"டெல்லிக்கு கெத்தாகச் சென்ற அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டுள்ளது. இதனால் ஏகத்துக்கும் டென்ஷனாகியிருக்கிறார் அண்ணாமலை' என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக்கொண்டதை அடுத்து, தமிழக பா.ஜ.க. வினரிடம் விசாரணை நடத்தி, கட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அந்த ரிப்போர்ட்டின் அடிப் படையில் டெல்லிக்கு அழைக்கப்பட்டார் அண்ணாமலை.

"டெல்லியில் நடந்தது என்ன?' என்பது பற்றி விசா ரித்தபோது, டெல்லிக்கு 1-ந் தேதி மாலையில் வந்த அண்ணா மலைக்கு அன்றைய தினம் எந்த அப்பாயின்ட்மெண் டும் கிடைக்க வில்லை. அவரது காட்ஃபாதரான பி.எல்.சந்தோஷிடம் இதுகுறித்து அண்ணாமலை விசாரிக்க, "முதலில் நிர்மலாவை பார்த்துவிடுங்கள், பிறகு நட்டாவை பார்க்கலாம். அமித்ஷா இங்கு இல்லை. உங்களிடம் விசாரிக்கு மாறு நிர்மலாவுக்கு அமித்ஷாதான் அறிவுறுத்தியிருக்கிறார்' என்கிற விப ரத்தையும் சொல்லியுள்ளார் சந்தோஷ்.

aa

Advertisment

அதன்படி மறுநாள் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் அண்ணாமலை. அதில், "அ.தி.மு.க. கூட்டணி முறிவுக்கு உங்களின் துடுக்குத்தனமான பேச்சுதான் காரணமாக இருந்துள்ளது. நீங்கள் விரும்பும் அரசியலை உருவாக்க கூட்டணியை காயப்படுத்துகிறீர்கள் என உங்கள் மீது சீனியர்கள் குற்றம் சொல்கிறார்கள்' என நிர்மலா சொல்லியுள்ளார்.

அதற்கு அண்ணாமலை, "இது தவறான குற்றச்சாட்டு மேடம். கூட்டணி யை அ.தி.மு.க. உடைத்துக்கொண்டதற்கு நான் காரணமல்ல; இது எடப்பாடி பழனிச்சாமியின் ப்ரீ-ப்ளான். தி.மு.க. அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துங் கள் என தலைமை (பா.ஜ.க.) எனக்கு கட்டளையிட்டிருந்தது. அதன்படி நான் அம்பலப்படுத்திய நிலையில், "அ.தி.மு.க. ஊழல்களை ஏன் நீங்கள் பேசுவதில்லை' என பொதுவெளியில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பும்போது என்னால் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. அதனால், "அவர்களது ஊழல்களையும் வெளிப்படுத்துவேன்' என சொன்னேன். இதை தலைமையின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது, "தவறில்லை; அ.தி.மு.க. வையும் அட்டாக் பண்ணலாம்' என அனு மதித்தது தலைமைதான். அதனால், டெல்லியின் அனுமதியுடன்தான் நான் பேசுகிறேன் என்பதை அறிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி, சமயம் வரும்போது பா.ஜ.க.வை கழட்டி விடவேண்டும் என அப்போதே திட்டமிட்டு விட்டார். அண்ணாவை நான் விமர்சித்ததும், அதனைப் பயன்படுத்திக் கொண்டார் பழனிச்சாமி. அதனால் பழனிச்சாமியின் ப்ரீப்ளான்தான் இது.

dd

இந்த விவகாரத்தில் நம் கட்சியின் சீனியர்கள் என்னை குற்றம்சாட்டுவது அபத்தமானது. கட்சியின் வளர்ச்சிக்காக என்னத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்? கட்சி கட்டமைப்பை வலிமையாக்க தலைமை சொல்வதை நான் வலியுறுத்தினாலும் அவர்கள் அதில் ஈடுபாடு காட்டுவதில்லை. என்னை பலவீனமாக்க என்ன செய்யணுமோ அதை மட்டும்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்'' என விளக்கமளித்திருக்கிறார் அண்ணாமலை.

தொடர்ந்து நிர்மலா கேட்ட பல கேள்விகளுக்கும் "தன்மீது தவறே இல்லை' என விளக்கமளித்திருக்கும் அண்ணாமலை, "என்னை நம்பி இந்த ஒருமுறை பா.ஜ.க. தலைமையில் கூட்டணி அமைக்க அனுமதி யுங்கள். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும்படி இந்த நாடாளு மன்ற தேர்தலில் நல்ல மாற்றத்தை பா.ஜ.க.வுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறேன்'' என அவர் சொன்னபோது, "இதுகுறித்து உங்களுக்கு உத்தரவுகள் வரும் ; அதன்படி நடந்து கொள்ளுங்கள்' என அறிவுறுத்தியிருக்கிறார் நிர்மலா'’என்று விவரிக் கின்றனர் டெல்லி சோர்ஸ்கள்.

