கல்வியறிவில் முதன்மை பெற்ற குமரி மாவட்டத்தில் உள்ள சிறந்த தனியார் பள்ளிகளில் ஒன்றான நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் ஆதர்ஷ் வித்யா கேந்திரம் (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் எழுந்திருக்கும் சர்ச்சை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் பள்ளி நிர்வாகம் இழுத்தடிப்பதும், சம்பளம் கேட்கும் ஆசிரியர்களை ரவுடிகளை வைத்து மிரட்டுவதும் பள்ளிக்குள் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளி ஆசிரியை ஒருவர், “இந்த பள்ளியில் பல ஆண்டு களாக பணிபுரிந்து, சீனியர் ஆசிரியையாக இருக்கிறேன். 1985-ல் உருவாக்கப்பட்ட இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதேபோல், 2500 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில் அட்மிஷன் வாங்குவதற்கு மடி நிறைய பணத்தைக் கட்டிக்கொண்டு பெற்றோர்கள் வாசலில் காத்துக்கிடப்பார்கள். அடித் தட்டு, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளி வாசல் பக்கம்கூட வர முடியாது.
இங்குள்ள ஆசிரியர்கள் எல்லோருமே நல்ல திறமை யானவர்கள் தான். ஆனால் பள்ளியின் சேர்மன் கோபால் சுரேந்திரனுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. அந்த ஆசிரியர் களிடம் ஒருமையில், ‘உன்னை விட என் வீட்டு நாய்கள் நல்லது’ என அடிக்கடி மனம் நோகும்படி பேசுவார். அதேபோல், அவர் பள்ளிக்குள் வரும்போது மட்டும் கும்பிட்டால் போதாது, எப் போதெல்லாம் அவரைப் பார்க் கிறறோமோ, அப்போதெல்லாம் எழுந்து நின்று கையெடுத்துக் கும்பிடணும். அப்படி செய்ய வில்லையென்றால் அவரின் உதவியாளர் ரூபின், அந்த ஆசிரியரை கண்டமேனிக்கு திட்டி விடுவார்.
இந்த நிலையில் தான் கடந்த 6 மாதமாக ஆசிரியர்களுக் கும் மற்ற ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கவில்லை. எந்த மாணவரும் கட்டணப் பாக்கி வைக்கவில்லை. அப்படியிருக்கை யில் ஏன் சம்பளம் தரவில்லை எனத் தெரியவில்லை. சம்பளம் கேட்டால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனக் கூறிச் சமாளிக்கிறார்கள். கல்வி யாண்டின் தொடக்கத்திலேயே பண நெருக்கடி என்று கூறியிருந்தால் நாங்க வேற பள்ளிக்கு வேலைக்கு போயிருப் போம்.
தற்போது மாணவர்களின் நலன் கருதித்தான் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக நாங்கள் வெளியில் இறங்கிப் போராட வில்லை. இருந்தாலும் கடந்த 21-ம் தேதி ஆசிரியர்கள் எல் லோரும் வகுப்புக்கு போகாமல் புறக்கணித்தோம்..மேலும், சம்பளம் இல்லாத கஷ்டத்தால் ஆசிரியர் ஒருவர் தற்கொலைக் கும் முயன்றுள் ளார்.. எங்களுக் காக சம்பளம் கேட்டதால் சேர்மனின் உதவியாளர் ரூபினின் கொலை மிரட் டலால் பள்ளி முதல்வரும் ராஜினாமா செய்துவிட்டார்.
சம்பளம் கேட்டு நெருக்கடி கொடுப்பவர்களை, ரூபின் ரவுடி களை வைத்து மிரட்டுகிறார். "இங்கிருந்து ராஜினாமா செய்துவிட்டு எந்த பள்ளியில் வேலை பார்த்தாலும் அவர்களை ஊனமாக்கிவிடுவேன்' என மிரட்டுகிறார். சம்பளமும் கிடைக்காமல் எல்லாரும் பயத்தில்தான் இருக்கிறார்கள் என்றார்.
ராஜினாமா செய்துவிட்டுச் சென்ற முதல்வர் பினு மோனிடம் பேசினோம். "கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நான், 10 ஆண்டுகளாக அந்த பள்ளியில் முதல்வராக இருந்துள்ளேன். எனக்கும் சம்பளம் தரவில்லை. எல்லாருக்கும் வேண்டி நான் பள்ளி சேர்மன் கோபால் சுரேந்திரன், செய லாளர் அருண்காந்த், பொருளாளர் மினி கோபால் ஆகியோ ரிடம் பேசியதால், ரூபின் என்னை மிரட்டினார்.. நிதி நெருக்கடி வரதுக்கு வாய்ப்பில்லை. எப்படி வந்ததுனு எனக்கு தெரியாது. தொடர்ந்து எனக்கு மிரட்டல் வந்ததால் மன நிம்மதி கிடைக்கவில்லை. அதனால் வேலை பார்க்க முடியாமல் ராஜி னாமா செய்துவிட்டு ஊருக்கே வந்துவிட்டேன்''’என்றார்.
மாணவர்கள் மீது அக்கறை கொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த சமூகஆர்வலர் ஒருவர் கூறும்போது, “"சர்ச்சைக்கே பஞ்சமில்லாத பள்ளிதான் இது. ஏற்கெனவே இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரால் மாணவி கள் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டிருக்கிறார்கள். பள்ளி முதல்வர்கூட இம்மாதிரி விசயத்தில் ஈடுபட்டதால் அவரை நிர்வாகம் நீக்கியதாகக் கூறப் படுகிறது. அதேபோல் மாணவர் கள் ஆன்லைனில் போதைப் பொருட்களை வாங்கி பள்ளியில் வைத்துப் பயன்படுத்தியது சம்பந்தமாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய சம்பவமும் உள்ளது.
பள்ளியில் மாணவர்கள் கட்டணம் கட்டத் தவறினால், தினமும் 100 ரூபாய் மீட்டர் வட்டி போன்று வாங்குகிறார்கள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.ஸின் பின்புலமாக செயல்படுவதால் இந்த பள்ளியில் என்ன நடந் தாலும் யாரும் கண்டுகொள்வ தில்லை''’என்றார்.
இதுகுறித்து பள்ளி சேர்மன் கோபால் சுரேந்திரனிடம் நாம் கேட்டபோது... "பள்ளி நிர் வாகத்திற்கு எதிராகத் திட்ட மிட்டு சிலர் அவதூறு பரப்பு கிறார்கள். அதன் பின்னணி யில் இருப்பவர் ராஜினாமா செய்துவிட்டுப்போன பள்ளி முதல்வர் பினுமோன்தான். சம்பளம் கொஞ்சம் பெண்டிங் இருக்கிறது. வேறெந்த மாதிரி யான பிரச்சனையும் இதுவரை கிடையாது'' என்றார்.
கல்வி நிறுவனமே இப்படி நடந்துகொள்வது முறையல்ல!