காதலியின் கண்முன்னே, ஆறு நபர்கள் கொண்ட கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் தேவேந்திர குல சமூகத்தினை சார்ந்த வாகைக்குளம் தீபக்ராஜன். இது சாதிக்காக நடந்த கூலிப்படை கொலை என்பதால் தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட எதிரெதிர் சமூக மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

dd

வாகைக்குளம் தீபக்ராஜன்

2000ஆம் ஆண்டு துவக்கத்தில், "நீங்கள் இங்கு இருந்தால் தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம். அதனால் ஜாகையை இடம் மாற்றிக்கொள்ளுங்கள்' என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அழுத்தம் கொடுக்க, நெல்லை மாவட்டம் வாகைக்குளத்திற்கு தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார், 2012ல் திண்டுக்கல் நந்தவனம் பட்டியில் கொலையுண்ட பசுபதி பாண்டியன். இதனால் வாகைக்குளத்தில் பசுபதிபாண்டியனுக் கென தனி ஆதரவு வட்டம் பெருகியது. இதில் 2021ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கொலையுண்ட முத்துமனோவும், தற்போது கொல்லப்பட்ட தீபக்ராஜனும் முக்கியமானவர்கள். பசுபதிபாண்டியனுக்குப் பிறகு கண்ணபிரான், குமுளி ராஜ்குமார், அதிசயபாண்டியன் ஆகியோர் தனித்தனி யாக களம் காண, முத்து மனோவும், தீபக்ராஜனும் இணைந்து சமூக நிகழ்ச்சிகளில் தங்களை முன்னிறுத் திக் கொண்டனர். பின்னாளில் முத்துமனோ கொலை யாக, தலைமறைவாக இருந்துகொண்டு குறிப்பிட்ட சமூக நிகழ்வுகளில் கலந்துகொண்ட தீபக்ராஜன், பி.காம் பட்டப்படிப்பிற்கு பிறகு ஆந்திரா மாநிலத் தில் எல்.எல்.பி. படித்துவருகின்றார். பசுபதிபாண்டி யன் படுகொலைக்குப் பிறகு 2016ஆம் ஆண்டு சுபாஷ் பண்ணையாரை கொலை செய்யும் நோக்குடன் ஒரு டீம் புன்னைக்காயல் தோட்டத்தில் புகுந்தது. இதில் சுபாஷ் பண்ணையார் தப்பிவிட, இரண்டு நபர்கள் மட்டும் கொலையானார்கள். இந்த கொலை வழக்கு, 2019ம் ஆண்டு வல்லநாடு அருகே உள்ள நாணல் காடு பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி கொலை வழக்கு, தாழையூத்தில் ஒப்பந்தக்காரர் கண்ணன் கொலை வழக்கு மற்றும் 23க்கும் மேற்பட்ட இன்ன பிற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டவர் தீபக்ராஜன். இதில் ஒப்பந்தக்காரர் கண்ணன் கொலை வழக்கில் தீபக்ராஜன் குற்றமற்றவர் என்று தீர்ப்பு சமீபத்தில் வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

சந்தேக வளையத்தில் காதலி- தோழி..?

மூன்றடைப்பிலிருந்து வாகைக்குளம் செல்லும் வழியில் உள்ள பெத்தானியா பகுதியை சார்ந்தவர் தான், படுகொலைசெய்யப்பட்ட தீபக்ராஜாவின் காதலி ஆரோக்யசெல்வி. "இந்த பொண்ணு செல்வி மேல ஆரம்பத் துல இருந்து டவுட் இருந்துச்சு. துவக்கத்தில் களக்காடு பகுதி யை சேர்ந்த வேறொரு சமூக பையனை காதலித்து வீட்டை விட்டு வெளியேறியிருக்கின்றார் செல்வி. இது அவரது தந்தை மூலம் முத்துமனோவிற்கு தகவல் வர, முத்துமனோ-தீபக் ராஜன் இருவரும் அந்த களக்காடு காதலனை மலையில் வைத்து அடித்து துவைத்திருக்கின்றனர். அதன்பின் செல்வி யின் பார்வை முத்துமனோ பக்கம் திரும்பியிருக்கின்றது.

