ராங்கால்-தீபாவிடம் அடிவாங்கிய சசிகலா! -புகையும் பழைய பகை ஓ.பி.எஸ். தலைமையில் போட்டி அ.தி.மு.க.! -குஜராத்தில் பா.ஜ.க. போட்ட அதிரடி பிளான்! திடீர் மாற்றம்! திகைக்கும் ராஜ்பவன்

rr

"ஹலோ தலைவரே, சமீப நாட்களாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ராஜ்பவனையே திகைக்க வச்சிருக்கு.''

"ஆமாம்பா, சனாதனவாதின்னு வர்ணிக்கப் பட்ட கவர்னர் ரவி, இப்போ சமாதானவாதியா அவதாரம் எடுத்துக்கிட்டு இருக்காரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, சனாதானத்தை உயர்த்திப் பிடித்து, ஆளுங்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்தவர்தான் கவர்னர் ரவி. அதனாலேயே இவரைத் திரும்பப் பெறணும்னு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதி வரை சென்று புகார்க் கடித மே கொடுத்திருக்கின்றன. இதனால் கொஞ்சம் அரண்டுபோன கவர்னர், தன் போக் கில் இருந்து மாறு பட்டது போல் நடந் துக்க ஆரம்பிச்சிருக்கார். தமிழக அரசிடமும், முதல்வர் ஸ்டாலினிடமும் தன் முரண் முகத்தைக் காட்டிவந்த அவர், உதயநிதியின் பதவி ஏற்பு விழாவில், ரொம்பவும் நட்புணர்வைக் காட்டி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி னார்.''”

"இதன் தொடர்ச்சி யாகத்தான் தன்னை மத நல்லிணக்கவாதியாகவும் கவர்னர் காட்டு கிறாரா?''”

"ஆமாங்க தலைவரே, சமூக நல்லிணக்கத்தின் பக்கம் தான் இருப்பது போல் காட்டிக்கொள்ள நினைக்கும் கவர்னர், வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, 500 கிறிஸ்துவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து விருந்தளிக்கத் திட்டமிட்டிருக்கிறார். அதேபோல் சமீபத்தில், இஸ்லாமிய சமூகத்தினரின் நன்மதிப் பைப் பெற்றவரான ஆற்காடு இளவரசரை சென் னையில் உள்ள அமீர் மஹாலுக்கே போய் கவர்னர் சந்தித்தார். இந்த சந்திப்புக்கான விருப்பத்தை ஆற்காடு இளவரசருக்கு கவர்னர் தெரி வித்தபோது, நானே ராஜ் பவன் வந்து சந்திக்கி றேன்னு சொல்லி இருக்கிறார் நவாப். ஆனால் கவர்னரோ விடாப்பிடியாக, உங்களை நான் வந்து சந்திக்கிறேன்னு சொல்லிவிட்டுப் போய் சந்திச்சார்.”

"சரிப்பா, அங்கே என்ன நடந்தது?''’

"அமீர்மஹாலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி போன போது, அங்கே இஸ்லாமிய மத குருமார்கள் பலரும் அசெம்பிள் ஆகி இருந் தார்களாம். அவர் களைப் பார்த்த கவர்னர், சமூக நல்லிணக்கத்திற்காக என்னால் முடிந்ததை எல்லாம் செய்வேன்னு அவர்களிடம் உறுதி கொடுத்தாராம். இந்த நிலையில்தான் தற்போது கவர்னர் கிறிஸ்து மஸ் விழாவை ராஜ்பவனில் விமர்சியாகக் கொ

"ஹலோ தலைவரே, சமீப நாட்களாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ராஜ்பவனையே திகைக்க வச்சிருக்கு.''

