"நீ அரசர் குலத்தைச் சேர்ந் தவள். உன்னுடைய பூமியில் புதையல் இருக்கின்றது. 7 தலைமுறைக்கும் அழியாத சொத்து அது'' என சாமியார் ஒருவன் என்னிடம் புதை யல் ஆசைகாட்டி ரூ25 லட்சத்தைப் பறித்துக் கொண்டான். பணத்தை திரும்பக் கேட்ட என்னை அவ னுடைய வி.ஐ.பி. கூட்டாளி அடை யாளம் தெரியாத இடத்தில் 13 நாட் கள் அடைத்து வைத்து பாலியல் வல்லுறவு செய்தான். பணமும் இழந்து, பாலியல் வல்லுறவுக்கும் ஆளானது தான் மிச்சம். இதுகுறித்து காவல்துறைக்குச் சென் றால் பணத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார் கள். என்னை வல்லுறவு செய்தது குறித்து பேசவில்லை. எனக்கு நியாயம் வேண்டும்'' என நக்கீரனுக்கு கோரிக்கை விடுத்தார் அந்த பொள்ளாச்சி பெண்மணி.
பொள்ளாச்சி ஆவிச்சிப்பட்டியை சேர்ந்த அந்த அம்மணிக்கு இரு குழந்தைகள். கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழும் அவர் அதே பகுதியில் எண்ணெய் செக்கு வைத்து வியாபாரம் செய்துவரு கிறார். அடிப்படையில் கோடீஸ்வர பெண்மணியான இவர் தன்னுடைய எண் ணெய் செக்கு ஆலையின் மேற்கூரையை புதிதாக அமைக்க திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் - கொமரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து வேலை கொடுத்துள்ளார். அதன் பின்னரே மேற்கண்ட தகிடுதத்தங்கள்.
"மகளுக்கு ஏற் கனவே திருமணம் ஆகிவிட்டது. வயது ஆகியும் மகனுக்கு வரன் அமையாத தால் ஊரிலிருக் கின்ற ஒவ்வொரு ஜோதிடரிடம் சென்று ஆலோ சனை கேட்டுவந் தேன். அப்போ தான் என்னுடைய ஆலையில் சிமெண்ட் ஷீட் செட் போடவந்தாங்க. அதில் விமல் என்கின்ற பையன் அவ்வப்போது ஆர்வமாக என்னிடம் பேசிவந்தான். வேலை முடிந்து சென்றவுடன் சரியாக ஒரு மாதம் கழித்து என்னுடைய எண்ணிற்கு போன் செய்த விமல், "அக்கா! எங்க ஊரில் சடையன் என்கின்ற சபரீஸ் வரன் இருக்கின்றார். மிகப்பெரிய சாமியார் அவர். அவரிடம் வெகு சீக்கிரமாக அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது. இருந்தாலும் நான் ஊர்க்காரன் என்ப தால் சாமியாரோட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி யிருக்கின்றேன். உங்க மகனின் கல்யாணத்தைப் பற்றி அவரிடம் கேட்டால் விடை கிடைக்கும்'' என்று கூறினான். நானும் நம்ம புலம்பலுக்கு சீக்கீரம் விடைகிடைக்குதே என நம்பி கொமரலிங்கபுரம் சென்று சடையன் சாமியாரைப் பார்த்தேன்.
என்னை ஏற இறங்க பார்த்தவன், "அந்த மரத்திலிருந்து இலையைப் பிடுங்கி வா! இந்த மஞ்சள் பொடியை அதில் கரைத்து விடு" என்றான். நானும் அவன் பேச்சைக் கேட்டு கரைத்த நிலையில் மஞ்சள் நூல் போல் திரிதிரியாக வந்தது. அதைக் கண்டு மிரட்சியிலிருந்த என்னிடம், "இங்க பார்த்தால் உத்தரவு வரலை. உம் பூமியில் வந்து பார்த்தால்தான் விடைகிடைக்கும்.'' என்றவன் தொடர்ந்து பூஜை சாமான்கள் வாங்குவதற்கு ரூ16 ஆயிரம் ஆகுமென்றான். சரி என்றேன். சொன்ன தேதியில் என்னுடைய வீட்டிற்கே வந்தார். பூஜை தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, வானத்தைப் பார்த்து பேசியவன், "நீ கோவில் கட்டியிருக் கிறாயா..?'' என்றதற்கு ஆமாம் என்றேன். உடனே, "நீ ராஜ வம்சம். உன்னுடைய பூமியில் புதையல் இருக்கு. மாணிக்கமும், மரகதமும், தங்கமும் வைர மும் இங்கு இருக்கின்றது. அதன் மேல்தான் நீ அமர்ந் திருக்கின்றாய். அதனை எடுத்து இன்னுமொரு கோவில் கட்டி தினசரி அன்னதானம் போடவேண் டும். எவ்வளவு எடுத்தாலும் அழியாத சொத்து அது. 7 தலைமுறைக்கும் வரும்'' என்றான் அவன். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஆசை யாரைதான் விட்டது..? புதையல் எடுக்க ஆர்வ மானேன்'' என ஆசுவாசப்படுத்திக் கொண்டார் அந்த பொள்ளாச்சி பெண்மணி.
