சசிகலாவை தற்காலிக பொதுச்செய லாளராக பொதுக்குழு நடத்தி தேர்ந் தெடுத்த அ.தி.மு.க. உடைந்தது. அன்று அ.தி.மு.க.வை உடைத்த அதே ஓ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியோர், மறுபடியும் எடப்பாடியை தற்காலிக பொதுச்செய லாளராக தேர்ந்தேடுக்கப் போராடும் அ.தி.மு.க.வையும் உடைக்கத் தயாராகிவருகிறார்கள்.
கடந்த ஒருவாரமாக ஒற்றைத் தலைமை கோஷத்தினால் அ.தி.மு.க.வில் அமளிதுமளி நடந்து கொண்டிருந்தாலும் பொதுக் குழுவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. பொதுக்குழு நடக்குமா? என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்துகொண்டிருக்க... அதேவேளையில் பொதுக்குழு நடக்கும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் பொதுக்குழுவுக்கு வரும் தொண்டர்கள் மழை நேரத்தில் சாப்பிடு வதற்கு தற்காலிக பகுதிகளை, ஒற்றைத் தலைமை பிரச்சினையை அ.தி.மு.க. கூட்டத்தில் எழுப்பிய மா.செ. மாதவரம் மூர்த்தி தலைமையில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக் கின்றன.
பொதுக்குழுவுக்கு முதன்முறையாக பாதுகாப்புக்கான கட்டுமஸ்தான உடலுடன் பவுன்சர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அழைப்பிதழ்கள் யாருக்கு அனுப்பப்பட வேண்டுமென எடப்பாடிதான் முடிவு செய்திருக்கிறார். அவர் டிக் செய்த அவரது ஆதரவாளர்கள் மட்டும் பொதுக்குழுவுக்கு அழைக்கப் படுகிறார்கள். இதில் ஓ.பி.எஸ்.ஸுக்கு எந்த ரோலும் கொடுக்கவில்லை. பொதுக்குழுவுக்கு எதிராக தொடுக்கப் பட்ட வழக்குகளை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இணைந்து எதிர்ப்பதாக கோர்ட்டில் சொல்லப்பட்டாலும், பொதுக்குழு ஏற்பாடுகளில் ஓ.பி.எஸ். சுத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக் கிறார்.
இந்தப் புறக்கணிப்பைத் தொடர்ந்துதான் வைத்திலிங்கத்துடன் ஆலோசனை செய்த ஓ.பி.எஸ்., வெளிப் படையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து ஒற்றைத் தலைமை பிரச்சினை வந்தால் இரட்டை இலை முடக்கப்படும். தேர்தல் கமிஷனில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என பதினான்கு பக்க அறிக்கை ஒன்றும் ஓ.பி.எஸ். தரப்பில் இருந்து வெளியானது.
பொதுக்குழுவில் ஒருங்கிணைப் பாளர் அனுமதி இல்லாமல் தலைமை மாற்றம் தொடர்பான தீர்மானம் எதையும் கொண்டுவர முடியாது என்கிற ஓ.பி.எஸ்.ஸின் அறிவிப்பு எடப்பாடி தரப்பை யோசிக்க வைத்தது. மேலும் பிரச்சினை முற்றும் நிலையில்... இரண்டாயிரத்துக்கும் மேல் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும் பான்மை உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யும் நிலையில் இருக்கிறதாம்.
சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து தனது க்ரீன்வேஸ் இல்லத்தில் தொடர்ந்து ஆலோசனை யில் ஈடுபட்ட இ.பி.எஸ். பொதுக்குழு நிகழ்வுக்காக ஒரு பெரிய வழக்கறிஞர் பட் டாளத்தையே தயார் செய்து வைத்திருக்கிறார். சென்னை, டெல்லி என பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குத் தொடரப்பட்டாலும் அதைச் சந்திக்கவும் தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டால், தங்களது தரப்பைக் கேட்காமல் எந்த முடிவும் மேற்கொள்ளக் கூடாது என கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யும் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கிறது என்கிறார்கள் எடப்பாடி தரப்பைச் சேர்ந்தவர்கள்.
பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ். வருவாரா? அல்லது பொதுக்குழு நடைபெறும் தினத்தில் ஓ.பி.எஸ். ஜெ.வின் சமாதிக்கு சென்று மறுபடியும் தியானத்தில் அமர்ந்து தர்மயுத்தம் இரண்டாம் பாகத்தை ஆரம்பிப்பாரா? பொதுக்குழுவில் கட்சியிலிருந்து ஓ.பி.எஸ். நீக்கப்படுவாரா? அல்லது பொதுச்செயலாளர் எடப்பாடி என்ற தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டால் அதை பொதுக்குழுவிலேயே ஓ.பி.எஸ். எதிர்ப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தற்பொழுது நடைபெறும் நிகழ்வுகளின்படி எடப்பாடி ஒரு பழைய ரூட்டை எடுத்திருக்கிறார். அது சசிகலாவை பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது என்கிற பழைய ரூட்டில் ஒற்றைத் தலைமையை எடப்பாடி உருவாக்குகிறார். சசிகலாவை தற்காலிகமாக பொதுச்செயலாளராக நியமித்த பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.ஸும் அதற்கு ஆதரவளித்தார் என்கிற பழைய நிகழ்வை ஓ.பி. எஸ்.ஸுக்கு எதிரான அஸ்திரமாக எடப்பாடி கையாளப்போகிறார். அன்று தற்காலிக பொதுச்செய லாளராக சசிகலா நிய மிக்கப்பட்டதை ஓ.பி.எஸ். ஏற்றார். பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மா.செ.க்கள் ஆதரவுடன் சசிகலா பொதுச்செயலாளராக அமர்ந்தார். அதே பாணியில் எடப்பாடியை ஒற்றைத் தலைமையாக அமரவைப்பது என வேகமாக ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடந்த கூட்ட தீர்மானங்களில் இந்த ஒற்றைத் தலைமை விவகாரம் இடம்பெறவில்லை. இது தீர்மானக் குழுவின் இறுதிக் கூட்டமல்ல... பொதுக்குழு நடைபெறுவதற்கு முன்பு இதே தீர்மானக் குழு கூடி, ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானங்களை இறுதி செய்யவிருக்கிறது என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.
அந்தக் கூட்டம் நடைபெறும்போது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தலைமைக் கழகத்தில் நிறைந்திருந்தார்கள். அதில் பெரிதும் இடம்பெற்றிருந்தது சசிகலா, ஓ.பி. எஸ்.ஸுக்காக அனுப்பிய கும்பல்தான். அதில் வந்த பெண்கள் பெரம்பூர் மாரிமுத்து என்கிற ஜெயக்குமாருடன் காரில் வந்த ஒருவரை வாயில் தாக்கி ரத்தம் சொட்ட வைத்தார்கள். பொதுக்குழு முடிந்தவுடன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, விருகை ரவி தலைமையில் ஐயாயிரம் பேர் கொண்ட படை ஒன்றை இ.பி.எஸ். தயார் செய்து வைத்திருக்கிறார்.
இ.பி.எஸ்.ஸை எதிர்ப்பதற்காக ஓ.பி.எஸ். முழுவதுவமாக சசிகலா பக்கம் சென்றுவிட்டார். ஓ.பி.எஸ்.ஸை ஓரங்கட்ட வேண்டும், அதேநேரத்தில் அவர் மூலமாக சசிகலா பலம் பெறுவதை இ.பி.எஸ். விரும்பவில்லை. அதனால் தம்பிதுரையை ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க அனுப்பினார். ஏற்கனவே ஒற்றைத் தலைமையை ஆதரியுங்கள் என இ.பி.எஸ்.ஸுக்காக தூது வந்த காமராஜ் மற்றும் ஆர்.பி.உதயகுமாரை கன்னாபின்னாவென திட்டி ஓ.பி.எஸ். அனுப்பி வைத்ததனால் தம்பிதுரை வந்தார். ஓ.பி.எஸ். மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி, மற்றொரு மகனுக்கு சிவகங்கை மாவட்டத்தில் எம்.எல்.ஏ. பதவி, மறுபடியும் அ.தி.மு.க. ஆட்சி வந்தால் துணை முதல்வர் பதவி, 2000 கோடி ரூபாய் பணம் என தம்பிதுரை ஒரு கிஃப்ட் பேக்குடன் ஓ.பி.எஸ்.ஸை சந்தித்தார். ஓ.பி.எஸ். அவருக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.
