நினைவோ ஒரு பறவை! நடிகர் -டைரக்டர் -தயாரிப்பாளர் மனோபாலா (28)

dd

dd

(28) ஒரு படம்... ரெண்டு க்ளைமாக்ஸ்!

தொடர்ந்து ஐந்து படங்கள் ஹிட் கொடுத்த டைரக்டர் என்கிற பெருமையைப் பெற்ற பாரதிராஜா, தனது ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம் என முழுக்க புதிய தோற்றத்திற்கு மாறினார். இதனால் டைரக்டரை பார்க்கிறவர்கள் பலரும் “"நீங்க ஹீரோ மாதிரி இருக் கீங்க'’எனச் சொல்ல... அந்த கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கிற விதமாக டைரக்டரின் நண்பரும், டைரக்டரின் படங்களின் கேமராமேனுமான நிவாஸ், “"நான் தயாரிச்சு, டைரக்ட் பண்ணப் போற படத்துல நீதான் ஹீரோ'’எனச் சொல்லி, பட வேலையை ஆரம்பித்து விட்டார்.

படத்திற்குப் பெயர் "கல்லுக்குள் ஈரம்'.

இளையராஜா இசையில், கங்கை அமரன் எழுதிய பாட்டுதான் முதலில் பதிவு செய்யப்பட்டது. இளையராஜா வும், எஸ்.ஜானகியும் பாடியிருந்த அந்த இனிமையான பாடலின் பல்லவி இதுதான்.

சிறு பொன்மணி அசையும்

அதில் தெறிக்கும் புது இசையும்

இரு கண்மணி பொன்

இமைகளில் தாள லயம்

நிதமும் தொடரும்

கனவும் நினைவும் இது மாறாது

ராகம் தாளம் பாவம் போல

நானும் நீயும் சேர வேண்டும்

ஹீரோ சுதாகர், ஹீரோயின் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை எடுக்க வெளி வாசனை அதிகம் அறியாத ஒரு கிராமத்திற்கு தனது யூனிட்டுடன்

dd

(28) ஒரு படம்... ரெண்டு க்ளைமாக்ஸ்!

தொடர்ந்து ஐந்து படங்கள் ஹிட் கொடுத்த டைரக்டர் என்கிற பெருமையைப் பெற்ற பாரதிராஜா, தனது ஹேர் ஸ்டைல், காஸ்ட்யூம் என முழுக்க புதிய தோற்றத்திற்கு மாறினார். இதனால் டைரக்டரை பார்க்கிறவர்கள் பலரும் “"நீங்க ஹீரோ மாதிரி இருக் கீங்க'’எனச் சொல்ல... அந்த கருத்துக்கு மேலும் வலுச் சேர்க்கிற விதமாக டைரக்டரின் நண்பரும், டைரக்டரின் படங்களின் கேமராமேனுமான நிவாஸ், “"நான் தயாரிச்சு, டைரக்ட் பண்ணப் போற படத்துல நீதான் ஹீரோ'’எனச் சொல்லி, பட வேலையை ஆரம்பித்து விட்டார்.

படத்திற்குப் பெயர் "கல்லுக்குள் ஈரம்'.

இளையராஜா இசையில், கங்கை அமரன் எழுதிய பாட்டுதான் முதலில் பதிவு செய்யப்பட்டது. இளையராஜா வும், எஸ்.ஜானகியும் பாடியிருந்த அந்த இனிமையான பாடலின் பல்லவி இதுதான்.

சிறு பொன்மணி அசையும்

அதில் தெறிக்கும் புது இசையும்

இரு கண்மணி பொன்

இமைகளில் தாள லயம்

நிதமும் தொடரும்

கனவும் நினைவும் இது மாறாது

ராகம் தாளம் பாவம் போல

நானும் நீயும் சேர வேண்டும்

ஹீரோ சுதாகர், ஹீரோயின் வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை எடுக்க வெளி வாசனை அதிகம் அறியாத ஒரு கிராமத்திற்கு தனது யூனிட்டுடன் நுழைகிறார் டைரக்டர் பாரதிராஜா.

