"ஹலோ தலை வரே, எல்லாத் தரப்பிலும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லை.''”
"ஆமாம்பா, தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தும் நடிகர் விஜய் தரப்பில், சரியாக திட்டமிடல் இல்லை போலிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தும் நடிகர் விஜய்யே, அதற்கு எத்தனை பேர் வருவார்கள் என்ற குழப்பத்தில் இருக்கிறார் என்கிறார்கள். ஆரம்பத்தில் தனது மாநாட்டுக்கு இரண்டரை லட்சம் பேர் வருவார்கள் என்று கருதியிருந்தாராம் விஜய். பின்னர் என்ன நினைத்தாரோ, அந்த மாநாட்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று காவல்துறையிடம் எழுதிக்கொடுத்த விஜய் தரப்பு, பின்னர் 50 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று எண்ணிக்கையை மிகவும் குறைத்திருக்கிறது. இதைக்கண்டு காவல் துறையினரே குழம்பிப்போய்விட்டார்களாம். அதனால், விஜய் தரப்பினர் மாநாட்டுக்கு ஆட்களைக் கொண்டுவர எத்தனை லாரிகளை புக் செய்திருக்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வருகிறார்கள்? எந்தெந்த ரூட்டுகளின் வழியாக வருகிறார்கள்? என்றெல்லாம் கண்காணிக்க, ஒரு தனிப்படையை தமிழக காவல்துறை அமைத்திருக்கிறது. இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனைகளும் நடந்திருக்கிறது. எனினும் எல்லாவற்றை யும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிற தாம் காவல்துறை.''”
"ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகுது போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமிருக்கும் 29 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019-ல் நடந்தது. இவற்றிற்கான பதவிக் காலம் 2024 டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது. அதனால், அந்த ஊரக உள்ளாட்சி களுக்கான தேர்தலை டிசம்பருக்குள் நடத்தி யாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே மேற்கண்ட 29 மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது மாநில தேர்தல் ஆணையம். அந்தக் கடிதத்தில், தேர்தலை எதிர்கொள்ள வாக்குப் பெட்டி களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். ஏதேனும் பழுதுபட்டிருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டும். வாக்குப்பெட்டிகளின் பழுதுகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க ஒரு பெட்டிக்கு 21 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.''”
"ஆனாலும் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்காதுன்னு தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, தேர்த
"ஹலோ தலை வரே, எல்லாத் தரப்பிலும் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லை.''”
"ஆமாம்பா, தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்தும் நடிகர் விஜய் தரப்பில், சரியாக திட்டமிடல் இல்லை போலிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்தும் நடிகர் விஜய்யே, அதற்கு எத்தனை பேர் வருவார்கள் என்ற குழப்பத்தில் இருக்கிறார் என்கிறார்கள். ஆரம்பத்தில் தனது மாநாட்டுக்கு இரண்டரை லட்சம் பேர் வருவார்கள் என்று கருதியிருந்தாராம் விஜய். பின்னர் என்ன நினைத்தாரோ, அந்த மாநாட்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் வருவார்கள் என்று காவல்துறையிடம் எழுதிக்கொடுத்த விஜய் தரப்பு, பின்னர் 50 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று எண்ணிக்கையை மிகவும் குறைத்திருக்கிறது. இதைக்கண்டு காவல் துறையினரே குழம்பிப்போய்விட்டார்களாம். அதனால், விஜய் தரப்பினர் மாநாட்டுக்கு ஆட்களைக் கொண்டுவர எத்தனை லாரிகளை புக் செய்திருக்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வருகிறார்கள்? எந்தெந்த ரூட்டுகளின் வழியாக வருகிறார்கள்? என்றெல்லாம் கண்காணிக்க, ஒரு தனிப்படையை தமிழக காவல்துறை அமைத்திருக்கிறது. இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் அதை எல்லாம் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனைகளும் நடந்திருக்கிறது. எனினும் எல்லாவற்றை யும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிற தாம் காவல்துறை.''”
"ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகுது போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமிருக்கும் 29 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2019-ல் நடந்தது. இவற்றிற்கான பதவிக் காலம் 2024 டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது. அதனால், அந்த ஊரக உள்ளாட்சி களுக்கான தேர்தலை டிசம்பருக்குள் நடத்தி யாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே மேற்கண்ட 29 மாவட்டங்களின் கலெக்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது மாநில தேர்தல் ஆணையம். அந்தக் கடிதத்தில், தேர்தலை எதிர்கொள்ள வாக்குப் பெட்டி களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். ஏதேனும் பழுதுபட்டிருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டும். வாக்குப்பெட்டிகளின் பழுதுகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க ஒரு பெட்டிக்கு 21 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.''”
"ஆனாலும் இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்காதுன்னு தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தைப் பார்த்த மாவட்ட ஆட்சியர்கள், வாக்குப் பெட்டிகளை சரி செய்யும் பணிகளை கவனிக்குமாறு இது தொடர்பான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டி ருக்கிறார்கள். அதன்படி இந்த பணிகள் நடக்கத் தொடங்கி யிருப்பதால் தேர்தல் குறித்து தி.மு.க. தரப்பில் திடீர் பரபரப்பு உருவாகியிருக் கிறது. அது குறித்து அவர்கள் தரப்பிலேயே விசாரித்த போது, ‘ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தலை தற்போதைய சூழலில் நடத்தவேண்டாம். தள்ளி வைக்கவேண்டும் என 29 மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், சீனியர் அமைச்சர்களும் முதல்வர் ஸ்டாலினிடம் ஏற்கனவே தெரி வித்திருக்கிறார்கள். இதற்கான காரணங்களை யும் சொல்லியுள்ளனர். இதனையடுத்து, தேர்தலை தள்ளி வைத்துவிடலாம் என முதல்வரும் தீர்மானித்திருக்கிறார். அதனால், சரியான காலத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. தேர்தல் நடத்தப்பட வேண்டிய ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். அமெரிக்காவிலிருந்து முதல்வர் திரும்பியதும் தனி அதிகாரிகள் நியமனம் குறித்து முடிவு எடுப்பார் கள்’என்கிறார்கள்.''”
"தி.மு.க.வினர் சிலர் வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் களைத் தெரிவித்திருக்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, அதே சமயம் விநாயகர் சதுர்த்திக்கு அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினோ, அமைச்சர் உதய நிதியோ ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பிவருகிறது பா.ஜ.க. இந்த நிலையில் கதர்த்துறை அமைச்சரான காந்தி, அண்மையில் அமலாக்கத்துறையின் அதிரடி அபராதத்திற்கு ஆளான ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் போன்றோர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள். இதையறிந்த தி.மு.க. தலைமை, நமது வழக்கத்திற்கு மாறாக, எதற்காக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள் என்று இவர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறதாம். இதற்கு இவர்கள், அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் விநாயகர் சிலைகளையே வழங்கிக் கொண்டாடும்போது நாங்க வாழ்த்து சொன்னது குற்றமா? என்று கேள்வி எழுப்ப, தி.மு.க.வின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டு அவர்களை எச்சரித்திருக்கிறதாம் தி.மு.க. தலைமை.''”
"ஈஷா மருத்துவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்திருக்கிறதே?''”
"சர்ச்சைகளுக்குப் பெயர்போன ஜக்கியின் ஈஷா யோகா மையத்தில் நடந்த மருத்துவ முகாமில் மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி யிருக்கிறது. தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பல்வேறு விழிப்புணர்வுகளைத் தருகிறோம் என சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலத்துறை யினரை ஈஷா தரப்பு நம்ப வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த பள்ளியில் மாணவி களுக்கு மருத்துவ முகாமை ஈஷா நடத்தியிருக் கிறது. அப்போது, ஈஷாவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன்மூர்த்தி, மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டாராம். இதில் அதிர்ந்துபோன மாணவிகள், குழந்தைகள் நலத் துறையினரிடம் அழுது முறையிட... இதைத் தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதையடுத்து, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் சரவணன் மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார், அவரை அதிரடியாக சிறையில் அடைத்தனர். இது ஆன்மிக உலகை அதிரவைத்திருக் கிறது. இன்னும் ஈஷாவிற்குள் எத்தனை அயோக்கியர்களோ என்று மக்கள் காறித் துப்புகிறார்கள்.''”
"அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவான குரல் இப்போது அதிகமாக பா.ஜ.க.வில் எழுகிறதே?''’
