"ஹலோ தலைவரே, முதல்வரின் முதன்மைச் செயலாளர் மீதே மிரட்டல் புகார் எழுந்திருக்கு.''”
"ஆமாம்பா, மாநில உயர்கல்வி செயல் திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஜவஹர்நேசன், இது தொடர்பாக குற்றச்சாட்டு அறிக்கையை பகிரங்கமாகவே வெளியிட்டிருக்காரே?''”’
"ஆமாங்க தலைவரே, சனாதனத்துக்கு வக்காலத்து வாங்கும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை இங்குள்ள தி.மு.க. அரசு எதிர்த்ததோடு, நம் மாநிலத்துக்கு ஏற்ப ஒரு கல்விக் கொள்கையை உருவாக்க, 2022 ஏப்ரலில் உயர்கல்வி செயல் திட்டக் குழுவை யும் அது அமைத்தது. இதன் ஒருங்கிணைப் பாளராக இருந்து வந்த ஜவஹர் நேசன்தான், தற்போது தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை வழிமொழி வது போல்தான், மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக முதல்வரின் முதன்மைச் செயலா ளர் உதயசந்திரனே என்னை அழைத்து மிரட்டினார். இது குறித்து முதல்வருக்குத் தெரிவித்தும், எதுவும் நடக்காததால் ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இது பரவலாக பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.''”
"அதே கல்வித்துறையில், ப்ளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை முதல்வர் அழைத்துப் பாராட்டியது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, ப்ளஸ் டூவில் மாநிலத்தில் 600-க்கு 600 மதிப்பெண் வாங்கி சாதனை படைத்த காமர்ஸ் குரூப் மாணவி யான திண்டுக்கல் நந்தினியை முதல்வர் ஸ்டாலின், சென் னைக்கே அழைத்து பாராட்டினார். அதோடு அந்த மாணவியின் உயர் கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவித்து உற்சாகம் தந்தி ருக்கிறார். அதேநேரம் பொதுவாக, மாநில அளவில் முன்னிலை வகிக் கும் மாணவர்கள் குறித்த அறி விப்பை அரசின் தேர்வுத்துறை அறிவிக்கக்கூடாது என்று அரசாணையே இருக்கிறதாம். இந்தமுறை, அதற்கு மாறாக தேர்வுத் துறையே இதை அறிவித்திருப்பது, மாணவர்களுக்கு நடுவே தாழ்வுணர் வையும் ஏற்றத் தாழ்வையும் ஏற்படுத்தும் என்கிற சர்ச்சையும் எழுந்திருக்கிறது. மேலும், இது தனியார் கல்வி நிறுவனங்களையே ஊக்குவிப்பது போல் அமையும் என்பதாலும் அந்த நடைமுறை தவிர்க்கப்பட்டு வந்தது. இதைக் கல்வியாளர்கள் சிலர் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் இருக்கிறார்கள்.''”
"அதிக மதிப்பெண் வாங்கும் மாணவ, மாணவிகளை பாராட்டு வதில், முதல்வரை கவர்னர் ரவி ஓவர்டேக் செய்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, ப்ளஸ் டூ தேர்வைப் பொறுத்தவரை, பர்ஸ்ட் குரூப், செகண்ட் குரூப்பில் படிக்கும் மாணவ மாணவிகள், செண்டத்தை நெருங்குவதே கொஞ்சம் கஷ்டமான காரியம் என்பார்கள். அந்த வகையில், முதல் குரூப்பில், அதிலும் தமிழ் மீடியத் தில் படித்த கடையநல்லூரைச் சேர்ந்த ஷப்ரீன் இமானா என்கிற இஸ்லாமிய மாணவி, 600-க்கு 590 மார்க் எடுத்து, அந்தப் படிப்பில், முதலிடம் பிடித்துள்ளார். இதை கவர்னரின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற சில அதிகாரிகள், இந்த மாணவியையும் முதல்வர் பாராட்டி இருக்கவேண்டும். அதேபோல் ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் முதல் மதிப்பெண் பெற்ற நிறைய மாணவ மாணவிகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் முதல்வர் கண்டுகொள்ள வில்லை என்று தூபம் போட்டிருக் கிறார்கள். இதனால் உற்சாகமான கவர் னர் ரவி, அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் அழைத்துப் பாராட்டும் முடிவிற்கு அப்போதே வந்து விட்டார். இதை தொடர்ந்து கவர்னர் மாளிகை, பரபரப்பானது.''
