(69) கறியும் வெந்துச்சு... கதையும் வெந்துச்சு
என்னோட அனுபவங்களை நான் எழுதுறேன்னா... அதுல நான் பார்த்து ரசிச்ச மத்த விஷயங்களையும் உள்ளடக்கியதுதானே என்னோட அனுபவம். அப்படித்தான் என்னை பாதிச்ச திரைப்பட வசனங்களையும், பாடல்களையும் குறிப்பிட்டேன். அந்த படைப்புகளோட தாக்கம்தான் என்னை ஒரு படைப்பாளியாக்க உந்து சக்தியாக இருந்தது. அதை நன்றியோட நினைக்கணுமில்லையா.... அதனால கடந்த சில அத்தியாயங்கள்ல வசனத் தையும், பாடல்களையும் பற்றி குறிப்பிட்டேன்.
இப்ப என் கதைக்கு வர்றேன்...
விஜயகாந்த்தை வைத்து நான் இயக்கின "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்'’படத்தோட கதை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும்னு தெரியல.
கலைமணி சார் கதை.
கதைப்படி விஜயகாந்த்தும், ரேகாவும் கணவன்-மனைவி. அவங் களுக்கு ஒரு குழந்தை. ரேகா எப்போதுமே சந்தேகப் பார்வையோட இருப்பார். எதிர்த்த வீட்டுக்கு குடி வந்த சுஹாசினியையும் சந்தேகப்படு வார். ஒரு கட்டத்தில் "நீ என் புருஷனை வச்சிருக்க'’என ரேகா சொல்வார்.
ரேகா கிளப்பிவிட்ட இந்த வதந்தியால, சுஹாசினிக்கு நடக்க விருந்த திருமணம் நின்னு போயிடும். அதனால் சுஹாசினி ஒரு முக்கிய முடிவெடுப்பார்.
யாரால நம்ம வாழ்க்கை கெட்டுச்சோ... அவளோட வீட்டுல நாம குடித்தனம் பண்ணனும் என்பதுதான் அந்த முடிவு.
ரேகா தூங்கி கண் விழிக்கும்போது, வீடே சாம்பிராணி புகையால் மணக்கும். சுப்ரபாதம் பாடுவது காதில் கேட்கும். விஜகாந்த்தும் கண்டும் காணாமலும் இருப்பார். பிரச்சினை பெரிதாக வெடிக்கும்போது... “"நீ என்ன சொன்ன... ‘என் புருஷன வச்சுருக்கான்னு என்னைச் சொன்னேல்ல. அப்படின்னா எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்குல்ல...' என சுஹாசினி சொல்லுவார்.
வந்தவ வீட்டுல அதிகாரம் பண்ணுவா. வீட்டுக்
(69) கறியும் வெந்துச்சு... கதையும் வெந்துச்சு
என்னோட அனுபவங்களை நான் எழுதுறேன்னா... அதுல நான் பார்த்து ரசிச்ச மத்த விஷயங்களையும் உள்ளடக்கியதுதானே என்னோட அனுபவம். அப்படித்தான் என்னை பாதிச்ச திரைப்பட வசனங்களையும், பாடல்களையும் குறிப்பிட்டேன். அந்த படைப்புகளோட தாக்கம்தான் என்னை ஒரு படைப்பாளியாக்க உந்து சக்தியாக இருந்தது. அதை நன்றியோட நினைக்கணுமில்லையா.... அதனால கடந்த சில அத்தியாயங்கள்ல வசனத் தையும், பாடல்களையும் பற்றி குறிப்பிட்டேன்.
இப்ப என் கதைக்கு வர்றேன்...
விஜயகாந்த்தை வைத்து நான் இயக்கின "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்'’படத்தோட கதை எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும்னு தெரியல.
கலைமணி சார் கதை.
கதைப்படி விஜயகாந்த்தும், ரேகாவும் கணவன்-மனைவி. அவங் களுக்கு ஒரு குழந்தை. ரேகா எப்போதுமே சந்தேகப் பார்வையோட இருப்பார். எதிர்த்த வீட்டுக்கு குடி வந்த சுஹாசினியையும் சந்தேகப்படு வார். ஒரு கட்டத்தில் "நீ என் புருஷனை வச்சிருக்க'’என ரேகா சொல்வார்.
