நினைவோ ஒரு பறவை! நடிகர் -டைரக்டர் -தயாரிப்பாளர் மனோபாலா (70)

dd

dd

(70) வேட்டிய கடிச்சுக்கட்டு...!

மைசூரு போகிற வழியில் சித்தூரில் ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரச மரத்தடியில் கோழிக்கறி சமைத்தபடியே அடுத்த படத்திற்கான கதைக்கு லைன் பிடித்தார் கதாசிரியர் கலைமணி சார்.

"என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' படத்தின் அதிரிபுதிரி வெற்றியால், "இளையராஜா -கலைமணி -மனோபாலா' என்ற காம்பினேஷனுக்கு விநியோகஸ்தர்களிடையே மவுசு ஏற்பட்டிருந்த நேரம் அது.

தன் கணவனையும், எதிர்வீட்டுப் பெண்ணையும் சம்பந்தப்படுத்தி சந்தேகப்படுகிறாள் மனைவி. அதனால் பாதிக்கப்பட்ட பெண், தன்னை சந்தேகப்பட்ட பெண்ணின் வீட்டிலேயே குடியேறுவது "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' கதையின் முக்கிய கட்டம்.

அதையே மாத்திப் போட்டு "புருஷனோட வைப்பாட்டிய, மனைவியே வீட்டுக்கு கூட்டிட்டு வர்றா. இதுதான் "மல்லுவேட்டி மைனர்' கதை என லைன் பிடித்தார் கலைமணி.

"சார், இது சரியா வருமா?''

"வரும் டைரக்டரே... ஹீரோவோட ஓபனிங் ஸீன் சொல்லட்டா?''

"சொல்லுங்க...''

"செத்துப்போன தன் அப்பாவோட வைப்பாட்டி களுக்கெல்லாம் பென்ஷன் அனுப்புறான் ஹீரோ.''

கலைமணி சார் இப்படிச் சொன்னதும் என்னோட சோர்வெல்லாம் போன திசை தெரியல.

"என்னங்க இது ரொம்ப புதுசா இருக்கு'' என ஆச்சரியத்தோடு கேட்டேன்.

"அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு அப்பன் புத்தி இருக்கத்தானே செய்யும். கல்லுல சேலையை காயப்போட்டிருந்தா கூட சபலப்படுவான் இந்த மைனர்... அதுவும் மல்லு வேட்டி மைனர

dd

(70) வேட்டிய கடிச்சுக்கட்டு...!

மைசூரு போகிற வழியில் சித்தூரில் ஊருக்கு வெளியே ஒரு பெரிய அரச மரத்தடியில் கோழிக்கறி சமைத்தபடியே அடுத்த படத்திற்கான கதைக்கு லைன் பிடித்தார் கதாசிரியர் கலைமணி சார்.

"என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' படத்தின் அதிரிபுதிரி வெற்றியால், "இளையராஜா -கலைமணி -மனோபாலா' என்ற காம்பினேஷனுக்கு விநியோகஸ்தர்களிடையே மவுசு ஏற்பட்டிருந்த நேரம் அது.

தன் கணவனையும், எதிர்வீட்டுப் பெண்ணையும் சம்பந்தப்படுத்தி சந்தேகப்படுகிறாள் மனைவி. அதனால் பாதிக்கப்பட்ட பெண், தன்னை சந்தேகப்பட்ட பெண்ணின் வீட்டிலேயே குடியேறுவது "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' கதையின் முக்கிய கட்டம்.

அதையே மாத்திப் போட்டு "புருஷனோட வைப்பாட்டிய, மனைவியே வீட்டுக்கு கூட்டிட்டு வர்றா. இதுதான் "மல்லுவேட்டி மைனர்' கதை என லைன் பிடித்தார் கலைமணி.

"சார், இது சரியா வருமா?''

"வரும் டைரக்டரே... ஹீரோவோட ஓபனிங் ஸீன் சொல்லட்டா?''

"சொல்லுங்க...''

"செத்துப்போன தன் அப்பாவோட வைப்பாட்டி களுக்கெல்லாம் பென்ஷன் அனுப்புறான் ஹீரோ.''

கலைமணி சார் இப்படிச் சொன்னதும் என்னோட சோர்வெல்லாம் போன திசை தெரியல.

"என்னங்க இது ரொம்ப புதுசா இருக்கு'' என ஆச்சரியத்தோடு கேட்டேன்.

"அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு அப்பன் புத்தி இருக்கத்தானே செய்யும். கல்லுல சேலையை காயப்போட்டிருந்தா கூட சபலப்படுவான் இந்த மைனர்... அதுவும் மல்லு வேட்டி மைனர்.''

"விஜயகாந்த் இப்படி கேரக்டர்ல நடிக்கமாட்டாரே.''