தொடர்ந்து பேசியவர், "இதற்கு செல வாகுமே.? என்றவன் புதையலை எடுக்கும் முன் ராஜயோக சுழியுள்ள எருமையைப் பலியிடவேண் டும். அதன்பின் குதிரையை பலியிடவேண்டும் என்றான். பலி கிலி என்றதும் சந்தேகமாகப் பார்க்க,… வேண்டுமென்றால் உடு மலைப்பேட்டையிலுள்ள அந்த வி.ஐ.பி.யைப் பார்த்துவிட்டு பேசுங்கள் என அங்கிருந்து கிளம்பிவிட்டான் சாமியார் சடையன். நானும் விடாமல் ரவுடி லிஸ்டிலுள்ள அந்த வி.ஐ.பி.யை சந்திக்கச் சென்று சாமியார் கூறிய புதையல் விஷயத்தைக் கூறினேன். "ஆமாம், அவர் சொன்னது உண்மை. எனக்கே அவர் எடுத்துக் கொடுத் திருக்கிறார்' என அவரும் கூறினார். அந்த வி.ஐ.பி.யை வைத்து அவர் முன்னிலைலேயே சாமியாருக்கு பூஜைக்கான பணத்தைக் கொடுத்தேன். மொத்தமாக ரூ. 25 லட்சம் செலவான நிலையில் புதையல் வந்தபாடில்லை. இறுதியாக மகள் வீட்டிலும் 13 பவுனை வாங்கிக் கொடுத்தேன். இதோ, அதோ என இழுத்தடித்தார்களே தவிர புதையல் வந்தபாடில் லை. இது தெரிந்த மகன் அரிவாளை எடுத்து விரட் டிய நிலையில் அந்த வி.ஐ.பி.யிடம் என்னுடைய நிலையைக் கூறி பணத்தை வாங்கித் தர கூறினேன். நாளை பணம் வாங்கித் தருகிறேன் என வண்டியை அனுப்பினான். அவனை நம்பி முகவரி தெரியாமல் அந்த இடத்திற்குச் சென்ற நிலையில் 13 நாட்கள் அங்கேயே அடைத்துவைத்து பாலியல் வல்லுறவு செய்தான். கடைசியில், என் மகன்தான் என்னை மீட்டுச்சென்றான். புதையல் ஆசையில் பணமும், உடலும் போனதுதான் மிச்சம். இது குறித்து முத லமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பியிருந் தேன்'' என்றார் பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி.
முதலமைச்சர் தனிப் பிரிவிற்கு அனுப்பப் பட்ட அந்த புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென திருப்பூர் மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவு வந்திருக்கின்றது. உடுமலைப்பேட்டை க்ரைம் பிரிவிற்கு மாற்றப்பட்ட அந்த புகாரின் அடிப்படையில் பொள்ளாச்சி பெண்மணி விசாரணை செய்யப்பட்டிருக்கிறார். சாமியாரும், தான் பணம் வாங்கியது உண்மை என ஒப்புக் கொண்டிருக்கின்றான். இந்த நிலையில், "தவணை முறையில் சிறுகச் சிறுக தொகையை தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார் சடையன் என்கின்ற சபரீஸ்வரன்'' என முதலமைச்சர் தனிப் பிரிவு புகாருக்கு மேல்வரைவு எழுதியுள் ளது உடுமலைப்பேட்டை குற்றப்பிரிவு டீம்.
"இவ்வளவுதான் பணம் கொடுத்திருக்கின் றீர்கள் என கையெழுத்துப் போட வற்புறுத்தி மிரட்டி கடிதம் வாங்கியது போலீஸ். பணம் ஒரு புறம் இருக்கட்டும். என்னை அடைத்து பாலியல் வல்லுறவு செய்த அவனை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை..? அந்த வி.ஐ.பி.யை காப்பாற்றுகின்றதா போலீஸ்?'' என மீண்டும் முதலமைச்சர் தனிப்பிரிவு தொடங்கி அனை வருக்கும் புகார் அனுப்பி காத்திருக்கின்றார் அந்த பொள்ளாச்சி பெண்மணி.
புகாரில் ஒரு பாதியை மட்டும் விசாரித்து, மறுபாதியை அப்படியே விட்டது ஏன்? காவல்துறை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்குமா?
____________
இறுதிச் சுற்று!
தமிழ்நாடு அரசின் செய்தித்துறை சார்பில், பத்திரி கையாளர் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், எழுது பொருள் அச்சுத்துறையின் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், கருணை அடிப்படையில் பணி நியமண ஆணை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை 11-5-2023 வியாழன் அன்று தொடங்கி வைத்தார் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சாமிநாதன், சிவசங்கர், மேயர் ப்ரியா, வடசென்னை எம்.பி.கலாநிதி வீராச்சாமி, செய்தித்துறை செயலர் செல்வராஜ், இயக்குநர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் சிறப்புரையாற்றிய உதயநிதி, "தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில், தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைத்தல், பத்திரிகைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்டவை களை நிறைவேற்றியிருக்கிறோம். பத்திரிகையாளர்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்த பணிகள் தொடர்ந்து நடக்கும். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செய்திகளை பத்திரிகையாளர்கள் பதிவு செய்வர். சில செய்திகள் வரும்; சில செய்திகள் வராது. ஆனால், இன்றைக்கு உங்களுக்கான நிகழ்ச்சி. இந்த செய்தி எல்லா பத்திரிகைகளில் வரும் என நம்புகிறேன்'' என்றார் உதயநிதி. இதனையடுத்து, பத்திரிகையாளர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கு நிகழ்வின் அடையாளமாக நக்கீரனின் மூத்த சிறப்பு செய்தியாளர் இரா.இளையசெல் வன், சீனியர் நிருபர்கள் "தினகரன்' சேகர், "விடுதலை' சிரிதர், "தீக்கதீர்' சிரிராமுலு உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் 7 பேருக்கு அடையாள அட்டை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
-இளையர்
படம்: குமரேஷ்