dd

(77) நிஜம்... நிழலானது!

சிவாஜியப்பா குடும்பத்தின் அன்னை இல்லம் வீட்டுக்கு முன்வாசல் வழியாகவும் போவேன், பின்வாசல் வழியாவும் போவேன். அந்த உரிமையை சிவாஜியப்பா குடும்பம் எனக்குக் கொடுத்திருந்தாங்க.

"மூடு மந்திரம்'’பட ஷூட்டிங் சம்பந்தமாக பிரபு சாரை பார்க் கிறதுக்காக போனேன்.

Advertisment

பின் வாசலில் சேர் போட்டு உட்கார்ந்திருந்த சிவாஜியப்பா கேட்டார்...

"என்னடா... பிரபு வைத்தான் பார்க்க வருவீங் களோ? என்னையெல்லம் பார்க்க வரமாட்டீங் களா?''”

"இல்லப்பா... பின் வாசல் பிரபுவுக்கு, முன்வாசல் உங்களுக்குன்னு சொன்னாங்கப்பா... அதான்''”

Advertisment

"எவன்டா சொன் னது? என் குடும்பத்த இப்படி பிரிச்சி வச்சிருக்கானுகளா இந்தப் பயலுக?''” எனக் கேட்டார்.

சிவாஜியப்பாவையோ, பிரபு சாரையோ வச்சு படம் பண்ற யூனிட் ஆட்களுக்கு எப்பவுமே சிவாஜியப்பா வீட்ல நல்ல மரியாதையும், உபசரிப்பும் இருக்கும்.

வயிறார சாப் பிட வச்சும் அழகு பார்ப்பாங்க. பிரபு சார், ராம்குமார் சார் ரெண்டுபேருமே அருமையா ரிஸீவ் பண்ணுவாங்க.

பிரபு சாரை பற்றி முக்கியமா ஒரு விஷயத்தைச் சொல் லியே ஆகணும்.

பிரபு சார் முகத் தைப் பார்த்தாலே அந்த ஃப்ரெஷ்னெஸ் நமக்கும் வந்துடும்.

பிரபுவை நான் பார்க்கிற போதெல் லாம், முதல்ல அவர் கேட்கிற கேள்வி... “"மனோ, சாப்பிட வர்றியா? நல்லா சைவம், அசைவம் ரெண்டும் இருக்கு'” என்பார்.

மெகா சைஸ் கேரியரில் வீட்டிலிருந்து சாப்பாடு வரும். அதை சக நட்சத்திரங்களுடன் பகிர்ந்து உண்பார் பிரபு.

இது எனக்கு வியப்பா இருக்கும்.

"பிரபு சார்... எப்படி சார்? வீட்லருந்து ஸ்பெஷலா வர்ற சாப்பாட்டை மத்தவங்களும் சாப்பிடட்டும்னு நினைக்கிற குணம் உங்களுக்கு எப்படி வந்தது?''’என ஒரு முறை கேட்டேன்.

"பெரியப்பாவைப் பார்த்துத்தான்''”

"பெரியப்பாவா?''”

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்! ‘தன் னோட வீட்டுக்கு வர்ற யாரும் சாப்பிடாமப் போகக் கூடாது, வயிறு காஞ்சு போகக்கூடாதுன்னு சொல்லுவார். அவர் சொல்லச் சொல்ல... அந்தக் குணம் எனக்குள்ள பத்திக்கிச்சு. அதனாலதான், என்ன செலவானாலும், எவ்வளவு பேர் எங்க வீட்டுக்கு வந்தாலும், அவங்களை உப சரிக்கிறதை எங்க ளோட குறிக் கோளா வச்சிருக் கோம்''” என்று சொன்னார் பிரபு.

நான் சுத்த சைவம். அதிக பட்சமாக ஷூட் டிங் ஸ்பாட்டில் தயிர் சாதம்தான்.

இதைப் பார்த்த பிரபு, "மனோ சைவம்... அதனால சைவத் துல நிறைய வெரைட்டி செஞ்சு அனுப்புங்க''”எனச் சொல்லி, தன் வீட்டிலிருந்து சைவ உணவையும் வரவழைத்து, "இந்த பொரியல் நல்லா இருக்கும், இந்த கூட்டு இன்னும் கொஞ்சம் போட்டுக்கங்க''ன்னு சொல்லிச், சொல்லி பறிமாறச் செய்வார்.

டிசம்பர் 31 பிரபு வோட பிறந்த நாள். 12 மணிக்கு மேல புது வருஷமும் பொறக்கும். அதனால் டிசம்பர் 31 சும்மா கோலாகலமா இருக்கும். நான், ராதிகா, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா இப்படி... நிறைய நட்சத்திரங்களோட, பிரபு சாரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்.

