இரக்கமற்ற மோடி அரசு! -முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

ss

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப் பெரும் விழா 1985 முதல் கொண்டாடப்பட்டு வரு கிறது. தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பவளவிழா, கலைஞர் நூற்றாண்டு விழாவோடு முப்பெரும் விழாவை தி.மு.க.வின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் வேலூர் மாவட்டத்தில் நடத்த சில மாதங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தாலும் இம்மாத தொடக்கத் தில்தான் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

செப்டம்பர் 17-ஆம் தேதி முப்பெரும் விழாவுக்கு 16-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து காட்பாடிக்கு ரயிலில் வந்த முதலமைச்சரை ரயில் நிலையத்தில் கொட்டும் மழையில் தொண்டர் களோடு சேர்ந்து பொதுமக்களும் வரவேற்றனர். காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வேலூரில் அவர் தங்கிய ஹோட்டலுக்குச் செல்லவேண்டிய 5 கி.மீ. தூரமும் மகளிர் உரிமைத் தொகை பெற்ற பெண்கள் நன்றிசொல்லும்விதமாக உற்சாக வரவேற்பு தந்தனர்.

stalin

பெரியாரின் 145-வது பிறந்த தினத்தை யொட்டி வேலூர் அண்ணாசாலையிலுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத் திய முதலமைச்சர், அங்கிருந்து வேலூர் மேல் மொணவூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகா முக்குச் சென்றார். 2021-ஆம் ஆண்டு முதலமைச்ச ராகப் பதவியேற்றுக்கொண்டபின், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சிதிலமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நல்ல வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்ததோடு, 2021 நவம்பர் மாதம் இதே மேல்மொணவூர் முகாமிற்கு நேரில்வந்து அடிக்கல் நாட்டினார். இங்கு ரூ.11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட் டப்பட்டன. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் 19 மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மேல்மொணவூரில் கட்டப் பட்ட வீ

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப் பெரும் விழா 1985 முதல் கொண்டாடப்பட்டு வரு கிறது. தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு பவளவிழா, கலைஞர் நூற்றாண்டு விழாவோடு முப்பெரும் விழாவை தி.மு.க.வின் வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் வேலூர் மாவட்டத்தில் நடத்த சில மாதங்களுக்கு முன்பே முடிவு செய்திருந்தாலும் இம்மாத தொடக்கத் தில்தான் அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

செப்டம்பர் 17-ஆம் தேதி முப்பெரும் விழாவுக்கு 16-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து காட்பாடிக்கு ரயிலில் வந்த முதலமைச்சரை ரயில் நிலையத்தில் கொட்டும் மழையில் தொண்டர் களோடு சேர்ந்து பொதுமக்களும் வரவேற்றனர். காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து வேலூரில் அவர் தங்கிய ஹோட்டலுக்குச் செல்லவேண்டிய 5 கி.மீ. தூரமும் மகளிர் உரிமைத் தொகை பெற்ற பெண்கள் நன்றிசொல்லும்விதமாக உற்சாக வரவேற்பு தந்தனர்.

stalin

பெரியாரின் 145-வது பிறந்த தினத்தை யொட்டி வேலூர் அண்ணாசாலையிலுள்ள பெரியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத் திய முதலமைச்சர், அங்கிருந்து வேலூர் மேல் மொணவூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகா முக்குச் சென்றார். 2021-ஆம் ஆண்டு முதலமைச்ச ராகப் பதவியேற்றுக்கொண்டபின், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சிதிலமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நல்ல வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவித்ததோடு, 2021 நவம்பர் மாதம் இதே மேல்மொணவூர் முகாமிற்கு நேரில்வந்து அடிக்கல் நாட்டினார். இங்கு ரூ.11 கோடி மதிப்பில் 220 வீடுகள் கட் டப்பட்டன. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 13 மாவட்டங்களில் 19 மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. மேல்மொணவூரில் கட்டப் பட்ட வீடுகளை நேரில் திறந்துவைத்து பயனாளி களுக்கு வீட்டின் சாவியை வழங்கினார் முதல்வர். அங்கிருந்தபடியே தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட் டுள்ள வீடுகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்து பேசிய முதலமைச்சர், "தமிழக அரசு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லங்களை கட்டித்தந்துள்ளது, அதனை பராமரித்து பாது காப்பாக வைத்துக்கொள்ளுங்கள்'' என்றார். சில வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டவர், ஒரு வீட்டிற்குள் நுழைந்து அந்த வீட்டிலிருந்தவர்களை நலம் விசாரித்தார். அங்கிருந்த குழந்தையின் பெயரைக் கேட்டபோது அக்குழந்தை முதல்வருக்கு அன்பாக முத்தம் தந்தது.

