manobala

(78) அழுகையின் சூட்சுமம்!

"பாரம்பரியம்'’ படத்தை டைரக்ட் பண்ணியதன் மூலம் சிவாஜியப்பாவோட நன்கு பழகுகிற வாய்ப்பு கிடைத்த மாதிரி, சரோஜாதேவியம்மா கூடவும் நன்கு பழகுற வாய்ப்பு கிடைச்சது.

Advertisment

இப்பவும் நான் பெங்களூரு போய்விட்டு வந்த தகவல் தெரிஞ்சா, "மனோ... நீ ஏன் என்னை பார்க்க வரலை?''னு கேட்பார். அதனால் பெங்களூரு போனாலே அம்மாவைப் பார்க்காமல் வரமாட்டேன்.

அம்மாவோட வீட்டுக்குப் போய்ட்டா, சாப்பிடாம அனுப்பமாட்டார். "மனோ... உனக்காக... மைசூரு மசால் தோசை பண்ணீருக்கேன். ஃபில்டர் காபி கலந்திருக் கேன். சாப்பிட்டுத்தான் போகணும்''’ என்பார். இப்படி பலமுறை சரோஜா தேவியம்மாவோட சமையலை ருசிச்சு சாப்பிட்டிருக்கேன்.

அந்தக்கால சினிமா முதல் இந்தக் கால சினிமா வரைக்கும் அப்பப்பா... பல அபூர்வமான விஷயங்களையெல்லாம் பேசுவார். நானும் எனக்குத் தெரிந்த விஷயங்களை ஷேர் பண்ணிக்குவேன்.

Advertisment

"தமிழக மக்கள் எப்படி இருக்காங்க?'

"மெட்ராஸ் எப்படி இருக்கு?'

இந்த ரெண்டு கேள்வியையும் கேட்காம இருக்கமாட்டார்.

"ஏம்ம்மா... தமிழ் மக்கள் மேல இவ்வளவு பிரியமா இருக்கிற நீங்க, பிறகு ஏம்மா மெட்ராஸை விட்டுட்டு, பெங்களூருல செட்டில் ஆனீங்க?''’என நான் ஒருசமயம் கேட்டேன்.

"என்ன இருந்தாலும் நான் கன்னடத்துக் காரிதானே மனோ? "கன்னடத்துப் பைங்கிளி'னு தானே எனக்கு பேர் வச்சாங்க. அதுக்காக என் சொந்த ஊரையும் மறக்கக்கூடாதில்லையா? அதான் இங்க செட்டில் ஆனேன். ஆனாலும், தமிழையும், எம்.ஜி. ஆரையும் என்னால மறக்கவே முடியாது. எம்.ஜி.ஆர் மாதிரி மக்கள் மேல பாசம் உள்ள ஒரு தலைவர் இனி கிடைப் பாங்களா?''” -எனச் சொல்லிவிட்டு எமோஷனலானார்.

தொடர்ந்து சொன்னார்.... "சிவாஜி ஃபேமிலியையும் என்னால மறக்க முடியாது மனோ. நான் ஒரு விஷயம் சொன்னா ஆச்சரியமா இருக்கும்... சிவாஜி குடும்பத்தோட சொந்தப் படம் ‘"புதிய பறவை'. நான் பிஸியா இருந்ததால் இந்தப் படத்துக்காக ஒன்பது நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்தேன். ஆனா அதை வச்சு, டே அண்ட் நைட் ஷூட்டிங் பண்ணி படத்தை பிரமாதமா எடுத்தாங்க. என்னோட கேரக்டரையும் சிறப்பா எடுத்தாங்க. அப்புறம் ரெண்டு தடவை, மூணு நாள், ரெண்டு நாள் கால்ஷீட் கொடுத்தேன். அதிகபட்சம் 15 நாள் கால்ஷீட்தான். ஆனா.. படத்தை ரொம்ப பிரமிப்பா எடுத்திருந்தாங்க. இதுக்கு காரணம் சிவாஜியோட கடும் உழைப்பு''’-எனச் சொன்னார்.

"நீங்க நடிச்சுக்கிட்டிருந்த காலத்துல உங்களை, நாங்கள்லாம் கனவுக் கன்னியாவும் ரசிச்சிருக்கோம், நல்ல நடிப்புக்காகவும் ரசிச்சிருக்கோம். உங்களைப் போல, கிளாமரும் நடிப்பும் ஒருங்கிணைந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்க்க முடியாதும்மா''’என நான் அவரிடம் சொல்வதுண்டு.

சரோஜாதேவியின் மாபெரும் வெற்றிக்கு, சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆர் சொல்லிக் கொடுத்த ஃபார்முலா முக்கிய காரணம்.

