மிழகத்தில் சட்ட விரோத மாக குவாரி மணல் விற்பனை நடைபெற்றதாகவும், அதன் மூலம் பண மோசடி செய்து அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் மணல் குவாரி உரிமையாளர்கள்மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி யது. இந்த மோசடி மணல் குவாரிகளைக் கண்காணிக்கத் தவறியதாக, திருச்சி பிரதீப்குமார், அரியலூர் ஆனி மேரி ஸ்வர்னா, கரூர் தங்கவேல், தஞ்சாவூர் தீபக் ஜேக்கப், வேலூர் சுப்புலட்சுமி ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சி யர்கள் மீதும் குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அவர்களை விசாரணைக்கு ஆஜராகக்கூறி சம்மன் அனுப்பியது.

sand

இந்த ஐந்து மாவட்டங்களில்தான் அதிக அளவுக்கு மணல் கொள்ளை நடைபெற்றுள்ள தாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதால், நிலத்தடிநீர் முழுமையாக பாதிக்கப் பட்டு, குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஆங்காங்கே பெரிய அளவிலான குழிகள் ஏற்பட்டு, காவிரியில் தண்ணீர் திறக்கும் தருணங்களில் இந்த குழிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு இயற்கைச்சூழலுக்கே கேடாக மாறியிருப்பதாகக் கூறப்படுவதோடு, சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. ஏனெனில், அரசு நிர்ணயித்த அளவை விட பத்து மடங்கு அதிகமான அளவிற்கு மணலை அள்ளி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இப்படி இயற்கை வளங்களைச் சூறையாடிய மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு துணை போனதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, அவர்களை விசாரிக்க சம்மன் அனுப்பியது.

இந்த சம்மனை எதிர்த்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறையின் அழைப்பாணைக்குத் தடை விதித்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறையின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை தவறாகப் புரிந்துகொண்டு அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இந்த புகாரில் தவறு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகத் தோன்றுவதாகவும் கூறி, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டது.

Advertisment

ஆனால் இதற்கும் அதிகாரிகள் ஆஜராகாத தால், அவர்களுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதாலும், தேர்தல் பணிகளை ஆட்சியர்கள் கவனித்து வருவதாலும், அவர்களால் நேரில் ஆஜராக இயலாது' என்று தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தேர்தல் முடிந்த ஏப்ரல் 25ஆம் தேதி அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டு மென்று உத்தரவிட்டது. அதன்படி, ஏப்ரல் 25 அன்று சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான 5 ஆட்சியர்களும், கடந்த 3 ஆண்டு காலமாக குவாரிகளில் மணல் அள்ளப்பட்டது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

sand

ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களை சரிபார்ப்பு செய்த அமலாக்கத் துறை, அது தொடர்பான விசாரணையை அவர்களிடம் நடத்தியது. விசாரணையில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர் நேரடியாக வந்து மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தியதாகவும், அதில் பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டதாகவும், இந்த பண மோசடியால் அரசுக்கு அதிக வருவாய் இழப்பு ஏற்படுத்தியதோடு, தங்களுடைய அதிகாரத்தை ஆட்சியர்கள் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் அமலாக்கத்துறையினர் அதிரடி காட்டியுள்ளனர்.

Advertisment

நேரில் ஆஜரான ஆட்சியர்களில், திருச்சி மாவட்ட ஆட்சியர் தான் பெரிய அளவிலான வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றம்சாட்டப் பட்டதாகவும் தகவல் வெளியே கசிந்துள்ளது. இவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகுதான், மணல்குவாரிகளில் வரம்புக்கு மீறி மணல் அள்ளப்பட்டு பல கோடி மதிப்பில் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் கொடுத்த ஆவணங்கள் அனைத்திலும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டிருந்தாலும், விதிமுறைகளுக்கு புறம்பாகத் தன்னுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமலாக்கத் துறையினர் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவணங்களை முழுமையாக ஆய்வுசெய்த பிறகு விரைவில் அமலாக்கத் துறையினர் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ஆட்சியர்களில் 3 ஆட்சியர்கள் மட்டுமே முழுமையான ஆவணங்களை சமர்ப்பித்ததோடு, அமலாக்கத்துறையின் கேள்விகளுக்கு முறையாகப் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் திருச்சி மற்றும் அரியலூர் ஆட்சி யர்கள் மட்டும், தினமும் குவாரியில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டுள்ள தென்று வழங்கப்படும் புள்ளி விவரங்கள் குறித்த ஆவணங்களை மட்டுமே வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு, 'கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப் பட்டதோ அதே நடை முறையைத்தான் நாங் களும் பின்பற்றினோம்' என்று மட்டுமே சுருக்க மாகப் பதில் அளித்துள்ள தாகக் கூறப்படுகிறது. இதுபோன்று அவர்கள் அளித்த பதிலால் அமலாக் கத்துறையினர் திருப்தி அடையவில்லை. ஆட்சி யர்கள் அனைவரிடமும் நடத்தப்பட்ட விசா ரணைகள் முழுமையாக வீடியோப்பதிவு செய்யப் பட்டுள்ளன. அதேபோல், இந்த ஐந்து மாவட் டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான நீர்வள ஆதாரத்துறையின் முதன்மைப் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற முத்தையா என்ற அதிகாரியையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகக் கூறப்படு கிறது. அவர் அளிக்கும் வாக்குமூலத்தின்படி அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு முன்னோக்கிச் செல்லும் என்று எதிர் பார்க்கப் படுகிறது. மேலும் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் மீதான புகார்களில் குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதால் அவர்களை மீண்டும் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைப் பார்கள் என்று கூறப் படுகிறது.

