(30) பாவலர் கிரியேஷன்ஸ் உண்டாச்சு!
எந்த ஒரு சினிமா பட விழாவுக்கும், பூஜைக்கும் எங்க டைரக்டரையோ, எங்க டீமையோ யாருமே கூப்பிடல. ரொம்ப அவமானப்படுத்தி னாங்க. கைல ஒரு படமும் இல்லை.
"பாரதிராஜா இயக்கத்துல படம் பண்ணியே ஆகணும்'’என எங்களுக்காக பெரிய, பெரிய ஹோட்டல்ல ரூம் போட்டிருந்தவங்கள் லாம் ரூமை காலி பண்ணிட்டாங்க.
"நிழல்கள்'’என்கிற ஒரு படத்தின் தோல்வி எல்லாத்தையுமே மாத்திடுச்சு. அதோட நிறைய கத்துக் கொடுத்தது அந்தத் தோல்வி... எனவும் சொல்லலாம்.
"நிறம் மாறாத பூக்கள்'’ படத் தின் கதையை பாக்யராஜும், திரைக்கதையை எங்க டைரக் டரும், வசனத்தை பஞ்சு அருணாசலமும் அமைத் திருந்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் சூழ்நிலைக்கேற்ப நானும், ரங்கராஜும் வசனத்தை எழுதிக் கொடுத்தோம். குறிப்பாக காதல் காட்சி வசனங்களை.
இது வெற்றிப்படம் என்ப தால் இதன் கதையை தெலுங் கில் எடுக்க விரும்பிய தெலுங்கு கம்பெனி எங்க டைரக்டரை அணுகி, கதையை விலைக்கு கேட்டது. டைரக்டரும் கதை உரிமையை விற்பனை செய்துவிட்டார். இதையறிந்த பாக்யராஜ், "என் அனுமதி இல்லாமல் கதை உரிமையை எப்படி விற்கலாம்?'” என குருநாதர் என்றும் பாராமல், டைரக்டர் மீது வழக்குத் தொடர்ந்துவிட்டார். இத னால் குரு-சிஷ்யன் இடையே மனஸ்தாபம் பெரிய அளவில் ஏற்பட்டுவிட்டது.
பிரபல தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. சார் மத்தியஸ்தராக இருந்து இந்த பஞ்சாயத்தை பேசினார். இறுதியில் ஒரு தொகை ஒன்றை எங்க டைரக்டரிடமிருந்து பெற்று, பாக்யராஜுக்கு கொடுத்து, நிலமையை சுமுகமாக்கினார்.
ஒருநாள்...
இளையராஜா சாரை தற்செயலாக ஸ்டுடியோவில் சந்தித்தேன்.
டைரக்டரைப் பற்றி விசாரித்தார்.
"ரொம்ப மனக் கஷ்டத்துல இருக்கார் சார்''’என்றேன்.
பொதுவாக தனது படங்கள் வெற்றி யடையும்போது... அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள தன் நண்பர் இளைய ராஜா வீட்டுக்குப் போய், அன்று முழுக்க ராஜாவிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு, ராஜா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு வருவார் டைரக்டர். ஆனால் கடுமையான தோல்விக்குப் பின் ராஜாவை சந்திக்கவில்லை. மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது மாதிரி, கஷ்டத்தையும் பகிர்ந்து கொண்டு உதவுவதுதானே நட்பு.
"நீ பாரதிராஜவை என் வீட்டுக்கு கூட்டிட்டு வா''’என்றார்.
டைரக்டரிடம் விஷயத்தைச் சொல்லி, இளையராஜா வீட்டுக்கு டைரக்டருடன் நானும் சென்றேன்.
நண்பனைப் பார்த்ததும் நெகிழ்ந்த இளையராஜா சட்டென குரலை உயர்த்தி... "நீ என்னய்யா... இதெல்லாம் பெரிய விஷ யமா? வெற்றி வருதுன்னா.... தோல்வியும் வரத்தான் செய்யும். நான் எவ்வளவு படங்களுக்கு மியூஸிக் பண்றேன். எல்லாமே ஹிட் ஆயிடுதா? இல்லையே... நான் வொர்க் பண்ற நூறு சதவிகிதத்துல நாற்பது சதவிகிதம்தான் சக்ஸஸ் ஆகுது. பாக்கி அறுபது சதவிகிதம் ஃபெயிலியர் தான். ஒரு படம் தோல்வியடைஞ்சா... அதுக்காக நான் அந்தப் படத்துக்கு கடுமையா வொர்க் பண்ணலைனு அர்த்தமா? நான் எல்லாப் படங்களுக்கும் சின்ஸியராத்தான் உழைக்கிறேன்.
படத்தோட கதை, நடிகர்களோட நடிப்பு, இசை, ஒளிப்பதிவு.... இப்படி எல்லாம் சரியா அமைஞ்சாதான் படம் சக்ஸஸ் ஆகும். நீ வழக்கம்போல கடுமையாத்தான் இந்தப் படத்துக்கு வேலை செஞ்ச. நீ சரியா வொர்க் பண்ணாம இருந்து, தோல்வியாகியிருந்தாத்தான் நீ கவலைப் படணும். தோல்வியை நினைச்சு கவலைப் படாதய்யா, கவனமா இருந்துக்கிட்டா போதும்.