சிவாஜியப்பா வீட்டு டைனிங் டேபிளில் ஒரே சமயத்துல 25 பேர் வரைக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம். அவ்வளவு விஸ்தாரமானது.

dd

வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் சிவாஜியப்பா நிற்கிற கம்பீரமான புகைப்படம், சுற்றிலும் ரெண்டு யானைத் தந்தங்கள், வேட்டைத் துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட மான்கொம்பு, இப்படி கம்பீரமா இருக்கும்.

"தேவர் மகன்'’படத்துல சிவாஜியப்பா வருவாரே... அச்சு அசலா நிஜத்துலயும் அப்படித்தான். இந்த நிஜம்தான், "தேவர் மகன்'ல நிழலா படம் பிடிச்சுக் காட்டப்பட்டது.

"தேவர் மகன்'’ படம் முதல்ல வேறொரு பெயர்ல எடுக்கப்பட்டு, நின்னு போனது. அப்புறம் தான் ‘"தேவர் மகன்'னு டைட்டில் வச்சு, கதைக்காக மிகக்கடுமையா உழைச்சார் கமல்ஹாசன். ‘சிவாஜியப்பாதான் இந்தக் கதையை சுமக்க முடியும்னு நம்பினார் கமல்.

"தேவர் மகன்'’ படத்துக்கு முன்னாடி எங்க குருநாதர் பாரதிராஜாவோட "முதல் மரியாதை'’ படத்துல மேக்-அப் இல்லாம, சிவாஜியப்பா வீட்ல இருக்க பாணியிலேயே அந்தப் படத்துலயும் நடிச்சார்.

சிவாஜியப்பாவோட மறைவுச் செய்தி எனக்குத்தான் முதல்ல வந்தது. நானும், வடிவேலும் தான் சிவாஜியப்பா தலைமாட்டுலயே நின்னோம்.

முதல்ல ஒரு தடவை அட்டாக் வந்து, அப்பல்லோவுல சிவாஜியப்பாவ அட்மிட் பண்ணியிருக்க செய்தி கிடைச்சதும், நானும், ராதிகாவும் ஷூட்டிங் ஸ்பாட்லருந்து ஓடினோம்.

"அப்பா... கூடாது... ம்ஹூம்... எந்திரிச்சு வந்திருக்கப்பா''னு ராதிகா கலங்கிப் போச்சு.

அதுக்குப் பின்னாடி உடல்நலம் சரியாகி, நிறைய படங்கள்ல நடிச்சார். ஆனா எதிர்பாராத தருணத்துல, அவர் இறந்தது பெரிய இழப்பா இருந்தது.

சிவாஜியப்பாவை வச்சு ‘"பாரம்பரியம்'’படத்தை நான் இயக்கினது எனக்கு மிகவும் பெருமை.

இன்னொரு பெருமையும் எனக்குக் கிடைச்சது. அது சோகமானதா இருந்தாலும் அது ஒரு பாக்கியம்தான். அதிலும் கடவுள் கொடுத்த பாக்கியம்.

பெசன்ட் நகர் மயானத்துல சிவாஜியப்பா உடலைச் சுமந்த பாக்கியம்தான் அது.

அழுவதா இருந்தாலும் அழகா அழணும்!

(பறவை விரிக்கும் சிறகை)

________________

குன்னூர் கோமேதகம்!

"கடலோரக் கவிதைகள்'’ ரேகா என்னோட ‘"என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்'’ படத்திலும், ‘"மூடு மந்திரம்'’ படத்திலும் நடிச்சாங்க.

"கடலோரக் கவிதைகள்'’ ஜெனிஃபர் டீச்சர் வேஷத்துக்கு புதுமுகத் தேர்வுக்காக வந்த ரேகாவை முதன்முதலில் போட்டோ எடுத்தது நான்தான்.

"கடலோரக் கவிதை'க்குப் பின் பெரிய ஸ்டாராக உயர்ந்துவிட்டார் ரேகா. ஆனாலும் நான் கால்ஷீட் கேட்டால், சென்ட்டிமெண்ட்டாக எனக்கு தேதிகள் ஒதுக்கிக் கொடுத்துவிடுவார். ‘"நோ'’ என்றே சொல்ல மாட்டார்.

"மூடு மந்திரம்'’ படப்பிடிப்பிற்காக குன்னூர் சென்றுவிட்டோம். ஆனால் படப்பிடிப்பு நடத்த ஏகக் கெடுபிடி. ‘"அங்க பெர்மிஷன் வாங்கணும், இவங்ககிட்ட பெர்மிஷன் வாங்கணும்'னு கண்டிஷன்ஸ். ஆனால் சொடக்குப் போடுற நேரத்துல எல்லா அனுமதியையும் வாங்கிக் கொடுத்தார் ரேகா.

ரேகா குன்னூர் பெண் என்பதால் ‘"குன்னூர் கோமேதகம்'’என்றுதான் நான் அழைப்பேன்.