மிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாக மணல் குவாரிகளில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு தற்போது மீண்டும் மணல் குவாரிகள் செயல்படுவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

மணல் குவாரிகளை மொத்தமாக தன் வசம் வைத்திருந்த எஸ்.ஆர். குரூப்ஸ் ராமச்சந்திரன் மீது ஏகப்பட்ட அதிருப்தி அடைந்திருக்கிறது ஆட்சி மேலிடம். அதனால் அவரிடமுள்ள மணல் குவாரிகளை கைமாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைத்தன.

ss

தமிழகத்தைப் பொறுத்தவரை, மணல் பிசினஸ் பெரும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியிருக்கிறது. ஆறுகளிலும் ஏரி போன்ற நீர் நிலைகளிலும் மணலை யும், சவுடு மண் போன்றவற்றையும் அள்ளி, தமிழகம் முழுக்க அதிக விலைக்கு விற்று, மணல் மாஃபியாக் கள் கொழுத்த லாபம் அடைந்து வருகிறார்கள் என்பதே தமிழகம் கண்ட பிளாஷ்பேக் அனுபவம்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஆறுமுகச்சாமி இந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தார். இவர்தான் ஜெ.வின் கொடநாடு பங்களாவைக் கட் டிக் கொடுத்தார் என்று. அப் போதே பேச்சு எழுந்தது. அந்த நாட்களிலேயே ஆறுமுகச் சாமியுடன் எஸ்.ஆர். டீம் கைகோத்து, இந்தத் தொழிலில் இறங்கியது.

Advertisment

இதன்பிறகு கரிகாலன், ரத்தினம், ராமச் சந்திரன் ஆகிய மும்மூர்த்திகள் இந்த மணல் பிஸினஸில் கொடிகட்டிப் பறக்கத் தொடங் கினர். தி.மு.க. ஆட்சியில் இவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக மாறினர். இந்த நிலையில் மணல் விற்பனை குறித்து அதிக புகார்கள் எழுந்தபடியே இருந்தது. இவர்களுக்கு அதிகாரி கள் உடந்தையாக இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்தது. இவர்களின் கூட்டணியால் சட்ட விரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடப்பதாகவும் சொல்லப் பட்டது. இந்த நிலையில் மணல் குவாரிகளைக் குறிவைத்து அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தினர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த அதிரடி தொடர, பர பரப்பான தகவல்களும் வெளிவந்தபடியே இருந்தன.

இந்த ரெய்டு களின் போது, சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக முக்கிய ஆதாரங்களும், கணக்கில் வராத பெருமளவு பண மும் கைப்பற் றப் பட்ட தாகவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி சம்பந்தப் பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் என அனைவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.அதிரடி விசாரணைகளையும் நடத்தியது.

தொடர்ந்து அமலாக்கத்துறை குறிவைத் துப் பாய்ச்சலை நடத்தியதால், கரிகாலனும் ரத்தினமும் மணல் பிசினஸில் மெல்ல ஒதுங்கி நின்றுகொண்டார்கள். இந்த நிலையில் கொஞ்ச காலம் அமைதியாக இருந்த ராமச்சந்திரன் மட்டும், தனது பாய்ச்சலை மீண்டும் நடத்தத் தொடங்கினார். தனிக்காட்டு ராஜாவாக மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த இவர் தரப்புக் கும் இப்போது, கடிவாளம் போடும் முடிவை தி.மு.க. அரசு அதிரடியாக எடுத்திருக்கிறது.

Advertisment

ss

தமிழக மணல் குவாரிகளை, நான்கு மண்டலங்களாக அரசு பிரித்துள்ளது. அதாவது, சென்னை, கோவை, திருச்சி, மதுரை என்று அவை பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எஸ்.ஆர். குரூப்ஸ், ஏகபோகமாக லாபம் பார்த்து வந்தது. அதுமட்டுமல்லாமல், பிற ஒப்பந்த வேலைகளையும் பல்வேறு பினாமி பெயர்களில் இவர்கள் செய்துவருகின்றனர்.

குறிப்பாக, தமிழகத்திலுள்ள மாநகராட்சி களில் குப்பை அள்ளும் ஒப்பந்தம், சென்னை கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த எஸ்.ஆர்.குரூப்பிற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் திருச்சி பச்சப்பூர் புதிய பேருந்து நிலைய ஒப்பந்தப் பணி முழுவதும் எஸ்.ஆரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மூலமும் கரன்ஸிகளை அள்ளிவருகிறது இந்த டீம். இருந்தும் தங்களுக்கு எந்தவித விசுவாசமும் இன்றி, எதிர்க்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிப் பிரமுகர்களுக்கும் அவர்கள் களப்பணி செய்து வந்தது தெரியவர,அவர்களின் கொட்டத்தை அடக்க நினைத்த மேலிடம், மணல்குவாரிகள் அனைத்தையும் எஸ்.ஆர். குரூப்ஸிடமிருந்து பிடுங்கும் முடிவுக்கு வந்திருக்கிறதாம்.

இந்த நிலையிலும், அவர்களுக்கான பரிந்துரைகள் ஹெவியாக இருந்ததால், சென்னை மண்டலத்தை மட்டும் போனால் போகிறது என்று எஸ்.ஆர். குரூப்ஸிடம் கொடுத்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறதாம் மேலிடம். மற்ற மூன்று மண்டலங்களிலும் உள்ள குவாரிகளைக் கைமாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.