நீ ஒண்ணு செய்... வேற எங்கவும் போக வேணாம். வேற யாரும் உன்னைத் தேடி வந்து படம் பண்ண வாய்ப்புத் தருவாங்கனு நினைக்க வேணாம். மறுபடி ஒரு சக்ஸஸைக் குடு. நிலமை தானா மாறும். நீ யாரையும் தேடிப் போக வேணாம். நானே படம் தயாரிக்கிறேன். நம்பிக்கையோட வேலையை தொடங்குய்யா''”-இப்படி நண்பனுக்கு ஆறுதல் சொன்ன இளையராஜா சார், முப்பத்தி ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை டைரக்டர் கையில் கொடுத்தார்.
"பாவலர் கிரியேஷன்ஸ் என்கிற கம்பெனி பெயரில் படத்தைத் தயாரிக்கிறேன். படத்தை நான் தயாரிச்சாலும், என் சார்பில் பாஸ்கர்தான் இருப்பான்''’எனச் சொன்னார் இளையராஜா.
"அப்புறம்... ஒரு அழகான லவ் ஸ்டோரியா பண்ணு. பாட்டா போட்டு நொக்கு நொக்குனு நொக்கி எடுத்திடுறேன். பெரிய ஹிட்டாக்கிடுவோம் படத்தை... போய் உடனே வேலையை ஆரம்பிச்சிடு''” என டைரக்டரை உற்சாகப்படுத்தி அனுப்பினார் இளையராஜா.
தனது அண்ணன் பாவலர் வரதராஜன் பெயரில் "பாவலர் கிரியேஷன்ஸ்'’என பெயர் வைத்து, ஆர்.டி. பாஸ்கரை தயாரிப்பாளராக்கினார் இளையராஜா.
இளையராஜாவின் சின்ன அண்ணனான ஆர்.டி. பாஸ்கரும், பாரதிராஜாவும் ஊரிலேயே நீண்டகாலமாக பழகிய நண்பர்கள். பாஸ்கரை வைத்துத்தான் இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் நட்பு ஏற்பட்டது. அதனால் ஃப்ரெண்ட்லியாக வொர்க் பண்ண ஏதுவாக இருந்தது டைரக்டருக்கு.
சிக்கனச் செலவில் எடுக்கப் படும் படம் என்பதால் பாஸ்கர் எங்க ளுக்கு ஒரு பழைய ஹோட்டல்ல ரூம் போட்டு கொடுத்தார். அந்த ஹோட் டல் இப்பவும் இருக்கு. இக்கட்டான நிலமைல இருக்கவங்க சொல்வாங்களே... ‘அப்படியே அடுப்பு மேல உட்கார்ந்திருக்க மாதிரி இருக்குன்னு. அந்த மாதிரி அந்த ஹோட்டலோட சமையலறைக்கு மேலதான் எங்களுக்கு போடப்பட்ட ரூம் இருந்தது.
பாஸ்கருக்கு எங்க யூனிட் மேல பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. என்னிடம் மட்டும் தான் வெளிப்படையாக பேசுவார்.
"பாலா... பாரதி மிகப்பெரிய தோல்வியைக் கொடுத்திருக் கான். அதனால நீதான் பார்த்துக்கணும். திரும்ப அவனை ஜெயிக்க வைக்கணும்''’என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார்.
"அண்ணே... விடுண்ணே பார்த்துக்கலாம். இந்தத் தடவ அடி நொறுக்குறோம் பாருங்க''’என நான் அவரிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். பாஸ்கர் இரவு ஏழு மணிக்கெல்லாம் மாத்திரை சாப்பிட்டுவிட்டு தூங்கச் சொல்ல வேண்டும். இது டாக்டர் அட்வைஸ். அதனால் தினமும் பாஸ்கர் கிளம்பிப் போன பிறகுதான் டிஸ்கஷன் செய்வோம்.
பாஸ்கர் இருக்கும்போது ஏன் கதை டிஸ்கஷன் செய்வ தில்லை என்றால்... ‘என்ன கதையை படம் எடுப்பது?’ என்கிற ஐடியாவே வரமாட்டேங்குதே. கதையே கிடைக்கலையே. அதனால் அவர் வீட்டுக்கு கிளம்பிப் போன பிறகு ‘என்ன கதையை எடுக்கலாம்? எப்படி எடுக்கலாம்?’ என தினமும் டிஸ்கஷன் செய்தோம்.
மணிவண்ணனைப் பார்த்தாலே பாஸ்கருக்கு எரிச்சலும், கோபமும் வரும். “"இவன்தான... "நிழல்கள்' கதை எழுதினவன். இவன் கதையை எடுத்துத்தானே பாரதி தோல்விய சந்திச்சான்' என மணிவண்ணனைப் பார்க்கிறபோதெல்லாம் கோபமாகச் சொல்லுவார் பாஸ்கர்.
"அண்ணே டைரக்டர் படியேறும்போது லேசா ஒரு படி ஸ்லிப் ஆகியிருக்கார். மத்தபடி அவரைப் போல ஒரு சினிமா ஜாம்பவானை பார்க்க முடியாது. எத்தனை பேருக்கு சினிமா வில் வாழ்க்கை கொடுத்திருக்கார். அவரை நீங்க உங்க நண்பரா பார்க்குறீங்க. அதனால் அவரோட தோல்வி உங்களை ரொம்ப பாதிச்சிருக்கு. மறுபடியும் எங்க டைரக்டர்... உங்க பாரதி பிர மாண்டமா ஜெயிச்சுக் காட்டுவார்ணே''’என பாஸ்கரிடம் சொன்னேன்.
அடுத்த படத்தை வெற்றிப் படமாக்க பாரதிராஜா யூனிட் நடத்திய வித்தியாசமான பாரதிராஜா பட விழாவைப் பற்றி... வரும் அத்தியாயத்தில் சொல்றேன்....
(பறவை விரிக்கும் சிறகை)