முட்டி மோதுவது வழக்கம்தானே?''

e

""உண்மைதாங்க தலைவரே, ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்னைக்கு எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையில் பவர் யுத்தம் வெடிச்சப்ப, அமைச்சர்கள் டீம் மாறி மாறி தூதுபோய் சமாதான ஒப்பந்தத்தை வெளியிட வச்சிது. இருந்தும், இந்த ரெண்டு பேராலும் ஒருத்தரை ஒருத்தர் ஜீரணிச்சிக்க முடியலை. இந்த நிலையில், எடப்பாடி, ஓ.பி. எஸ்.சைப் பற்றிக் கவலைப்படாமல் மறுபடியும் தனி ஆவர்த்தனம் செய்ய ஆரம்பிக்க, அவரை ஓ.பி.எஸ்., கடுமையாக விமர்சனம் பண்ணத் தொடங்கினார். இதுக்கு எடப்பாடித் தரப்பு பகிரங்க மாவே பதிலடி கொடுக்க ஆரம்பிச்சிது. குறிப்பா, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களமிறங்கி, மீண்டும் எடப்பாடியாரே முதல்வராகனும் என்றும், அவரைக் குறை சொல்பவர் களின் நாக்கு அழுகிப் போய்விடும் என்றும் அங்கங்கே பரபர போஸ்டர்களை ஒட்ட வச்சார்.''

Advertisment

""ஆமாம்பா, இது ஆளுங்கட்சிக்குள் நில நடுக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிச்சிடுச்சே...''

""ஆமாங்க தலைவரே, அதனால்தான் எடப்பாடி யையும் ஓ.பி.எஸ்.சையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் மாஜி மந்திரியான கே.பி.முனுசாமி களமிறங்கினார். முதல்வர் எடப்பாடியை சந்திச்சி, "ஆட்சி லகான் உங்களிடம் இருக்கிற கெத்தில், நீங்க ஒருபக்கம் ஓவர்டேக் பண்றீங்க. அதேபோல் கட்சியின் லகானைக் கையில் வச்சிருக்கும் ஓ.பி.எஸும், தன் ரூட்டில் ஓவர்டேக் பண்ண ஆரம்பிச்சா என்ன ஆகும்? அதனால் நீங்கள் இருவரும் இரட்டை இலை போல் இணைந்து செயல் படனும்'னு அட்வைஸ் செய்திருக்கார்.''

""இதுக்கு எடப்பாடியின் ரியாக்ஷன் என்னவாம்?''

Advertisment

""இதை அமைதியாகக் கேட்டுக்கிட்ட எடப்பாடி, "அ.தி.மு.க. ஆட்சி நிலைக்குமான்னு கேட்டவங்க எல்லாம் இன்னைக்கு வாயைப் பொத்திட்டாங்கன்னா, அதுக்குக் காரணம் நான்தான். என் திறமையால், என் இமேஜையும் கட்சியின் இமேஜையும் நான் ரொம்பவே உயர்த்தி இருக்கேன். அதனால் அடுத்தும் என் தலைமையில்தான் ஆட்சி அமையும்னு ஓ.பி. எஸ்.சை வெளிப்படையாக சொல்லச் சொல்லுங்கள். இல்லேன்னா, இப்பவே அவர் எனக்கு எதிரா பழைய மாதிரி தர்ம யுத்தத்தை நடத்தட்டும். இரண்டில் ஒண்ணு பார்த்திடலாம்'னு காட்டமாகவே சொல்லியிருக்கார். இதையறிந்த ஓ.பி.எஸ்., "என் பலம் தெரியாமல் என்னை எடப்பாடி சீண்டறாரா? நான் நினைச்சா, தர்ம யுத்தத்தை மட்டுமல்ல சர்வ யுத்தத்தையும் நடத்துவேன்'னு சொன்னதோட, மாவட்டம் தோறும் உள்ள தன் ஆதரவாளர்களை எடப்பாடிக்கு எதிராக அணி திரட்டத் தொடங்கிட்டாராம்.''

""கொங்கு பெல்ட்டில் தனக்கிருக்கும் செல்வாக்கை எடப்பாடி ரொம்பவும் நம்பியிருக்காரே?''

