மிழனின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில் தான் நடத்தவேண்டும் என்பதற்கே தமிழர்கள் போராட்டம் நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய கோவிலை ராஜராஜசோழன் கட்டி முடித்து குடமுழுக்கு நடத்த திட்டமிட்டபோது, அவனைச் சுற்றியிருந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக சமஸ்கிருத மந்திரம் ஓதி குடமுழுக்கை நடத்தி விட்டார்கள். இது, ராஜராஜனின் குருவான கருவூரார் சித்தருக்கு கோபத்தை ஏற்படுத்தி யது. அவர் ராஜ ராஜனை சபித்துவிட்டு சென்றதாக கூறப் படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த சர்ச்சை இப்போது மீண் டும் எழுந்துள் ளது. பெரு வுடையார் கோவில் ஆகம விதிகளுக்கு மாறாக சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதைக் கண்டுகொள்ளாமல் சமஸ் கிருதத்திலேயே குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

hh

"உடலுக்கும் உயிருக்கும் சக்தியை தூண்டக்கூடிய ஒலி அதிர்வு தமிழுக்கு இருக்கிறது. இதைத்தான் சித்தர்களும் சொன் னார்கள். அவர்கள் அருளிய மந்திரங்கள் மறைக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்றே சித்தர்கள் விரும்புகிறார்கள். எனவேதான், அரசு தலையிட்டு தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 22-ஆம் தேதி தஞ்சையில் வேண்டுகோள் மாநாடு நடை பெற்றது.

Advertisment

பெ.மணியரசன் தலைமையில் தஞ்சை காவேரி திருமண மண்ட பத்தில் வேண்டுகோள் மாநாடு நடைபெற்றது. அயனாவரம் முரு கேசன் தலைமையில் தொடங்கிய முதல் அமர்வில்.. களிமேடு அப்பர் பேரவையினரின் திருமுறைப் பாடல்களோடு மாநாடு தொடங் கியது. இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த சித்தர் வழி ஆன்மிகச் செயற்பாட்டாளர்கள் செந்தமிழால் வேள்வி நடத்த முடியும் என மாநாட்டில் அரங்கேற்றிக் காட்டினார்கள். சமஸ்கிருதத்தில் "ஓ' என்ற சொல்லே இல்லை. பிரணவ மந்திரம் எனப்படும் முதன்மை மந்திரமான "ஓம்' என்பது தமிழ் மந்திரம். சமஸ் கிருதத்தில் "3' என்ற எண்போல எழுதப்படுவது "ஓம்' அல்ல அது "ஊம்' என்றார்கள் சித்தர் வழியினர். 2005 ஆம் ஆண்டு முதல் தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் அடங்கிய ஒளிப்படக் காட்சியை ஆவடி தமிழ்ச் சைவ பேரவைத் தலைவர் கலையரசி நடராசன் திறந்துவைத்தார்.

பெரிய கோவில் குடமுழுக்கை தமிழ் வழியிலேயே நடத்த வேண்டும். பெரிய கோவில் உள்ளிட்ட 88 கோவில்களுக்கு மராட்டியத்தைச் சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவரை பரம்பரை அறங்காவலர் என்று அரசு கொடுத்துள்ள உரிமையை நீக்கிவிட்டு கோவில்களை தமிழக அரசின் அறங்காவல் துறையே நிர்வகிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சமஸ்கிருதமய மாக்கப்பட்ட ஆண் மற்றும் பெண் கடவுளர்களின் பெயர்களையும் ஆன்மிக ஊர்ப்பெயர்களையும் மீண்டும் தமிழாக்க வேண்டும்.

அர்ச்சகர் பயிற்சிபெற்ற 230 மாண வர்களுக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு வாழ்வூதியம் வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisment

மாலையில் நடைபெற்ற நிறைவரங்கில் பேசிய வழக்கறிஞர் நல்லதுரை, ""ராசராசன் தமிழன் என்று பெருமை கொள்வதைப் போல, அவன் கட்டிய கோவில் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும்'' என்றார்.

முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் பேசும்போது, ""ராஜராஜன் சிலையை மீட்க நான்தான் வழக்குப் போட்டேன். சிலை மீட்கப்பட்டது'' என்றார்.

முடிவாக பேசிய பெ.மணியரசன்,…""தமிழர்கள் கடவுளிடம் வேண்டுவதாக இருந்தாலும், கோபப்படுவதாக இருந்தாலும் தமிழ்மொழி யைத்தானே பயன்படுத்துகிறார்கள். வேறு எந்த மொழியிலும் இல்லாத கடவுள் வாழ்த்துகள் தமிழில் இருக்கின்றன. அப்படிப்பட்ட மொழியை ஏன் கடவுள் ஏற்கமாட்டார்? தமிழ்மொழி தமிழர்கள் கட்டிய கோவிலுக்குள் இருக்கக்கூடாது என்பது, மொழி ஆதிக்கம் என்பதைவிட இன ஆதிக்கம் என்பதே சரியாக இருக்கும். மீண்டும் கருவறைக்குள் தமிழ் ஒலிக்க வேண்டும். அயல்மொழியைத் தூக்கி எறிவோம்.

எங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் போன்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களும் தமிழில் குடமுழுக்கு நடத்துங்கள் என்று அரசுக்கு கோரிக்கைதான் வைத் திருக்கிறார்கள். 28-ஆம் தேதிவரை அரசின் முடிவுக்கு காத்திருப்போம். அதற்குள் அறிவிக்க வில்லை என்றால் போராட்டங்கள் நடத்து வோம். வீதியில் இறங்கிப் போராடுவோம். ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம்'' என்றார்.

-இரா.பகத்சிங்