"ஹலோ தலைவரே... தமிழக எம்.பி.க்கள் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திச்சும் அவர் மீதான அதிருப்தி நம் எம்.பி.க்களுக்குக் குறையலை.''”
"ஆமாம்பா, நம் தமிழகத்தின் கோரிக்கை எதையும் அவர் மனப்பூர்வமா ஏத்துக்கலையே?''”
"ஆமாங்க தலைவரே... தமிழக எம்.பி.க்கள் அப்பாயின்மெண்ட் கேட்டும் அவர்களை சந்திக்க மறுத்து, அமித்ஷா இழுத்தடித்தது பற்றியும், சீனியர் பா.ஜ.க. பிரமுகர்களே, "அவர்களை சந்தியுங்கள், இல்லைன்னா தேவையற்ற விமர்சனம் வரும்'னு அவருக்குச் சுட்டிக்காட்டியது பற்றியும், நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். அதைத் தொடர்ந்துதான், டி.ஆர்.பாலு தலைமையிலான எம்.பி.க்கள் குழுவை 17-ந் தேதி அமித்ஷா சந்திச்சார். அப்ப, எம்.பி.க்கள் குழு, "தமிழகத்திற்கு நீட் தேர் வில் விலக்களிக்க வேண்டும்' என்ற கோரிக்கை மனுவைக் கொடுத்தது. அமித்ஷாவோ, "உச்சநீதிமன்ற வழிகாட்டு தலின்படி நாங்கள் இயற்றிய சட்டத்தி லிருந்து தமிழகத் துக்கு மட்டும் எப்படி விலக் களிக்க முடியும்'னு கேட்க, முந்தைய வருடங்களில் விலக்கு பெறப் பட்டதை எல் லாம் பாலுவும் வைகோவும் சுட்டிக்காட்டி யிருக்காங்க.''”
"அதற்கு அமித்ஷா என்ன சொன்னாராம்?''”
"எல்லாவற்றையும் கேட்டுகொண்ட அமித்ஷா... சுகாதாரம், கல்வித் துறைகளின் அமைச்சர்களோடு விவாதிச்சிட்டு பதில் சொல்றேன்னு ஃபார்மா லிட்டியா சொல்லி இருக்கார். பாசிட்டிவான பதில் அமித்ஷாவிடம் இருந்து வாராததில், எம்.பி.க் களுக்கு அதிருப்தி. அதேசமயம், நீட் தேர்வுக்கு விலக்களிக்க தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் கவர்னர் கிடப்பில் வைத்திருப்பது சட்டமன்றத்தை அவமதிப்பதாகும். அவருக்கு இதுகுறித்து அட்வைஸ் செய்யுங்கள்னு அவங்க அழுத்தமாக சொல்லிவிட்டு வந்திருக்காங்க.''”
"சுதந்திர தினவிழா அணி வகுப்பில், நம் தமிழக அலங்கார ஊர்திகளை ஒன்றிய அரசு புறக் கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே... குடியரசு தின சிறப்புப் பேரணி யில் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைகளை உணர்த்தும் அலங்கார ஊர்திகளை அனு மதிக்க மறுத்துவிட்டது டெல்லி. தென்னிந்திய மாநி லங்களில், கர்நாடகாவைத் தவிர அனைத்து மாநிலங் களுக்கும் இதுபோல் ஊர்திகளுக்கு அனுமதி தரப்படலை. இப்படி நம் ஊர்திகள் மறுக்கப்பட்ட தற்கு ஆய்வுக் குழு தெரி வித்த காரணங்களை, உரிய வகையில் நம் செய்தித்துறை அதிகாரிகள், வரலாற்று ஆதாரங்களோடு மறுத்திருக்கணும்கிற கருத்து கோட்டைப் பக்கம் எதிரொலிக்குது. இதற்கிடையே, அண்மையில் 11 மருத்துவ கல்லூரிகளைக் காணொளிக் காட்சி வழியாக பிரதமர் மோடி திறந்து வைத்தபோது, முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை ஒன்றிய அரசுன்னு திரும்பத் திரும்ப சொன்னதை மோடி ரசிக்கலையாம். முதல்வர் முன்வைத்த நீட் தேர்வு ரத்து கோரிக்கையும் அவரை டிஸ்டர்ப் பண்ணிடிச்சாம்.''”
