டலூர் மாவட்டம் நெய்வேலியில், மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் மற்றும் சுரங்க விரிவாக்கங்களுக்காக விருத்தாசலம் வட்டத்திலுள்ள அம்மேரி, தொப்புளிக்குப்பம், ஆதண்டார்கொல்லை உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராமங்களையும், புவனகிரி வட்டத்தில் பரவனாற்றை ஒட்டியுள்ள கத்தாழை, கரிவெட்டி, முத்துக்கிருஷ்ணாபுரம், மும்முடிசோழகன் வளையமாதேவி உள்ளிட்ட 26 கிராமங்களிலும் 12,125 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த என்.எல்.சி திட்டமிட்டுள்ளது.

neyveli

இதற்காக என்.எல்.சி.இந்தியா நிறுவனம் சார்பில், என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் வழங்கியவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுக்கான (த&த பாலிசி) புதிய திட்டக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்து. இதன்படி, கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு 1 ஏக்கருக்கு ரூ.23 இலட்சம் இழப்பீடு, ஒப்பந்த வேலைவாய்ப்பு அல்லது 20 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூ.7,000 முதல் ரூ,10,000 வரையில் ஊக்கத்தொகை அல்லது 5 லட்சம் முதம் 10 இலட்சம் வரையிலான தொகை, கூடுதலாக 2,400 சதுரடி மனையில் 1,000 சதுரடி வீடு கட்டித்தரவும் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள சட்டத்திருத்த வெளியீட்டு நிகழ்ச்சி, கடந்த 17.01.2022 அன்று என்.எல்.சி முதன்மை நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா.ராஜேந்திரன், விருத்தாசலம் ராதா கிருஷ்ணன், பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலிக் காட்சி மூலம் திட்டத்தை வெளியிட்டு பேசுகையில், "பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையிலான இழப்பீட்டை புதிய மறுவாழ்வு கொள்கை உறுதி செய்துள்ளது" என்றார். ஆனால் கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே சூறையாடுவதுபோல் இருப்பதால், இத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ள இழப்பீட்டுத் தொகையை ஒரு கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும், வேலைவாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. சார்பில் நிகழ்ச்சியின்போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மும்முடிசோழகனைச் சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், “"எங்கள் நிலங்கள் பொன் விளையும் பூமி. அப்படிப்பட்ட நிலங்களை என்.எல்.சி. பிடுங்கிக்கொண்டு, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நிலம் கொடுப்பார்கள். ஒப்பந்த வேலை என்று அடிமாட்டு வேலை கொடுத்து, ஒரு நாளைக்கு 400 ரூபாய்க்கும் குறைவான கூலி கொடுக்கிறார்கள். எங்களுக்கு நிரந்தர வேலை முக்கியம். இழப்பீடும் போதாது. அதேபோல் நாங்கள் விவசாய வேலைகள் செய்ய ஏதுவாக கம்மாபுரம்- விருத்தாசலம் இடைப்பட்ட பகுதியில் இடம் தர வேண்டும்'' என்றார்.”

Advertisment

bb

தர்மநல்லூர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ, “"என்.எல்.சி எடுக்கப்போவதாக அறிவித்துள்ள பகுதிகள் பசுமையானவை. அருகில் வெள்ளாறு ஓடுகிறது. ஆழ்குழாய்க் கிணறு மூலம் 50 அடியில் நல்ல தண்ணீர் கிடைக்கும். இந்த நிலங்களில் ஒரு ஆண்டில் ஒரு ஏக்கருக்கு 3 லட்சத்துக்கும் மேலாக வருவாய் கிடைக்கும். இந்நிலத்தில் பல கோடிகளுக்கு நிலக்கரி எடுப்பார்கள். ஆனால் எங்களுக்கு சில லட்சங்களைக் கொடுத்து ஏமாற்ற நினைக்கிறது என்.எல்.சி.''’என்கிறார்.

நடுநாட்டு பண்பாட்டு இயக்க ஒருங்கிணைப் பாளர் நெய்வேலி செல்வம் கூறுகையில், “"1950-களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக நெய்வேலி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களை வெளியேற்றி, விருத்தாசலம் அருகே இருந்த முகாசாபரூர் காப்புக் காடுகளில் வெறும் 3 சென்ட் நிலம் கொடுத்துக் குடியமர்த்தினர். இப்போதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இரண்டாவது சுரங்கம் அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களை இன்னும் பயன்படுத்தவே யில்லை. இந்நிலையில் புதிதாக நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக மக்களை வெளி யேற்றினால் போராட்டம் வெடிக்கும்''“என எச்சரிக் கிறார்.

மக்களின் மனநிலை குறித்து என்.எல்.சி மனித வளத்துறை இயக்குனர் விக்ரமனிடம் கேட்ட தற்கு, " மத்திய அரசின் நில எடுப்புச் சட்டம்-2013 மற்றும் தமிழ்நாடு நில எடுப்பு சட்டம் இவற்றில் அறிவுறுத்தப்பட்டுள்ளதை விடவும், இந்தியாவில் மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் கொடுப்பதை விடவும் கூடுத லாகவே நாங்கள் கொடுக்கிறோம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 23 லட்சம் என்பது குறைந்தபட்சத் தொகை தான். இதைவிடக் கூடுதலாகச் சந்தை மதிப்பு இருக்கும் பட்சத்தில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகபட்சமாக வழங்கப்படும். சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காகவே நிலம் எடுக்கிறோம். ஏற்கனவே 100% பணியாளர்கள் வேலை செய்கின்றனர். காலிப்பணியிடம் இல்லாததாலேயே ஒப்பந்த வேலை அல்லது வேலைக்குப் பதிலாக மாதாந்திர ஊக்கத்தொகை, பணப்பயன் போன்றவை அறிவிக்கப்பட்டுள் ளன. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத

அளவுக்கு மக்களின் எதிர்காலத்தைக் கணக்கில் கொண்டு நில எடுப்புக்கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது என்பதில் மன நிறைவு கொள்கிறோம்'' என்றார்.

ஆனால், என்.எல்.சி.யால் அறிவிக்கப்பட்டிருப்பது வாழ்வாதாரத்தைக் காக்கப் போதுமானதாக இல்லை என்பதால் போராட்டத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் ஆவேசப்படுகிறார்கள்.

Advertisment