""ஆமாங்க தலைவரே... செப்டம்பர் 9ந் தேதி சென்னையில் அமைச்சர் வேலுமணி வீட்டில் கொங்கு லாபியோட ரகசிய கூட்டம் நடந் திருக்கு. அதற்காக, வேலுமணி வீடு இருக்கிற ஏரியாவையே கொரோனா கன்டைன் மெண்ட் ஏரியா போல முடக்கிட்டு, 4 மணி நேரம் ஆலோசனை நடந்திருக்குது. நாம ஏற்கனவே சொன்ன எஸ்.எம்.எஸ். டீமும் இருந் திருக்கு. சிட்டியில் முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவரும் இருந் திருக்கிறார். எடப்பாடிதான் முதல்வர் வேட் பாளர்னும், ஓ.பி.எஸ்.ஸூக்கு வெயிட்டா செட்டில் பண்ணிடுவோம்னு ஆலோசனை நடந்திருக்குது.''

""எடப்பாடியின் சொந்த பந்தங்கள் இந்த நேரத்திலும் ஜரூராக் கல்லாக் கட்டிக்கிட்டு இருக்குதே?''

""தேர்தல் வரப்போவதால் எடப்பாடித் தரப்பு, அரசாங்கத்தின் மூலம் சாதிக்க வேண்டியதை எல்லாம் வேக வேகமா சாதிக்கத் தொடங்கிடிச்சி. இப்ப திருச்சியில் 42 கோடி மதிப்பிலும், கோவையில் 68 கோடி மதிப்பிலும் ஐ.டி. பார்க்குகளை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கு. திருச்சியில் பொ.ப.து. சூப்பரண்டண்ட் என்ஜினியராக இருக்கும் பிரகாசத்தை லோக்கல் ஒப்பந்ததாரர்கள் அணுகி, ஐ.டி. பார்க் வேலையை, முறைப்படி டெண்டர் விடனும்னு கோரிக்கை வச்சிருக்காங்க. அதுக்கு அவர், அந்த வேலையை சி.எம்.மின் உறவினரான பி.எஸ்.கே. கன்ஸ்ட்ரக்ஷன் ராமலிங்கத்திற்குக் கொடுத்தாச்சுன்னு கைவிரிச்சிட்டாராம்.''

""ம்...''

""எடப்பாடியின் நம்பிக்கைக்குரியவரான வைத்திலிங்கம் எம்.பி., அண்மையில் டெல்டா மாவட்டங்களின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டிருக்கார். தேர்தல் நேரத்தில் அந்தப் பகுதிக்கான வேட்பாளர் களைத் தேர்வுசெய்யும் அதிகாரமும் அவருக்குத் தரப்பட இருக்குதாம். அதனால் இப்பவே அவரை அ.திமு.க. பிரமுகர்கள் விறுவிறுப்பா கிரிவலம் வர ஆரம்பிச்சிட்டாங்க. அவருடைய பிறந்த நாள்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிய அ.தி.மு.க.வினர், அவருக்கு வெள்ளி வாள் கொடுத்தும் குஷிப்படுத்தியிருக்காங்க.''

""சசிகலா தரப்பிலும் பரபரப்பு தெரியுதே...''

""தான் நம்பிய பலரும் இப்ப தனக்கு உதவாததில் ரொம்பவே நம்பிக்கை இழந்த சசிகலா, இப்ப கடவுளையும் ஜாதகத்தையும், கோள்களையும்தான் அதிகமா நம்பறாராம். கடந்த வாரம் ராகு கேது பெயர்ச்சியின் போது, சசியின் உத்தரவின் பேரில் மன்னார்குடித் தரப்பு, தமிழகம் முழுக்க இருக்கும் அத்தனை முக்கியமான கோயில்களிலும் அதிகாலை நேரத்தில் சிறப்பு பூஜைகளைப் பண்ணியிருக்கு. சசிகலா விரைவில் வெளியில் வரனும் என்பதோடு அதிகாரம் அவர் கைக்கு வரனும்ங்கிற பிரார்த்தனை யோடும்தான் இந்த பூஜைகள் நடத்தப் பட்டிருக்குதாம்.''

ss

""சசிகலா ரிலீஸ் பற்றி முன்னுக்குப் பின் தகவல்கள் வந்துக்கிட்டிருக்குதே?''

