(26) சுதாகர் ஹீரோவான கதை!

"புதிய வார்ப்புகள்'’வெளியாகி ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பைப் பெற்று, வசூலை அள்ளுது. அந்த சந்தோஷத்தோட "நிறம் மாறாத பூக்கள்'’பட வேலை நடக்குது. இதுக்கு நடுவில் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தன்னோட கம்பெனிக்கும் ஒரு படம் பண்ணச் சொல்றார்.

mm

Advertisment

கே.ஆர்.ஜி. சாரை பொறுத்தவரை, இந்தக் கதையை நேபாளத்துலதான் எடுக்க முடியும்னு ஆரம்பிச்சி, காஷ்மீர்ல எடுத்தாலும் பொருத்தமா இருக்கும் என்பார். அப்புறம் டெல்லி சரியா வரும் என்பார். பிறகு பாம்பேதான் பொருத் தமா இருக்கும் என்பார். இப்படியே ஹைதராபாத்ல எடுக்கலாம்னு சொல்லி, கடைசியில சென்னை விஜிபி கோல்டன் பீச்ல கொண்டு வந்து நிறுத்திடுவார்.

கே.ஆர்.ஜி.யைப் பற்றி எனக்குத் தெரிந்த கதை இது.

"அவர் படத்துக்கும் ஒரு ஸாங்க தொடங்கி வச்சிட்டு ‘"நிறம் மாறாத பூக்கள்'’பட வேலையை பார்க்கலாம்''’என எங்க டைரக்டர் பாரதிராஜா விடம் சொன்னேன்.

அந்தப் பட விஷயமாகப் போனபோதுதான் கே.ஆர்.ஜி. ஆபீஸில் கே.ஆர்.ஜி.க்கு ஆபீஸ் பாய் வேலையிலிருந்து கேஷியர் வேலை வரை பார்த்து வந்த என் பின்னாளைய நண்பர் மணி வண்ணனைச் சந்தித்தேன்.

ஒரு படம் வசூல் ரீதியா வெற்றியடையும் போது, அந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்களும், டைரக்டர் உள்ளிட்ட டெக்னீஷியன்களும் அடுத்த படத்திற்கு சம்பளத்தை உயர்த்துவார்கள். இது சினிமா வில் வாடிக்கை.

"புதிய வார்ப்புகள்'’ தூள் கிளப்புது வசூலில். அடுத் தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ந்து வருது டைரக்டருக்கு. ஆனால் எங்க டைரக்டருக்கு விலைவாசியை உயர்த்தத் தெரியவில்லை.

"எங்களுக்கும் சம்பளம் கூட்டிக் கொடுங்க. நீங்களும் உசத்திக் கேளுங்க சார்''’என்று நாம் சொன்னாலும் கூட....

"யோவ்... என்னய்யா... திடீர்னு இவ்வளவு சம்பளம் கேட்டா கொடுப்பாங்களா?''’என வியப்பாக கேட்பார்.

"சார்... ஒங்களோட பவுசு ஒங்களுக்குத் தெரியல சார்''’என்போம்.

சினிமா உலகில் எங்க டைரக் டருக்கு எவ்வளவு பவுசு இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்றேன்...

சென்னை யில் இருக்கிற எல்லா முக்கிய ஹோட் டல்கள்லயும் எங்க டைரக்டருக்கு புரொடக்ஷன் கம்பெனிகள் ரூம் போட்டுக் கொடுத்திருந்தது... கதை விவாதங்கள் நடத்துவதற்காக.

அஸிஸ்டெண்ட் டைரக்டரா இருந்த ரங்கராஜ் என்ன பண்ணுவாப்லன்னா... "இந்த ஹோட்டல்ல தக்காளி தோசை டேஸ்ட்டா இருக்காது. நான் அந்த ஹோட்டலுக்குப் போறேன்'” எனச் சொல்லிவிட்டு அடுத்த ஹோட்டலில் எங்க டைரக்டருக்கு போடப்பட்ட ரூமுக்கு போய்டுவாப்ல. சோழா ஹோட்டல், தாஜ் ஹோட்டல்னு எல்லா இடத்துலயும் ரூம் போட்டுத் தந்திருந்தார்கள் ஒவ்வொரு கம்பெனியும்.