அவ்வூரின் சலவைத் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த சோலை, டைரக்டர் பாரதிராஜாவை கடுமையான கோபக் காரராக மட்டுமே பார்த்துவிட்டு, அவரின் மறுபக்கத்தை, அந்தக் கல்லுக்குள் ஈரத்தை பார்த்ததும் அவர் மீது காதல் கொள்கிறாள். பாரதிராஜாவும் சோலையைக் காதலிக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட சந்திரசேகருக்கு சோலை மீது காதல். இன்னொரு புறம், கூத்து வாத்தியாரின் மகள் காதி, சினிமா ஹீரோ சுதாகர் மீது காதல் கொள்கிறாள். உள்ளூர் வாத்தியாருக்கோ காதி மீது காதல்.

இந்த சூழ்நிலையில் டைரக் டர் பாரதிராஜாவுக்கும், சோலைக் கும் இடையே யான காதல் கைகூடும் நேரத்தில் எதிர்பாராத சம்பவம் நடக்கிறது.

-இப்படி சினிமாவுக்குள் ஒரு சினிமா கதையைக் கொண்டதுதான் "கல்லுக்குள் ஈரம்'’படத்தின் கதை.

முதலில் இந்தப் படத்தின் கதை நாயகிகள் இருவரின் கேரக்டரில் நடிக்க வேறு இரண்டு நடிகைகள்தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். ஆனால் பாரதிராஜாவுக்கு திருப்தி இல்லை.

"நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க. நான் போய் இரண்டு புதுமுக நடிகைகளை கூட்டி வர்றேன்''’என சென்னைக்கு கிளம்பிவிட்டார் ஹீரோவான எங்க டைரக்டர்.

ஒரே நாளில் இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

dd

அவர்கள்... சோலையாக, பாரதிராஜாவை காதலிப்பவராக நடித்த அருணா. இன்னொரு நாயகி காதியாக, சுதாகரை காதலிப்பவராக நடித்த விஜயசாந்தி.

ஷூட்டிங் முடிந்து பாரதிராஜாவின் யூனிட் அந்த கிராமத்தை விட்டே கிளம்பும், பாரதிராஜாவும் கிளம்புவார். சோலை பரிதவிப்போடு பின்தொடர்ந்து ஓடுவாள்.

ஆற்று வெளியின் நீண்ட மணற்பரப்பில் காத்துக்கொண்டிருக்கும் பாரதிராஜாவை பார்த்ததும், மகிழ்ச்சி கொள்வாள் சோலை.

சாதி, அந்தஸ்து ஆகியவற்றைக் கடந்து அந்தக் காதல் ஜோடி கையோடு கைகோர்க்கும் நேரம் அந்தப் பைத்தியக்காரன் சந்திரசேகரால் பாரதிராஜா கொலை செய்யப்படுவார்.

துன்பியல் க்ளைமாக்ஸ் கொண்ட "கல்லுக்குள் ஈரம்'’படம் தமிழகம் முழுக்க பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் பாரதிராஜாவின் சொந்த மண்ணான மதுரைப் பகுதியில் மட்டும் 175 நாட்கள் ஓடியது வெற்றிகரமாக.

அதற்குக் காரணம்... மதுரைப் பகுதி தியேட்டர்களில் வெளியான பிரதிகளில் மட்டும் பாரதிராஜாவும், சோலையும் (அருணா) காதலி ஜெயித்து, கைகளைக் கோர்த்துக்கொண்டு போவதாக காட்டப்பட்டது.

