"ஹலோ தலைவரே, ஒரே ஓட்டு -இரண்டு பதவின்னு இதுவரை இல்லாத புதிய விதி முறைப்படி அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரா ஓ.பி.எஸ்.ஸும், இணை ஒருங்கிணைப்பாளரா இ.பி.எஸ்.ஸும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டாச்சு.''”
"கவனிச்சேம்ப்பா.. பொறுப்பேற்றதும் போராட்டத்தை அறிவிச்சிருக்காங்களே எதிர்க்கட்சியின் இரட்டைத் தலைவர்கள்.''“
"ஆமாங்க தலைவரே, தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் முழுதாக நிறைவேற்றப்படாதது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாதது, மழைவெள்ள பாதிப்புகளுக்கான உரிய நிவாரணம் வழங்காததுன்னு மு.க.ஸ்டாலின் அரசு மீது குற்றச்சாட்டுகளை வைத்து, 9ந் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்னு அ.தி.மு.க தலைமை அறிவித்தது. 7ந் தேதி இது சம்பந்தமா மா.செ.க்களுடனும் மாஜி மந்திரிகளுடனும் ஓ.பி.எஸ். பேசுறப்ப, ஆர்ப்பாட்டத்தில் திரளும் கூட்டத்தைப் பார்த்து தி.மு.க. அரசும் போலீசும் ஷாக் ஆகணும்னு சொல்லியிருக்காரு. சசிகலா பின்னால் எந்தத் தொண்டனும் போகலைங்கிறதைக் காட்டுற மாதிரி ஆர்ப் பாட்டக் கூட்டம் இருக்கணும்னு இ.பி.எஸ். சொல்லியிருக்காரு. முன்னாள் மந்திரிகளோ, அவரவர் செல்வாக்கைக் காட்ட இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக்க நினைக்கிறாங்க. கோவை மாவட்ட நிர்வாகிகளிடம் போராட்டத்துக்கு 2 லட்சம் பேரைத் திரட்டிக் காட்டி, கட்சியே கோவைல தான் இருக்குன்னு நாம காட்டணும்னு வேலுமணி சொல்லியிருக்காரு. முப்படை தளபதி மரணத்தால், 9-ந் தேதி போராட்டத்தை 17-ந் தேதிக்கு அ.தி.மு.க. ஒத்தி வச்சிருக்கு.''”
"அ.தி.மு.க. மாஜிக்கள் சிலர் சசிகலா பக்கம் சைடு அடிப்பதாகவும் டாக் அடிபடுதே?''”
"ஏற்கனவே கொரோனா கொள்முதல் ஊழலில் சிக்கிய மாஜி சுகாதாரம் விஜயபாஸ்கர், தனக்கு தெரிந்தவர் மூலம் ஊசி போடும் சிரிஞ்ஜ் தொழிற்சாலை தொடங்கவைத்து, 60% கமிஷன் பெற்றார்னு விசாரணை அதிகாரிகள் கண்டுபிடிச் சிருக்காங்களாம். இந்த விவகாரத்தில் தனக்கு எடப்பாடி துணை நிற்க மறுப்பதால், சசிகலா பக்கம் சாய நினைக்கிறாராம். அதேபோல் மாஜி செங்கோட்டையனும், தனக்கு அ.தி.மு.க.வில். முக்கியத்துவம் இல்லைன்னு ஃபீல் பண்ணி, சசியை ஆதரிக்கலாமான்னு ஆலோசிக்கிறாராம். இந்த நேரத்தில் எடப்பாடிக்கு கட்சிக்குள்ளேயே எதிர்க்கடை போட நினைக்கும் வேலுமணியும், அவரை டென் சன் படுத்த, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.டி. எஸ்.சின் 20 ஆவது நினைவு நாளுக்கு இத்தனை வருடமா இல்லாமல் திடீர்னு அஞ்சலி செய்தி வெளி யிட்டிருக்கிறாராம்''”
"மாஜிக்கள் சசிகலா பக்கம் திரும்புற நிலையில், அவர் ரஜினியை சந்திச்சிருக்காரே?''”
