கடந்த சில தினங் களுக்கு முன்பு திருச்சி குளித்தலை பகுதியில் செம் மரங்களைக் கடத்திச் சென்ற ஒரு கும்பலை மடக்கிப்பிடித்து காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அந்த கடத்தலின் பின்னணியை போலீசார் புலனாய்வு செய்துவருகின் றனர்.
சசிகலாவின் உறவினர் இளவரசி மகன் விவேக்கின் மாமனார் பாஸ்கரன், சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.
இவர் மீது செம்மரக்கடத்தல் தொடர் பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ஆந்திர போலீசார் செம்மரக் கடத்தல் வழக்கில் பாஸ்கரனை கைதுசெய்தனர். இதையடுத்து பாஸ்கரன் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த நிலையில் தான் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வாரம் பாஸ்கரன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்திவந்த பர்னிச்சர் கடையில் ரூ.48 கோடி மதிப்பிலான செம்
கடந்த சில தினங் களுக்கு முன்பு திருச்சி குளித்தலை பகுதியில் செம் மரங்களைக் கடத்திச் சென்ற ஒரு கும்பலை மடக்கிப்பிடித்து காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். அந்த கடத்தலின் பின்னணியை போலீசார் புலனாய்வு செய்துவருகின் றனர்.
சசிகலாவின் உறவினர் இளவரசி மகன் விவேக்கின் மாமனார் பாஸ்கரன், சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.
இவர் மீது செம்மரக்கடத்தல் தொடர் பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ஆந்திர போலீசார் செம்மரக் கடத்தல் வழக்கில் பாஸ்கரனை கைதுசெய்தனர். இதையடுத்து பாஸ்கரன் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த நிலையில் தான் மத்திய புலனாய்வுப் பிரிவினரால் கடந்த வாரம் பாஸ்கரன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்திவந்த பர்னிச்சர் கடையில் ரூ.48 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளைப் பறிமுதல்செய்தனர். விடிய விடிய விசாரணை செய்தபின்னர் பாஸ்கரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
சசிகலாவின் உறவினர் என்பதால், கடந்த ஆட்சிக் காலத்தில் பல வழக்குகளிலி−ருந்து தப்பித்துவந்துள்ளார் பாஸ்கரன். ஆந்திர செம்மரக் கடத்தல்காரர்கள் இவரை கட்டை பாஸ்கரன் என்றே அழைத்துவந்துள்ளனர். இதெல்லாம் பழைய விவகாரங் கள். கரூர் மாவட்டம் குளித்தலை காவல் ஆய்வாளர் காசி பாண்டியனுக்கு செம்மரக் கடத்தல் பற்றி சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனை அவர் வனத்துறைக்குத் தெரிவித்துள்ளார். மாவட்ட வன அலுவலர் சரவணன் உத்தரவின் பெயரில் வனஅலுவலர் தண்டபாணி. வனவர்கள் சாமியப்பன், கோபிநாத் ஆகியோர் குளித்தலை தெப்பக்குள தெருவிலுள்ள செல்லப்பாண்டியன் என்பவருடைய வீட்டுக்குச் சென்று தரைத் தளத்திலுள்ள அவருடைய இரும்பு குடோனில் பதுக்கிவைத்திருந்த 590 கிலோ எடையிலான பல லட்சம் மதிப்புவாய்ந்த 21 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
செம்மரக்கட்டைகளைப் பதுக்கிவைத்திருந்த செல்லப் பாண்டியனை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மணப்பாறை சிறையில் அடைத்தனர். கரூர் மாவட்ட வரலாற்றிலேயே செம்மரக் கடத்தல் சம்பந்தமான வழக்கு எந்த காவல் நிலையத்திலேயும் பதிவாகவில்லை. இதுதான் முதல்முறை என்பதால் வனத்துறை அதிகாரிகள் செல்லப்பாண்டியனிடம் விசாரித்துள்ளனர்.
செல்லப்பாண்டியனோ தூத்துக்குடியிலுள்ள தன் நண்பர் ஒருவரிடமிருந்து வாங்கியதாகச் சொல்லி−யிருக்கிறாராம். சசிகலா உறவினர் பாஸ்கரன் கைதான விசயத்தை தொடர்புபடுத்தி இந்த செம்மர கடத்தல் விவகாரத்தில் குளித்தலை மற்றும் கிருஷ்ண ராயபுரம் அ.தி.மு.க. வி.ஐ.பி.களுக்கும் பங்கிருப்பதாகக் கூறப் படுகிறது.
இதுசம்பந்தமாக குளித்தலை ஆய்வாளர் காசிபாண்டிய னிடம் பேசினோம். "எங்களுக்கு தகவல் வந்ததன் பெயரில் குடோனில் சென்று பார்த்தோம். செம்மரக்கட்டைகள் இருந்தது.
செல்லப்பாண்டியனிடம் கேட்டபோது, நண்பர் ஒருவர் மூலமாக கஸ்டம்ஸில் இருந்து குறைந்த விலையில் ஏலத்துக்கு எடுத்ததற் கான ஒரு அத்தாட்சிக் கடிதத்தைக் காட்டினார். பின்னர் நாங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டோம்''’ என்றார்.
வனவர் தண்டபாணியோ, "செம்மரக்கடத்தல் சம்பந்த மாக செல்லப்பாண்டியன் மீது வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துவிட்டோம். அவர் வைத்திருக்கும் அத்தாட்சிக் கடிதத்தில் செம்மரம் என்று இல்லை. பல ஜாதி மரம் என்றே உள்ளது. இது சம்பந்தமாக நாங்கள் கஸ்டம்ஸ் அலுவலகத் துக்கு என்ன மரம் விற்பனை செய்துள் ளீர்கள்? என்று எழுதிக் கேட்க உள்ளோம்.
அவர்கள் கொடுக்கும் பதிலை வைத்து தான் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்.
அதேபோல் செம்மரக்கட்டையை நண்பர் மூலமாக ஏலத்தில் எடுத்து குடோனில் பதுக்கவேண்டிய அவசியம் என்ன? சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகம் வழியாகத்தான் கடல் வழியே செம்மரக் கட்டைகள் கடத்தப் படும். அப்படி கடத்துவதற்கு ஏதுவாக பதுக்கினாரா? குளித்தலையில் பதுக்கவேண்டிய அவசியம் என்ன? இவர் பரம்பரை கடத்தல்காரரா? அல்லது புது கடத்தல்காரரா? பரம்பரை கடத்தல்காரர் என்றால் பின்னணியில் ஒரு பெரிய நெட்வொர்க்கே இருக்கும். இதில் அ.தி.மு.க.வினருக்கு பங்கு இருக்கின்றதா என்பது கஸ்டம்ஸில் இருந்து வரும் பதிலைப் பொறுத்து, அதன்பிறகு நடக்கும் விசாரணையில் தெரியவரும்''” என்றார்.