"ஆமாம்பா, சனாதனவாதின்னு வர்ணிக்கப் பட்ட கவர்னர் ரவி, இப்போ சமாதானவாதியா அவதாரம் எடுத்துக்கிட்டு இருக்காரே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, சனாதானத்தை உயர்த்திப் பிடித்து, ஆளுங்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்தவர்தான் கவர்னர் ரவி. அதனாலேயே இவரைத் திரும்பப் பெறணும்னு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஜனாதிபதி வரை சென்று புகார்க் கடித மே கொடுத்திருக்கின்றன. இதனால் கொஞ்சம் அரண்டுபோன கவர்னர், தன் போக் கில் இருந்து மாறு பட்டது போல் நடந் துக்க ஆரம்பிச்சிருக்கார். தமிழக அரசிடமும், முதல்வர் ஸ்டாலினிடமும் தன் முரண் முகத்தைக் காட்டிவந்த அவர், உதயநிதியின் பதவி ஏற்பு விழாவில், ரொம்பவும் நட்புணர்வைக் காட்டி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி னார்.''”

"இதன் தொடர்ச்சி யாகத்தான் தன்னை மத நல்லிணக்கவாதியாகவும் கவர்னர் காட்டு கிறாரா?''”

"ஆமாங்க தலைவரே, சமூக நல்லிணக்கத்தின் பக்கம் தான் இருப்பது போல் காட்டிக்கொள்ள நினைக்கும் கவர்னர், வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, 500 கிறிஸ்துவர்களை ராஜ்பவனுக்கு அழைத்து விருந்தளிக்கத் திட்டமிட்டிருக்கிறார். அதேபோல் சமீபத்தில், இஸ்லாமிய சமூகத்தினரின் நன்மதிப் பைப் பெற்றவரான ஆற்காடு இளவரசரை சென் னையில் உள்ள அமீர் மஹாலுக்கே போய் கவர்னர் சந்தித்தார். இந்த சந்திப்புக்கான விருப்பத்தை ஆற்காடு இளவரசருக்கு கவர்னர் தெரி வித்தபோது, நானே ராஜ் பவன் வந்து சந்திக்கி றேன்னு சொல்லி இருக்கிறார் நவாப். ஆனால் கவர்னரோ விடாப்பிடியாக, உங்களை நான் வந்து சந்திக்கிறேன்னு சொல்லிவிட்டுப் போய் சந்திச்சார்.”

"சரிப்பா, அங்கே என்ன நடந்தது?''’

"அமீர்மஹாலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி போன போது, அங்கே இஸ்லாமிய மத குருமார்கள் பலரும் அசெம்பிள் ஆகி இருந் தார்களாம். அவர் களைப் பார்த்த கவர்னர், சமூக நல்லிணக்கத்திற்காக என்னால் முடிந்ததை எல்லாம் செய்வேன்னு அவர்களிடம் உறுதி கொடுத்தாராம். இந்த நிலையில்தான் தற்போது கவர்னர் கிறிஸ்து மஸ் விழாவை ராஜ்பவனில் விமர்சியாகக் கொண் டாடத் திட்டமிட்டிருக்கிறார். இந்து மதத்தையும் சனாதானத்தையும் உயர்த்திப் பிடிப்பவர்ங்கிற இமேஜ், தன் மேல் அழுத்தமாகப் பதிந்திருப்பதால், கவர்னர் அதைக் கழுவ நினைக்கிறார்னு சொல் றாங்க. இது தற்காலிக மாற்றமா? இல்லை, உள்ளப் பூர்வமாக நிகழ்ந்த மாற்றமான்னு ராஜ்பவன் ஊழி யர்கள் மத்தியிலேயே பட்டிமன்றம் நடக்குது.''”

"சரிப்பா, அமைச்சர் ராமச்சந்திரனிடம் இருந்த வனத்துறை, அவர் கையில் இருந்து இடம் மாறுவதற்கு மற்றொரு முக்கிய காரணமும் சொல்லப்படுகிறதே?''”