"சத்யராஜை ஹீரோவா போடு வோம். குத்துவிளக்கு மாதிரி ஒருத்தி, ஃபோகஸ் லைட் மாதிரி ஒருத்தின்னு ரெண்டு ஹீரோயினை புடிச்சுப் போடுவோம்.''

"நல்லாத்தான் இருக்கு. ஆனா... வில்லனா நடிச்சுட்டு வந்த சத்யராஜ் இப்போ... ஹீரோவா உசந்திருக்கார். அப்படியிருக் கும்போது இந்தக் கதையில நடிப்பாரா?''

"ஹீரோ ஒரு பொம்பளப் பொறுக்கி, விலைமாதர் வீட்டுக்கெல்லாம் போறவன். லொள்ளு புடிச்ச ஜொள்ளுப் பார்ட்டின்னு சொல்லுங்க... நடிக்க ஒப்புக்குவார்'' என்றார் கலைமணி.

"சார்.. சத்யராஜ், எம்.ஜி.ஆர். பாணியில நடிக்கிறார்... அவர் எப்படி?''

dd

"என்ன டைரக்டரே நீங்க? "அமைதிப் படை' படத்துல அவர் என்ன பத்தினி தெய் வாம்சத்தோடவா நடிச்சார்?'' எனக் கேட்ட போது... "சத்யராஜ்கிட்ட கதையை சொல்லித்தான் பார்ப்போமே...' என முடிவெடுத்தேன்.

"கதையை முடிவுபண்ணியாச்சு. அப்படியே மைசூரு போறோம். அங்கிருந்து யு டர்ன் போட்டு சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியில குளிக்கிறோம்... அப்படியே மெட்ராஸ் திரும்பி "மல்லுவேட்டி மைனர்' பட வேலையை ஆரம்பிக்கிறோம்... கிளம்புங்க...''

சென்னை வந்து சேர்ந்தோம். சத்யராஜுக்கு போன்போட்டு கலைமணியிடம் கொடுத்தேன்.

"தலைவரே... கதை இதுதான்... ஹீரோ ஒரு பலான ஆளு!''

"சூப்பர் தலைவா! உங்க கதைல நடிக்க கசக்குதா? மனோபாலா சார் டைரக் ஷன்ல "பிள்ளை நிலா' படத்துல ஒரு கேரக்டர் பண்ணினேன். அவ ரோட டைரக்ஷன்ல ஹீரோவா பண்ண ணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. நாம சேர்ந்து பண்ணீரு வோம் தலைவா'' என்றார் சத்யராஜ்.

"அப்படியே கதையோட முக்கியமான மோட்டிவ் சொல்லிடுறேன் கேட்குறீங்களா?''

"சொல்லுங்க...''

"கதைப்படி காந்திமதி, சில பெண்களை வச்சு பலான பிசினஸ் பண்றாங்க. அடிக்கடி நீங்க அங்க போக்கு -வரத்துல இருக்கீங்க. ஒரு சந்தர்ப்பத்துல காந்திமதி கோஷ்டி அந்த வீட்டை காலி பண்ணிட்டுப் போயிடுறாங்க. அங்க சீதா மாதிரி ஒரு குடும்பப் பெண் குடியேறுறா. நீங்க அது பலான வீடுதானேன்னு அங்க போய் அந்தப் பொண்ணு கிட்ட ரேட் பேசுறீங்க. அவ உங்களைத் திட்டி அனுப்பிடுறா.

"என்ன அவமானப்படுத்தின உன்னையே கல்யாணம் முடிச்சு...' அப்படினு சவால் விடுறீங்க.

ஆனா... அதுக்கு முன்னமே உங்களுக்கும், நாட்டுக்கட்ட மாதிரி ஒரு பொண்ணுக்கும் லவ்வு இருக்குது.

ஒரு கட்டத்துல... உங்களுக் கும், உங்க லவ்வருக்கும் வாக்கு வாதமாகி ரெண்டுபேரும் சவால் விடுறீங்க.

"நீ என்கூட நாட்டியம் ஆடணும்'னு அவ சொல்றா. உங்க ரெண்டுபேருக்கும் இடையே நடந்த நாட்டியப் போட்டியில நீங்க ஜெயிச்சிடுறீங்க...''

கலைமணி கதையைச் சொல்லச் சொல்ல... பதறிப்போன சத்யராஜ், "ஏங்க... நான் நாட்டியப் போட்டியில ஜெயிக்கிறேன்னா... ஜனங்க எப்படி நம்புவாங்க?'' என கேட்டார்.

cc

"என்ன தலைவரே... "மன்னாதி மன்னன்' படத்துல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுக்கும் நடக்குற நாட்டியப் போட்டியில எம்.ஜி.ஆர். ஜெயிப்பார்ல... அந்த மாதிரி நினைச்சுக்கங்க தலைவரே'' என்ற கலைமணி, கதையைத் தொடர்ந்தார்.