மாலை 5 மணிக்கு பள்ளிகொண்டாவில் கட்சியின் முப்பெரும் விழா தொடங்கியது. இந்த ஆண்டு, பெரியார் விருது -மயிலாடுதுறை சத்திய சீலன், அண்ணா விருது -மீஞ்சூர் க.சுந்தரம், கலைஞர் விருது -அமைச்சர் இ.பெரியசாமி, பாவேந்தர் விருது -தென்காசி மல்லிகா கதிரவன், பேரா சிரியர் விருது -பெங்களூர் ந.இராமசாமிக்கு வழங்கப் பட்டன. சிறப்பாக கட்சிப் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு சான்றுகள், பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வராதது ஏன் என்கிற கேள்வி பலரிடமும் எழுந்தது.

நிகழ்ச்சியில் பேசிய இளைஞரணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “"அடிமைகள், அவர்களின் எஜமானர்களை விரட்டும் மாநாடாக சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் மாநாடு நடைபெறும். தலைவர் இளைஞரணிச் செயலாளராக இருந்து நடத்திய மாநாட்டில் 50 சதவிகிதம் அளவுக்கு நாங்கள் நடத்திக் காட்டுவோம்''’என்றார்.

கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, "இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அடக்கி வாசிக்கிறார். கட்சியில் அப்படியெல் லாம் அடக்கி வாசிக்கக்கூடாது. 50 சத விகிதமல்ல சமமான மாநாட்டை நடத்த வேண்டும்''’என்றார். பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசும்போது, “"தி.மு.க.வோடு மோத நினைப்பவர்கள் மோதும் முன்பு அதன் வரலாறுகளை தெரிந்துகொண்டு மோதவேண்டும்''’என்றார்.

இறுதியாகப் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “"ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டு காலம் நின்று நிலைத்திருப்பது சாதாரணமானது இல்லை. தோன்றிய காலத் தில் எப்படி இருந்ததோ அதே இளமை யோடு, அதே வேகத்தோடு, அதே உணர் வோடு இன்றுவரை செழிப்போடு தி.மு.க. இருக்கக் காரணம் தொண்டர்கள்தான். 1967-ஆம் ஆண்டு முதன்முதலாக நாம் ஆட் சிக்கு வந்தோம். ஆறு பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து இடையிடையே அ.தி.மு.க. ஆட்சியின் சீரழிவையும் திருத்தி தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி, பலருக்கும் பொறாமை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பது, தமிழ்நாடு மக்களின் வாழ்க்கையை அழிக்கும் வேலையை பட்டவர்த்தன மாக செய்துகொண்டிருக்கிறது பா.ஜ.க.