"பிறகு?''”
"அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் பலரையும் ராஜ்பவனுக்கு அசுர வேகத்தில் வரவழைத்து விட்டார்கள். இப்படி ராஜ்பவனுக்கு வரவழைக்கப்பட்ட மாணவ மாணவிகளை அழைத்து, அவர்களுடன் உரையாடி வாழ்த்தியிருக்கிறார் கவர்னர். முதல்வருக்குப் போட்டியாக கவர்னர் செய்த இந்த செயல் சுவாரஸ்யமாகப் பேசப்படுகிறது.''”
"அமித்ஷாவை சசிகலா சீக்ரெட்டாக சந்தித்ததாக ஒரு தகவல் உலவுதே?''”
"ஆமாங்க தலைவரே, எடப்பாடியோடு எப்படியாவது இணைந்துவிட வேண்டும் என சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். எடப்பாடியோ கொஞ்சமும் பிடிகொடுக்க வில்லை. என்னை பண்ருட்டி மாதிரி ஒரு ஆலோசகராக வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்கமாட்டேன் என்று சசி சொல்லியும், எடப்பாடி அதைக் காதில்வாங்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் கர்நாடக மாநிலத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அமித்ஷாவை, தனது டெல்லி சோர்ஸுகள் மூலம் தனியே போய் ரகசியமாக சந்தித்தாராம் சசிகலா. அப்போது அவரிடம், எடப் பாடி அடாவடியாகவே நடந்துகொள்கிறார். தனித்தனியாக இருக்கும் எங்களை எல்லாம் இணைத்துக்கொண்டே ஆகவேண்டும் என்று நீங்கள் கொஞ்சம் கறாராகக் கூறினால், அவர் ஏற்றுக்கொள்வார். அதனால் நீங்கள் கொஞ்சம் மனது வைக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அமித்ஷா இதற்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே இருக்க, சரி, நாங்கள் எல்லோரும் முதலில் ஓரணியாக சேர் கிறோம். அதன்பின் எங்களை எடப்பாடியோடு சேர்த்துவைத்து, ஓரணியாக்குங்கள் என்றாராம் சசி. இதற்கு அமித்ஷா சம்மதம் சொல்லி அனுப்பியதாகவும் சொல்கிறார்கள்.''”
"இந்த அடிப்படையில்தான் தினகரன்- ஓ.பி.எஸ்.ஸின் சந்திப்பு நடந்ததா?''”
