(47) டைரக்டரான நான் எதிர்பாராத... லைஃப் ஸீன்!
மதுரையில் திருமணம் முடிந்து, காரில் நானும், என் மனைவியும் ஏறி அமர்ந்தோம்.
-"இப்பவாவது அவளிடம் தனிமைல பேச வாய்ப்பு கிடைச்சதே'’என என் மனசு சந்தோஷப்பட்டது. கார் கிளம்பப் போகையில் எங்கள் இருவருக்கும் நடுவில் என் பெரிய அக்கா வந்து உட்கார்ந்துகொண்டாள்.
"ம்... ஹூக்கும்... இனி எங்கிட்டுப் பேசுறது?''’
என் மனைவியுடன் ஒவ்வொரு முறையும் பேச முடியவில்லை.
கார் மதுரையிலிருந்து கிளம்பி... திருச்சி வெக்காளி அம்மன் கோவில் போனோம்.
அங்கே நாங்கள் மாலை மாற்றிக்கொண்டு, "தாயே... வெக்காளியம்மா... எனக்கு சினிமாவுல ஒரு நல்ல வழிய காட்டின. அதேபோல கல்யாணம் நல்லபடியா நடந்திருச்சு. என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அவரையும் காப்பாத்திக் கொடுத்திரு தாயே''’என வேண்டிக் கொண்டேன்.
மாமனாரின் ஊரான ராஜ மன்னார்குடியில் திருமண வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. விழாவில் கலந்துகொள்ள வந்த என் மாமனாரின் உறவினர்கள், நாங்கள் வரத் தாமதமானதால் கிளம்பிப் போய்விட்டார்கள். அதில் மாமனார் -மாமியாருக்கு வருத்தம்தான். ‘திருமணமாகி, முதன்முதலில் சொ
(47) டைரக்டரான நான் எதிர்பாராத... லைஃப் ஸீன்!
மதுரையில் திருமணம் முடிந்து, காரில் நானும், என் மனைவியும் ஏறி அமர்ந்தோம்.
-"இப்பவாவது அவளிடம் தனிமைல பேச வாய்ப்பு கிடைச்சதே'’என என் மனசு சந்தோஷப்பட்டது. கார் கிளம்பப் போகையில் எங்கள் இருவருக்கும் நடுவில் என் பெரிய அக்கா வந்து உட்கார்ந்துகொண்டாள்.
"ம்... ஹூக்கும்... இனி எங்கிட்டுப் பேசுறது?''’
என் மனைவியுடன் ஒவ்வொரு முறையும் பேச முடியவில்லை.
கார் மதுரையிலிருந்து கிளம்பி... திருச்சி வெக்காளி அம்மன் கோவில் போனோம்.
அங்கே நாங்கள் மாலை மாற்றிக்கொண்டு, "தாயே... வெக்காளியம்மா... எனக்கு சினிமாவுல ஒரு நல்ல வழிய காட்டின. அதேபோல கல்யாணம் நல்லபடியா நடந்திருச்சு. என் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அவரையும் காப்பாத்திக் கொடுத்திரு தாயே''’என வேண்டிக் கொண்டேன்.
மாமனாரின் ஊரான ராஜ மன்னார்குடியில் திருமண வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. விழாவில் கலந்துகொள்ள வந்த என் மாமனாரின் உறவினர்கள், நாங்கள் வரத் தாமதமானதால் கிளம்பிப் போய்விட்டார்கள். அதில் மாமனார் -மாமியாருக்கு வருத்தம்தான். ‘திருமணமாகி, முதன்முதலில் சொந்த வீட்டுக்கு மாப்பிள்ளை யுடன் வரும் மகள், முதன்முதலில் வரும் மருமகன் இவ்வளவு தாமதமாக வந்தது வருத்தம்தான். என்றாலும் இருவருக்கும் என் மீது பாசம் அதிகம். என் மச்சான்கள் மணியும், கண்ணனும் என் மீது வைத்திருந்த பாசத்தை குறை சொல்ல முடியாது. என் மனைவி உஷா வோட தங்கச்சி ஜிக்கி. அவங்களும் தங்கமான பெண். இப்படி ஒரு அழகான, அன்பான குடும்பத்துல மருமகனா ஆனது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது.
புதுமணத் தம்பதிகளான எங்களுக்கு பால்சாதம் கொடுத்தார்கள். மறுவீட்டுப் பட்சணங்கள் உள்ளிட்டவற்றை, முடிந்தளவு காரின் டிக்கியில் வைத்து அடைத்தார்கள்.
ராஜமன்னார்குடியிலிருந்து இரவு பத்து மணிவாக்கில் எங்களுடைய சொந்த ஊரான நன்னிலம் பக்கம் இருக்கிற மருங்கூருக்கு கிளம்பினோம்.
எங்க ஊரிலும் எங்களின் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்த தோ... நள்ளிரவு தாண்டி மறுநாள் தொடங்கிய ஒரு மணிக்குத் தான். நாங்கள் போனபோது ஊரே குறட்டை விட்டுக் கொண்டிருந்தது.
எங்களின் கார் சத்தம் கேட்டு அக்ரஹாரம் விழித்தது. வரவேற்புக்கு மேளதாளம், நாயனம் வாசிக்க வந்தவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். என்னை செல்லமாக ‘சின்னக் குழந்தை’ என்றுதான் கூப்பிடுவார்கள்.