இந்த வழக்கில் முத்துமனோ கைதாகி, பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது சிறை வளாகத்தில் முத்துமனோ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையிலிருந்த ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

Advertisment

ff

முத்துமனோவும் கொல்லப்பட்ட நிலையில்... தீபக்ராஜன் மீது காதல் வந்திருக்கிறது செல்விக்கு. தனது காதலியான செல்வியை, லா காலேஜில் சேர்க்கணும் என்கின்ற முத்துமனோவின் வார்த்தைக்காக வல்லநாட்டிலுள்ள சட்டக்கல்லூரியில் சேர்த்திருக்கின்றார் தீபக்ராஜன். இந்த நிலையில், சமீபத்தில் அவதான், "எனக்கு செமஸ்டர் தேர்வு முடியப்போகுது. அதனால் வந்துரு' அப்படின்னு தகவல் கொடுத்திருக்கா. இதனை நம்பி மதுரையில் பதுங்கியிருந்த தீபக்ராஜன் ஞாயிற்றுக்கிழமையன்று வாகைக்குளத்திற்கு வந்திருக்கின்றார். வந்தவர் தனது காதலியான செல்வியை அழைத்துக்கொண்டு ரெட்டியப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கின்றார். அதன்பிறகு தனது சுவிப்ட் காரில் திங்கட்கிழமையன்று செல்வியை அழைத்துக்கொண்டு வல்லநாடு சென்று கல்லூரியில் இறக்கி விட்டுவிட்டு மதியம்வரை காத்திருந்து செல்வியையும், அவருடைய தோழிகளான எதிரெதிர் சமூகத்தை சார்ந்தவர்களையும், (சேரன்மகாதேவி அருகிலுள்ள விளவம் பகுதியை சார்ந்த சட்டக்கல்லூரி மாணவியும் ஒருவர்) அழைத்துக்கொண்டு மதிய விருந்து கொடுத்திருக்கின்றார் தீபக்ராஜன். அந்த நிலையில்தான் மாஸ்க் அணிந்த 6 நபர்கள் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். எங்களுடைய சந்தேகம் செல்வி மற்றும் விளவம் பகுதி சட்டக்கல்லூரி மாணவி மேல்தான் இருக்கின்றது. ஏனெனில் செல்வியின் அண்ணன் மற்றும் சித்தப்பா பையன் ஆகியோருக்கு தீபக்ராஜன் மீது கோபம் உண்டு, மோதியும் உள்ளனர். அது போல் விளவம் மாணவியின் கணவர் மீது சமூகக் கொலை வழக்குகள் உண்டு'' என்கின்றனர் தீபக்ராஜனின் நெருங்கிய கூட்டாளிகள்.

டேஷ் போர்டில் துப்பாக்கி காட்டிக்கொடுத்த சி.சி.டி.வி.

ஹோட்டலின் வாசலில் சுவிப்ட் காரை நிறுத்தாமல் ஓரமாக வண்டியை நிறுத்திய பிறகே உணவருந்த சென்றுள்ளார் தீபக்ராஜன். மதுரையில் தலைமறைவாக இருக்கும்பொழுது எப்பொழுதும் தன்னு டனே துப்பாக்கியை வைத்திருக்கும் வழக்கம் உள்ளவர், அன்றைய பொழுதில் காரின் டேஷ்போர்டிலேயே துப்பாக்கி யை வைத்துச் சென்றது எதிரிக்கு சாதக மாகியிருக்கின்றது. சுமார் ஒண்ணேகால் மணிநேரம் ஹோட்டலின் உள்ளே செலவிட்டவர், ஹோட்டலை விட்டு வெளியே வரும்பொழுது வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது அங்குள்ள சி.சி.டி.வி.க்களில் பதிவாக... கொலையாளிகள் அறுவரில் நால்வர் நாங்குநேரி தாலுகாவினை சார்ந்தவர்கள். மீதமுள்ள இருவர் சேரன்மகாதேவி பகுதியை சார்ந்தவர்கள் எனவும், ஆறு நபர்களில் பவித்ரன், இசக்கிமுத்து, நவீன், முருகன் ஆகிய நான்கு பேரை கண்ட றிந்து போலீஸார் உறுதிப்படுத்தியுள்ள னர்.

இந்த நிலையில், அவசரம் அவசரமாக இன்னார் தான் கொலை யாளிகளாக இருப் பார்கள் என சில புகைப்படங்களை திருச்செந்தூர் தாலுகாவிலிருந்து வாட்ஸ் அப்பில் பரவவிட்டுள்ளது எதிர் சமூகம் ஒன்று.