rr

"உண்மைதாங்க தலை வரே, வனத்துறை செயலாளராக இருக்கும் சுப்ரியா சாகு, தனக்கு ஒத்துழைப்பு தருவ தில்லை என்று முதல்வரிடம் ராமச்சந்திரன் புகார் செய்தாராம். இதனால் சாகுவைத் துறை மாற்றும்படி அந்த முக்கிய அதிகாரிக்கு ஸ்டாலின் உத் தரவிட, சாகுவின் நெருங்கிய நண்ப ரான அந்த அதி காரியோ, அமைச்ச ரைப் பற்றிய ஏடாகூடங் களை எல்லாம் உளவுத் துறை அதிகாரி ஒருவர் மூலம் திரட்டி, முதல்வரின் டேபிளில் அந்த ரிப்போர்ட்டை வைத்தாராம். இதனால், மாற்றப்படவேண்டிய அதிகாரிக்குப் பதில் அமைச்சரின் இலாகா மாறியதாம்.''”

"புரியுதுப்பா. தீயணைப்புத் துறையிலும் இதே மாதிரியான மூவ்கள் நடந்திருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இணை இயக்குநர்களில் ஒருவராக இருந்த பிரியா ரவி சந்திரனுக்கு, ஐ.ஏ.எஸ். தகுதியைத் தருவதற்கான மூவ்கள் நடந்துகொண்டிருந்த நிலையில், துறையின் இயக்குநரான பி.கே.ரவி, அவருடனான உரசலால், தீயணைப்புப் பயிற்சி நிலையத்திற்கு பிரியாவை மாற்றிவிட்டார் இதுவும் அந்த பவர்ஃபுல் அதிகாரி யைக் கோபப்படுத்த, இப்போது தீயணைப்புத்துறை இயக்குநரான பி.கே. ரவியையே அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பிவிட்டு, துறையின் இயக்குநர் பொறுப்பை, சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக உள்ள சீமா அகர்வாலிடம் கூடுதலாக ஒப்படைத்திருக்கிறாராம். அந்த பவர்ஃபுல் அதிகாரியின் ருத்ர தாண்டவ நடவடிக்கைகள் கோட்டை வட்டாரத்தையே மிரள வைத்திருக்கிறது.''”

"பா.ஜ.க. அண்ணாமலை யை அவர் கட்சியைச் சேர்ந்தவர்களே இப்ப விமர்சனத்தால் மிரள வைக்கிறாங்களே?''”

"தி.மு.க. நமக்கு எதிரி. அதேபோல், அதோடு கூட்டணி வச்சிருக்கும் கட்சிகளும் நமக்கு அந்நியமான கட்சி கள்தான். அதனால் அப்படிப்பட்ட கட்சியினருடன் நம் ஆட்கள் எவரும், எந்த நிலையிலும் நட்போ, உறவோ, தொழில் தொடர்போ வைத்துக்கொள்ளக் கூடாதுன்னு அண்மையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கடுமையாக எச்சரித்திருந்தார் அண்ணாமலை. இதுதான் அந்தக் கட்சியினர் பலரையும் எரிச்சலடைய வச்சிருக்கு. எங்களுக்கு அட்வைஸ் செய்யும் அண்ணாமலை, இந்த விசயத்தை கடைபிடிக்கிறாரா?ன்னு காட்டமாகக் கேட்கும் அவர்கள், தி.மு.க.வினருடன் எந்தவிதத் தொடர்பும் கூடாதுன்னு சொல்லும் அவர், அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியான மறைந்த ராமஜெயம் இல்லத் திருமணத்தில் எதற்காக உற்சாகமாகக் கலந்துக்கிட்டார்னு கேள்வி எழுப்பறாங்க. மேலும்...?''”