மறுபக்கம் டி.டி.வி. தினகரனும் சசிகலாவும் ஓ.பி.எஸ்.ஸுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது கேம் ப்ளான் என்னவென்றால் தற்பொழுது ஓ.பி.எஸ்.ஸுக்கு, ஆதரவு தரும் பதினோரு மாவட்டச் செயலாளர்களுடன் கட்சியை உடைக்க வேண்டும். ஓ.பி.எஸ்.ஸுக்கு சசிகலாவுடன் தற்பொழுது தொடர்பில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவார்கள். அவர்கள் உதவியுடன் நடுநிலையில் இருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஓ.பி.எஸ். பக்கம் கூடுவார்கள். அவர்களை வைத்து இன்னொரு பொதுக்குழுவை நடத்தவேண்டும். அதில் ஓ.பி.எஸ்.ஸை பொதுச்செயலாளராக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் தற்போதைய கேம் ப்ளான். அதையே விரிவாக்கி சசிகலாவை பொதுச்செயலாளராக்கி ஒற்றைத் தலைமை சசிகலாவா, எடப்பாடியா? என கொண்டுவருவது எதிர்கால கேம் ப்ளான்.
இந்தச் சண்டையில் பா.ஜ.க. என்ன நிலை எடுக்கிறது என்பது இதுவரை எடப்பாடிக்குத் தெளிவாகவில்லை. பா.ஜ.க. என்ன நிலை எடுத்தாலும் பரவாயில்லை நான் யார் என காட்டுகிறேன் என்பது எடப்பாடியின் நிலை. என்னால் பா.ஜ.க.வின் ஆதரவைப் பெற முடியும் என்கிறார் எடப்பாடி. எடப்பாடியின் முடிவுக்கு பா.ஜ.க. கட்டுப்படும் என அரசியல் தெரிந்த அ.தி.மு.க.வினர் நம்பு வதும்தான் எடப்பாடியின் ஐந்து வருட ட்ராக் ரெக்கார்டு. அதனால் எடப்பாடியின் கேம்ப் பலமாக இருக்கிறது. ஓ.பி.எஸ். சமாதான மாகப் போகக் கூடியவர் என்பதுதான் எடப்பாடியின் எதிர் பார்ப்பாகவும் இருக்கிறது.
எந்த சமா தானமும் வேண்டாம் என்பதுதான் சசி அணியின் திட்டமாக இருக்கிறது. சசிக்கு எடப்பாடி தலை மையிலான அ.தி.மு.க. உடைய வேண்டும் என்பதுதான் ஒரே திட்டம். அதேபோல் பா.ஜ.க.விற்கும் ஒரு திட்டம் இருக்கிறது. எடப்பாடி, தங்கமணி, வேலுமணி மூலம் பலவீனமானவர்களைக் கொண்டு கொங்கு பகுதியில் பா.ஜ.க.வை வலுவாக்கி, டாக்டர் ராமதாஸைப் போல தானும் ஒரு கொங்கு தலைவராக உருவாக முடியும் என்கிற கணக்கு அண்ணாமலைக்கு இருக்கிறது.
தங்கமணி, வேலுமணி மூலமும் சதாசிவம் மூலமும் டெல்லியைத் தொடர்புகொண்டு பேசிவருகிறார் எடப்பாடி. அ.தி.மு.க. உடைவது, இரட்டை இலை முடக்கப்படுவது, பா.ஜ.க.வுக்கு நல்லது என பா.ஜ.க.வில் ஒரு டீம் நினைக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி, பிஜு ஜனதாதளம் என பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர பலர் இருக்கிறார்கள். அவர்களை வைத்து எடப்பாடியின் ஆதரவைப் பற்றி ரிஸ்க் எடுத்து அ.தி.மு.க.வை உடைத்து அதன்மூலம் பா.ஜ.க.வை மேலே கொண்டுவரலாம் என பா.ஜ.க.வில் ஒரு சிந்தனை ஓடுகிறது. இதற்கிடையே பா.ஜ.க.வில் சேர முப்பதுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் கதவைத் தட்டுகிறார்கள் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.