குற்றவாளிகளை பேசி வாங்கிய காவல்துறை

"தீபக்ராஜன் கொலை எதிரெதிர் சமூகத்தினரிடையே பதற்றத்தை உரு வாக்கும் என்பதால் கொலையாளி களை கண்டறிந்து ஆஜர்படுத்துவ திலேயே குறியாக இருந்தது நெல்லை மாநகரக் காவல்துறை. இதற்காக 6 தனிப்படைகளை இயக்கியது தனிக் கதை. இன்னார்தான் கொலையாளிகள் என அடையாளம் கிடைத்ததால் கொலையாளிகள் சார்ந்த சமூக பெருந்தலைகளிடம், கொலையாளி களை சரண்டர் செய்ய பேச்சுவார்த் தை நடத்தினோம். இந்த நிலையில் குறிப்பிட்ட சமூகத்தின் பெருந்தலை "அவர்கள் சரண்டராக உள்ளனர்' என எங்களை வரவழைத்து மதுரை நத்தம் நெடுஞ்சாலையில் ஒப்படைத்தது. அவர்கள் பயன்படுத்திய காரின் எண்ணும் போலியே'' என உண்மையை உடைத்தார் தனிப்படை அதிகாரி ஒருவர்.

dd

கொலையின் விலை ரூ.18 லட்சம்.. அம்புகளான கூலிப்படை..?

மாநகர உளவு அதிகாரி ஒருவ ரோ, "தீபக்ராஜனின் வளர்ச்சி குறிப் பிட்ட அவரது சமூகத்திலுள்ள சிலருக்கு பிடிக்கவில்லை. எதிரெதிர் சமூகத்தினருக்கும் தீபக்ராஜன் உறுத்தலே.! இதனால் குறிப்பிட்ட டீமைக் கொண்டு இந்த படுகொலை நடந்திருக்கின்றது. கொலையாளிகள் எதிரெதிர் சமூகம் என்றாலும் அவர்கள் கூலிப்படையே.! இதில் சாதி இல்லை. கொலைக்கு கூலியாக ரூ.18 லட்சத்தை வாங்கிக் கொண்டே இந்த அசைன்மெண்டை செய்திருக்கின்றது அந்த டீம். சென்னையில் நடந்த ஆற்காடு சுரேஷ் கொலை வழக் கிலும் இந்த கொலையாளிகளின் கைவண்ணம் உண்டு. பல வருடங்களுக்கு முன்பு சிதம்பரத்தில் ம.தி.மு.க. பிரமுகர் பழனி வேல் கொலை நடந்தது. அந்த கொலையில் நெல்லை கண்டியப் பேரி பகுதி மற்றும் ராமையன்பட்டி வேப்பங்குளம் ஆகிய இரு குற்றவாளிகள் உண்டு. இதில் கண்டியப்பேரியை சார்ந்த குற்றவாளி மர்மமாக மரணித்தார். தீபக்ராஜன் கொலையைப் பொறுத்தவரை ராமையன்பட்டி வேப்பங்குளம் பகுதியை சார்ந்தவரே கூலிப்படையை எய்தவராக இருக்கலாம். இவருக்கு உறுதுணையாக காதலி உள்ளிட்டோர் இதில் இணைந்திருக்க லாம். கொலையாளிகளை கஸ்டடி எடுத்தாலும், எய்தவனை நோக்கியே எங்களது விசாரணை உள்ளது. இதனடிப்படை யிலும் விசாரணையைத் துவக்கியுள்ளோம்'' என்கின்றார் அவர்.

dd

காவல் பணியில் சாதீயம்

"ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு பிரிவு போலீசார்(OCIUமற்றும் எஸ்.பி.சி.ஐ.டி. (மாநில உளவுத்துறை பிரிவு SBCID) ஆகிய உளவுத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், குறிப்பிட்ட சமூக இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கி நிரந்தர ஊனம் ஆக்குவதும், படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களை வழக்கில் சேர்ப்பது மற்றும் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் குடும்ப பெண்களை வழக்கில் சேர்ப்பது என தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் குறிப்பிட்ட சமூகத்தினை சார்ந்தவர்கள் மட்டும் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வேலையே தமக்கு எதிர் சாதியிலுள்ள சிலரை குறிவைத்து அவர்களை ஊனப் படுத்துவதே. அதுபோக, அந்த அதிகாரிகளின் வலியுறுத்த லின் பேரில் படுகொலை செய்யும் நபர்களின் பின்னணி குறித்த விவரங்களை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதில்லை. மேலும் தென் மாவட்டங்களில் கூலிப்படைகள் மூலம் குறிப்பிட்ட சமூக இளைஞர்களை படுகொலை செய்துவரும் கும்பல்களுக்கு மேற்படி அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கி உதவி செய்து வருகிறார்கள். மேற்படி அதிகாரிகள் தங்களது பதவி அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். தமிழக முதல்வர், மேற்படி சாதிய பின்னணியுடைய அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை'' என்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞரான பாஸ்கர் மதுரம்.

படங்கள்: விவேக்