mm

(62) ரியலிலும் ஹீரோதான் விஜயகாந்த்!

"தென்றல் சுடும்' படம் சுமாரான படமாகத்தான் அமைந்தது.

Advertisment

அடுத்த படம்?

ஏற்கனவே விஜயகாந்த் நடிப்பில் "சிறைப்பறவை', "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்' என இரண்டு படங்களை இயக்கியிருந்தேன்.

இந்தச் சமயம்தான் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தரை எதேச்சையாகச் சந்தித்தேன். என்மேல் மிகுந்த மரியாதை கொண்டவர் ராவுத்தர். கதை இருந்தால் சொல்லும்படி சொன்னார்.

Advertisment

நானும், என் ரூம்மேட்டாக இருந்த கதாசிரியர் எம்.எஸ். மதுவும் சேர்ந்து ராவுத்தரிடம் ஒரு கதை சொன்னோம்.

கதை ரொம்பவும் பிடித்துவிட்டது ராவுத்தருக்கு.

"இந்தக் கதையை மம்மூட்டிகிட்ட சொல் லிட்டு வாங்க...'' என அனுப்பினார்.

நானும் மதுவும் திருவனந்தபுரம் சென்று, மம்மூட்டி யைச் சந்தித்து கதை யைச் சொன்னோம்.

கதை மம்மூட்டிக் கும் பிடித்துப்போனது.

நான் கதை சொல்லும்போது... "சார்... சார்...' என்றே மம்மூட்டியை கூப்பிட் டேன்.

"சார் என்று விளிக்க வேண்டா... "மம்முக்கா'னு விளிச்சாலே மதி'' என் றார்.

("மம்முக்கா என நட்பு ரீதியாகக் கூப்பிட்டாலே போதும்' என்றார்.)

நானும் "மம்முக்கா' என கூப்பிட ஆரம் பித்தேன்.

நாடறிந்த ஒரு சூப்பர் அந்தஸ்து கொண்ட நடிகருடன் ரெண்டேநாளில், ஃப்ரெண்ட்ஷிப் வைப்பது சாத்தியமில்லை. ஆனாலும் சாத்தியமாக்கினார் மம்மூட்டி.

நானும், அவரும் நல்ல நண்பர்களானோம்.

சென்னை திரும்பி யதும் நானும், மதுவும் அமர்ந்து கதையை மெருகேற்றிக்கொண்டிருந் தோம்.

ராவுத்தர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மம்மூட்டி நடிப்பில் எனது இயக் கத்தில்... இன்னும் சில நாட்களில் பட பூஜை போடுவதற்காக இருந்த நிலையில்...

இரவு நேரத்தில் கதை விவாதம் நடத்திக்கொண் டிருந்தபோது...

"ஆபீஸ் வரைக்கும் வந்துட்டுப் போக முடியுமா?'' என ராவுத் தரிடமிருந்து அழைப்பு.

ராவுத்தரை சந்தித்தேன்.

"நம்ம கேம்பஸுக்குள்ள இன்னொரு ஹீரோ எதுக்கு? இந்தக் கதைய நீங்க விஜிக்கே பண்ணுங்க'' என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

காரணம்...

சவப்பெட்டி செய்கிற ஓர் ஏழை இளைஞன். அவனுக்கு ஒரு தாய்.

இதுதான் கதையின் மையம்.

"ரொம்ப ஸாஃப்ட்டான கதை. இது மம்மூட்டிக்கு சரியா இருக்கும். விஜயகாந்த் சாரோட ஆக்ஷன் ஹீரோ இமேஜுக்கு சரியா வராது...'' எனச் சொன்னேன்.

"அதெல்லாம் சரியா வரும் டைரக்டரே! விஜிக்கு தகுந்த மாதிரி கதையில் ஸீன் சேருங்க'' என்றார் ராவுத்தர்.

வசனகர்த்தா லியாகத் அலிகானையும் கதை விவாதத் திற்குள் கோர்த்துவிட்டார்.

படப்பிடிப்பில் இரண்டு ஊர் மக்கள் கலவரம் செய்ய வந்ததையும் அவர்களை விஜயகாந்த் அடக்கிய வீரத்தையும் சொல்கிறேன்...!

மம்மூட்டிக்காக நான் சொல்லியிருந்த கதையை, விஜயகாந்த்துக்காக மாற்றி தயார் செய்தோம்.