ரேகா கிளப்பிவிட்ட இந்த வதந்தியால, சுஹாசினிக்கு நடக்க விருந்த திருமணம் நின்னு போயிடும். அதனால் சுஹாசினி ஒரு முக்கிய முடிவெடுப்பார்.
யாரால நம்ம வாழ்க்கை கெட்டுச்சோ... அவளோட வீட்டுல நாம குடித்தனம் பண்ணனும் என்பதுதான் அந்த முடிவு.
ரேகா தூங்கி கண் விழிக்கும்போது, வீடே சாம்பிராணி புகையால் மணக்கும். சுப்ரபாதம் பாடுவது காதில் கேட்கும். விஜகாந்த்தும் கண்டும் காணாமலும் இருப்பார். பிரச்சினை பெரிதாக வெடிக்கும்போது... “"நீ என்ன சொன்ன... ‘என் புருஷன வச்சுருக்கான்னு என்னைச் சொன்னேல்ல. அப்படின்னா எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்குல்ல...' என சுஹாசினி சொல்லுவார்.
வந்தவ வீட்டுல அதிகாரம் பண்ணுவா. வீட்டுக்கு உரிமை உள்ளவ வீட்டை விட்டு வெளியேறுவா... -இதுதான் இண்டர்வெல் பிளாக்.
பின்னணி இசை சேர்ப்பு நடக்குது.
"ஏப்பா... விஜயகாந்த்துக்கும், சுஹாசினிக்கும் இடையே என்ன ரிலேஷன்?''’என இளையராஜா என்னிடம் கேட்டார்.
"இருங்கண்ணே... கதாசிரியரவே கூட்டிட்டு வர்றேன்''’எனச் சொல்-விட்டுப் போய், கலைமணி யை அழைத்து வந்தேன்.
அதே கேள்வியை கலைமணியிடம் கேட்டார்.
"ரெண்டு பேருக்கும் இடையே இருப்பது மரியாதை கலந்த அன்பு''’எனச் சொன்னார்.
இசைக்கலைஞர்கள் பக்கம் திரும்பிய இளையராஜா, "எல்லாம் மரியாதை கலந்த அன்பா வாசிங்க''’எனச் சொல்ல... எல்லோரும் "கொல் 'லெனச் சிரித்துவிட்டார்கள்.
எனக்கோ... ரொம்ப சங்கடமாப் போச்சு.
படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு.
என்னோட படங்கள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச படமா அமைஞ்சது. எனக்கு மட்டுமல்ல, விஜயகாந்த் சாருக்கும் பிடிச்ச படம்னு இதைத்தான் சொல்வார். விஜயகாந்த்துக்கு மட்டுமில்ல, அவங்க வீட்டாருக்கும் பிடிச்ச படமா அமைஞ்சது. ஆர்.சுந்தர்ராஜன் படங்கள் லேடிஸ் ஆடியன்ஸை விஜயகாந்த்துக்கு கொண்டுசேர்த்த மாதிரி, இந்தப் படமும் பெண்கள் ஆதரவை அள்ளியதுடன், விஜயகாந்த் படங்களுக்கு பெண் ரசிகர்களையும், குழந்தை ரசிகர்களையும் குவித்தது என் படம்தான். கலைப்பு- தாணுவும், ஆபாவாணனும் எப்படி பிரமாண்டத்தைக் காட்டி, விஜயகாந்த்தை உயர்த்தி னாங்களோ... அதுபோல நான் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆடியன்ஸை விஜயகாந்த் படத்திற்கு கொண்டுவந்ததில் பெருமைப்படுறேன்.
கதாசிரியர் கலைமணி -இசையமைப்பாளர் இளையராஜா -இயக்குநர் மனோபாலா...
-இந்த மூன்று பெயர்களும் விளம்பரத்தில் சேர்ந்து வந்தாலே, அந்தப் படம் பூஜை போட்ட நாளிலேயே எல்லா ஏரியாவும் விற்பனையாகிவிடும் நிலமை ஏற்பட்டது. அடுத்த படத்திற்கு தயாராக வேண்டும். அந்தச் சமயம் ஒருநாள்... "டைரக்டரே வண்டியில ஏறுங்க''’என தன்னுடைய காரில் சில உதவியாளர்களுடன் வந்த கலைமணி, என்னையும் காரில் ஏறச் சொன்னார்.