எங்க டைரக்டர் படங்களுக்கு நான்தான் ஆர்டிஸ்ட் செலக்ஷன். நான் ரொம்ப பிஸி. எந்த நேரத்துல எந்த ஹோட்டல்ல இருப்பேன்னு தெரியாது. ஆர்ட்டிஸ்டுகள் என்னைத் தேடி அலைஞ்சு, கஷ்டப்பட்டு கண்டுபிடிப்பாங்க.

"மனோபாலா சாரை பாத்துட்டோம்னா... எப்படியாவது பாரதிராஜா சார் படத்துல நடிச்சிடலாம்'கிற எண்ணம் ஆர்டிஸ்ட்டுகளுக்கு.

இந்த எண்ணம் மணிவண்ணனுக்கும் இருந் தது. "மனோபாலா மூலம் எப்படியாவது பாரதிராஜா சார்கிட்ட அஸிஸ்டெண்ட்டா ஆயிடணும்'’என நினைத்தார்.

இப்படி பிஸியா ஓடிக்கிட்டிருந்த எங்க டைரக்டருக்கும், யூனிட்டுக்கும் தெலுங்கில் ‘"புதிய வார்ப்புகள்'’படத்தை எடுத்துத் தரும் வாய்ப்பு வந்தது.

டைரக்டர் கே.விஸ்வநாத் சாரோட அஸோஸியேட்டா இருந்த வம்சிதான் எங்க டைரக்ட ரோட தெலுங்குப் படத் துக்கு அஸோஸியேட்டா ஒர்க் பண்ணினார். படத் துக்குப் பேரு "கொத்த ஜீவிதலு'.

"பாக்யராஜ் நடித்த வாத்தியார் கேரக்டரில் யாரை நடிக்க வைக்க லாம்?' என பேச்சு வந்தபோதுதான் அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது.

டைரக்டரின் அலுவலகத்திற்கு தெலுங்கு இளைஞன் ஒருவர் வந்தார். கூடவே அவரது நண்பரையும் அழைத்து வந்தார். சான்ஸ் கேட்டு வந்த இளைஞர் டைக்ரடரின் எதிரில் அமர்ந்திருக் கிறார். அவரின் நண்பர் ஹாலில் அமர்ந்திருக் கிறார். டைரக்டரின் பார்வையோ ஹாலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது விழுந்திருக்கிறது.

இதுதான் குரு பார்வை போல.

விளைவு....

"தம்பி நீ கண்டிப்பா என்னோட இன்னொரு படத்தில் இருப்ப. நான் உறுதியா சொல்றேன். இந்தப் படத்துக்கு அங்க உட் கார்ந்திருக்கானே உன் ஃப்ரெண்ட்... அவன் தான் ஹீரோ''’என டைரக்டர் சொல்லிவிட...

தன் அறையில் ஓசியில் தங்கியிருப்பவன் திடீர்னு ஹீரோவாகி, ஒரே நேரத்தில் இருபது, முப்பது படங்களில் ஹீரோவாக நடிக்கிற பிரபல நடிகனாகிவிட்டான் என்றால் ஜீரணிக்க சிரமமாகத்தானே இருக்கும்.

கிழக்கே போகும் ரயில்’ படத்தில் சுதாகர் ஹீரோவானது இப்படித்தான்.

இந்த விஷயங்களை யூனிட் மூலம் தெரிந்துவைத்திருந்த நான்... தெலுங்குப் பட ஹீரோ யார்? என்கிற பேச்சு வந்தபோது சுதாகரின் நண்பன் விஷயத்தை டைரக்ட ரிடம் ஞாபகப்படுத்தி னேன்.