நிர்மலாவை தொடர்ந்து ஜே.பி.நட்டாவும், பி.எல். சந்தோசும் அண்ணாமலை யிடம் விசாரணை நடத்தி யிருக்கிறார்கள். அதில்,’ ’"பா.ஜ.க.வை தமிழகத்தில் வளர்ப்பதில்தான் என் கவனம் இருக்கிறது. அதனை விரும்பாதவர்கள்தான் எனக்கு எதிராக இயங்குகிறார்கள். ஆளும் கட்சியான தி.மு.க.வை எதிர்த்து தைரியமாக அரசியல் செய்யும் கட்சியைத்தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தக் கட்சி பா.ஜ.க.தான் என்ற சிந்தனையை மக்க ளிடம் நான் உருவாக்கியிருக்கிறேன். கூட்டணியை முறித்துக்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டு காய்களை நகர்த்தி வைத்த அ.தி.மு.க., என்னை காரணமாக்குவதை மறுக்கிறேன். கூட்டணி இருந்தால் நல்லது; இல்லாவிட்டால் அதைவிட நல்லது என்கிற பாணியில்தான் பா.ஜ.க.வை வளர்த்துள்ளேன். நாடாளு மன்ற தேர்தலில் இதை நிரூபிப்பேன். அதற்காகத்தான் உழைக்கிறேன்'' என்றெல் லாம் தன்னை நம்பும்படி கெஞ்சியிருக்கிறார் அண்ணாமலை.

ddஅப்போது, ”"தமிழக அரசியலை எடுத்தேன் கவிழ்த்தேன்ங்கிற பாணியில் அணுகக்கூடாது. அதைத்தான் நீங்கள் செய்துவருகிறீர்கள். உங்களின் நடை பயணம் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறதுதான். ஆனால், அதையே அட்வான்டேஜாக எடுத்துக்கொண்டு அ.தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டதை மோடியும், அமித்ஷாவும் விரும்பவில்லை. எடப்பாடி பழனிச்சாமி மீதுள்ள உங்களின் தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு அரசியலை பா.ஜ.க.வின் அரசியலாக மாற்றியிருப்பது சரியல்ல. கூட்டணி விவகாரத்தை மேலிடம் பார்த்துக்கொள்ளும். இனி, அ.தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்கக்கூடாது. நாங்கள் சொல்கிறவரை அமைதியாக இருங்கள். விமர்சிப்பதற்கு நேரம் வரும். கூட்டணியே வேண்டாம் என்பவர்கள் பா.ஜ.க.வை தேடிவரும் காலமும் வரும்'' என்று நட்டாவும், சந்தோஷும் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

டெல்லியில் அமித்ஷா இல்லாததால் சந்தோஷின் போன்மூலம் அவரிடம் பேசிய அண்ணாமலை கூறிய எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லையாம் அமித்ஷா. மாறாக, "உங்களின் அரசியல் ஆரோக்கியமாக இல்லை; அரசியலைத் தாண்டி நீங்கள் வளர்ச்சியடைந்திருக்கிற விவகாரமும் எங்களுக்குத் தெரியும். தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்'’என்று அமித்ஷா கடிந்துகொண்டதாகவும் டெல்லியில் தகவல் உலாவிக்கொண்டி ருக்கிறது.

இதனால் மூட்அவுட்டான அண்ணா மலை, அந்த அப்-செட்டுடனேயே சென்னை திரும்பியவர்... டென்ஷன் குறையாததால் தனது உடல்நிலையை காரணம் காட்டி, நடைபயணத்தை ஒத்திவைத்துவிட்டார்.

அண்ணாமலையின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. மேலிடம்!

_____________

இறுதிச் சுற்று!

Advertisment

dd

பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் 5-ந் தேதி நடந்தது. அண்ணாமலை தலைமையில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக் கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத் திற்கு அவர் வரவில்லை. தலைவர்கள் பலரும் காத்திருந்தனர். வருவதற்குரிய அறிகுறியே தெரியாததால் அண்ணா மலைக்காக காத்திருக்காமல் கேசவவிநா யகம் தலைமையில் கூட்டம் தொடங்கியது. உடல்நிலை மோசமாக இருந்தாலும் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்வார் என்று மாநில நிர்வாகிகளும் மாவட்ட தலைவர்களும் எதிர்பார்ப்பிலேயே இருந்தனர். இருப்பினும் மதியம் 12 மணிவரையிலும் கூட்டத்துக்கு அவர் வரவில்லை. இந்த தகவல் டெல்லிக்கு பாஸ் செய்யப்பட, அங்கிருந்து கொடுக்கப்பட்ட அர்ச்சனையை தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்டார் அண்ணாமலை. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்துள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.

நாங்குநேரி ஒன்றியத்தை, சிறந்த வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒன்றியமாகத் தேர்வு செய்தது ஒன்றிய அரசு. இந்த ஒன்றியத்தின் தலைவராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த சௌமியா ஆரோக்கிய எட்வின். இது தொடர்பான விழா பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. இதில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் நாங்குனேரி சேர்மன் சௌமியாவும் சென்றிருந்தனர். அங்கே சென்ற சௌமியா, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிவரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உற்சாகமாக உரையாற்றிவிட்டுத் திரும்பியிருக்கிறார்.

-இளையர்