"ஹலோ தலைவரே, பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கு''”
"ஆமாம்பா, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நடக்குற முதல் அமைச்சரவைக் கூட்டமாச்சே இது?''”
"உண்மைதாங்க தலைவரே, ஜனவரி 4ஆம் தேதி அமைச்சரவை கூடப்போகுதுன்னு இரண்டு வாரத்துக்கு முன்பாகவே நக்கீரன் குறிப்பிட்டிருந்தது. அதன்படியே கூடிய இந்தக் கூட்டத்தில், புதிய அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சைலண்டாக என்ட்ரி கொடுத்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் பார்வையும் அவர் பக்கமே திரும்பி இருந்தது. இருந்தும் உதயநிதி, பெரிதாக எதையும் பேசலை. அதே சமயம், கூட்டத்தைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்க்கும் போது, அவர் பாடம் படிக்கிறார் என்பது புரிந்தது. நடப்பு ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் 9ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதுகுறித்து பலவிதமான விவாதங்கள், இந்தக் கூட்டத்தில் விறுவிறுப்பு குறையாமல் நடந்திருக்கு.''”
"கவர்னர் உரையை எந்த மாதிரி தயாரிப்பது என்றும் தீவிர ஆலோசனை நடந்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, கவர்னர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பது சபை மரபு. பொதுவாக கவர்னர் உரை என்பது, ஆளும்கட்சி தயாரித்துத் தருகிற உரை. அதை அப்படியே கவர்னர் வாசிப்பதுதான் நடைமுறை. பெரும்பாலும் கவர்னர்கள், இந்த உரையில் பெரிதாகத் திருத்தம் எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால், தற்போதைய கவர்னர் ஆர்.என். ரவி, தி.மு.க. அரசோடு உரசல் போக்கினைக் கடைப்பிடித்து வருவதால், அரசு தயாரிக்கும் உரையிலும் அவர் முரண்பட்டு, அதில் கை வைத்துவிடக்கூடாது என்று முதல்வர் கவனமாக இருக்கிறார். அதனால், கவர்னர் உரையில் என்னென்ன விசயங்கள் இடம் பெறலாம்? எப்படிப்பட்ட புதிய அறிவிப்புகளை அதில் இடம்பெறச் செய்யலாம்? என்ற ரீதியில் அமைச்சர்களுடன் இந்தக் கூட்டத்தில் ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின்.''”
"பட்ஜெட்டுக்கான ஆயத்தமும் அரசிடம் தெரியுதேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, பட்ஜெட் தயாரிப்புக்கான மும்முரத்திலும் தி.மு.க. அரசு
"ஹலோ தலைவரே, பலத்த எதிர்பார்ப்புக்கு நடுவே அமைச்சரவைக் கூட்டம் நடந்திருக்கு''”
"ஆமாம்பா, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நடக்குற முதல் அமைச்சரவைக் கூட்டமாச்சே இது?''”
"உண்மைதாங்க தலைவரே, ஜனவரி 4ஆம் தேதி அமைச்சரவை கூடப்போகுதுன்னு இரண்டு வாரத்துக்கு முன்பாகவே நக்கீரன் குறிப்பிட்டிருந்தது. அதன்படியே கூடிய இந்தக் கூட்டத்தில், புதிய அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சைலண்டாக என்ட்ரி கொடுத்தார். அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரின் பார்வையும் அவர் பக்கமே திரும்பி இருந்தது. இருந்தும் உதயநிதி, பெரிதாக எதையும் பேசலை. அதே சமயம், கூட்டத்தைக் கூர்ந்து கவனிப்பதைப் பார்க்கும் போது, அவர் பாடம் படிக்கிறார் என்பது புரிந்தது. நடப்பு ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் 9ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதுகுறித்து பலவிதமான விவாதங்கள், இந்தக் கூட்டத்தில் விறுவிறுப்பு குறையாமல் நடந்திருக்கு.''”