"கல்லுக்குள் ஈரம்'’ வர்த்தக ரீதியில் சுமாரான படமாக அமைந்தபோதும், இளையராஜாவின் இசையில் அமைந்த அருமையான பாடல்களும், பாரதிராஜா-அருணா சம்பந்தப்பட்ட காட்சிகளில் காதல் பூக்கும் அழகியல் என மிக அருமையாக காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

திரைக்கதையை எழுதி, டைரக்ஷன் மேற்பார்வையையும் மேற்கொண்டார் பாரதிராஜா.

"கல்லுக்குள் ஈரம்'’படத்தின் வெற்றியின்மையால், "நாம படம் டைரக்ட் பண்றதோட நிறுத்திக்கணும். நடிக்கக் கூடாதோ'’என மனம் நொந்துபோனார் டைரக்டர்.

நாங்கள் டைரக்டருக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னோம்.

டைரக்டரும் அதிலிருந்து மீண்டு, அடுத்த படத்திற்கான கதையைத் தேட ஆரம்பித்தார். அப்போது மணிவண்ணன் ஒரு கதை சொன்னார்.

மணிவண்ணன் சொன்ன கதை எனக்கென்னவோ ஆரம்பத்திலிருந்தே சரியாகப்படவில்லை. ஆனால் டைரக்டருக்கு ரொம்பவே நம்பிக்கையைக் கொடுத்து, தான் சொன்ன கதையை ஓ.கே. செய்யவைத்தார்.

"நிறம் மாறாத பூக்கள்'’ படத்தில் விஜயனுக்கு குரல் கொடுப்பதற்காக வந்தவர் ரவி. (ஆனால் பிறகு பாரதிராஜாவே குரல் கொடுத்தார் விஜயனுக்கு)

ரவியை நான் என் அறைக்கு அழைத்துச் சென்று என்னுடனே தங்க வைத்துக்கொண்டேன்.

மணிவண்ணன் சொன்ன கதை எனக்குத் தெரியும் என்பதால், ரவியை அந்த கதைக்கேற்ப போட்டோ ஷூட் எடுக்க வைத்து, ரவி யாரோ ஒருவர் என்பதுபோல... "சார், நாம இப்ப எடுக்கப்போற படத்துக்கு இந்தப் பையன் சரியா இருப்பான்னு நினைக்கிறேன்''’எனச் சொல்லி டைரக்டரிடம் ரவியின் போட்டோக்களைக் கொடுத்தேன்.

ரவியை தேர்வு செய்தார் டைரக்டர்.

இன்னொரு கேரக்டருக்கு என் நண்பர் (ராபர்ட்) ராஜசேகர் இன்னொரு கேரக்டரில் நடித்தார். சந்திரசேகரும் இசையமைப்பாளராகும் கனவு கொண்டவராக நடித்தார்,

கதாநாயகியாக ராதேவை (ரோகினி) தேர்வு செய்தார்.

ஆளுக்கொரு லட்சியம்... அதை அடைய முடியாத விரக்தி... தனது சுயத்தை தொலைத்துவிட்டு அலைகிற கோடிக்கணக்கானவர்களின் நிழல்களில், சிலரின் நிழல்கள்தான் "நிழல்கள்'’படக் கதை.

படத்தின் கதை தோற்றவர்கள் பற்றியது. பல உயிரிழப்புகளும் கதையில் உண்டு. வறுமையையும், வேலை வாய்ப்பின்மையையும் "நிழல்கள்'’படம் பேசினாலும்.. பாரதிராஜாவின் ‘"நிழல்கள்'’வீழ்ந்தது பாலசந்தரின் "வறுமையின் நிறம் சிவப்பு'’ படத்தால்.

அதுபற்றி வரும் அத்தியாயத்தில் சொல்கிறேன்...

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்

____________________

ஏப் 30 மே-03 இதழில் "பேரவையில் எழுந்த விவாதங்கள்' கட்டுரையில் சபாநாயகர் அப்பாவு என்பதற்கு பதில் சபாநாயகர் தனபால் எனத் தவறாக இடம் பெற்றுள்ளது. திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம். (ஆர்)

nkn040522
இதையும் படியுங்கள்
Subscribe