"ஜாமீனில் வெளியே வந்த அ.தி.மு.க. மாஜி ராஜேந்திர பாலாஜிக்கு சசிகலா தூது விட்டிருக்காரே?''”
"மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர பாலாஜியை, அவர் ஆதரவாளர்கள் 60 கார்கள் புடை சூழ வரவேற்றதை அறிந்த சசிகலா, அவரைத் தன் பக்கம் கொண்டுவரும் ஆர் வத்துக்கு வந்திருக்கார். அத னால், அவருக்கு நெருக்க மான ஒரு நபரிடம், அவரைப் பயப்பட வேணாம்னு சொல்லுங்க. நான் அவருக்கு ஆதரவா இருப்பேன்கிறதையும் அவரிடம் சொல்லுங்க. அவரை என் லைனுக்கு வந்து என்னிடம் பேசச் சொல்லுங்கன்னு சொல்லி இருக்கார். இதைக்கேட்ட ராஜேந்திர பாலாஜி, அவர் சங்காத்தமே வேணாம்டா சாமின்னு கையெடுத்துக் கும்பிட்டதோட, அவரிடம் இருந்து வந்த போனையும் எடுக்க மறுத்திட்டாராம். இந்த நிலையில் உ.பி. தேர்தலில் பா.ஜ.க. தோற்கும் என்று எதிர்பார்க்கும் சசிகலா, அதன்பின் டெல்லியின் பார்வை தமிழகத்தின் பக்கம் திரும்பும். அப்ப, என்னைச் சேர்த்துக்கச் சொல்லி அ.தி.மு.க.வுக்கு அது பிரஷர் கொடுக்கும். அதுவரை அமைதியாக இருப்போம்னு கணக்குப் போட்டபடி இருக்கிறாராம்.''”
"கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சஜீவன், என்னை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சவால் விடுறாராமே?''”
"ஆமாங்க தலைவரே... ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் பர்னிச்சர் வேலை பார்க்கப் போய், அங்கே செல்வாக்கைப் பெற்றவர் சஜீவன். கொடநாட்டு பங்களா சாவிகள் முழுதும் இவரிடம்தான் இருந்திருக்கு. கொலை, கொள்ளைச் சம்பவம் நடத்திய கும்பலிடம், குறிப்பா அந்தக் கும்பலின் தலைவராக இருந்த கனக ராஜிடம் பங்களா சாவிகளை ஒப்படைச்சி, அவர்கள் எளிதில் உள்ளே செல்லக் காரணமாக இருந்தவரும் அவர்தான். அவரை இதுவரை விசாரணை டீம் நெருங்கவே இல்லை. இப்போது கோவையில் பகிரங்கமாக உலவும் சஜீவன், என்னை யாரும் தொடமாட்டாங்க. ஏன்னா... என்னைத் தொட்டா, பல ஐ.பி.எஸ். அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சிக்கல்ல சிக்குவாங்க. அதனால் அவங்களே இப்ப எனக்குப் பாதுகாப்பா இருக்காங்கன்னு தெனா வெட்டாவே சொல்கிறாராம்.''”
"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களைகட்டுற நேரத் தில், ஊரக ஊராட்சி அமைப்புகளிடம் இருந்து முணுமுணுப்பு கேட்குதே?''”
"உண்மைதாங்க தலை வரே... போதுமான நிதி ஒதுக்காதது, ஊராட்சிப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது தொடங்கி, பழுதடைந்த தெரு விளக்குகளுக்கு மாற்று உபகரணங்கள் வாங்குவது, குடிநீர் குழாய்கள் பழுதானால் அதற் கான செலவினங்களைச் சமாளிப்ப துன்னு, அவசரமாச் செய்யவேண்டிய பல்வேறு அடிப்படைப் பணிகளைக் கூட செய்யமுடியலைன்னு ஊரக உள்ளாட்சி நிர்வாகத்தினர் சொல்றாங்க. இதுக்கே மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1 லட்சம் முதல் 1.20 லட்சம் வரை தேவை யாக இருக்குதாம். ஆனால், மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகமோ ரூபாய் 40, 45 ஆயிரம் வீதம் மட்டுமே அனுப்புகிறதாம். அதனால், இது குறித்து தி.மு.க. அரசு கவனம் செலுத்தணும்னு ஊராட்சித் தலைவர்கள் பரிதவிப்போடு கோரிக்கை வைக்கிறாங்க.''”
