கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களிலுள்ள வட்டாரங்களில் பணி செய்து ஓய்வுபெற்ற சுமார் 500-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கான, அவர்களுக்கு உரிய மேற்படி பணப்பயன் கிடைக்கப் பெறவில்லை. தங்களது தள்ளாத வயதில் இதற்காக வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நடையாய் நடந்தும் மனுக்கள் அனுப்பியும் பணப்பயன் கிடைக்காமல் தளர்ந்துபோய் நிற்கிறார்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.
இதுகுறித்து தமிழக ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான திட்டக்குடி ராமசாமி, “"அரசாணை எண் 207-ன் படி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு ஈ.எல்., யூ.இ.எல். விடுப்பு நிலுவைத் தொகை வழங்க மறுக்கப் படுகிறது. நடைமுறையிலுள்ள சிக்கல்களை ஒழுங்குபடுத்தி வழிநடத்தவேண்டிய மாவட்டக் கல்வி அலுவலர் கள், வேண்டுமென்றே தங்களுக்கு கீழுள்ள அலுவலர்களின் பேச்சைக் கேட்டு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களை அலைக்கழித்து வருகிறார்கள். குறிப்பாக, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவி
கடலூர், விருத்தாசலம் கல்வி மாவட்டங்களிலுள்ள வட்டாரங்களில் பணி செய்து ஓய்வுபெற்ற சுமார் 500-க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கான, அவர்களுக்கு உரிய மேற்படி பணப்பயன் கிடைக்கப் பெறவில்லை. தங்களது தள்ளாத வயதில் இதற்காக வட்டார மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு நடையாய் நடந்தும் மனுக்கள் அனுப்பியும் பணப்பயன் கிடைக்காமல் தளர்ந்துபோய் நிற்கிறார்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்.
இதுகுறித்து தமிழக ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான திட்டக்குடி ராமசாமி, “"அரசாணை எண் 207-ன் படி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக இருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு ஈ.எல்., யூ.இ.எல். விடுப்பு நிலுவைத் தொகை வழங்க மறுக்கப் படுகிறது. நடைமுறையிலுள்ள சிக்கல்களை ஒழுங்குபடுத்தி வழிநடத்தவேண்டிய மாவட்டக் கல்வி அலுவலர் கள், வேண்டுமென்றே தங்களுக்கு கீழுள்ள அலுவலர்களின் பேச்சைக் கேட்டு, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களை அலைக்கழித்து வருகிறார்கள். குறிப்பாக, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணிசெய்துவரும் சுந்தரமூர்த்தி, மூத்தவர்கள் நலனுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தொடக்கக் கல்வித் துறை இயக்குனருக்கு புகார் அனுப்பியுள்ளோம்.
தொடக்க கல்வித் துறையின்கீழ், வட்டார கல்வி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் 01.06.1988-க்கு பின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வுபெற்று, தேர்வுநிலை சிறப்பு நிலை அனுமதித்து ஊதிய நிர்ணயம்செய்து, திருத்திய ஓய்வூதிய பலன்களை அனு மதித்து அரசாணை வெளியிட்டுள்ளது அரசு. இந்த அரசாணையில் எந்தப் பகுதியிலும் ஓய்வூதிய பலனில் ஒன்றாக, ஈட்டிய விடுப்பு மற்றும் சொந்த அலுவலக விடுப்பு ஆகியவற்றை, ஓய்வு பெறும் நாளில் இருப்பிலுள்ள நாட்களுக்கு நிலுவைத் தொகை வழங்க எவ்வித மறுப்பும் அரசு தெரிவிக்க வில்லை. மாறாக, விடுப்பு நிலை பணப்பயன்பெற தகுதி இல்லையென்று, சுந்தரமூர்த்தி முரண்பாடாகப் பதிலளித்து வருகிறார்.