"அழுவதா இருந்தாலும் அழகா அழு. மூஞ்சியை கோணலா வச்சுக்கிட்டு அழாத'’என்கிற சூட்சுமத்தை எம்.ஜி.ஆர்.தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

"அழுவதா இருந்தாலும் அழகா அழு'’என்று சரோஜாதேவிக்கு, எம்.ஜி.ஆர் சொன்னது போல, ராதிகாவுக்கு சொல்லிக் கொடுத்தவர் ராதிகாவின் தந்தை எம்.ஆர்.ராதா.

ராதிகாவோட கண்ணீர்க் காட்சிகள் கூட, அருவருப்பில்லாம ஆடியன்ஸ் மனசுல பதிஞ்சிடும். அதுக்கு உதாரணமா "கிழக்குச் சீமையிலே'’படத்தைச் சொல்லலாம்.

பொதுவா சிறப்பாக, கண்ணீரையும் ரசிக்கும்படி நடிக்கிறதுல பேர் பெற்ற நடிகைகள் சில உத்திகளைக் கையாளுவாங்க. கிளிசரின் போட்டு நடிப்பாங்க. அப்போ கிளிசரினால் கண்கள்ல லேசா எரிச்சல் ஏற்படும். அப்படியே நடிச்சுக்கிட்டே இருப்பாங்க. அந்த எரிச்சல் உச்சகட்டமாகும்போது, ஸீன்ல இடம் பெருகிற அம்மா கேரக்டரையோ, ஹீரோ கேரக்டரையோ கட்டிப்பிடிச்சு, கண்ணை மூடிக்குவாங்க.

"ஆஹா... என்ன பிரமாதமான நடிப்பு'’ என ஆடியன்ஸ் நினைப்பாங்க. ஆனா அது கிளிசரினோட எரிச்சலை சமாளிக்க பண்ற உத்திங்கிறது ஆடியன்ஸுக்கு தெரியாது.

அப்படியே தத்ரூபம் போல நடித்துக் காட்டுவதுதானே நல்ல நடிப்பு.

அப்படி நடித்த நடிகைகளைப் பாராட்டணும்னா... ‘"கொன்னு கொலையறுத்துருக்காங்கன்னுதான் பாராட்டணும்.

நான் தயாரிப்பாளரான அனுபவம் இருக்கே......

(பறவை விரிக்கும் சிறகை)

இதுதான் சார் வாழ்க்க!

சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீ. தயாரிப்பில் ரஜினியை வைத்து நான் இயக்கிய ‘"ஊர்க்காவலன்'’ படம் சூப்பர் ஹிட்டடித்தது. படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் கலந்து கொண்டு எங்களுக்கு கேடயம் தர சம்மதித்திருந்தார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

dd

அந்த இனிய நாளை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டி ருந்தபோது, விழா நடப்பதற்கு சில தினங்கள் முன்பாக மக்கள் திலகம் இயற்கை எய்தினார்.

ராஜாஜி ஹாலில் தலை வரின் உடலைப் பார்த்துவிட்டு, ஒருவிதமான மனநிலையில் அழுதேன். ஒன்று -எம்.ஜி.ஆர். இறந்துவிட்டாரே என்கிற துயரம். இன்னொன்று -ஏற்கனவே ‘"அலைகள் ஓய்வதில்லை'’ படத் திற்காக எம்.ஜி.ஆர் கையால் விருது வாங்கியிருந்தாலும், "ஒரு டைரக்டராக தலைவர் கையால் விருது வாங்கப் போகிறோம்' என்கிற மகிழ்ச்சியில் இருந்தபோது, தலைவர் இறந்து விட்டாரே... அதனால் வெளியே வந்தபிறகும் குமுறி அழுதேன்.

அதன்பின் எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகியம்மாள் முதல்வராகி, அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியே வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ‘"ஊர்க்காவலன்'’ பட விழாதான்.

ஜானகியம்மாள் தலைமை யேற்று ரஜினி, ராதிகா, நான் உள்ளிட்ட படக் குழுவிற்கு கேடயங்கள் வழங்கினார்.

விருது விழாவின்போது என்னிடம் ரஜினி சொன்ன விஷயம் இன்னும் மனதில் பதிந்திருக்கிறது.

"மனோ, ஒரு சின்ன விஷயம். நாலைந்து நாள்ல எப்படி மாறீருச்சு பார்த்தீங்களா? எம்.ஜி.ஆர். சார் கையால வாங்க வேண்டிய ஷீல்டை அம்மா கையால வாங்கு றோம். இதுதான் சார் வாழ்க்க. ஏதோ ஒரு முக்கியத்துவம் மிஸ்ஸான மாதிரி இருக்கில்ல மனோ. ஆனாலும் அவர் கையால வாங்குறது ஒரு அழகுன்னா... அம்மா கையால ஷீல்டு வாங்குறது ஒருவித அழகு மனோ''’என்றார்.

"ஆமா சார்... எனக்கு வருத்தம்தான். ஆனா யாரோ மூணாவது மனுஷர் கையால வாங்குறதவிட, அம்மா கையால வாங்குறதை தலைவர் கையால வாங்குறதாதான் நான் நினைச்சுக் கிறேன்''’என்றேன்.