"கவர்னர் உரையை எந்த மாதிரி தயாரிப்பது என்றும் தீவிர ஆலோசனை நடந்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, கவர்னர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பது சபை மரபு. பொதுவாக கவர்னர் உரை என்பது, ஆளும்கட்சி தயாரித்துத் தருகிற உரை. அதை அப்படியே கவர்னர் வாசிப்பதுதான் நடைமுறை. பெரும்பாலும் கவர்னர்கள், இந்த உரையில் பெரிதாகத் திருத்தம் எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால், தற்போதைய கவர்னர் ஆர்.என். ரவி, தி.மு.க. அரசோடு உரசல் போக்கினைக் கடைப்பிடித்து வருவதால், அரசு தயாரிக்கும் உரையிலும் அவர் முரண்பட்டு, அதில் கை வைத்துவிடக்கூடாது என்று முதல்வர் கவனமாக இருக்கிறார். அதனால், கவர்னர் உரையில் என்னென்ன விசயங்கள் இடம் பெறலாம்? எப்படிப்பட்ட புதிய அறிவிப்புகளை அதில் இடம்பெறச் செய்யலாம்? என்ற ரீதியில் அமைச்சர்களுடன் இந்தக் கூட்டத்தில் ஆலோசித்திருக்கிறார் ஸ்டாலின்.''”
"பட்ஜெட்டுக்கான ஆயத்தமும் அரசிடம் தெரியுதேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, பட்ஜெட் தயாரிப்புக்கான மும்முரத்திலும் தி.மு.க. அரசு இறங்கி இருக்கு. அது தொடர் பான டிஸ்கஷனும் அமைச்ச ரவைக் கூட்டத்தில் நடந்தது. தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் தரக்கூடிய வகையில் சில திட்டங்கள் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப் பட இருக்கிறது. குறிப்பாக, மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தேவையான நிதியை ஒதுக்கும் முடிவும் அரசிடம் உள்ளது. இதுபற்றி எல்லாம் அமைச்சரவையில் விவாதிக்கப் பட்டது. அதோடு புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்ச ரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. மேலும் போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளுக்குப் புதிதாகத் தொழில் முதலீடு கள் வர இருக்கின்றன. அதன்மூலம் 8 புதிய திட்டங்களை செயல்படுத்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கு. இப்போதைய சட்டப்பேரவைக் கூட்டம், அதிகபட்சமாக 3 நாட்கள் நடத்தப்படலாம். அதன்பின், பிப்ரவரி அல்லது மார்ச்சில், பட்ஜெட் தாக்கலுக்காகப் பேரவை கூடும்னு கோட்டை வட்டாரம் சொல்லுது.''”
"ஜெ. குடும்பத்துக்குச் சொந்தமான மற்றொரு சொத்தை சசிகலா மோசடி செய்த விவகாரம் இப்ப புகைய ஆரம்பிச்சிருக்கே?''”
’"உண்மைதாங்க தலைவரே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியா, சென்னை தி,நகரில் எப்போதோ இரண்டரை கிரவுண்ட் இடத்தை வாங்கிப் போட்டிருந்தார். அந்த இடத்தில் கட்டப்பட்ட வீட்டில்தான், ஜெ.வின் அண்ணன் மகள் தீபா வசித்துவருகிறார். 2001-ல் ஜெ.’ இருக்கும்போதே இந்த வீட்டை விற்க ஜெ.வின் அண்ணன் பிள்ளைகளான தீபக்கும் தீபாவும் களமிறங்கினர். ஒரு பில்டரிடம் ரேட் பேசி, 10 கோடி ரூபாய் அட்வான்ஸையும் வாங்கினர். இதையறிந்த சசிகலா, 25 கோடி ரூபாய் வீட்டை இப்படி மலிவாக விற்கலாமா? முதல்ல அட்வான்ஸைத் திருப்பிக் கொடுங்கள் என்று அந்த 10 கோடியை பில்டருக்குக் கொடுத் திருக்கிறார். ஆனால், கடன் கொடுத்து உதவுவது போல் நடித்த சசிகலா, அந்த வீட்டையும் இடத்தையும் தீபா, தீபக்கிற்கே தெரியாமல், தன் பெயரில் பதிவு செய்து, ஜெ.வின் சொத்தை கபளீகரம் செய்துவிட்டாராம். இந்த விவகாரம்தான் இப்போது சசியின் மிச்சசொச்ச முகத்திரை யையும் கிழிக்கப் போகுது.''”