"ஆமாங்க தலைவரே, சசிகலாவைப் போலவே எடப்பாடியிடம் ஒட்டமுடியாமல் தவித்துவந்த ஓ.பி.எஸ், இடையில் சசிகலாவை சந்திக்கத் தூதுவிட்டாராம். அதற்கு க்ரீன் சிக்னல் தராமல் இருந்த சசிகலா, அமித்ஷாவை தான் சந்தித்த நிலையில், ஓ.பி.எஸ்.ஸை தொடர்பு கொண்டு, முதலில் நீங்கள் தினகரனை சந்தித் துப் பேசுங்கள். பின்னர் எல்லோரும் சந்திப் பதற்கான நேரம் வரும் என்று சொல்லியிருக் கிறார். இதைத் தொடர்ந்துதான், அ.ம.மு.க. தினகரனை, பண்ருட்டி ராமச்சந்திரனோடு சென்று ஓ.பி.எஸ். அவரது இல்லத்தில் சந்தித்தார். அங்கே ஓ.பி.எஸ். எதிர் பார்த்ததை விடவும், உற்சாகமாகவே அவரை தினகரன் வரவேற்றாராம். அங்கே தினகரனிடம் ஆகங்கத் தோடு பேசிய ஓ.பி.எஸ், எடப்பாடி திட்டமிட்டு கட்சியையே அபகரித்து விட்டார். வசமாக நம் எல்லோரின் முதுகிலும் குத்திவிட்டார். நீதிமன்றத்தில் உள்ள மிச்ச சொச்ச வழக்குகளும் அவருக்கு சாதகமாகத்தான் இருக் கிறது. நான் முதல்வராக இருந்தபோது என்னையே சுற்றி வந்த பலரும், பழசை எல்லாம் மறந்துவிட்டு அவர் பின்னால் நிற்கிறார்கள் என்று வருத்தத் தோடு சொல்லியிருக்கிறார். தினகரனோ, கவலைப் படாதீர்கள். இப்போதும் ஒன்றும் கை மீறிவிட வில்லை. அ.தி.மு.க.விலிருந்து உங்களை நீக்கியதை அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடாது. உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தாலும், உங்கள் நியாயமும் எடுபடும். அதனால், சோர்ந்து விடாதீர்கள். அ.தி.மு.க.வை எடப்பாடியிடம் இருந்து நாம் மீட்டே ஆக வேண்டும்’ என்று ஓ.பி.எஸ்.சுக்கு நம்பிக்கையூட்டி னாராம்.''”
"கர்நாடகத்தில் கரன்சிப் பாசனத்தை ஆறாய் ஓடவிட்டும் பா.ஜ.க. நம்பிக்கை இல்லாமல் இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, அங்கே ஓட்டுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை, கரன்ஸியைக் கொட்டி இறைத்திருக்கிறது பா.ஜ.க. இதற்காக அ.தி.மு.க. விடமும் கணிசமாக அது கறந்திருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தங்களால் ஆனவரை அள்ளியிறைத்து, மாநிலத் தையே கரன்சிக் காடாக ஆக்கியிருக்கிறார்கள். வாக்குப் பதிவுக்குப் பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பிலும் நிலவரம் காங்கிரஸுக்கே சாதகம் என்று வர, தேர்தல் பணிகளை கவனித்து வந்த பி.எல்.சந்தோசும், அவரது சீடகோடியான அண்ணாமலையும் திகிலில் இருக்கிறார்களாம். மாநிலத்தில் உள்ள, கட்சியின் சீனியர்களை எல்லாம் ஓரம்கட்டி இவர்கள் இஷ்டத்துக்கு வேட்பாளர் களை நிறுத்தியதால், பா.ஜ.க.வினரே இவர்கள் நிறுத்திய வேட்பாளர்களைத் தோற்கடிக்கும் வேலைகளில் இறங்கினார்களாம். அதனால் நிலவரம் அவர்களுக்குக் கலவரமாக மாறியிருக் கிறது. தேர்தல் முடிவை வைத்தே இவர்களின் தலை எழுத்தை எழுத பா.ஜ.க. மேலிடம் காத்திருக்கிறதாம்.''”
"பெண்புகாரில் சிக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறாரே?''”
"தமிழ்நாடு காவலர் பயிற்சி மையத்தின் துணை இயக்குனராக இருக்கும் செல்வ நாகரத்தினம் ஐ.பி.எஸ். மீது, ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்திருந்தார். தன்னை நம்பவைத்து இன்பம் துய்த்துவிட்டு, அந்த அதிகாரி கொலை மிரட்டல் விடுப்பதாக அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருந் தார். இதை விசாரித்த விசாரணைக் குழு, குற்றச் சாட்டை உறுதி செய்தது அடுத்து, துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாக வேண்டுமே என்று நினைத்த அந்த அதிகாரி, துறை ரீதியான நடவடிக் கையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று, மத்திய தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அதை ஏற்காமல் அவர் மனுவைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டது. இதைத் தொடர்ந்து தனக்கு நெருக்கடி அதிகரித்திருப்பதை உணர்ந்த அந்த அதிகாரி, குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவிக்குமாறு உயர்நீதிமன்றத்திற்கு ஓடியிருக்கிறார்.''”