தகவல்பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனருக்கு இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் அலுவலகத்திலிருந்து, விடுப்பு நிலுவைத் தொகை பெற ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தகுதி உண்டு என்றே எழுத்துமூலம் பதிலளித்துள்ளனர். அதனடிப் படையில் கடலூர் மாவட்டத்தில் மங்களூர் வட்டார கல்வி அலுவலகத்தின் மூலம் சுமார் 20 பேருக்குமேல் மேற்படி நிலுவைத் தொகை வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
இந்த அரசாணை குறித்து நல்லூர் வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ள வர்கள், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ளது என்று பொய்யான பதிலை அளிக்கிறார்கள். காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய வட்டார கல்வி அலு வலர்கள் எழுத்துமூலம் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள். கடலூர், பண்ருட்டி வட்டார கல்வி அலுவலர்கள், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் முறைப்படி விண்ணப்பம் செய்தால் பரிசீலனை செய்வதாகக் கூறுகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் வட்டார கல்வி அலுவலகத்தில் அது சம்பந்தமான பதிவேடு களே எங்களிடம் இல்லை என்று பதிலளித் துள்ளனர்.
விருத்தாசலம், கம்மாபுரம், அண்ணா கிராமம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, கீரப்பாளையம் ஆகிய வட்டாரக் கல்வி அலுவலர்கள் இதுவரை இதுசம்பந்தமாக நிலுவைத் தொகை வழங்கப்படும் அல்லது வழங்கமுடியாது என எந்தவிதமான பதிலும் குறிப்பிடாமல் மனம்போனபோக்கில் பதில் வழங்கியுள்ளனர். இப்படி வட்டார அளவில் செயல்பட்டுவரும் கல்வி அலுவலர்கள் முரண்பாடான பதில்களை அளித்துள்ளனர். ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சந்தேகத்தைப் போக்கவேண்டிய விருத்தாசலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் சுந்தரமூர்த்தி, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விடுப்பு நிலுவைத் தொகை வழங்கவிடாமல் அதிகாரிகளைத் தடுத்துவருகிறார். இதைத்தொடர்ந்து தகவலறியும் சட்டம் மூலம் பதில்கேட்டும், அதற்கும் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்துவருகிறது மாவட்ட கல்வி அலுவலகம். கல்வித் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து முறையான தீர்வு காணவேண்டும். அதற்காக இயக்குனருக்கு முறைப்படி புகார் அனுப்பியுள்ளோம்''” என்கிறார் ராமசாமி.
தாழநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற வெங்கட்ராமன், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் என்று பலரும் மனுக்களை அளித்து முயற்சி செய்துவிட்டு ஏமாற்றத்துடன் நிற்கிறார்கள்.
விருத்தாசலம் மாவட்ட கல்வி அதிகாரி சேகரை நேரில் சந்தித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் களின் கோரிக்கைளை எழுத்து மூலமாக அவரிடம் கொடுத்தோம். அவர் படித்துப் பார்த்துவிட்டு இரண்டு நாட்களில் நமக்கு பதில் கூறுவதாகத் தெரிவித்தார். 10 நாட்கள் கடந்தும் அவர் நமக்கு பதிலளிக்கவில்லை மீண்டும் அவரது அலுவலகத்திற்குச் சென்றோம். அவர் பள்ளிகளுக்கு விசிட் சென்றிருப்பதாக அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டுமானால் வட்டார தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தமிழக தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகம் சரியான வழிகாட்டுதலைத் தெரிவித்து முறைப்படுத்தவேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்களை அலைக்கழிப்பதை, அவமானப் படுத்துவதை தடுக்கவேண்டும்
பல ஆசிரியர்கள் பணப்பயனைப் பெறாமலேயே இறந்துபோனார்கள். உயிரோடு இருப்பவர்களுக்காகவாது விரைந்து அந்த பயன் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார்கள் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பெண்ணாடம் சோழ நகர் சின்னப்பா, ராமசாமி, பூவனூர் வெங்கட்ராமன், கொடிக்களம் சரோஜா ஆகியோர்.
-எஸ்.பி.எஸ்.