"தாவல் நாயகரான எக்ஸ் எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், எடப்பாடி பக்கம் போயிருக்காரே?''
"அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க.ன்னு பல கட்சிகள் தாவிய டாக்டர் சரவணன், தற்போது பா.ஜ.க.வில் இருந்தும் விலகி, எடப்பாடியை சந்தித்து அவர் அணியில் ஐக்கியமாகி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, மதுரை விமான நிலையத்தில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க.வினர் செருப்பு வீசினர். இதனையடுத்து அப்போது பா.ஜ.க.வின் மாவட்டப் பொறுப் பில் இருந்த டாக்டர் சரவணன், அன்று இரவே அமைச் சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்பு கேட்டார். பிறகு பா.ஜ.க.விலிருந்து விலகுவ தாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவரை தி.மு.க.வுக்கு மீண்டும் கொண்டுவர நினைத்தார் அமைச்சர். ஆனால் லோக் கல் கட்சியினரிடம் கடும் எதிர்ப்பு இருந்ததால், அந்த முயற்சி பலிக்கவில்லை.''”
"பிறகு சரவணன், எடப்பாடிப் பக்கம் எப்படிப் போனார்?''”
"தென்மாவட்டத்தின் முக்கிய நகரான மதுரையில், தனக்கு மேலும் செல்வாக்கைப் பெருக்க நினைக்கும் எடப்பாடி, அதற்கு தோதான நபரைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போது டாக்டர் சரவணன் தி.மு.க.வுக்குப் போகமுடியாமல் திணறுவதைக் கண்டு, அவருக்கு கொக்கி போட்டார். சரவணனோ, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் தனக்கு சீட் கொடுத்தால், எடப்பாடிப் பக்கம் வருவதாகவும், கட்சிக்கு நிதி தருவதாகவும் தெரிவித்தாராம். இதற்கு இரு தரப்பிலும் கிரீன் லைட் எரிந்திருக்கிறது. இந்த நிலையில், மதுரையில் கோலோச்சும், முன்னாள் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார், சரவணனை கட்சியில் சேர்க்கக்கூடாதென கொடி பிடிக்க, அவரைப் படாதபாடு பட்டு சமாதானப்படுத்திய எடப்பாடி, தனது மதுரை தளபதிகளான உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் ராஜன்செல்லப்பா ஆகியோருடன் இணக்கமாக இருந்து செயல்படவேண்டும் என்று கண்டிசன் போட்டுத்தான் சரவணனைக் கட்சியில் சேர்த்துக் கொண்டாராம்.''”
"தமிழகத் தேர்தல் ஆணையம் எடப்பாடி மீது புகார் தெரிவித்திருக்கிறதே?''”
"சொந்தத் தொகுதிக்கு வெளியே இருக்கும் வாக்காளர்கள் அங்கிருந்தபடியே ஓட்டளிக்கும் முறையைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது இந்தியத் தேர்தல் ஆணையம். இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் விவாதிக்க, வருகிற 16ஆம் தேதி, டெல்லியில் ஒரு கூட்டத்தையும் அது நடத்துகிறது. அந்த வகையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். என்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி என்றும் குறிப்பிட்டு, அவர்களுக்கு தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இரண்டு முறை கடிதம் அனுப்பியும் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிவிட் டாராம் எடப்பாடி. இது குறித்துதான் தலைமைத் தேர்தல் ஆணையத் தில் எடப்பாடி மீது புகார் தெரிவித்திருக்கிறது தமிழக தேர்தல் ஆணை யம். அந்த புகார்க் கடிதத்தில், நம் கூட்டத்துக்கு அ.தி.மு.க.வை அழைப் பதா? வேண்டாமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறதாம்.''”