"சார்... இது பாக்யராஜ் செஞ்ச வாத்தியார் வேஷம் தானே. அந்தப் படத்தைப் பார்த்து அப்படியே அவன் செய்திடுவான். அவனுக்கு உங்க படத்தில் வாய்ப்புத் தருவதா நீங்க உறுதி கொடுத்திருக்கீங்க. இது ஒரு நல்ல வாய்ப்புதான்... அவனையே ஹீரோவாக்கிடலாம் சார்''” என்றேன்.

டைரக்டர் உடனே ஓ.கே. சொன்னார்.

அப்படித்தான் ’"கொத்த ஜீவிதலு'’ படத்தில் சுதாகரின் நண்பர் ஹரி பிரசாத்தை ஹீரோவாக அறிமுகம் செய்தார் டைரக்டர்.

"கொத்த ஜீவிதலு'’ படத்தோட புரொடியூஸர் யாருன்னா... ஆந்திராவைச் சேர்ந்த ஒரு சாராய வியாபாரி.

ஷூட்டிங்குக்கான பணத்தை அவர் எப்படி கொடுப்பார்னா.... மூட்டை மூட்டையா கட்டிக் கொண்டு வருவார் பணத்தை. எல்லாமே ஒரு ரூபாய் நோட்டு. குடிமகன்கள் ஒவ்வொரு ரூபாயா குடுத்து சாராயம் வாங்கியிருப்பாங்கள்ள... அந்த நோட்டுக்களைத்தான் அப்படியே மூட்டை கட்டி எடுத்திட்டு வருவார். ரூபாய் நோட்டு ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கிட்டிருக்கும். நாக்குல எச்சி தொட்டு எச்சி தொட்டு, அந்த ரூபாய்களை எண்ணி முடிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். நாக்குல தொட்டுத் தொட்டு, சாராய வாசனையில போதை போதைனு கூட ஆயிடும்.

அந்தப் படத்துக்கு டைரக்டருக்கு சம்பளம் இரண்டு லட்ச ரூபாய். அதை ரொம்ப பெரிய தொகையாக நினைத்தார் டைரக்டர். அந்தப் பணத்தில்தான் ஜெமினி பார்சன்ல ஒரு ஃபிளாட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்தாரு.

ஹீரோவா புதுமுகம் ஹரி பிரசாத்தை போட்டாச்சு. ஹீரோயின் யாரு?னு பேச்சு வந்தது.

"புதிய வார்ப்புகள்'’ ரீ-மேக்தானே. ரதியே நடிச்சா வேலை ஈஸியா முடியும்தான். ஆனால் எங்க டைரக்டர் மறுத்தும், ரதி பொருத்தமா இருப்பார்னு நான் சொன்னதால் ‘"நிறம் மாறாத பூக்கள்'’ படத்தில் ரதியை நடிக்க வைத்தார் பாரதிராஜா. ஆனால் ஷூட்டிங்கில் ரொம்பவே சொதப்பி விட்டார் ரதி. கால்ஷீட் குளறுபடிதான்.

ராதிகாவை "கிழக்கே போகும் ரயில்'’படத்தில் எங்க டைரக்டர் அறிமுகப்படுத்தினார். அடுத்தடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி படத்திலெல்லாம் கமிட் ஆகிவிட்டார் ராதிகா. ‘"நிறம் மாறாத பூக்கள்' படத்திற்கு டைரக்டர் அழைத்ததும், ‘பாரதிராஜா படம் முக்கியம்’ என ஓடி வந்தார். ராதிகாவின் அம்மாவும் கால்ஷீட்டை உடனே அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்தார்.

ஆனால் ரதி....?

அதனால் அந்தத் தெலுங்குப் படத்திற்கு வேறொரு புது கதாநாயகியை நடிக்க வைக்க முடிவு செய்தார் டைரக்டர்.

யார் அந்த கதாநாயகி?

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்