வாலா பண மோசடிக்காக புழல் சிறையில் உள்ள ஒருவரை விடுவிக்க 50 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு போலீசார், குற்றவாளிக்கு உடநலம் சரியில்லை என, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தப்பிக்க வைத் துள்ளனர். இந்த விவகாரத்தால் மூன்று போலீசாரையும் சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில், ஜூலியானா என்பவரின் கைது உயரதிகாரிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளதாம்.

உயரதிகாரிகளின் அச்சத்தைப் பார்ப்பதற்கு முன்பாக இந்த ஜூலியானா யார் என்பதைப் பார்க்கவேண்டியுள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவியான இவர், பல பிரச்சினைகளின் காரணமாக அவரிடமிருந்து பிரிந்து, தி.நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் லிவிங் டுகெதராக வாழ்ந்து வந்துள்ளார். பிறகு பாலமுருகன், அவருடைய அண்ணன்கள் சரவணன், முத்துக்குமார் ஆகியோருடன் இணைந்து குறுக்கு வழியில் பணக்காரராக திட்டங்களை வகுத்துள்ளனர்.

ff

Advertisment

அதில் முதலாவதாக, சென்னையில் உள்ள பெரிய மால்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் பெண்களை அணுகி, தான் சினிமா பைனான்ஸியர் எனச் சொல்லிக்கொண்டு பணத்தாசை, பட வாய்ப்பு ஆசை காட்டி அவர்களை அழைத்துவந்து, தோல் மருத்துவரான ஜூலியானாவிடம் சரவணன் கொண்டுவந்து சேர்ப்பாராம். அந்த பெண்களைத் தன்னுடைய மிராக்கல் கிளினிக்கில் சிகிச்சை கொடுத்து அவர்களே ஆச்சர்யப்படுமளவுக்கு அழகுபடுத்தி, அவர்களிடம் மேலும் ஆசை வார்த்தை களைக் கூறி தன்வசப்படுத்துவாராம். அடுத்தடுத்து, தான் போகும் நட்சத்திர ஹோட்டல்களுக்கும், கிளப்களுக்கும் அழைத்துச்சென்று வி.ஐ.பி.க்கள் இவர்கள் வசம் சிக்குகிறார்களா என்று பார்ப் பார்களாம். அப்படி சிக்கிவிட்டால் சரவணனுடைய பாலவாக்கம், பல்லாவரம் பொழிச்சலூரிள்ள பங்களாவுக்கு வரவழைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்களாம். அந்த சம்பவத்தை சரவணன் வீடியோ எடுத்துவைத்து தனக்குத் தேவைப்படும் நபர்களை விட்டுப்பிடிப்பதும், தேவையற்ற ஆட்களிடம் மிரட்டிப் பணம் பறிப்பதும் இவர்களது வேலையாக இருந்துள்ளது.

அப்படி விட்டுப்பிடித்த நபர்களில் ஒருவர்தான் அரசியலில் நெருக்கமான நபரும், சவுடு மணல் டெண்டரில் முக்கிய நபருமான சோழர் காலத்து மன்னன் பெயரைக்கொண்டவர். அவரைத் தன்வசப்படுத்தி, அவர் பெயரை முன்னிறுத்தி பல பேரிடம் பல கோடிகளுக்கு மணல் டெண்டர் வாங்கித்தருவதாகக் கூறி, ஜூலியானாவை முக்கிய அரசியல் பிரமுகரின் நெருக்கமானவ ராகக் காட்டிக்கொண்டு, பல கோடியில் ஆட்டையைப் போட்டுள்ளனர்.

இப்படி பயணித்த காலகட்டத்தில், ஒரு போலீஸ் உயரதிகாரி ஒருவரையும் பங்களாவுக்கு அழைத்துவந்து தன் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அதன்மூலமாக மணல் மாபியாவின் மனைவி பெயரில் புழல் சிறைச்சாலைக் கைதிகளுக்கு உணவு வழங்கும் கேண்டீன் டெண்டரை எடுத்துக்கொடுக்கக் கேட்கவே, அவரும் வேறுவழியில்லாமல் எடுத்துக்கொடுத்துள்ளார். இந்த சம்பவங்களின் மூலமாகவே, சிறைத்துறையிலுள்ள போலீசாரிடம் "உங்களுக்கு எதாவது உதவி தேவை என்றால் சொல்லுங்கள், செய்து தருகிறோம். உங்களின் உயரதிகாரியே எங்கள் கையில்தான்'' எனப் பேசவே, அங்குள்ள போலீசாரும் நம்பியுள்ளனர்.

ff

Advertisment

இந்த சூழ்நிலையில், ஹவாலா பண விவகாரத்தில் சிறையிலிருந்த சுலைமானிடம் பேச்சு கொடுத்து, அடுத்தக்கட்டமாக அவரை வெளியில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். அதற்கு புழல் சிறையிலிருக்கும் மூன்று போலீசாருக்கு ஸ்கெட்ச் போட்டு, தங்களுடைய பார்முலாவையே பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில்தான் சுலைமானை சிறையிலிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுவந்து தப்பிக்க வைத்துள்ளனர். இவ்விவகாரத்தில் மூன்று போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல இவர்களின் சிறைத்துறை கேண்டீன் டெண்டரும் பறிபோனது. இதிலிருந்து இவர்களின் முகமூடி வெளிச்சத்திற்கு வரத்தொடங்கவே, மணல் டெண்டருக்காகப் பணம் கொடுத்த பலரும் சரவணனின் வீட்டைத் தேடி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இதற்கிடையில், சரவணனுடைய தம்பியான பாலமுருகன், ஜூலியானாவுடன் லிவிங் டுகெதராக வாழ்ந்துவந்தார். ஜூலியானாவோ, சரவணனின் பேச்சுக்கு உடன்படாமல் போனதால் கோப மடைந்த சரவணன், தன்னடைய தம்பிக்கு வேறொருத்தியை செட்டப் செய்துவிட்டு, ஜூலியானாவை பிரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதைத் தெரிந்துக்கொண்ட ஜூலியானா, மணல் டெண்டர் பணம் கொடுத்த ஒரு கும்பலை தன்வசம் அழைத்து, "உங்களுக்கு பணம் நான் வாங்கித் தருகிறேன். நீங்கள், நான் சொல்லுவதைப் போல் செய்யுங்கள்'' எனத் திட்டம் போட்டு, சரவணனை அவரது பங்களாவுக்கு வரவழைத்து மிரட்டிய விவகாரத்தில், தற்போது ஜூலியானா புழல் சிறையில் உள்ளார்.

ஜூலியானாவை கைது செய்து அவரது செல்போனை எடுத்துச் சோதனை செய்தபோது, அதில் பல உயரதிகாரிகளின் வீடியோக்கள் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்துள்ளனர். அதேபோல சரவணனிடமும் வீடியோக்கள் நிறைய உள்ளதாம். இந்த சூழ்நிலையில், சிறையிலிருக்கும் ஜூலியானா பெயிலில் வெளிவரவுள்ள நிலையில், யாருடைய வீடியோ எப்போது வெளியாகுமோ என்று உயரதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் அச்சத்தில் உள்ளார்களாம்.

-அ.அருண்பாண்டியன்