"உணவு, உடை, நம்பிக்கை, பண்டிகை, மொழியை பயன்படுத்தி ஒரு பிரிவினர் பிரச்னையை தூண்டுகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறையைக் கண்டிக்கிறோம். வெறுப்பு கருத்துகள் குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சி அளிக்கிறது'' என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாகச் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக, ராம நவமி, அனுமன் ஜெயந்தி என்ற இரு பண்டிகைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு இந்துத்துவா அமைப்பினரும், பா.ஜ.க.வும் இணைந்து இந்தியா முழுக்க திட்டமிட்ட வன்முறையை இஸ்லாமியர் களுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். ஜார்கண்ட், குஜராத், மத்திய பிரதேசம் உட்பட 6 மாநிலங்களில் ஒரே நாளில், இஸ்லாமியர்களின் வீடு,கடைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும், மசூதிகளில் காவிக்கொடி ஏற்றியும் வன்முறையில் ஈடுபட்டதில், சில உயிரிழப்புகளும், பலருக்கு பொருட்சேதம், பலத்த காயங்களும் ஏற்பட்டன. இதேபோன்று தமிழகத்திலும் பதட்டச் சூழலை உருவாக்கத் திட்டமிட்ட பா.ஜ.க., ஏற்கெனவே வேல் பூஜை, வேல் யாத்திரை என அனைத்தும் முயன்று பார்த்து தோல்வியுற்றதால், இம்முறை அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வில் பிரச்சனையை ஏற்படுத்தத் தமிழகமெங்கும் திட்டமிட்டு களமிறங்கியது தெரியவந்துள்ளது.
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில், சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு அனைத்துக் கட்சியினரும் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். வி.சி.க. தலைவர் திருமாவளவன் மாலை அணிவிக்க வரும் நேரத் தில், பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலையும், முன்னாள் தலைவர் முருகனும் அங்கே வருவதற்கு அம்பத்தூர் பா.ஜ.க. மா.செ. ரெஜினா ஏற்பாடு செய்திருக்கிறார். அதோடு, வி.சி.க.வின் கொடி களுக்கிடையே பா.ஜ.க. கொடிகளை நடச்செய்து பிரச்சனையைத் தொடங்கியிருக்கிறார்கள். அடுத்து, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசும்போது, "ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை எழுப்பி பா.ஜ.க.வினர் இடையூறு செய்ய, வி.சி.க.வினர் பதிலுக்கு "ஜெய் பீம்' என்று முழக்கமிட, பா.ஜ.க. தரப்பிலிருந்து கல்லெறியப்பட, அடுத்த சில நொடிகளில் அந்த இடமே கலவர பூமியானது. இரு காவலர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் சிவபிரசாத் மற்றும் இணை ஆணையர் ராஜேஸ்வரி, இரு தரப்பினரிட மும் பேச்சுவார்த்தையில் இறங்க, இரு தரப்பும் மாறி, மாறி குற்றம்சாட்டி சாலை மறியலில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க.வினர் சென்னையில் மட்டுமின்றி சேலம், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் திட்டமிட்டு பிரச்சினையைக் கிளப்பியுள்ளனர்.
இதுகுறித்து வி.சி.க. வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் பார்வேந்தன் கூறுகையில், "இவர்கள் திட்டமிட்டே செயல்பட்டிருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்த நடிகை காயத்ரி ரகுராம், அம்பேத்கருக்கு சம்பந்தமே இல்லாமல், "ஜெய் ஸ்ரீராம்', "வெற்றிவேல் வீரவேல்' என முழக்கம் எழுப்பியதே வெளிப்படையான ஆதாரமாகும். அம்பேத்கருக்கும் வெற்றிவேலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இந்த வன்முறை, இவர்களால் முன் கூட்டியே திட்டமிடப்பட் டது என்பது உறுதியா கிறது. எப்போதும் புரட்சி யாளர் சிலைக்கு அனைத் துக் கட்சியினரும் மாலை அணிவிக்க வருவார்கள். ஒரு கட்சியினர் மாலை அணிவித்துவிட்டுச் சென்ற பிறகு அடுத்த கட்சியினர் மரியாதை செய்வார்கள். ஆனால், பா.ஜ.க.வின ருக்கோ, "சீக்கிரம் செல் லுங்கள்' என ஆர்டர் போடுவதே நோக்கம். எப்படியாவது தமிழகத் தில் கால் ஊன்றிவிடலாம் என்று இவர்களும் பார்க்கி றார்கள், அது எந்த வழியில வந்தாலும் நடக் காது'' என்றார்.
__________________
புதுக்கோட்டையிலும் மோதலில் பா.ஜ.க.!
புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வி.சி.க, சி.பி.எம். உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து ஊர்வலமாக வந்து மாலை அணிவிக்கச் சென்றபோது, சென்னையைப் போலவே திட்டமிட்டபடி அதே நேரத்தில் பா.ஜ.க.வினரும் கொடிகளுடன் வர, ஒருவருக்கு ஒருவர் எதிரெதிர் முழக்கங்கள் எழுப்பியதால் அங்கே பதற்றம் நிலவியது. போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்த நீண்ட நேரம் முயன்றனர். பிறகு ஒவ்வொரு தரப்பாக மாலை அணிவிக்க அனுமதிக்கப்பட, மாலை அணிவிப்புக்குப்பின் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முகாம் அலுவலகத்திற்குச் சென்று பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த மாவட்ட ஆட்சியரிடம், "எங்களை மாலை அணிவிக்க அனுமதிக்கவில்லை' என்று பா.ஜ.க.வினர் புகாரளித்தனர்.
அதேபோல, கடந்த சனிக்கிழமை இரவு அறந்தாங்கியில் தி.மு.க.வின் பட்டி மன்றத்தில் கலந்துகொள்ள வந்த நாஞ்சில் சம்பத் தங்கியிருந்த தனியார் விடுதியின் முன்பாகத் திரண்ட பா.ஜ.க.வினர், தமிழிசை சௌந்தர்ராஜனை நாஞ்சில் சம்பத் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவருக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்டி முழக்க மிட்டனர். தி.மு.க.வினரும் பதில் முழக்கமிட, இருதரப்பும் மோதிக்கொண்டதில், பா.ஜ.க. மாஜி பெண் நிர்வாகி உமாமகேஸ்வரி காயமடைந்ததாகக் கூறி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர். "இனிமேல் தொடர்ந்து பா.ஜ.க.வினரின் இதுபோன்ற சம்பவங்களை தமிழ்நாட்டில் எதிர்பார்க்கலாம்' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
-இரா.பகத்சிங்