சேலம் உருக்காலை தேர்தல்! தி.மு.க.வோடு மல்லுக்கட்டிய கம்யூனிஸ்ட்!

ss

சேலம் உருக்காலை யில் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி யின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங் கம், அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் களமிறங்கி யதை வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மார்க் சிஸ்ட் கம்யூ. கட்சி தாவப் போவதாக பரபரப்பு கிளம்பி யுள்ளது. சேலத்தின் அடையாள மான சேலம் உருக்காலையில் 591 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,000 ஒப்பந்தத் தொழிலாளர் களும் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு 1,600 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்துவருகிறது.

இந்த உருக்காலையிலுள்ள தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் தொழிற்சங்கமே, உருக்காலை தொழிலாளர்கள் நலன்கள் குறித்த பேச்சுவார்த்தை களில் ஈடுபடுவதுடன், அதிகாரப்பூர்வ ஒப்பந்தங் களில் கையெழுத்திடவும் முடியும்.

ss

தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் பி.எம்.எஸ்., ஐ.என். டி.யூ.சி., எல்.பி.எப்., சி.ஐ.

சேலம் உருக்காலை யில் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி யின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங் கம், அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் களமிறங்கி யதை வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மார்க் சிஸ்ட் கம்யூ. கட்சி தாவப் போவதாக பரபரப்பு கிளம்பி யுள்ளது. சேலத்தின் அடையாள மான சேலம் உருக்காலையில் 591 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,000 ஒப்பந்தத் தொழிலாளர் களும் பணியாற்றுகின்றனர். ஆண்டுக்கு 1,600 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்துவருகிறது.

இந்த உருக்காலையிலுள்ள தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் தொழிற்சங்கமே, உருக்காலை தொழிலாளர்கள் நலன்கள் குறித்த பேச்சுவார்த்தை களில் ஈடுபடுவதுடன், அதிகாரப்பூர்வ ஒப்பந்தங் களில் கையெழுத்திடவும் முடியும்.

ss

தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் பி.எம்.எஸ்., ஐ.என். டி.யூ.சி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ. ஆகியவை போட்டியிட்டன. மொத்தமுள்ள 591 வாக்காளர் களில் 578 தொழிலாளர்கள் வாக்களித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 5 மணிக்கு முடிந் தது. உடனடியாக வாக்கு எண் ணிக்கை நடத்தப்பட்டு, வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டது. தி.மு.க.வின் சக்திவாய்ந்த அமைப்புகளுள் ஒன்றான எல்.பி.எப்., 273 வாக்குகளைப் பெற்று, "ஹாட்ரிக்' வெற்றி யைப் பதிவு செய்தது. எல்.பி.எப்.புடன் மல்லுக்கட்டிய சி.ஐ.டி.யூ. சங்கம், 228 வாக்குகளைப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. தொழிற்சங்கத் தேர்தல் வெற்றிக்காக எல்.பி.எப். தொழிற்சங்கத்தினர் தேர்தல் ஜனநாயகத்தை நசுக்கி, பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளனர் எனப் புகார்களை வாசிக்கிறது சி.ஐ.டி.யூ.ss

சேலம் உருக்காலை சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பொதுச்செயலாளர் தோழர் சுரேஷ்குமார் கூறுகையில், "சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர் தல்களைப் போலவே இத்தேர்தலிலும் எல்.பி.எப். சங்கத்தினர் வாக்கு களை விலைக்கு வாங்கினர். இந்தத் தேர்தலில் எல்.பி.எப். சங்கம், எல். எல்.எப். தொழிற்சங்கம், உருக் காலை எஸ்.சி., எஸ்.டி. தொழி லாளர் நலச்சங்கம் ஆகியவற்றுடன் கூட்டணியமைத்து போட்டியிட் டது. சி.ஐ.டி.யூ. தனித்து களம்கண்டது.

கூட்டணி பலத்துடன் எல்.பி. எப். களமிறங்கினாலும், வழக்க மான "ப' வைட்டமினையும் தண்ணீராய் பாய்ச்சியது. தொழி லாளர்களின் வீட்டிற்கே நேரடியா கச் சென்று 5 ஆயிரம் முதல் அதிக பட்சம் 15 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர். "உங்களுக்கே வாக்களிக்கிறோம்' எனப் பேச்சள வில் உறுதிமொழி அளித்தபோதும், விடாப்பிடியாக அவர்களின் வீட் டில் பணத்தை வைத்துவிட்டு வந் துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச் சர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், சேலம் கோட்ட அரசுப் போக்கு வரத்துக் கழக எல்.பி.எப். தொழிற் சங்க ஊழியர்கள் பணப்பட்டு வாடா பணியில் ஈடுபடுத்தப்பட் டனர்.

எல்.பி.எப். ஆதரவு போக்கு வரத்துத் தொழிலாளர்கள் தேர்தல் பரப்புரையில் இறக்கிவிடப்பட்ட னர். போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்களே பரப்புரை செய்த தொழிலாளர்களின் வருகையை பதிவு செய்தனர். பரப்புரையில் ஈடுபட்டவர்களுக்கு தினமும் 500 ரூபாய் பட்டுவாடா செய்தனர். இந்த தேர்தலில் தி.மு.க. 60 லட்சத்துக்கு மேல் செலவழித்துள்ளது. இவ்வ ளவு செய்தும், எங்களைவிட 45 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற முடிந்தது. தேர்தல் விதிமுறை மீறல் குறித்து உருக்காலை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளோம்'' எனக் கொந்தளித்தார்.

சி.ஐ.டி.யூ. சங் கத்தின் புகார் குறித்து எல்.எல்.எப். சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். "உருக்காலை தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சி.ஐ.டி.யூ. தனித்து கறமிறங்கியதாகச் சொல்வதே பொய்யானது. அவர்கள் வீரபாண்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜமுத்து, சேலம் மேற்கு பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் ஆகியோரின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆதரவு திரட்டினர். அவர்களும் கூட்டணியாக இந்தத் தேர்தலைச் சந்தித்தனர் என்பதே உண்மை. பா.ஜ.க. வுடன் கூட்டணியிலிருக்கும் கட்சிகளுடன் சி.ஐ.டி.யூ. கூட் டணி வைத்ததே முரணானது. அவர்களின் இந்த முடிவுக்கு சி.ஐ.டி.யூ. சங்கத்திலும், தி.மு.க.விலிருக்கும் அவர்களின் ஆதரவாளர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார்.

அவரிடம், தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்த தாகக் கூறப்படும் புகார் குறித்து கேட்டபோது, "தேர்தல் வெற்றிக்காக ஒரு கட்சி, அனைத்துவிதமான ஆயுதங்களை யும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்தும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கொள்கைக்காக நேர்மையாகத் தேர்தல் வேலைகளைச் செய்தோம்'' என்றார்.

எல்.பி.எப். தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவக்குமாரிடம் கேட்டபோது, "தலைவா... இதெல்லாம் கட்சி விவகாரம். எதுவாக இருந்தாலும் எல்.பி.எப். தலைவர் அமைச்சர் ராஜேந்திரன்தான் கருத்துச் சொல்லவேண்டும். சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் தேர்தல் வெற்றி குறித்து ஊடகங்களுக்குக்கூட தகவல் தெரிவிக்கவில்லை'' என்று சிரித்தபடியே சொன்னார்.

தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவில் ஆரம்பித்த சல சலப்பு, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் கூட்டணித் தாவல் வரை திசை திரும்பியிருக்கிறது உருக்காலை தொழிற்சங்க தேர்தல் விவகாரம்.

-இளையராஜா

nkn111224
இதையும் படியுங்கள்
Subscribe