ஃபேல் விவகாரத்தில் பிரான்ஸ் இணையதள ஊடகமான மீடியாபார்ட் நிறுவனத்தின் தொடர் முயற்சிகளையடுத்து, இடைத்தரகருக்கு ரூ 8 கோடி கைமாறிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது இந்தியத் தரப்பில் தரப்பட்ட அழுத்தம் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனம் ரஃபேல் விவகாரத்தில் கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டதென வெளிப் பட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்பட்ட முறைகேடுகளை விசாரிக்க பிரான்ஸ் அரசு நீதிபதி ஒருவரை நியமனம் செய்துள்ளது.

rr

2012-ல் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது ரஃபேல் ஒப்பந்தம். 126 விமானங்களில் 18 விமானங்களை பறக்கும் நிலையிலும், 108 விமானங்களை இந்தியாவிலுள்ள ஹெச்.ஏ.எல்.லிலும் வைத்து தயாரிப்பதோடு தொழில்நுட்பத்தையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பது ஒப்பந்தம். விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட தொகை ரூ. 1,86,000 கோடி.

2014-ல் காங்கிரஸ் போய் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. புதிதாக ஆட்சிக்கு வந்த மோடி தனது பிரான்ஸ் பயணத்தின்போது ஏப்ரல் 10, 2015-ல் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதற்கு சில வாரங்களுக்கு முன் ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாக டஸால்ட் நிறுவனத்தினர், இந்திய விமானப்படை அதிகாரிகள், ஹெச்.ஏ.எல். அதிகாரிகள் கூட்டாகத் தெரிவித்திருந் தனர்.

Advertisment

ஆனால் மோடி கையெழுத்திட்டது முற்றிலும் புதிய ஒப் பந்தத்தில். இந்திய விமானப் படை தலைமையகம், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இரண்டிலும் அனுமதி வாங்கவேண்டும் என்ற நடைமுறை இம்முறை புறக்கணிக்கப்பட்டிருந்தது. இரண்டாவ தாக மொத்த விமானங்கள் எண்ணிக்கை 126-லிருந்து 36-ஆகக் குறைக்கப்பட்டது. ஒரு விமானத்தின் விலை காங்கிரஸ் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.526 கோடியாக இருந்தது. மோடி அரசு போட்ட ஒப்பந்தத்தில் ரூ.1670 கோடியாக உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக பழைய ஒப்பந்தத்தைவிடவும் ரூ.58,000 கோடி கூடுதல் செலவு. 90 விமானங்கள் குறைவு.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமி டெட்டுக்கு தொழில்நுட்பப் பகிர்வு என்ற அம்சத்தைத் தூக்கிவிட்டு, ரிலையன்ஸ் நிறுவனம் வலுக்கட்டாயமாக தொழில் கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டது.

2018 தேர்தலையொட்டி, ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அருண்ஷோரி, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இவ்வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகய்யிடம், விலை விவரம், விமானங்கள் குறித்த தகவல்கள் ரகசியமானவை, தேசப் பாதுகாப்பு சம்பந்தப் பட்டவை எனக் கூறி மூடிய உறையில் வைத்து தகவல்களை அளித்தது மத்திய அரசு.

Advertisment

ரஃபேல் ஒப்பந்த விவரங்களை மத்திய தணிக்கைக் குழுவிடம் கொடுத்ததாகவும், அதனை பாராளுமன்ற விசாரணைக்குழு அங்கீகரித்து விட்டதாகவும் மத்திய அரசு துணிகரமாக பொய் சொன்னது. அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்துக்கு அளித்த விவரங்களில் பிழையான தகவல்கள் இருந்ததும் பின்பு வெளியானது. விசாரணைக்குப் பின் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகய், 2018, டிசம்பர் 14-ல் ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று கூறி தீர்ப்பளித்தார்.

விரைவில் ரஞ்சன் கோகய் பணி ஓய்வுபெற, அவருக்கு பா.ஜ.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி. பதவிகொடுக்கப்பட்டது பலரது புருவங்களையும் உயர்த்தியது.

ra

கிட்டத்தட்ட ரஃபேல் விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில்தான் பிரான்ஸைச் சேர்ந்த மீடியாபார்ட் நிறுவனம் இந்திய இடைத்தரகர் மோகன்தாஸ் குப்தாவின் டெப்சிஸ் சொல்யூஷனுக்கு ரூ 8 கோடி ரூபாய் கமிஷன் அளிக்கப்பட்ட விவகாரத்தை வெளிக்கொண்டு வந்து அனல்கிளப்பியது.

தற்சமயம் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியத் தரப்பின் வற்புறுத்தலின் காரணமாகத்தான், தொழில்கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டது என்று பிரான்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மீடியா பார்ட்டின் இடைவிடாத முயற்சிகளின் பலனாக, முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க புதிய நீதிபதி ஒருவரை பிரான்ஸ் அரசு நியமனம் செய்துள்ளது. இதையடுத்து அதன் எதிரொலிகள் இந்தியாவிலும் கேட்கத் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோணி, “"பிரெஞ்சு அதிகாரிகள் ரஃபேல் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தர விட்டபிறகும் நமது பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் மௌனமாக இருக்கிறார்கள். மௌனமாக இருப்பதன் மூலம் பொறுப்பிலிருந்து தப்பித்துவிடலாம் என இந்த அரசாங்கம் நினைக்கிறதா?'' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜிவாலா, பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என கூறியுள்ளார்.

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ரா, “"அரசுசாரா நிறுவனமொன்று எழுப்பிய கேள்விகள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார், அவ்வளவுதானே. அது ஊழலை எப்படி நிறுவியதாகும்? டஸால்ட்டின் போட்டி நிறுவனங்களின் தூண்டுதல்களுக்கேற்ப ராகுல் செயல்படுகிறார்''’என குற்றம்சாட்டுகிறார்.

சுர்ஜிவாலாவோ,“"காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அரசு இரண்டுமே டஸால்ட் நிறுவனத் திடம்தான் ஒப்பந்தம் போட்டன. இதில் போட்டி நிறுவனம் எங்கே வந்தது? தவிரவும் ரஃபேல் விமானத்தை டஸால்ட் நிறுவனம் மட்டும்தானே தயாரிக்கிறது''’என சம்பித் பத்ராவின் மூக்குடைத் துள்ளார்.