"ம்...''”

rr

"அக்னி இன்ஜினியரிங் கல்லூரி உரிமையாள ரான ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷ், மறைந்த முன்னாள் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனனின் அக்காள் மகனாவார். அ.தி.மு.க.காரரான இவர், மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அரசியல் எதிரியான காங்கிரசின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரிடமும் நெருக்கமாக இருக்கிறார். ப.சி. தரப்பு மீது நிலம் விற்கப்பட்ட விவ காரத்தில், வரி ஏய்ப்பு நடந்ததாக, வரித் துறை தொடர்ந்த ஒரு வழக்கில், ஜே.பி.யும் முக்கிய நபராக இருக்கிறார். இந்த நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த பெங்களூர் பா.ஜ.க. எம்.பி. மோகனின் சம்மந்தியாகவும் இருப் பவர்தான் இந்த ஜே.பி. இவர் ப.சி. குடும்பத் துடன் பிசினஸ் பார்ட்னராகவும் இருந்துவரு கிறார். அப்படிப்பட்ட மோகனுடனும் ஜெ.பி.யுட னும் நட்பு பாராட்டி வருகிறார் அண்ணாமலை. இப்படிப்பட்டவர், தி.மு.க. தரப்பிலும் காங்கிரஸ் தரப்பிலும் கூடிக் கும்மியடிப்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு, எங்களுக்கு ஏன் அட்வைஸ் கொடுக் கறார்னு பா.ஜ.க.வினரே அண்ணாமலைக்கு எதிராக சரவெடி கொளுத்திக்கிட்டு இருக்காங்க.''”

"ஓ.பி.எஸ். தங்கள் தரப்பு மா.செ.க்கள் கூட்டத்தை 21-ஆம் தேதி கூட்டியிருக்காரே?''”

"அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் இடையில் அதி கார மோதல் இருந்துவரும் நிலை யில், அவர்களின் கட்சி பஞ்சாயத் தும் உச்சநீதிமன்றம் வரை சென்றி ருக்கிறது. கடந்த ஜூலை மாதம் எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லுமா? செல்லதா? என்னும் வழக்கே இன்னும் முடிவுக்கு வரவில்லை. வழக்கைத் தொடுத்த ஓ.பி.எஸ். தரப்பே மாறி, மாறி வாய்தா வாங்கிய தால், ஜனவரி 4-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துவிட்டது உச்ச நீதிமன்றம். அ.தி. மு.க.வின் மாநில நிர் வாகிகள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்னு 90 சதம் பேரின் ஆதரவு எடப்பாடிக்கு இருக்கும் நிலையில்... போட்டி நிர்வாகிகளை அறிவித்துவந்த ஓ.பி.எஸ்., இப்ப அடுத்த கட்டமா மா.செ.க்கள் கூட்டம்னு அறிவிச்சி பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கார்.''”

"இந்த திடீர் அறிவிப்புக்கான திட்டமே, குஜராத்தில் உருவானதுன்னு சொல்லப்படுதே?''”

"’உண்மைதாங்க தலைவரே.. அண்மையில், குஜராத் மாநில பா.ஜ.க. அமைச்சரவையின் பதவி யேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி, எடப்பாடிக் கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் பா.ஜ.க. தரப்பில் இருந்து அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அங்கேயே வைத்து இவர்கள் இருவரையும் சமாதானப்படுத் தும் திட்டத்திலும் பா.ஜ.க தலைமை காத்திருந்தது. இதையறிந்த எடப்பாடி, குஜராத் பயணத்தைத் தவிர்த்துவிட்டார். ஓ.பி.எஸ். மட்டும் அங்கே சென்றுவந்தார். அங்கே பா.ஜ.க.வின் தேசியத் தலை வர் ஜே.பி.நட்டாவை ஓ.பி.எஸ். சந்தித்தபோது, ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுடன்தான் பா.ஜ.க. கூட்டணி வைக்க விரும்புகிறது. இதை எடப்பாடி ஏற்காமல் பிடிவாதமாகவே இருக்கிறார். அதனால் அவரைத் தனிமைப்படுத்தலாம் என நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் என்ன நினக்கிறீர்கள் என்று நட்டா கேட்க, அதை குஷியோடு ஓ.பி.எஸ். ஆமோதித்து இருக்கிறார்.''”