""வெளியே தெரியும் பரபரப்பு வேறு... உள்ளே நடக்கும் நிலவரங்கள் வேறு. சிறைத் தண்டனையோடு அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை 10 கோடியை அவர் தரப்பு இன்னும் கட்டலை. அதனால், அபராதத்தை கட்டறீங்களா? இல்லை, அதற்கான தண்டனைக் காலத்தையும் கூடுதலா அனுபவிக்கறீங்களான்னு கர்நாடக சிறைத்துறை சசிகலாவிடமும், அவரோடு சிறையில் இருக்கும் இளவரசி, சுதாகரன் ஆகியோரிடமும் கேட்டிருக்கு. சசிக்கான அபாராதத் தொகையை கட்சிக் கணக்கில் காட்ட முடியுமாங்கிற ஆலோசனைகள் நடக்குது. இதேபோல் இளவரசிக்கான அபராதத் தொகையை எந்தக் கணக்கில் காட்டுவதுன்னும் ரூட் போடப்படுது. அதே சமயம், சுதாகரனுக்கு அபராதம் கட்டறது பற்றி சசியிடமிருந்து எந்தத் தகவலும் இல்லையாம்.''

""சசி ரிலீஸ் தேதி பற்றி தகவல் உண்டா?''

""தலைவரே... சிறையில் சசிகலாவுடன் நேரடி- மறைமுக சந்திப்புகள் தொடர்ந்துக் கிட்டுத்தான் இருக்குது. தமிழகத்தோடு தொடர்புடைய கர்நாடக ஏ.டி.ஜி.பி.தான் இந்த சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறாராம். இந்த சந்திப்பு மூலமா சசியுடன் டீல் போடப்பட்டி ருப்பதாகவும் சொல்றாங்க. ஒரு நைட் நேரத்தில், ஓ.பி.எஸ் சைடிலிருந்து ஆட்கள் போய் சிறையில் சசிகலாவை சந்திச்சிருக்காங்க. அதுபோல எடப் பாடி ஆதரவாளரான அமைச்சர் வேலுமணி தரப்பில் முரளிங்கிறவர் பெங்களூருக்கு போய் சிறையில் சசிகலாவை சந்திச்சிருக்காரு. சமீபத்தில் சசியின் பினாமி சொத்துகள்னு 300 கோடி ரூபாய் சொத்துகள் சிக்கியதில், கொடநாடு எஸ்டேட் இன்சார்ஜ் நடராஜனும், ஸ்ரீபெரும்புதூர் எக்ஸ் எம்.எல்.ஏ பெருமாளும்தான் காரணம்னு சசிக்கு கோபமாம். அவங்களும் போய்ப் பார்த்திருக் காங்க. தன்னோட சொந்தக்காரங்களே தனக்கு எதிரா இருப்பதா சசிகலா சந்தேகப்படுறாராம். இந்த நேரத்தில்தான் இரண்டு முக்கியமான ஆட்கள் அவரை சந்திச்சிருக்காங்க.''

""யார் யாராம்?’’

rr

""பா.ஜ.க.வை சேர்ந்த சுப்ரமணிய சாமியும், அதே கட்சியின் ஆசிர்வாதம் ஆச்சாரியும் அந்த ஏ.டி.ஜி.பி மூலமாத்தான் சிறையில் சசிகலாவை சந்திச்சாங்களாம். அபராதத் தொகை, அ.தி.மு.க. நிலவரம், தினகரன் கட்சி நடத்துற விதம் எல்லாத்தைப் பற்றியும் பேசப்பட்டிருக்கு. அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார்னு முடிவாகி, கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை சீட்டுன்னு உறுதியானபிறகுதான் நிலைமைகள் சீரடையும்னும், அதனால பிப்ரவரி கடைசி வாக்கில்தான் சசி ரிலீஸ் ஆவார்னும் சந்திப்புகளில் தொடர்புடையவங்க சொல்றாங்க.''

""திமு.க.வைச் சேர்ந்த மாஜி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் அமலாக்கப்பிரிவால் குறிவைக்கப்பட்டது பற்றி தொடர்ந்து நாம் பேசிவந்தது, உண்மையாயிடுச்சே?''