"மீண்டும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்று பா.ஜ.க.வில் இருக்கும் நயினார் நாகேந்திரம் கருத்து தெரிவித்துவரும் வேளையில், எடப் பாடியோ, எங்க ளுக்கு தன்மானம் தான் முக்கியம். சுயமரியாதையை இழந்து எந்தக் காலத்திலும் கூட் டணியை அமைக்க மாட் டோம் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் லண்டன் செல்லுமுன் கூட, அ.தி.மு.க.வுடன் எந்தக் கூட்டணியும் எப்போதும் இல்லை என்று மாநில பா.ஜ.க. நிர்வாகி சொல்லிச் சென்றாலும், கூட்டணி பற்றித் தீர்மானிக்க அவர் யார் என்ற கேள்வியுடன், அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைப்போம் என ஹெச்.ராஜா, தமிழிசை உட்பட பலரும் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மோடி, அமித்ஷாவின் விருப்பமும் இது தான் என்று சொல்லும் கமலாலயத் தரப்பு, அந்த பா.ஜ.க. நிர்வாகிக்கு இனி ’கெட் அவுட்தான் என்றும் அழுத்தம் கொடுத்துச் சொல்கிறது. மேலும், அவர் இந்தியா திரும்பினாலும் டம்மியான பதவியில்தான் அமரவைக்கப்படுவார் என்றும் பேசிக்கொள் கிறார்கள் பா.ஜ.வினர்.''”
"ஒரு காவல்துறை உயரதிகாரியை தி.மு.க. தலைமை கண்காணிக்க ஆரம்பிச் சிருக்கே?''”
"கடந்த 19 ஆம் தேதி சென்னையி லிருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்றார் எடப்பாடி. அதே விமானத்தில், சென்னை நகர காவல்துறையின் உயரதிகாரி ஒருவரும் சென்றுள்ளார். எடப்பாடியைக் கண்ட அவர், எடப்பாடிக்கு பக்கத்தில் அமர்ந்து பேசிய படியே பயணித்திருக்கிறார்கள். இதை அதே விமானத்தில் பயணித்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர். கவனித்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். சேலம் சென்றடைந்த பிறகு அந்த எம்.எல்.ஏ., தி.மு.க.வின் சின்னத் தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். எதார்த்தமாக இருவரும் பேசிக்கொண்டு வந்திருக்கிறார்கள். மத்தபடி எந்தவொரு முக்கியமான விஷயமும் இல்லை. இந்த சந்திப்பை பூதகரமாக்கி அந்த அதிகாரிக்கு வேண்டாதவர்கள் திரித்துக்கூறி வருகிறார்களாம்.''”
"சசிகலா உறவினர் கட்டை பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கிறாரே?''”
"சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக். இந்த விவேக்கின் மாமனார்தான் கட்டை பாஸ்கர். மரக்கடத்தலில் பிரசித்திபெற்ற இவர் மீது ஆந்திராவில் பல வழக்குகள் இன்னும் இருக்கிறதாம். "ஜெ.'’மரணத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு வந்தபோது, இவர் அங்கிருந்தது பெரும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. இடையில் சிறைக்குச் சென்ற பாஸ்கர், கடந்த மாதம்தான் வெளியே வந்தாராம். இந்த நிலையில் இவரை கைது செய்ய மணிப்பூர் மாநிலத்திலிருந்து போலீஸ் டீம் வந்திருக்கிறது. அவர்கள் வந்தபோது நீங்கள் யார்? காவல்துறைதானா? என்றெல்லாம் கேட்டு பாஸ்கர் பிரச்சினை செய்ததாகச் சொல்கிறார் கள். பாஸ்கர் மணிப்பூர் மாநிலத்தில் இரண்டரைக் கோடி ரூபாய் அளவுக்கு வியாபார மோசடி செய்ததாக வழக்கைப் பதிவுசெய்து, அங்குள்ள நீதிமன்ற உத்தரவோடு வந்து, அதிரடியாகக் கைது செய்திருக்கிறார்கள். இது சசிகலா தரப்பை ரொம்பவே அதிர வைத்திருக்கிறதாம்.''”
"தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வாங்கியிருக்கும் வெளிநாட்டு கார் பற்றி அந்த கட்சிக்குள்ளேயே ஒரே பேச்சாக இருக்கிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் தலை வர் செல்வப் பெருந்தகை அண் மையில் இங்கிலாந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்திருக்கும் சொகுசு காரான 'லேன்ட் ரோவர் டிஃபென்டர்' காரைப் பற்றிதான் காங்கிரஸ் கட்சியினர் அதிகம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம். காரணம், இந்த சொகுசு காரின் விலை 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாம். இந்த காஸ்ட்லி காரை தமிழகத்தில் சில வி.வி.ஐ.பி.க்கள் மட்டுமே வைத்திருக்கிறார்களாம். அவர்கள் பாணியில் தற்போது செல்வப்பெருந்தகையும் இந்த காரை வாங்கியிருக்கிறார். ’ஏழைப்பங்காளர் காமராஜர் ஆட்சியை அமைப்போம்’ எனச் சொல்லிவரும் செல்வப்பெருந்தகை, இப்படி காஸ்ட்லியான சொகுசு கார்களில் பவனிவருவது பொருத்தமா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள் கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள். ஏற்கனவே, சென்னை நுங்கம்பாக்கம் ஏரியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அடிக்கடி தங்கி, பிசினெஸ் டீலிங்குகளை செல்வப்பெருந்தகை முடித்து வருவதை மத்திய உளவுத்துறை கண்காணித்து வருகிற சூழலில், இப்படி அவர் காஸ்ட்லியான காரில் உலா வருவதையும் அவர்கள் நோட்பண்ணியிருக்கிறார்கள்.''’
"மற்றொரு நில மோசடி விவகாரம் தலைதூக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, சிறைச் சாலைகளில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் ’ஆரச்சார்களுக்கு கன்னியாகுமாரி பார்வதிபுரத்தில் தலா 48 ஏக்கர் நிலத்தை அன்றைய திருவிதாங் கூர் சமஸ்தானம் ஒதுக்கியது. இந்த நிலங்களை விற்கவோ, வாங்கவோ கூடாது. இந்த நிலையில், ஆரச்சார்களில் ஒருவரான வேலாயுதம் என்பவர் இறந்து விட, வாரிசு இல்லாத அவருடைய நிலம் அரசுக்கு சொந்தமாக ஆகிவிட்டது. இந்த நிலையில், 2011-16 ஜெ.’ ஆட்சிக் காலத் தில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அப்புநடேசன் உள்ளிட்ட சிலர், அப் போதைய அரசு வழக்கறிஞர் உதவியுடன் அந்த நிலத்தை வளைத்து, அது தங்களுக்குச் சொந்தமான நிலம் என்று நீதிமன்ற உத்தரவைப் பெற்றுவிட்டார் கள். எனினும் இது தெரிந்தும் அன்றைய ஜெ.’அரசு, அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை பிளாட் போட்டு விற்பதற்காக, அதற்கான அப்ரூவல் வாங்கும் முயற்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அரசுக்கு சொந்தமான இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் என்கிறார்கள். அந்த இடத்தை அரசு மீட்கவேண்டும் என்று அங்குள்ள மக்கள் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். அமைச்சர் உதய நிதி அண்மையில் நடத்திய ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு எதிராக பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டதால், கடைசி நிமிடம் வரை போட்டி ஏற்பாட்டா ளர்கள் பதட்டத்திலேயே இருந்தார்கள். கார் ரேஸ் முடிந்ததும், இந்த நிகழ்ச்சிக்கு எதிராக வழக்கு போடப்பட்டது குறித்து மாநில உளவுத்துறை ஏன் முன்கூட்டியே தகவல் தரவில்லை என்று அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியிருக்கிறார். மாநில உளவுத் துறையோ, ’இதையெல்லாம் சிட்டி ஐ.எஸ். பிரிவுதான் கவனிக்கிறது. அதனால் எங்க ளுக்கு இதில் சம்பந்தமில்லை’ என உதய நிதிக்கு பதில் கொடுத்திருக்கிறது. அதனை உறுதி செய்துகொண்ட உதயநிதி, சிட்டி காவல்துறை உயரதிகாரிகளிடம் தனது கடுமையான வருத்தத்தைத் தெரிவித்தாராம்.''