விஜயகாந்த்தின் நண்பராகவும், அவரின் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து தலைவராக செயல்பட்டவரும்... விஜய காந்த்துக்கு ஒன்று என்றால், உயிரையே கொடுக்கக்கூடியவருமான மணி அவர் கள் நாகர்கோயில் பகுதியைச் சேர்ந் தவர். அவருடனும் எனக்கு நல்ல பழக்கம் உண்டானது.

dd

(பொதுவாக விஜயகாந்திற்கு யார், யார் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்களோ, அவர்களோடு நானும் நன்கு பழகினேன். விஜயகாந்த்தின் ஜோதிடர் பாலசுப்பிரமணியன் எனக்கு நன்கு பரிச்சயமானார்.)

"இந்தப் படத்தை எங்கள் ஊர் பகுதியில் எடுக்கலாம். நல்ல, நல்ல இடங்கள் எல்லாம் இருக்கிறது'' எனச் சொன்னார் மணி. அதன்படியே, நாகர்கோவில் பகுதியில் ஒரு இடத்தில் படப்பிடிப்பை நடத்தினோம். அங்கே நடுவில் ஆறு, இரண்டு பக்கமும் இரண்டு ஊர்கள். ஒரு ஊரில் முழுக்க, முழுக்க நாடார் மக்களும், இன்னொரு ஊரில் முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களும் வசிக்கிறார்கள். நாங்கள் நாடார் மக்கள் வசிக்கும் ஊரின் அருகில் படப்பிடிப்பு நடத்தினோம்.

சவப்பெட்டி செய்யும் இளைஞராக, கிறிஸ்தவராக விஜயகாந்த் நடிப்பது தெரிந்ததும்... ஆற்றுக்கு அந்தப்பக்கம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் ஊர் மக்கள் எல்லாம் ஆவேசமாகத் திரண்டு வந்தார்கள்.

"கிறிஸ்தவக் கதையை இந்த ஊரில் எப்படி நீங்க எடுக்கலாம்? எங்க ஊரில்தானே எடுக்கணும்? கிறிஸ்தவர்களைப் பத்தி என்ன மாதிரி கதை எடுக்குற?'' என தகராறில் இறங்கிவிட்டார்கள்.

அடுத்த சிறிதுநேரத்தில் நாங்கள் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த ஊரைச் சேர்ந்த நாடார் இன மக்கள் ஆவேசத்தோடு திரண்டு வந்துவிட்டார்கள்.

"கிறிஸ்தவக் கதையை எப்படி எங்க ஊரில் வந்து நீங்க படமாக்கலாம்?'' என இவர்களும் தகராறு செய்ய...

அது இரண்டு ஊர் தகராறாக மாறி... மிகவும் பதட்டமான சூழ்நிலையை உண்டாக்கிவிட்டது.

நிலைமை விபரீதமாவதை அறிந்த விஜயகாந்த், ஒட்டுமொத்த யூனிட்டையும் கார் மற்றும் வேன்களில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கு அனுப்பிவிட்டு, இரண்டு ஊர் மக்களையும் தனி ஆளாக எதிர்கொண்டார்.

(பறவை விரிக்கும் சிறகை)

_______________

கலைஞரின் ஊர்ப்பாசம்!

நான் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்காரன். அந்த வகையில் என் மீது கலைஞருக்கு கூடுதல் பாசம். என்னை எங்கே பார்த்தாலும் "மனோபாலா எனது ஊர்க்காரத் தம்பி' என எல்லோரிடமும் அறிமுகப்படுத்துவார்.

"தென்றல் சுடும்' படத் துவக்க விழா ஏவி.எம். ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடந்தபோது... எல்லோர் முன்பாகவும் "தம்பி எங்க ஊரு' எனச் சொல்லி என்னை பெருமைப்படுத்தினார்.

ரஜினியை வைத்து "ஊர்க்காவலன்' படம் இயக்கியதன் மூலம் ரஜினி எனக்கு நண்பரானார் என்றாலும் "சந்திரமுகி' படத்தின் வெற்றி விழாவின்போது தலைமையேற்ற கலைஞர், ரஜினியிடம் "மனோபாலா எங்க ஊர்க்காரர்' என அறிமுகப்படுத்தி மகிழ்ந்தார்.

நான் அ.தி.மு.க.வில் இணைந்து புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்துவந்த நிலையிலும், என்னை "என் ஊர்க்காரர்' என்று அறிமுகப்படுத்தி சிறப்பித்தார் கலைஞர்.

கலைஞரின் குடும்பம் மிகப்பெரியது. ஆனால் அந்தக் குடும்பத்தில் அண்ணம்-தம்பி மன வேறுபாடாக இருந்தாலும், எந்த மனமாச்சரியமாக இருந்தாலும் அதைப் பேசித் தீர்த்து அரவணைத்துச் செல்வார் கலைஞரின் மகள் செல்வி அக்கா. பிரச்சினை வந்தால் நடுக்கூடத்தில் எல்லோரையும் வைத்துப் பேசி... சுமுக முடிவு காணக்கூடியவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின்.