stalin

மக்களுடன் நேரடியான தொடர்பைக் கொண்டது மாநில அரசுகள்தான். மக்கள் நலப் பணிகளை செய்து தருவதற்கு நிதி வேண்டாமா? மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்யவே ஜி.எஸ்.டி.யைக் கொண்டுவந்தார்கள். மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைக்கிறது நீட் தேர்வு. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெறமுடியும் என்ற நிலையால் அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வடமாநிலங் களிலும் நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மட் டும் கடந்த ஆண்டு 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் விசாரணைகூட நடத்தாமல் இரக்கமற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பா.ஜ.க. மோடி எத்தனை வாக்குறுதி கொடுத்தார், தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக் குறுதிகளைக் கொடுத்தாரே ஏதாவது நிறைவேற்றி னாரா?, மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று சொன்னதைச் செய்தீர்களா? மோடி ஆட்சிக்கு வந்தபோது 2014-ஆம் ஆண்டு சமையல் சிலிண்டர் விலை 420 ரூபாய், இன்று 1,100 ரூபாய். கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறது பா.ஜ.க. அரசு. பெரிய நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அண்மையில் வெளியான சி.ஏ.ஜி. அறிக்கையின்படி 7.50 லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டில் அதிகம் சிக்கியிருப்பது சி.பி.ஐ. அதிகாரிகள்தான் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையமே புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறது. இத்தகைய ஊழல் முகத்தை மறைக்கப் பார்க்கிறார்கள்.

தமிழ்நாடு, புதுவையில் நமது கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்மட்டும் போதாது, இந்தியா முழுமைக்கும் நமது இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாகவேண்டும். நம்முடைய ஆட்சி ஒன்றியத்தில் அமைந்தால், 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ், நீட் தேர்விலிருந்து விலக்கு, தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங் கள், புதிய விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் களை கொண்டுவர வேண்டுமானால் நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமையவேண்டும். கலைஞர் அவர்களின் நூற்றாண்டில், கழகத்தின் பவளவிழா ஆண்டில் நாம் எடுக்கவேண்டிய உறுதிமொழி, நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம் என்பதுதான். இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் கூட்டணிக் கட்சியாக நம்முடைய இயக்கத்தை உயர்த்துவோம். உங்களில் ஒருவன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம், இந்தியாவைக் காப்போம்'' என்றார்.

_________________

கலைஞரின் உயிரைக் காத்த அமைச்சர் ஐ.பி.!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருதை கழகத் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வழங்கினார்.

ஒருமுறை கலைஞர் மதுரைக்கு வந்தபோது தென்மாவட்ட பொறுப்பாளர்கள் எல்லாம் மதுரைக்கு படையெடுத்து வந்தனர். அப்போது திடீரென ஒரு கும்பல் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். ஒரு கும்பல் ரகளையில் ஈடுபட்டு சேர்களை தூக்கிவீசியதுடன் தலைவர் கலைஞரையும் தாக்குமளவுக்கு துணிந்தனர். அமைச்சர் ஐ.பி .உடனே தலைவர் கலைஞரை நெஞ்சு வரை அழகாக இரண்டு கைகளிலும் அரவணைத்து ரூமுக்குள் அழைத்துச்சென்று இக்கட்டிலிருந்து காத்தார்.. அத்தகைய அமைச்சர் ஐ.பி.க்கு கலைஞர் விருது அளித்திருப்பது, பொருத்தமானதென திண்டுக் கல் மக்கள் நினைக்கிறார்கள்.

-சக்தி

_________

மக்களுடன் ஸ்டாலின்!

"மக்களுடன் ஸ்டாலின்' என்கிற மொபைல் செயலியை முப்பெரும் விழாவில் தொழில்துறை அமைச்சரும், தி.மு.க. ஐ.டி விங் செயலாளருமான டி.ஆர்.பி ராஜா ஏற்பாட்டில், கழகப் பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டார். இந்த செயலி மூலமாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் போன்றவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். முதலமைச்சரின் செயல்பாடுகளை, திட்டங்களை, 234 தொகுதி யில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் அறிந்துகொள்ள லாம். இதில் பதிவு செய்பவர்களுக்கு என்ன திட்டம் தேவைப் படும் என்பதை அறிந்து அதுவே பயனாளிக்குத் தகவல் தெரிவிக்கும்.

nkn200923
இதையும் படியுங்கள்
Subscribe