"திண்டுக்கல் மாவட்ட பிரமுகர் ஒருவரும் பெண் விவகாரத்தில் கைதாகி இருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவரின் மனைவி உட்பட அவரது குடும்பத்தினர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். அவர்கள், அங்கே, திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவரான அப்துல்கனி ராஜாவுக்கு சொந்தமான ஓட்டலில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், சென்னை மாவட் டத் தலைவரின் மனைவி ஓட்டலில் தனியாக இருந்தபோது, அவரிடம் அப்துல்கனி ராஜா, தவறாக நடந்துகொள்ள முயன்றாராம். இதையொட்டி அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் அப்துல்கனி ராஜாவைக் கைது செய்திருக்கிறது போலீஸ். இது காங்கிரஸ் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து நாம் காங்கிரஸ் தரப்பிலேயே சிலரிடம் விசாரித்தபோது, அந்த இருவருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல், தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் திட்டமிட்டு அப்துல்கனி புகாரில் சிக்கவைக்கப் பட்டிருக்கிறார்’ என்கிறார்கள். காவல்துறையோ, ஓட்டலின் சி.சி.டி.வி. பதிவுகளை ஆராய்கிறதாம்.''”
"சென்னை கமிஷனர் அலுவலகமும் டெண்டர் புகாரில் சிக்கியிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழ்நாடு காவல்துறை தொடர்புடைய கட்டிடங்களை ’தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலம்தான் டெண்டர் விட்டுக் கட்டவேண்டும். ஆனால் இதற்கு மாறாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 54 கோடி ரூபாயில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக பணிகளை, ஆணையர் அலுவலகமே டெண்டர் விட்டிருக்கிறதாம். அதில் 5 நிறுவனங்கள் கலந்து கொண்ட நிலையில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத் துக்கு அந்த டெண்டரை ஒதுக்குவதற்கான ரகசிய மூவ்களும் அதற்கேற்ப விதிமீறல்களும் நடந்ததாம். இது ஒருபுறமிருக்க, 54 கோடியாக இருந்த இதன் திட்ட மதிப்பீட்டை 59 கோடியாக உயர்த்தியும் தந்திருக்கிறார்களாம். ஒன்றிய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து இந்த கட்டிடம் கட்டப்படுவதால், தற்போது இந்த விவகாரம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்குப் புகாராகப் போயிருக்கிறதாம். எனவே விரைவில் இந்த விவகாரம் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் ஐ.பி.எஸ். வட்டாரத்தினர்.''”
"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந் துக்கறேன். வருமான வரித்துறை சமீபத்தில் ரெய்டு நடத்திய அந்த நிறுவனத்துக்கு, இல்லீக லாக நிலங்களை வாங்கித் தந்த சென்னையின் மூன்று எழுத்துக் கொண்ட தீம் பார்க் நிறுவன வாரிசு ஒருவரின் பிஸ்னெஸ் தொடர்பான டீலிங்குகளையும் சேகரித்திருக்கிறதாம் வருமான வரித் துறை. மேலும், சென்னை கிழக்குக் கடற் கரைச் சாலையில் சில தொழிலதிபர்களுக்குச் சொந்தமான நிலங்கள், இல்லீகலாக அபகரிக்கப்பட்ட சம்பவங்களும் வருமான வரித்துறையிடம் சம்பந்தப்பட்டவர்களால் தெரி விக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த தீம்பார்க் வாரிசு மீது அதிரடி நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறதாம் வருமான வரித்துறை.''