துரையில் உள்ள தென்னிந்திய திருச்சபை, அரசு நிலத்தை ஆக்கிரமித்த புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, கடந்த வருடம் செப்டம்பர் 3ஆம் தேதியிட்ட நக்கீரன் இதழில், ’"நீர்நிலை ஆக்கிரமிப்பு! வசமாய் மாட்டிக் கொண்ட திருச்சபை!'’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதைத்தொடர்ந்து அந்த நிலத்தை ஆய்வுசெய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பிக்க, இது திருச்சபையினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திவருகிறது.

lll

தென்னிந்திய திருச்சபையினருக்கு சொந்த மான 17 ஏக்கர் நிலம் விற்கப்பட்டு, மதுரையி லேயே மிகப்பெரிய கட்டடம் என்று சொல்லும் வகையில், 14 மாடிகளைக் கொண்ட ’லோட்டஸ் அப்பார்ட்மெண்ட்’ மும்பையைச் சேர்ந்தவர் களால் கட்டப்பட்டது. இதற்கு முன் பகுதியில் உள்ள இடத்தில், ரோட்டுப் பகுதியில் 200 கடை களை கட்டியுள்ளனர். இந்த அபார்ட்மெண் டின் ஓரத்தில் இருந்த புறம்போக்கு இடத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் குடி யிருப்புவாசிகளை அப்புறப்படுத்த, வருவாய்த் துறையும் பொதுப்பணித்துறையும் அப்போது கைகோத்து வந்தபோது, அந்தப் பகுதி மக்கள் எதிர்த்துப் போராட்டம் செய்தனர்.

அவர்களில் தேவசகாயம் என்பவர், "இந்த ஏழை மக்களின் வீடுகளை இடித்தால், இந்த 14 மாடி கட்டிடத்தையும், தென்னிந்திய திருச்சபையால் கட்டப்பட்டிருக்கும் 200 வர்த்தகக் கடைகளையும் இடிக்கவேண் டும். ஏனென்றால்; இவையும் அரசு இடத் தில் விதியை மீறிக் கட்டப்பட்டிருக் கின்றன. தற்போது நீங்கள் இந்த ஏழை வீடுகளை இடிக்கத் தடை உத்தரவு வாங்கியிருக்கிறேன்''’என்று தடுத்து நிறுத்தினார். இதையும் நாம் நமது நக்கீரனில் செய்தியாக வெளியிட்டிருந் தோம். இந்தப் பிரச்சினை நடந்து ஓராண்டு ஆன நிலையில்தான், தற்போது உயர்நீதிமன்றம், திருச்சபையால் ஆக்கிரமிக்கப்பட்டதாகச் சொல் லப்படும் நிலத்தை அளக்க உத்தரவிட்டிருக்கிறது.

Advertisment

dd

இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த அதே தேவசகாயம் நம்மிடம், "ஆங்கிலேயர்களால் தென்மண்டல திருச்சபைக்கு உட்பட்ட அமெரிக்கன் போர்டு மிஷனரியானது, ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளிக்கூடத்தையும், தங்கும் விடுதியையும் நடத்த, 17 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டது. "இந்த நிலத்தில் விவசாயம் செய்து, அதன் வருமானத் தைக் கொண்டு, மாவட்ட கலெக்டரின் கண்காணிப்போடு இவற்றைப் பராமரிக்க வேண்டும் என்று அப்போது குறிப்பிடப் பட்டிருந்தது. மேலும் அப்படி நடத்த முடியவில்லை என்றால், அந்த இடத்தை மீண்டும் அரசே எடுத்துக்கொள்ளும்' என்ற நிபந்தனையும் அப்போதே போடப்பட்டது. ஆனால் பள்ளியையும், விடுதியையும் நடத்த முடியாத திருச் சபையினர், அதற்காக தரப்பட்ட இடத் தை முறைப்படி அரசிடம் ஒப்படைக் காமல், அங்கே 2005ல் சர்ச் மற்றும் அலுவலக கட்டிடங்களைக் கட்டி, முழு தாய் தங்கள் வசமாக்கிக்கொண்டனர். மேலும் அந்தdd இடத்தின் ஒரு பகுதியை, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உதவியாளர் என்று சொல்லப்படுகிற கொல்கத்தாவைச் சேர்ந்த அபிசேக், மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜூபாய் ஆகியோருக்கு போலிப் பத்திரங்கள் மூலம் விற்று, திருச்சபையின் முதன்மை நிர்வாகிகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிவிட்டனர்.

அந்த இடத்தில்தான் 200 வர்த்தகக் கடை களைக் கட்டியுள்ளனர். இந்த 48 ஏக்கர் நிலவும் முழுக்க முழுக்க அரசுக்குச் சொந்தமான இடமாகும். "இதை மீட்டெடுத்து, அங்கே ஏழை விதவைப் பெண்கள், மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வா தாரத்தை உயர்த்தக்கூடிய செயல்திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த மோசடியை நடத்தி இருக்கும் திருச்சபை பேராயர் கிறிஸ்டோ பர் ஆசிர் மற்றும் சி.பெர்னான்டஸ் ரெத்தினராஜா மற்றும் இவர்களின் கூட்டாளிகளை, சி.பி.ஐ.யின் விசாரணைக்கு ஆட்படுத்த வேண்டும்' என்றும், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன்.

இந்த மெஹா மோசடிக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் எப்படி அனுமதியளித் தார்கள் என்பதுதான் கேள்விக்குறி யாக இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இது குறித்தெல்லாம் ஆதாரங்களோடு புகார் அனுப்பியும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

மேலும், தென்னிந்திய திருச் சபைக் கட்டடங்கள், கடைகள் இருக்கும் இடம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, கால்வாய் பகுதியாகும். இது தூர்ந்துவிட்டதால், குளங்களுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. எனவே பொதுப் பணித் துறையினர் ஆய்வு செய்து, மீண்டும் கால்வாய் அமைக்க வேண் டும் என்றும் நில நிர்வாக ஆணை யத்தில் வழக்கு தொடர்ந்தோம். உயர் நீதிமன்ற நீதிபதி, இது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி சி.எஸ்.ஐ. திருச்சபைக்கு உத்தரவிட் டுள்ளார். இதுவரை ஆவணங்கள் எதையும் அவர்கள் தாக்கல் செய்ய வில்லை. அவர்கள் மோசடி செய்த இந்த இடத்தின் மதிப்பு இன்றைக்கு சுமார் 1000 கோடியைத் தாண்டும். இந்த 17 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்தவர்கள் 4 கோடி ரூபாயை மட்டும் கணக்கில் காட்டிவிட்டு, மீதித்தொகை முழுதையும் பங்கு போட்டுக் கொண்டனர்''”என்றார் ஆதங்கத்தோடு.

இதுகுறித்து மதுரை தென்மண்டல பேராயர் ஜெய்சிங் பிரின்ஸ் பிரபாகரிடம் நாம் கேட்ட போது, "அப்போதைய பேராயர் கிறிஸ்டோபர் ஆசிர்வாதம் இருக்கும்போது, இது நடந்திருக்கிறது. அதுபற்றிய விபரங்கள் எனக்குத் தெரியாது. நான் இப்போதுதான் பேராயராக வந்திருக்கிறேன். மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் என்னால் எதுவும் சொல்ல முடியாது''’என்றார்.

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் நாகராஜனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "சம்மந்தப்பட்ட நிலத்தை, நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்து, அறிக்கையைத் தாக்கல் செய்வோம்'' என்று முடித்துக்கொண்டார்.

தென்னிந்திய திருச்சபை மீதான இந்த நில மோசடிப் புகார், பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.