"அந்த சீதா மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணியே தீருவேன்'னு நீங்க சவால் விட்டீங்கள்ல... அந்தப் பொண்ணு சொல்றா... நீ இனிமே என்னைத் தவிர இன்னொரு பொண்ண ஏறிட்டும் பார்க்கமாட்டேன்னு சத்தியம் பண்ணித்தரச் சொல்றா.

அவ கை மேல இவன் கையை வச்சு சத்தியம் பண்ணப் போகையில... விஷயம் தெரிஞ்சு... உங்க நாட்டுக்கட்ட நாட்டியப் பெண் ஓடி வர்றா... சத்தியத்த தடுக்க. ஆனா அதுக்குள்ள சத்தியம் பண்ணிடுறீங்க. நாட்டியப் பெண் முகத்துல கேமரா ஃப்ரீஸ் ஆகுது. இதுதான் இண்டர்வெல் பிளாக்'' -என கதையைச் சொன்னார் கலைமணி.

சத்யராஜுக்கு கதை பிடித்துப் போனது.

சத்யராஜ் கேரக்டருக்கான மேனரிஸத்தை எப்படி அமைப்பது என விவாதித்தோம்.

"பழ.கருப்பையாவோட மேனரிஸத்தை வச்சுக்குவோம்'' என்றார்.

பழ.கருப்பையாவின் வேஷ்டி கட்டுற ஸ்டைல் அப்போது வித்தி யாசமா இருக்கும். எட்டு முழ வேட்டுயைக் கட்டி, அதில் ஒரு பகுதியை மட்டும் பிரித்து மேலே தூக்கி, வேஷ்டி முனையை வாயில் கவ்விக் கொண்டு, கக்கத்தில் ஒரு "பேக்'கை இடுக்கிக்கொள்ளுவார்.

அவர் போல எட்டு முழ வேஷ்டியில் ஒரு பகுதியை பிரித்து வேஷ்டி நுனியை சத்யராஜ் கடித்துக்கொண்டு கையில் மல்லிப்பூவை சுற்றிக்கொண்டு நடந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனாலும் எனக்குத் தயக்கம்.

"பழ.கருப்பையா ஒரு தமிழறிஞர். அவரை இமிடேட் செய்றது பிரச்சினையாகாதா?'' என்று கேட்டேன்.

"அவருகிட்டயே கேட்டுருவோம்'' என போனை போட்டார் கலைமணி.

"கருப்பையாண்ணே... என்னோட ஆபீஸுக்கு இப்ப வர முடியுமாண்ணே...''

"இதோ... வர்றேன்'' என கிளம்பி வந்துவிட்டார்.

"கருப்பையாண்ணே... என்னோட புதுப்பட கதைக்கு ஹீரோ கெட்-அப்புக்கு நீங்கதான் இன்ஸ்பிரேஷன்...'' எனச் சொல்லி கதையையும் சொன்னார்.

"என்னண்ணே நீங்க... நல்ல கதையைக் கொண்டுபோய் வேற இடத்துல சொல்லீருக்கீங்க. என்கிட்ட முதல்ல சொல்லியிருந்தா... நானே புரொடியூஸ் பண்ணீருப்பேனே...'' என்றார் பழ.கருப்பையா.

"உங்களுக்கு வேற ஒரு சூப்பர் கதை இருக்கு''

"அப்படியா?''

"ஆமா... அதுக்கு அட்வான்ஸ் கொடுங்க'' என முன்பணம் வாங்கினார் கலைமணி.

ஸ்டில்ஸ் ரவியைக் கூப்பிட்டு, சத்யராஜை ஸ்டில் எடுத்து, கலைமணி -இளையராஜா -மனோபாலா அப்படினு போட்டு விளம்பரம் கொடுத்தோம். உடனே எல்லா ஏரியாவும் வித்துருச்சு.

சத்யராஜுக்கு ஜோடியா அமைதியான சீதா, ஆர்ப்பாட்டமான ஷோபனா என இரண்டு ஹீரோயின்கள்.

ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சத்யராஜும் ஷோபனாவும் வந்தனர்.

"ஸாங்ல என்ன ஸீக்குவன்ஸ்...?'' என கேட்டார் ஷோபனா.

"உங்களுக்கும் சத்யராஜ் சாருக்கும் டான்ஸ் போட்டி...''

"ம்...''

"போட்டியில சத்யராஜ் ஜெயிக் கிறார்''

அதிர்ச்சியான ஷோபனா, தன் காலில் போட்டிருந்த செருப்பைக் கழற்றினார்...

(பறவை விரிக்கும் சிறகை)

படம் உதவி: ஞானம்

nkn280922
இதையும் படியுங்கள்
Subscribe