"கோட்டையில் இரண்டு அதிகாரிகளுக்கு இடையே உரசல்னு செய்தி கசியுதேப்பா..?''”
"ரேசன் கடைகளின் தரவுகள் அனைத்தையும் கணினி மயப்படுத்தும் முயற்சி யில் அரசு இறங்கி இருக்கிறது. இதற்கான டெண்டர் விடும் வேலைகளும் தொடங்கிய நிலையில், ’விஷன் டெக்’ என்ற நிறுவனம், ரூ.330 கோடி ரூபாய்க்கு இந்த டெண்டரை கேட்டிருக்கிறது. மகாராஷ் டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனம் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப் பட்டு இருப்பதால், டெண் டரை இந்த விஷன் டெக் கிற்குக் கொடுக்கக்கூடாது என்று துறை அமைச்சர் சக்கரபாணியோடு சேர்ந்து, துறை செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணனும் எதிர்த்து வருகிறார். அப்படி விஷன் டெக்கிற்கு டெண்டரைக் கொடுத்தால், கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புக் கான பொருட்களை சப்ளை செய்து சர்ச்சையில் சிக்கிய அனிதா நிறுவனத்துக்கு, நிலுவை வைத்திருக்கும் ஏறத்தாழ 2 ஆயிரம் கோடி ரூபாயை முடக்கிவிடுவேன் என்றும் ராதாகிருஷ்ணன் எச்சரித்ததாகவும் சொல் கிறார்கள். எனினும், டெண்ட ரை விஷன் டெக் நிறுவனத் துக்கே கொடுக்கவேண்டும் என்று முதல்வரின் முதன்மைச் செயலாளரான உதயசந்திரன் பிடிவாதம் பிடிக்கிறாராம். இவர்களுக்கு இடையிலான பிரச்சினை இப்போது கோட்டையில் ஒரு சூறாவளியை உண்டாக்கி இருக்கிறது.''”
"மதுரைப் பக்கமும் சலசலப்பு தெரிகிறதே?''”
"மதுரையைச் சேர்ந்த அமைச்சர்களான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் மூர்த்திக்கும் இடையே, பவர் யுத்தம் நடக்கிறதாம். இரு தரப்புக்கும் இடையில் உரசல் நடக்கத் தொடங்கிவிட்டதாம். புகார்கள் முதல்வர் ஸ்டாலின் வரை போக, அவர் இது குறித்து விசாரித்துக்கொண்டு இருக்கிறாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கடந்தமுறை நாம் உரையாடும் போது, நமக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில், செய்தித்துறை இயக்குநர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ். மீது குவிந்த புகாரால், அவரை வேறு துறைக்கு மாற்றும்படி தனது செயலாளர் உதயசந்திரனுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார் என்றும், இந்த நிலையில் அவருக்கு மதுரை அல்லது கோவையில் கலெக்டர் பதவி கிடைப்பற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது என்றும், செய்தியைப் பரிமாறிக் கொண்டோம். ஆனால், இந்தச் செய்தியில் உண்மை எதுவும் இல்லை என்று, ஜெயசீலன் ஐ.ஏ.எஸ். தரப்பு மறுப்பு தெரிவிக்கிறது.''
____________
இறுதிச் சுற்று!
5-1-2023 அன்று தலைமைச் செயலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. அதன்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6 கோடியே 20 லட் சத்து 41 ஆயிரத்து 179 பேர். இதில், ஆண் வாக்காளர்கள் -3, 04,89, 066 பேர். பெண் வாக்காளர்கள் 3,15,43,286 பேர். மூன்றாம் பாலினத் தவர் 8,027 பேர் உள்ளனர். அதிக வாக்காளர் உள்ள தொகுதி, சோழிங்க நல்லூர் -6,66,295 பேர், குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி துறைமுகம் -1,70,125 பேர் இருக் கின்றனர் என்று தெரிவித்துள்ளார் சத்யபிரதாசாஹு.
-இளையர்