"வீட்டில் ஓய்வா இருக்கும் ரஜினியையும் அவர் மனைவி லதாவையும் சசி சந்தித்து நலம் விசாரித்தார். பெங்களூரு சிறையில் 4 வருடம் இருந்த அனுபவத்தில், கன்னடத்திலும் பேசி அசத்தியிருக்கிறார் சசி. ரஜினி-சசி சந்திப்பு செய்தி வந்ததுமே, எடப்பாடி அப்செட் ஆயிட்டாராம். காரணம், ரஜினியை சந்தித்து நலம் விசாரிக்க விரும்புவதாக, அவர் ஏற்கனவே ரஜினிக்குத் தகவல் அனுப்பியும், அவரிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். சசிக்கு மட்டும் நேரம் ஒதுக்கியது ஏன்னு பலரிடமும் அவர் விசாரிச்சிக்கிட்டு இருக்கார்''”
"சந்திப்பு பற்றி ஆட்சி மேலிடங்களுக்கும் ரிப்போர்ட் போயிருக்குமே?.''
"உளவுத்துறை வட்டாரத்தில் விசாரிச்சப்ப, அ.தி.மு.க.வில் மீண்டும் கோலோச்ச விரும்பும் சசி, அங்கே போதுமான அளவு செல்வாக்கு இல்லாததால், இமேஜ் பூஸ்ட் அப்பிற்காக ரஜினியை சந்திச்சிருக்கலாம்னு சொல்லுது. இதேபோல் கமல், விஜயகாந்த், சீமான் போன்றவர்களையும் சந்திச்சி பரபரப்பை அதிகரிக்க நினைக்கிறாராம்.''”
"சட்டமன்றக் கூட்டத்தொடர் பழையபடி கோட்டையில் நடக்கப்போகுதே?''”
"ஆமாங்க தலைவரே, கலைஞர் உருவாக்கிய புதிய தலைமைச் செயலகத்தை மறுபடியும் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால், அதை உடனடியாக நிறைவேற்றுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், தென் சென்னையில் உருவாகவிருக்கும் பல்நோக்கு மருத்துவமனை அமைந்த பிறகு புதிய தலைமைச் செயலகத்தை துவக்கலாம் என்று அவர் நினைக்கிறார். இந்த நிலையில்தான் சபாநாயகர் அப்பாவு 7-ந் தேதி பேரவைச் செயலக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, ஜனவரி பேரவைக் கூட்டத்தை, கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த கட்டிடத்திலேயே நடத்தலாம்கிற முடிவை எடுத்திருக்கிறார். 2022-ன் முதல் பேரவைக் கூட்டமான அதை நேரடியாக மக்களுக்கு ஒளிபரப்ப ஏற்பாடு செய்யுங்கள்னு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்காராம்.''”
"பாலியல் வழக்குகளில் சிக்குபவர்களுக்கு ஆதரவா செயல்படும் முந்தைய ஆட்சிக்கால போலீசின் போக்கு இந்த ஆட்சியிலும் மாறலை போலிருக்கே?''”
"அதுபற்றி நான் சொல்றேன். திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசியல்வாதியும், கல்விக்குழும அதிபருமான ஜோதிமுருகன், மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த விவகாரம், அங்கே விசுவரூபம் எடுத்திருக்கு. கைதான ஜோதிமுருகன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். நீதி கேட்டு, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்..ஏ. பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கு. அப்ப பா.ஜ.க. வழக்கறிஞர்கள், ஜோதிமுருகனுக்காக வரிந்து கட்டிக்கிட்டு, பாலபாரதியிடம் தகராறு செய்திருக்காங்க. அதோடு, பா.ஜ.க. புகார் அடிப்படையில், பாலபாரதி மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத செக்ஷன்களில் வழக்குப் போட்ட போலீஸ், எதிர்தரப்பு மீது அவர் கொடுத்த புகாரையே வாங்கலையாம். இதற்குக் காரணம், கடந்த ஆட்சியில், சென்னையில் செல்வாக்காக இருந்த, ஏரியா டி.ஐ.ஜி. விஜயகுமாரிதானாம்.''