"டெல்லியின் மூவ் ரொம்பவும் கனகச்சிதமா இருக்கே? அப்புறம்?'' ”

"எடப்பாடி நம் வழிக்கு வராதபட்சத்தில், உங்கள் தலைமையில் போட்டி அ.தி.மு.க. ஒன்றை உருவாக்கி, அதன்பின் உங்கள் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கும். எடப்பாடி அ.தி.மு.க.வைச் சொந்தம் கொண்டாட முடியாத அளவுக்கு முடக்கப்படுவார். அதற்கு முன்பாக, உங்கள் வலிமை எப்படிப்பட்டது என்று பா.ஜ.க. தெரிந்துகொள்ள விரும்புகிறது. அதனால் உங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஏதேனும் செய்து காட்டுங்கள்னு ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆலோ சனையும் கொடுத்திருக்கிறார் நட்டா. இதற்கும் ஓகே, ஓகேன்னு தலையை வேகமாகவே ஆட்டி யிருக்கிறார் ஓ.பி.எஸ். இந்த பின்னணியில்தான் மா.செ.க்கள் கூட்டத்தை ஓ.பி.எஸ். கூட்டியிருக்கிறார் என்கிறது அவரது தரப்பு. இதனால் ஓ.பி.எஸ்., அரசியலில் ஒரு அதிரடிப் பாய்ச்சலை நடத்துவார் என்றும் அவர் தரப்பே சொல்கிறது.''”

"எனக்கும் என் குடும்பத்தினர் உயிருக்கும் சசிகலாவால் ஆபத்துன்னு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா புகார் கிளப்பி இருக்கிறாரே?''”

rr

"ஆமாங்க தலைவரே, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்த சசிகலா, ஜெ.வின் அண்ணன் மனைவி விஜய லட்சுமி பற்றியெல்லாம் விமர் சித்திருந்தார். இந்த விவகாரத்தை மீண்டும் சசிகலா கிளப்பிய நிலையில்தான், அவர் மீது இப்படியொரு குற்றச்சாட்டை ஆடியோவில் பேசி வெளியிட்டிருக்கிறார் தீபா. இது குறித்து, முன்பு கார்டனுக்கு நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரித்த போது, நீண்டகாலமாகவே சசிகலாவுக்கும் தீபா குடும்பத்துக்கும் ஆகாமல் இருந்தது. அவர்கள் கார்டனை நெருங்க முடியாதபடி சசிகலா சுவர் எழுப்பிவந்தார். இது தொடர்பான தகராறு ஒரு முறை கார்டனில் வெடித்தபோது, தன் அம்மா விஜயலட்சுமியைத் திட்டிய சசிகலாவை, கார்ட னில் வைத்தே தாக்கினாராம். அப்போது மைனர் பெண்ணாக இருந்த தீபா. அன்று தீபாவிடம் அடி வாங்கியதை சசிகலா இப்போதும் மறக்கவில்லை யாம். இந்த தகராறுதான் இருதரப்பிற்கும் இடையே இப்போதுவரை தீப்பொறி கிளப்பிக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள்.’''

"நாகர்கோவில் மாநகராட்சியின் மேயரான தி.மு.க. மா.செ. மகேஷின் அடாவடி தாங்கமுடிவில்லை என்கிறார்கள் அங்குள்ள தி.மு.க.வினரே. தங்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களையும், குறிப்பாக பெண் கவுன்சிலர்களையும், கட்சியின் பெண் நிர்வாகிகளையும் தரக்குறைவாக நடத்துவதோடு ஒருமையில் அழைப்பதும் அச்சில் ஏற்றமுடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுவதுமாக இருக்கிறாராம் மகேஷ். அதேபோல், கட்சிக்காரர்கள் எவரையும் இவர் மதிப்பதில்லையாம். இதுதொடர்பான புகார்கள் அறிவா லயத்தில் போய் குவிந்திருக்கிறது. இந்த அடாவடி மேயரை கட்சித் தலைமை உடனடியாகக் கண்டிக்கவில்லை என்றால், அவர் பேசும் ஆபாச டாக் ஆடியோக்கள் வைரலாகலாம் என்கிறார்கள் அங்குள்ள தி.மு.க.வினரே.''’

nkn211222
இதையும் படியுங்கள்
Subscribe