சமீபத்தில் நடந்த எஸ்.ஆர். குரூப்ஸ் இல்லத் திருமண விழாவில் முதல் வரிசையில், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும், இரண்டாவது வரிசையில் மாஜி அ.தி.மு.க. அமைச்சர்களும் அமர்ந்திருப்பதைப் பார்த்து, அனைவரும் திகைத்தனர். அதோடு பா.ஜ.க. பிரமுகர்களையும் அங்கே பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளிடமும் மிகநெருக்கமாக இருந்து வந்திருக்கிறார் எஸ்.ஆர். குரூப்ஸ் ராமச்சந்திரன்.

அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது 40-க்கு 40 என்கிற இலக்கை வைத்துக்கொண்டு தி.மு.க. கூட்டணி களத்தில் விறுவிறுப்பு காட்டியது. அப்போது, தி.மு.க. ஆட்சியில் மணலால் லாபம் கொழித்துவரும் எஸ்.ஆர்.குரூப்ஸோ, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுழன்ற அ.தி.மு.க.வுக்கு பெருமளவில் நிதியை வாரிக்கொடுத்து, எடப்பாடியின் மனதைக் குளிரவைத்ததாம். அதேபோல், தி.மு.க.வை பரம எதிரியாகக் கூறிக்கொண்டு அரசியல் செய்து வந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர், கோவையில் களமிறங்கியபோது, அங்கே ஆளுங்கட்சியான தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமார் நிறுத்தப் பட்டார். அப்போது எஸ்.ஆர். குரூப்ஸ் ராமச் சந்திரன், பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு பெருமள வில் நிதியை வாரி வழங்கியதோடு, தங்கள் நிறுவனத்தில் வேலைபார்த்த 100 ஊழியர்களை யும் தேர்தல் வேலைக்காக அனுப்பி வைத்தா ராம். அந்த நபர்கள்தான் பா.ஜ.க. மாநில நிர் வாகிக்காக பரபரப்பாகக் கள வேலை பார்த்தார்களாம். இந் தத் தேர்தலில் அங்கே தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ் குமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோதும், அந்த பா.ஜ.க. நிர்வாகி 4 லட்சத்து 50 ஆயிரத்து 132 வாக்குகள் பெற்ற தற்கு, எஸ்.ஆர்.குரூப்ஸின் கரன்ஸிப் பாசனமும் கள வேலைகளும் தான் முக்கிய காரணமாக இருந்ததாம்.

அண்மையில் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் அமைச்சராக் கப்பட்டிருக்கும் செந்தில்பாலாஜி, இந்த விபரங்களையெல்லாம் முதல்வ ரிடம் அறிக்கையாகக் கொடுக்க, இதைக்கண்டு அவர் திகைத்துப் போய்விட்டா ராம். இதைத்தொடர்ந்தே, வாய்மொழி உத்தரவாக எஸ்.ஆர். குரூப்ஸுக்கு இனி மணல் குவாரிகளின் உரிமத்தைக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன், முதல்வரிடம் சென்று, எஸ்.ஆர். குரூப்ஸுக்கு சென்னை மண்டலத்தையாவது கொடுக்கலாமே என்று வலியுறுத்தியதால், அதற்கு மட்டும் ஓ.கே. சொல்லப்பட்டிருக்கிறதாம். அதையும்கூட ஒருவருக்குக் கீழ் சப்-காண்ட்ராக்டாக எடுத்து நடத்தும் வகையிலேயே சென்னை மண்டல மணல் குவாரிகளைத் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறதாம்.

தமிழகத்தின் மற்ற மூன்று மண்டலத்தின் மணல் குவாரிகளும் யாருக்குத் தரப்படவிருக் கின்றன என்று விசாரித்தபோது, மயிலாடு துறையைச் சேர்ந்த ராஜப்பாவுக்குக் கொடுப் பதற்கான ஏற்பாடுகள் நடப்பதாகச் சொல் கிறார்கள். இப்போது ராஜப்பா, சென்னையில் குடியேறி பல்வேறு தொழில்களை நடத்திவருகிறார்.

தேவர் சமூகத்தை சேர்ந்த சீர்காழி நகர தி.மு.க. செயலாளர் தேவேந்திரனின் மனைவி கமலஜோதி, அங்கே ஒன்றிய சேர்மேனாக இருக்கிறார். இவர் அரசின் மேலிடத்தின் பள்ளித் தோழியாம். திருவாலங்காடு பள்ளியில் படித்தபோது, அவருடன் கமலஜோதி படித்திருக்கிறார். இவரது கணவர் தேவேந்திரனின் நெருங்கிய உறவினர் தான் ராஜப்பாவாம், எனவே அவ ரிடம் மூன்று மண்டல மணல் குவாரி களையும் ஒப்படைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

கலைஞர் காலத்திலிருந்தே அவருக்கும் அவ ருடைய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக ராஜப்பா இருந்துள்ளார். தற்போது வழங்கப்படவுள்ள மணல் குவாரிகள் அனைத்தும் பட்டா நிலங்களில் வழங்கப்பட்டுள்ள தால்.. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் உள்ளவர்கள் கையில் பணப்பெட்டியுடன் ராஜப்பாவினை இப்போதே பின்தொடர ஆரம்பித்துள்ளனர். தீபாவளிக்கு முதல் நாளிலிருந்தே ராஜப்பா, தங்களை மணல் ஏஜண்டாக அரசு நியமித்துள்ளதாக கூறிவருகிறாராம். இதைத் தொடர்ந்து அவரது தரப்பைச் சேர்ந்த ஒரு டீம், குவாரி உரிமையை வழங்குவதாகக் கூறிக்கொண்டு, வசூல் வேட்டையில் இறங்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

எத்தனையோ மணல் அதிபர்களையும், மணல் மாஃபியாக்களையும் பார்த்த தமிழகம், இனி ராஜப்பாவின் மணல் ராஜாங்கத்தை சந்திக்கப்போகிறது.