""அமலாக்கத்துறையும் சி.பி.ஐ.யும் ஜெகத்ரட்சகன் தொடர்பான விவகாரங்களைத் துருவி, பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி வைத்திருப்பது குறித்தும், இந்த சிக்கல்களில் இருந்து விடுபட நினைத்த ஜெகத், சக தி.மு.க. பிரமுகர்களோடு சேர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திச்சது பற்றியும், அந்த முயற்சி சக்சஸ் ஆகாதது பற்றியும் கூட நாம் பேசிக்கிட்டோம். அவர் பெயரிலும் அவர் மகன் சந்தீப் ஆனந்த் பெயரிலும் சிங்கப்பூரில் முதலீடு செய்யப் பட்டதைக் கண்டுபிடித்த அமலாக்கத்துறையினர் ஏறத்தாழ 89 கோடி ரூபாய் மதிப்பிலான அவர் சொத்துக்களை 12-ந் தேதி அதிரடியாக முடக்கிவிட்டனர்.''’’

""இன்னும் அதிரடி தொடரும் போலிருக்கே?''

jj

""ஆமாங்க தலைவரே, இலங்கையில் ஜெகத் தரப்பு பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் செய்திருக்கும் முதலீட்டுக்கான ஆதாரத்தையும் அமலாக்கத்துறை திரட்டி வச்சிருக்கு. அதேபோல் குடும்பப் பெண் உறுப்பினர் ஒருவரிடமிருந்து விலகி இருப்பதற்காக ஜெகத் 10 ஆயிரம் கோடி ரூபாய்வரை கொடுத்ததையும் அமலாக்கத்துறை டீம் கண்டுபிடித்து வாய் பிளந்திருக்கு. ஜெகத் திடம் விவரங்களைப் பெற, அமலாக்கத்துறை ரொம்ப சிரமப்படலையாம். விசாரணையில், அவரே பாசுரங்கள் மாதிரி சரளமா எல்லா விவரத்தையும் சொல்லிட்டாராம். இதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் இருக்குமாம்.''

hh

""2ஜி விவகாரத்திலும் அமலாக்கத்துறை அதீத ஆர்வம் காட்டுதே?''

""சட்டமன்றத் தேர்தல் நெருங்குதே... 2ஜி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்துவரும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரஜேஷ் சேத்தி நவம்பர் 30-ல் ஓய்வு பெறுவதற்குள், வழக்கை முடித்து, தீர்ப்பைப் பெறுவதில் தீவிரம் காட்டுகின்றன சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும். ஆ.ராசாவும் கனிமொழி யும்தான் அவங்க டார்கெட். குற்றம் சாட்டப் பட்டவர்கள் தரப்பு வழக்கை நீட்டிக்க முயற்சிக் கக் கூடாதுங்கிறதால, அமலாக்கத்துறையும் சி.பி.ஐ.யும் தினசரி விசாரணையை நடத்தவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கேட்டி ருக்குது.''

""உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுபடியும் அட்மிட்னு தகவல் வந்ததே?''

""கொரோனா தொற்றிலிருந்து மீண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, 12-ந் தேதி நள்ளிரவு 11 மணியளவில் மறுபடியும் மூச்சுத்திணறல் ஏற்பட, அவரை அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அட்மிட் செய்து, தீவிர சிகிச்சை கொடுக்க ஆரம்பிச்சாங்க. பிரதமர் மோடி ரொம்ப அக்கறையோடு, டாக்டர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு சிகிச்சை முறைகளை விசாரிச்சிக்கிட்டே இருந்தாரு.''

""நானும் ஒரு முக்கியமான தகவலை சொல்றேன்.. சமீபத்தில் தமிழக மந்திரி பற்றி கேரளப் பெண்மணி பேசிய முதல்கட்ட பரபரப்பு வீடியோ வந்ததே... அந்த விவகாரத்தில் அந்தப் பெண்மணியின் அடுத்த கட்ட மிரட்டல் அதிர வைக்கிறதா இருக்குதாம். ஒரு காலை நேரத்தில் நடந்த விவகாரம் தொடர்பா, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் மேலே மோனிகா லெவன்ஸ்கி கொடுத்த புகார் போல, ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி ஒரு கை பார்க்காமல் விடமாட் டேன்னு சவால் விடுறாராம் அந்தப் பெண்மணி.''