"சின்னக் கொழந்த வந்தாச்சு... சின்னக் கொழந்த வந்தாச்சு...'’என உறவினர்கள் மகிழ்ச்சியில் கூச்சலிட... பதறி எழுந்த மேளக்காரர்கள், அந்நேரத்தில் "மண மகளே மருமகளே வா வா'’ என வாத்தியத்தாலேயே வாசித்தனர். ஏரியா ஏதோ பகல்போல உற்சாக மாகியது. புதுமணத் தம்பதி செய்யவேண்டிய சாங்கித்யங்கள், ஆரத்தி எடுத்தல், புதுப்பெண் விளக்கேற்றுதல்... என வரிசையாக ஒவ்வொரு சடங்காக செய்துமுடித்தார்கள்.
நல்லநாள் என்பதால் சாந்தி முகூர்த்தத் திற்கும் உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். நான் ஊரில் இருந்தபோது பயன்படுத்தி வந்த மாடி அறையில் பூ வேலைப்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள்.
எனக்கோ... "எப்படா பொண்டாட்டி கிட்ட தனியா நாலு வார்த்தை பேச வாய்ப்பு அமையும்' என்பதிலேயே இருந்தது. தனிமையில் பேசும் அந்த த்ரில்லுக்காகத் தான் பெண் பார்க்கும்போது ‘பெண் கிட்ட பேசிக்கங்க’ என பெண் வீட்டார் சொன்ன போதும் மறுத்துவிட்டேன்.
அதிகாலை மூன்று... மூன்றே முக்கால் மணி இருக்கும்.
என் பெரிய அக்கா வந்து... "நீ மேல ரூமுக்குப் போடா. குத்து விளக்கு எரியுது. அதை அணைக்கும்போது வாயால ஊதி அணைக்கக் கூடாது. ஒரு பூவை எடுத்துத்தான் திரியை அணைக்கணும்''’எனச் சொல்லிட்டுப் போனது.
நான் மாடி அறைக்குப் போனேன்.
"புது வாழ்க்கை எப்படி இருக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? வந்திருக்க மனைவி எப்படிப் பட்ட குணம் கொண் டவளாக இருப் பாள்?'
-இப்படி என் முன்னால் கேள்விகள் நீண்டுகொண்டே போனது.
முன்பு சினிமாவில் பட வாய்ப்பிற்காக முயற்சிக்கும் போது இப்படிப்பட்ட கேள்விகள் என் முன்னால் எழும். அப்போதெல்லாம் எதிர்காலம் பற்றி சிந்திக்கும்போது ஒரு பயமும், விரக்தியும் இருக்கும். ஆனால் இப்போது என் எதிர்காலம் பற்றி என் முன் கேள்வி எழுந்தபோதும், அந்தக் கேள்வி அச்சுறுத்தவில்லை. ஒருவித ஆர்வத்தையே ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில்.... மனைவி வந்தாள். அவளை அமர வைத்தேன்.
"நம்மளப் பத்தின முழு விஷயத்தையும் சினிமா ஒன் -லைன் ஸ்கிரிப்ட் மாதிரி சொல்லிடணும். எதையும் மறைக்க வேணாம்'’என எனக்குத் தோன்றியது.
பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கிறபோது எல்லாவற்றையும் சொல்வார்களே... அது போல அவளிடம் என்னைப் பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லத் தொடங்கினேன்.
சினிமா ஆசையில் அடி வாங்கி சென்னைக்கு ஓடி யது... ஓடிப் போறதுக்குக் கூட லாயக்கு இல்லாம மறுபடி மறுபடி அப்பாவிடம் சிக்கி ஊருக்கு வந்தது, ஓவியக் கல்லூரியில் படித்தது, கமல்ஹாசனுக்கு நண்பனானது, கமல் மூலம் டைரக்டர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குந ராகச் சேர்ந்தது, பாரதிராஜாவிடம் வேலை செய்த படங் கள், அந்த அனுபவங்கள், நான் சில படங்களில் நடித்திருப் பது, என் முதல் படம் ‘"ஆகாய கங்கை'’ தோற்றது, தற் கொலை செய்துகொள்ள எண்ணியது, வெக்காளிஅம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்தது, மீண்டும் டைரக்ஷன் பண்ண ‘"பிள்ளை நிலா'’ படம் மூலம் வாய்ப்பு கிடைத்தது, ‘பிள்ளை நிலா’ படம் பெரும் வெற்றி பெற்று எனக்கு வெற்றிப்பட டைரக்டர் அந்தஸ்தை சினிமாவில் தந்திருப்பது, அடுத்து பண்ணவிருக்கும் படத்தின் திட்டம்...
-இப்படி வரிசையாகச் சொல்லிவந்ததுடன் “"நான் சிகரெட் அதிகமா பிடிப்பேன். உனக்கு பிடிக்கலேன்னா கொஞ்சம்கொஞ்சமா குறைச்சு, பிறகு கம்ப்ளீட்டா விட்டுடுறேன்''’என்றும் சொன்னேன். நான் பேசப் பேச வியப்பாக என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மிக ஆர்வமாக கவனிக்கிறாளே... என நானும் கதை போல அழகாக, கோர்வையாக சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் சொல்லிக்கொண்டே வந்தேன்...
எல்லாம் சொல்லி முடித்து நான் நிறுத்தியதும்...
என்னையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தவள்... நான் பேசி முடித்துவிட்டேன் என்பதை உணர்ந்துகொண்டு சொன்னாள்...
"மேரா தமிழ் நஹி மாலும்''”
(பறவை விரிக்கும் சிறகை)