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லுக்குப் பிறகு, இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும்னு சொல்லப்படுதே?''”
"உண்மைதாங்க தலைவரே... விரைவில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவாருன்னும் அவருக்கு உள்ளாட்சித் துறை ஒதுக்கப்படும் என்றும் கோட்டையில் பலமாக டாக் அடிபடுது. அப்படி அவர் வந்த பிறகு எல்லாவற்றிற்கும் விடிவு பிறக்கும் என்றும் சொல்கிறார்கள். இப்போது, உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக லாம்கிற சூழல் இருந்தாலும், தி.மு.க., களத்துக்கு தயாராகவே இருக்கு. ஆனாலும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பற்றி, அது இன்னும் பேசலை. அதேபோல் இந்த முறை மேயர் தொகுதிகள் மீதும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் பார்வையைப் பதிச்சிருக்கு. எந்தெந்த மேயர் தொகுதியை தி.மு.க.விடம் கேட்பதுன்னு ஒவ்வொரு கட்சியும் கணக்குப் போட்டுக்கிட்டு இருக்கு.''”
"அ.தி.மு.க. நிலவரம் என்ன?''”
"அங்கே கட்சித் தலைமையும் தேர்தல்ல ஆர்வம் காட்டலை. கட்சிப் பிரமுகர்களும் அதில் ஆர்வம் காட்ட லைன்னு சொல்றாங்க. இந்த நிலையில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று அ.தி.மு.க. தலைமையகத் துக்குப் போயிருந்த முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் உமையாள் என்பவரிடம், 20 லட்ச ரூபா இருந்தா, நீ மேயருக்குக் களமிறங்கிக் கலக்கலாம்னு மாஜி மந்திரி வளர்மதி சொல்ல... அதற்கு உமையாள், சீட் கேட்டா மா.செ. ஆதிராஜாராமுக்கு 20 லட்ச ரூபாய் நான் மொய் எழுதவேண்டியிருக்குமே.. அதுக்கு எங்க போறதுன்னு சொல்லியிருக்கார். இந்தத் தகவல் ஆதிராஜாராம் காதுக்குப் போக, இப்ப வளர்மதியும் ஆதிராஜாராமும் மோதிக்கிட்டு இருக்காங்களாம்.''”
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றி என் காதுக்கு வந்த தகவலை சொல்றேம்ப்பா.. பகிர்ந்துக்கறேன். தமிழகத் தில் மொத்தம் உள்ள 21 மேயர் தொகுதிகளில், ரிசர்வ் தொகுதிகளை ஒதுக்குவது போல இந்தமுறை பெண்களுக்கு 11 மேயர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கு. இந்தப் பட்டிய லின்படி, இப்ப தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள், தி.மு.க. விடம் டிமாண்ட் வைக்கக் காத்திருக்கு. தாம்பரம் மாநக ராட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்பார்க்குதாம். கோவை, திண்டுக்கல் மீது சி.பி.எம். கண் வைத்திருக்குதாம். கன்னியாகுமரியை காங் கிரஸ் குறிவைக்கிதாம். ஆனால் மேயர் தொகுதிகள் அனைத் திலும் தானே போட்டி யிடுவதுங்கிற எண் ணத்தில் அறிவாலயம் உறுதியாக இருக்குதாம்.''”
"நான் வேறொரு தகவல் சொல்றேன்... ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ். அதிகாரிகள தொடர்பாக மாநில அரசுக்கு இருக்கும் வீட்டோ பவரைப் பறிக்க மோடி அரசு, ஒரு சட்ட மசோதவைக் கொண்டுவரத் திட்மிட்டிருக்காம். இது நிறைவேறினால், எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் அந்த அரசின் எதிர்ப்பை மீறி, ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ். அதிகாரி களை தன் இஷ்டத்துக்கு ஒன்றிய அரசால் அழைத்துக் கொள்ள முடியும். மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்கும் மற்றொரு நடவடிக்கை இது.''”