Skip to main content

அடக்குமுறை! உரிமையை ஒடுக்கும் கொடூர ஆட்சி!

Published on 10/07/2018 | Edited on 11/07/2018
வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வுரிமையைப் பறிக்கும் 8 வழி பசுமை வழிச்சாலையை எதிர்த்து, விவசாயிகளும் பொதுமக்களும் நித்தமும் ஆர்ப்பாட்டம், கதறி அழுது போராட்டம், தீக்குளிப்பு, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி என பல வழிகளிலும் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எங்கே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கரோனா காலத்தில் எட்டு வழி சாலைக்கு அவசரம் காட்டுவது வேதனை... -ஸ்டாலின் கண்டனம்

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
dmk stalin report


சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்தில் 8 வழி சாலை திட்ட மேலாளர் மனு செய்துள்ளார்.


8 வழி சாலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களாக மேல்முறையீட்டுமனு நிலுவையில் இருப்பதாகவும், அதனால் பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை நடத்தவேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் அந்த மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நலன்சார்ந்த மிகப்பெரிய திட்டம் என்பதால் அதனை தடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தி சுயநல பசியை நிறைவேற்ற மத்திய -மாநில அரசுகள் கைகோர்த்துள்ளது. எட்டு வழிசாலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறிய பாஜக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். கரோனா காலத்தில் எட்டு வழி சாலை திட்டத்திற்கு இவ்வளவு அவசரம் காட்டுவது வேதனையாக உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்ற வாதத்தை வைத்து மத்திய, மாநில அரசுகள் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. மக்களின் நலனுக்காக எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய- மாநில அரசு உடனே கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Next Story

8 வழிச்சாலை மீதான இடைக்கால தடைக்கு எதிரான மனுவை விசாரிக்கக்கோரி மனு

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

Petition seeking interim injunction on 8 way road

 

சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்திற்கு தடை விதித்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை செய்ய உச்சநீதிமன்றத்தில் 8 வழி சாலை திட்ட மேலாளர் மனு செய்துள்ளார்.


8 வழி சாலைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களாக மேல்முறையீட்டுமனு நிலுவையில் இருப்பதாகவும், அதனால் பணிகள் பாதியில் விடப்பட்டுள்ளதால் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணை நடத்தவேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நலன்சார்ந்த மிகப்பெரிய திட்டம் என்பதால் அதனை தடுப்பது தவறான முன்னுதாரணம் ஆகும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.