சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் நடத்திய ரகசியக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் இங்கு நடந்த ரகசியக் கூட்டத்தில் 250 நிர்வாகிகள்வரை கலந்துகொண்டனர். அண்ணாமலையும், எல்.முருகனும் கலந்துகொள்வது கடைசி நேரத்தில் தான் லோக்கல் போலீசுக்கே தெரியவந்தது. ரகசியக் கூட்டமென்பதால் பத்திரிகைகளில் விளம்பரமோ, போஸ்டர்களோ ஒட்டாமல் ரகசியமாக நடத்தப் பட்டது. விவேகானந்தா கேந்திரத்துக்கு வெளியி லும் பா.ஜ.க., சங் பரிவார நிர்வாகிகள் நட மாட்டமில்லையென்றனர் உளவுத்துறையினர். நடைபயணத்திலிருந்த அண்ணாமலை, நிகழ்ச்சி நடக்கும் நாளில் காலை யில் வந்து சேர்ந்தார். மற்ற ஆர்.எஸ். எஸ். நிர்வாகிகள் அனைவரும் முதல் நாள் இரவே அங்கு வந்துவிட்டனர். ஹெச்.ராஜா உடல்நிலை சரியில்லையெனக்கூறி ஆப்சென்ட்!
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குற
சென்னை பெருவெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில், ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பா.ஜ.க. அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் நடத்திய ரகசியக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் இங்கு நடந்த ரகசியக் கூட்டத்தில் 250 நிர்வாகிகள்வரை கலந்துகொண்டனர். அண்ணாமலையும், எல்.முருகனும் கலந்துகொள்வது கடைசி நேரத்தில் தான் லோக்கல் போலீசுக்கே தெரியவந்தது. ரகசியக் கூட்டமென்பதால் பத்திரிகைகளில் விளம்பரமோ, போஸ்டர்களோ ஒட்டாமல் ரகசியமாக நடத்தப் பட்டது. விவேகானந்தா கேந்திரத்துக்கு வெளியி லும் பா.ஜ.க., சங் பரிவார நிர்வாகிகள் நட மாட்டமில்லையென்றனர் உளவுத்துறையினர். நடைபயணத்திலிருந்த அண்ணாமலை, நிகழ்ச்சி நடக்கும் நாளில் காலை யில் வந்து சேர்ந்தார். மற்ற ஆர்.எஸ். எஸ். நிர்வாகிகள் அனைவரும் முதல் நாள் இரவே அங்கு வந்துவிட்டனர். ஹெச்.ராஜா உடல்நிலை சரியில்லையெனக்கூறி ஆப்சென்ட்!
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, அதில் கலந்துகொண்ட இந்து முன்னணி பிரமுகர் ஒருவரிடம் கேட்டறிந்தபோது, "ஆண்டுக்கு ஒருமுறை இப்படி ஆர்.எஸ்.எஸ். இயக்க அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும். கடந்த ஆண்டு திருப்பூரில் நடைபெற்றது. வரும் ஆண் டில் என்னென்ன செய்யவேண்டுமென விவாதித் தோம். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதால் முழுக்க முழுக்க தேர்தல் குறித்தே ஆலோசிக்கப்பட்டது. அதில், தி.மு.க.வை எப்படி வீழ்த்துவது என்ற சூத்திரம் குறித்து விவாதிக் கப்பட்டது. டெல்லி ஆர்.எஸ்.எஸ். தலைமை கொடுத்த ஆலோசனைப்படி, வரவுள்ள தேர் தலில் தமிழ்நாட்டில், பா.ஜ.க.வுக்கு பின் னின்று ஆர்.எஸ்.எஸ். இயங்கும். தமிழ் நாட்டில் தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக் கும் தான் போட்டி என்ற நிலையை இன்னும் ஒரே மாதத்துக்குள் பா.ஜ.க. உருவாக்கும்.