நான் மேலே ஒரு சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தேன் ரிலாக்ஸ்டாக. "உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல காபி சாப்பிட கூப்பிடுறார்'’என எண்ணி ஏறி உட்கார்ந்தேன்.
கார் சிறிது தூரம் சென்றதும் டிரைவரிடம்... "வண்டிய மைசூருக்கு விடு''’என்றார் கலைமணி.
எனக்கு முத-ல் மைசூரு போண்டா சாப் பிட’ என்பது போலத்தான் காதில் விழுந்தது. இருந் தாலும் கேட்டேன்... “"சார் இப்ப டிரைவர்கிட்ட என்ன சொன்னீங்க?''”
"ஒண்ணுல்ல டைரக்டரே நாம... இப்ப மைசூரு நோக்கி போய்ட்டிருக்கோம்''’என்றார்.
"சார்... என்னா சார்... இது? நான் லுங்கி யோட இருக்கேன். டிரெஸ் எதுவும் எடுத்துக்கலயே?''
"வாங்க டைரக்டரே... போற வழியில தேவை யான எல்லா டிரெஸ்ஸையும் வாங்கிக்கலாம்''” என்றார். சித்தூர் அருகே ஒரு கடையில் பேண்ட், சர்ட். ஜட்டி, பனியன், துண்டு... கர்சீப் வரைக்கும் வாங்கினார்.
"சார்... இதையெல்லாம் எப்படி சார் கொண்டு போறது?''”
"துணிமணி விக்கிற ஊர்ல, சூட்கேஸ் விற்காதா? வாங்க டைரக்டரே...''’என சூட்கேஸ் ஒன்றையும் வாங்கினார்.
டிக்கியைத் திறந்து அந்த சூட்கேஸை வைக்கும்போது பார்த்தேன். சின்ன கடாய், மேலும் சில சமையல் பாத்திரங்கள், ஸ்டவ், எண்ணெய் பாட்டில், சில டப்பாக்களில் மிளகு, சீரகம், மிளகாய், உப்பு போன்றவை இருந்தது.
"இதெல்லாம் எதுக்கு சார்?''”
"வாங்க சொல்றேன்...''’என்றார்.
கார் ஒரு பஜாரை கடந்து போனது. ஒரு கறிக்கடையைப் பார்த்துவிட்டார். காரை நிறுத்தச் சொல்-, ஏழெட்டுக் கிலோ கோழிக்கறி வாங்கினார்.
"என்ன சார் இம்புட்டு கறிய வறுக்க, பெரிய சட்டி வேணுமே...?''”
"வாங்கிருவோம்...''’என ஒரு பெரிய இரும்புக் கடாயுடன் வந்தார்.
கார், ஊரைத் தாண்டி போய்க்கொண்டிருந் தது. ஆள் அரவமற்ற, ஒரு பெரிய ஆலமர நிழலைக் கண்டதும் காரை அங்கே நிறுத்தச் சொன்னார்.
கல்லும், கட்டையும் வைத்து அடுப்பு மூட்டி, கறி வேகவைக்கத் தயாரானார்.
"டைரக்டரே... இந்த பேப்பர்ல மிளகு, கொஞ்சம் சீரகம் கொஞ்சம் எடுத்து, இந்த கட்டையை வச்சு நுணுக்குங்க''’என்றார்.
ஒரு பக்கம் ஒரு சட்டியில் சோறு வேகிறது. இன்னொரு பக்கம் கறி கம...கம...னு வேகுது.
எனக்கு பசி ஆரம்பிச்சிடுச்சு.
"சார், நான் சைவம் சாப்பிடுறவனாச்சே...''”
"உங்களுக்காகத் தான் காக்கிலோ கத்திரிக்கா வாங்கியிருக்கேன், கத்திரிக்கோ கொத்சோ, கூட்டோ வச்சுத் தர்றேன்... சுடு சோத்துல போட்டு, பெரட்டி அடிங்க.''“
"தயிர் சாதம்...''”
"அய்யோ... எப்பப்பாரு தயிர்...சாதம், தயிர்....சாதம்னு உங்களைக் கட்டி மாரடிக்க வேண்டியதா இருக்கு''’ என்றார்.
