மிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த காவல்துறை மாற்றங்களுக்குப் பிறகு அரிசிக் கடத்தல் மிகமோசமாக அதிகரித்திருக்கிறது என்கிறார் கள் காவல்துறையைச் சேர்ந்த வர்கள். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு “அந்தியோஜனா, அன்னயோஜனா”ஆகிய திட் டங்களின் கீழ் அரிசி வழங்கு கிறது. வெளிமார்க்கெட்டில் அதிகபட்சம் 40 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியை மூன்று ரூபாய்க்கு தமிழக அரசுக்கு வழங்குகிறது. வருடா வருடம் சுமார் இருபது லட்சம் டன் அரிசி மத்திய அரசு தொகுப்பிலிருந்து கிடைக்கிறது. இது போதாதென்று பத்து லட்சம் டன் அரிசியை தமிழக அரசு ஒரு கிலோ 34 ரூபாய் என்ற அடிப்படையில் வாங்குகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய அரிசி உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டில் அரிசியை மத்திய அரசின் ‘புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ சார்பாக தமிழக சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் கொள்முதல் செய்து தனது குடோனில் சேகரிக்கிறது. நெல்லாக வாங்கப்படும் இந்த அரிசி அரவை ஆலை களுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் ரேஷன் கடைகளிலிருந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

police

Advertisment

தமிழ்நாட்டில் மொத் தம் இருபத்தி எட்டு லட்சம் டன் அரிசி ரேஷன் கடைகளிலிருந்து பொதுமக்களுக்குப் போய்ச்சேருகிறது. இதற்காக பத்தாயிரத்து ஐநூறு கோடி ரூபாய் மத்திய அரசு கொடுப்பது போக மீதியை மாநில அரசு செலவு செய்கிறது. இப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து மக்களை பசியில்லா மல் ஒன்றிய -மாநில அரசுகள் பார்த்துக் கொள் ளும் இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு ஒரு முன் னோடி மாநிலமாகும். இதில் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லாமலே அதிகாரிகள் சிலர் கட்டுச் சோற்றில் பெருச்சாளிகளாக ஏகப் பட்ட கொள்ளை நடத்துகிறார்கள்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநி லங்களில் அரிசி உற்பத்தி குறைவு. தமிழ்நாட்டில் பொது வினியோகத்துக்கு கொண்டுசெல்லப்படும் இருபத்தி எட்டு லட்சம் டன் அரிசியில் பதினைந்து லட்சம் டன் அரிசி இந்த மாநிலங்களுக்குச் செல் கிறது. இதில் ஒரு பகுதி மாட்டுத் தீவனமாகவும் கோழித் தீவனமாகவும் மாற்றப்படுகிறது என மக்களுக்கு வயிற்றுப்பசியாற அரசு கொடுக்கும் அரிசி மாடுகளுக்கும் கோழிகளுக்கும் தீவனமாக மாறும் கொடுமையைச் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். விவசாயிகளிடமிருந்து நெல்லைப் பெற்று ஆலைகளுக்கு அனுப்பும்போதே ஒரு பகுதி கொள்ளையடிக்கப்படுகிறது. ஆலைகளிலிருந்து அரிசியாக மாறிய அரிசி மூட்டைகள் குடவுன் களுக்கு வரும் வழியில் இன்னொரு பகுதி கொள்ளையடிக்கப்படுகிறது. அரிசி குடவுன்களிலிருந்து ரேஷன் கடைகளுக்குச் செல்லும் வழியில் ஒரு பகுதி கொள்ளையடிக்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ஊழியர்கள் உதவியுடன் ஒரு பகுதி கொள்ளையடிக்கப்படுகிறது.

ரேஷன் கடைகளிலிருந்து அரிசியை வாங்கி ஆந்திராவுக்கு மின்சார ரயிலில் எடுத்துச் செல்லும் ஏழைகளை மடக்கிப்பிடித்து அவர்களை மிகப் பெரிய கடத்தல்காரர்களைப்போல் காவல்துறை சித்தரிக்கிறது. ஆனால் பெரிய பெரிய லாரிகளில் எடுத்துச்சென்று அரிசியைக் கடத்தி அதை அரவை ஆலைகளில் பாலீஷ் செய்து கிலோ அறுபது ரூபாய் என பாலித்தீன் பேக்குகளில் போட்டு மார்க்கெட்டில் விற்கும் மிகப்பெரிய முதலைகளை யாரும் கண்டுகொள்வதில்லை.

Advertisment

ff

தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு 2022ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஆந்திரா முழுவதும் தமிழ்நாட்டின் ரேஷன் அரிசி நாற்பது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரை கிடைக்கிறது என கடத் தலின் கோர முகத்தை வெளிப்படுத்தினார். அந்த ஆண்டில் மட்டும் காவல்துறை வேகமாக களமிறங்கியது. சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவுக்கு ஏ.டி.ஜி.பி.யான அருண் தலைவராக நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு ppமட்டும் 12,737 கடத்தல் வழக்குகள் போடப்பட்டன. அரிசி ஆலை அதிபர்கள் உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். டன் கணக்கான அரிசி ஏற்றிய வாகனங்கள் செக் போஸ்ட்டுகளில் பிடிபட்டன. காவல்துறையில் அதிக மாமூல் கிடைக்கக்கூடிய பிரிவுகளில் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவும் ஒன்று. அந்தப் பிரிவில் இருந்த ஊழல் கடத்தல் பேர்வழிகள் ஓட்டம் பிடித்தார்கள். சமீபத்திய காவல்துறை அதிகாரிகள் மாற்றங்களில் அருணுக்குப் பதிலாக வன்னியப் பெருமாள் என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டார்.

“உணவுக் கடத்தல் பிரிவில் ஆய்வாளராக இருப்பவர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் பெறுவார். இந்த மாமூல், ஆய்வாளர் அப்பிரிவின் தலைவர் பதவியை எட்டும்போது மாதம் மூன்று கோடி ரூபாயாக மாறும். உணவுக் கடத்தல் தடுப்புப்பிரி வில் தலைவராக இருந்த ஜாபர் சேட் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த மாமூல் வழங் கப்பட்டது. அத்துடன் இலவச இணைப்பாக பெட்ரோல், டீசல் கலப்பட வியாபாரிகள் கோடிக்கணக் கான ரூபாயைத் தருவார்கள். சமையல் எண்ணெய் கலப்படத்திலிருந்து ஒரு பெரும் தொகை கிடைக்கும். இதற் கெல்லாம் அருண் முற்றுப்புள்ளி வைத்தார். அருண் வைத்த முற்றுப் புள்ளியால் உணவுத்துறை அமைச்ச ருக்கு துறைரீதியாக பாராட்டு கிடைத்தது. ஆனால் வன்னியப்பெருமாள் தலைவராக வந்தபிறகு, அமைச்சருக்குத் தெரியாமல் இதுவரை இருந்த மாமூல் இரு மடங்காகி விட்டது. அருண் காலகட்டத்தில் வறட்சியில் இருந்த அதிகாரிகள் மறுபடியும் வசூல் மழையில் நனைய ஆரம் பித்துவிட்டார்கள்.

நெல்லை விடவும் புல்லுக்கே அதிக தண்ணீர் பாய்ச்சப்படுகின்ற அவலம் உணவுத்துறையில் நடந்துவருகிறது'’என வருத்தப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.