தி.மு.க. உட்கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானோர் பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற அடிப்படையில் சில தி.மு.க. நிர்வாகிகளை நம்பி மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்கள் தான். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் எந்தக் கட்சிக் கும் போகக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் இப்போதுள்ள தி.மு.க.வில் ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகரம், மாநகராட்சி ஆகியவற்றின் நிர்வாகிகளாகவும், கவுன்சிலர்களாகவும் இருக்கிறார்கள்.
அதேபோல் பூத் கமிட்டியிலும் 10 பேரில் 5 பேர் இப்படி வந்தவர்கள்தான். இவர்களுடைய லிஸ்ட் பா.ஜ.க. மாவட்ட தலைமையால் எடுக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து சரிக்கட்டி, தி.மு.க.விலேயே இருந்துகொண்டு, 100க்கு 70 சதவீதம் செயல்படாமலிருக்கச் செய்வதற்கான வேலைகளை ஆர்.எஸ்.எஸ். செய்யும். மேலும், ஏற்கெனவே மக்கள் தொடர்பிலிருந்து ஓரங்கட்டப் பட்டிருக்கும் தி.மு.க.வினரிடம் பேசவும் விவாதிக்கப் பட்டது. அதேபோல், பா.ஜ.க.வுக்கு கடும் போட்டி இருக்கும் தொகுதியில் தேவைப்பட்டால் ரூ.100 கோடி வரைகூட செலவு செய்யப்படும். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தியை எப்படி ஒரே இரவில் ஆர்.எஸ்.எஸ். ஜெயிக்க வைத்ததோ, அதே ஃபார்முலாவை மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில், குறிப்பாக கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோவை, தென்காசி, நீலகிரி தொகுதிகளில் பயன்படுத்தி பா.ஜ.க.வை கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸ். ஜெயிக்க வைக்கும். அதேபோல், கலந்து கொண்ட அனைவரும் தங்களது கருத்துக்களைக் கூறும்போது, தென் மாவட்டத்திலிருந்து சிலர், ச.ம.க. சரத்குமாரை உள்ளே கொண்டுவந்து தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக நிறுத்த வேண்டும் என்றனர். இதையும் ஆர்.எஸ்.எஸ். குறித்துக்கொண்டது. மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வைப் பற்றி பேசுவதற்கு தொடக்கத்திலேயே தடை விதிக்கப்பட்டது'' என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி முதன் முதலாக கன்னியாகுமரியில் நடந்த சங்பரிவாரின் இந்த ஆலோசனைக்கூட்ட அரசியல், மற்ற கட்சியினர் மத்தியில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது.
____________
30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்கள் சேதம்!
மிக்ஜாம் புயலால் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனமான நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (என்.சி.பி.ஹெச்.) நிறுவனத் தலைமை யகமும் பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து என்.சி.பி.ஹெச். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தோழர் கே.சந்தானம் கூறுகையில், "ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் முழுக்க விட்டுவிட்டுப் பெய்த மழையால், நவம்பர் 29ஆம் தேதியன்று என்.சி.பி.ஹெச். நிறுவனத் தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. எனவே அப்போதைய சூழலில், மழைத்தண்ணீர் உள்ளே நுழையாதபடி தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தப் பட்டபோதும், டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழையால், வெள்ள நீர் நிறுவனத்தின் வளாகத்தினுள் புகுந்ததில், இங்குள்ள மூன்று கிட்டங்கிகளில் சேகரித்து வைக்கப்பட்ட சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன. தொடர் மழையால் இரண்டடிக்கு மேல் நீர் சூழ்ந்ததால் கீழடுக்குகளிலுள்ள நூல்களை அப்புறப்படுத்த முடியாமல் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்துக்கு பின்னர், என்.சி.பி.ஹெச். நிறுவன வளாகம் முழுக்க சகதியாகிப்போனதால், அங்கே 5 லட்ச ரூபாய் செலவில் வளாகத்தை சீர்படுத்தி யுள்ளோம். வெள்ளத்தால் சேதமான நூல்களைக் கணக்கிடும் பணி இன்னும் தொடர்ந்து நடை பெற்றுவருகிறது'' என்றார் மிகுந்த வருத்தத்துடன். மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட துயரங்களில் இதுவும் ஒன்று!
-ஆதவன்