(எனக்கு தயிர் சாதம்னா ரொம்ப இஷ்டம். எனக்கு அது மட்டுமே போதுமானது. அதனால் என்னோட தயிர்சாத மோகம் சினிமா இண்டஸ்ட்ரியில் மிகவும் பிரபலம். அதைத் தான் டைரக்டர் சுராஜ் ஒரு படத்தில் விவேக்கிற்கு காமெடியா வச்சார்.)
வந்த இடத்துல தயிர் சாதத்துக்கு பேராசைப்படக் கூடாது என முடிவு செய்து, கத்திரிக்காய் தொக்கு போட்டு சாப்பிட முடிவு செய்தேன்.
"ஆமா... இந்த இடத்துக்கு எதுக்கு வந்தோம்?''
எனக்குள் எழுந்த கேள்வியை கலைமணி சாரிடம் கேட்டேன். ’"சார் எதுக்கு சார், இங்க வந்திருக்கோம். ஏதோ... மைசூருனு சொன்னீங்க... இப்ப சித்தூர்ல அரச மரத்தடியில சமைச்சுக் கிட்டிருக்கோமே?''”
"கதை பேசுறதுக்குத்தான் டைரக்டர். அடுத்த படத்துக்கு கதை ரெடிபண்ண வேணாமா?''”
"கதையோட லைன் பிடிச்சிட்டீங்களா சார்?''”
"பிடிச்சிடுவோம்... "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்'’கதை விவாதம் செய்துக்கிட்டிருந்தப் போ, நீங்க ஒரு கேள்வி கேட்டீங்க... ஞாபகம் இருக்கா டைரக்டரே?''”
"இருக்கு சார்...'' ”
தன்னால் சந்தேகத்துக்கு ஆளான பெண் தன்னோட வீட்ல குடும்பம் நடத்த வந்ததால்... உரிமையுள்ள அவள் வீட்டை விட்டு வெளியேறுனா இல்லையா?”
"ஆமா சார்... அதுலயிருந்துதான் நம்ம அடுத்த படத்துக் கதை தொடங்குது...''”
"எப்படி சார்?''”
"புருஷன் மேல உரிமையுள்ள பொண்டாட்டி என்ன பண்றான்னா... அவளே போய், தன் புருஷ னோட வைப்பாட்டிய வீட்டுக்கு கூட்டி வந்துடுறா...''
"என்னாது... பொண்டாட்டியே போய் புருஷனோட வைப்பாட்டிய கூட்டிட்டு வர்றாளா?''”
"ஆமாங்க டைரக்டரே''”
"அது எப்படி சார்?''”
"ஏங்க... கோழிய எங்கயோ வாங்கி, ஹோட் டல்ல சமைக்கிறாங்க... வீட்ல சமைக்கிறாக்க... நாம இப்ப ஆலமரத்துல சமைக் கிறோம். மஞ்ச தூளு, தனியா தூளி, உப்புத் தூளு, சீரகத் தூளுனு எல்லா ஒரே மாதிரி மசாலாதான். ஆனா ஒவ் வொண்ணும் சாப்பிடுற மனநிலைக்கு தகுந்த மாதிரி ருசி வேறுபாடா இருக்கிற தில்லையா? அதுபோலத் தான். ’என் புருஷன் எனக்கு மட் டும்தான்’கதையை அப்படியே மாத்திப் போடுவோம். அதுல ஹீரோ ஒழுக்கமான வன். இதுல ஹீரோ ஒரு பொம்பள பொறுக்கி...''”
"சார்... விஜயகாந்த் இப்படி பொம்பள பொறுக்கியா நடிக்கமாட்டாரே...?''”
"இந்தக் கதைக்கு சத்யராஜ் சரியா இருப்பாரு. கதையைச் சொன்னா லட்டு மாதிரி விரும்புவார்''’என்றார்.
"அப்படீங்கிறீங்களா?''”
"ஆமாங்க டைரக்டரே...''”
-இப்படித்தான் உருவானது "மல்லு வேட்டி மைனர்'’படம்.
இந்த படத்தின்போது நடந்த சம்பவங்களை நினைச்சா வயிறு வ-ச்சுப் போகும் சிரிச்சு, சிரிச்சு...
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்