சமீபத்தில் 15 நாட் களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்திலிருந்து 15க்கும் மேற்பட்ட லாரி களில் மணலை அள்ளிக் கொண்டு சென்றதை அப்பகுதியிலுள்ள ஊர்ப் பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மணல் லாரிகள் அனைத்தும் அரசு கட்டடம் கட்டுவதற்காக கோவை மாவட்ட ஆட்சி யர் கொடுத்த உத்தரவின் அடிப்படையில் மணலை அள்ளிக்கொண்டு செல்வ தாகக் கூறப்பட்டது. ஆனால், அமலாக்கத் துறையினர் சட்டப்பூர்வ மாக சீல் வைத்துவிட்டு சென்ற இடங்களில் எப்படி மணல் எடுக்க முடியும் என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி விவா தத்தில் ஈடுபட்டபோது, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இதில் தலையிட்டு லாரிகளை விடுவித்து அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவத்தையும் அமலாக்கத்துறை கணக்கில் கொண்டுள்ளது. 5 ஆட்சியர்கள் மீதான அமலாக்கத்துறையின் விசாரணையில் ஆட்சியர்கள் வசமாகச் சிக்கியிருப்பதால், விசாரணையின் இறுதியில், அவர்களைக் கைது செய்வதற்கும்கூட முகாந்திரம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

________________

பி.ஜே.பி.க்கு செட்டில்மெண்ட்?

ஆற்றுமணல் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் மீதான விசாரணை இப்பொழுது அ.தி. மு.க. ஆட்சிக்காலம் நோக்கி திரும்பியுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மணல் சம்பாத்தி யங்களைக் கண்காணிக்க தனி அதிகாரி போட்டிருந்தார்கள். ஆனால், மணல் மாபியா கரிகாலன்தான் அனைவரையும் ஆட்டுவித்துள் ளார். நடந்துமுடிந்த தமிழக பாராளுமன்றத் தேர்தலில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி போன்ற தொகுதிகளுக்கு பா.ஜ.க. மா.த. மூலம் 200 கோடிவரை கரிகாலன் கொடுத்துள்ள தாகவும், தற்பொழுது கர்நாடகா போய் தேர்த லுக்காக வெயிட்டான அமவுண்ட் கொடுத் துள்ளதாகவும், டெல்லியில் பி.ஜே.பி. தலை வர்களைச் சந்தித்து செட்டில்மென்ட் பேசி முடித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் குவாரிகள் சீல் வைக்கப்பட்டதால் ஆந்திராவிலிருந்து ஆற்றுமணல் இறக்கும் கரிகாலன் 1 யூனிட் 8000-க்கு வாங்கி 14000 வரை விற்பதாகவும், டெல்லி கொடுத்த தைரியத்தில் அமலாக்கத் துறையைப் பற்றிய பயமின்றி தி.மு.க. அமைச்சர் துரைமுருகனுடன் தொடர்ச்சியான மீட்டிங்குகளை நடத்தி மணல் எடுத்து வருவ தாகச் சொல்லும் பா.ஜ.க. வட்டாரங்கள் ட.ங.க.ஆ. சட்டம் செந்தில்பாலாஜிக்கு மட்டும்தானா? துரைமுருகன் மீது பாயாதா? என்கின்றன.

-தாமோதரன் பிரகாஷ்