ளநிலை மருத்துவப் படிப்பு களுக்கான நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் சரிவையே சந்தித்து வருகிறது. கடந்த 2022-ல் 57.40 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2021 கல்வியாண்டில் 54.40 சதவீதமாக குறைந்திருந்தது. அதுவே தற்போது 2022-ல் 51.20 சதவீதமாக சரிந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால், நீட் தேர்வினை எழுதிய அரசு பள்ளி மாணவ மாணவியர்களில் 80 சதவீதம் பேர் தோல்வியை தழுவி யுள்ளனர். மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமளவுக்கு வெற்றிபெறாவிட்டாலும், பாஸ்மார்க் எடுக்கக்கூட முடியாமல் தோல்வியடைந்திருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.

அதிலும், தேர்வு எழுதிய 1,32,167 பேரில் 3,400 பேர் தான் பாஸ் செய்திருக்கிறார்கள். இதில் மொத்த மதிப்பெண்கள் 720-க்கு 450 மார்க்குக்கு அதிகமாக எடுத்தவர்கள் வெறும் மூன்று பேர் மட்டுமே என்கிற போது மிகவும் கவலையளிக்கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

Advertisment

ff

இந்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த தால் சென்னை அம்பத்தூரை சேர்ந்த லக்சனா ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியைத் தருகிறது.

இப்படிப்பட்ட தற்கொலைகள் தவிர்க்க முடியாதா? இதற்கு தீர்வுதான் என்ன? என்பது குறித்து, மாணவ மாணவி யர்களுக்கு தன்னம்பிக்கை விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பிரபல நீச்சல் பயிற்சியாளர் முனியாண்டியிடம் கேட்டபோது, "பெற்றோர்கள் தங்களால் முடியாத கனவை தங்கள் பிள்ளைகள் மூலம் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். இதனால் 24 மணி நேரமும் படி, படி, படி என்றே குழந்தைகளை டார்ச்சர் செய்கின்றனர். நீட் தேர்வு எழுதி டாக்டர் சீட் கிடைத்தால் மகிழ்ச்சி; இல்லையெனில் உன் திறமைக்கேற்ப, உன் கல்வி அறிவுக்கேற்ப எத்தனையோ சிறந்த படிப்புகள் இருக்கிறது. அதை தேர்வு செய்து படி என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் இதனைச் செய்வதே இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறார்கள். அந்த கடிதத்தில், "அப்பா-அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்; உங்கள் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியவில்லை' என்றுதான் எழுதுகிறார்கள். இதைப் பார்க்கும் போது, பெற்றோர்களின் விருப்பம் குறித்த டார்ச்சர்தான் தற்கொலைக் குத் தூண்டுதலாக இருந்திருக்கிறது என்பது புரியும்.

என்னிடம் நீச்சல் கற்றுக்கொள்ள வரும் குழந்தைகளிடமும், அவர்களது பெற்றோர்களிட மும் படிப்பு சார்ந்த விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, இரு வருக்குமே கல்வி சார்ந்த எதார்த்தத்தை புரிந்துகொள்ளும்படி சில விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன். பல பெற்றோர்கள் இதை உணர்ந்து, தங்கள் குழந்தைகளுக்கு எது விருப்பமோ அதை தேர்வு செய்யும் சுதந்திரத்தை தந்திருக்கிறார்கள்.

Advertisment

ff

ஒரு விசயத்தை நீங்கள் கவனித்தால் புரியும். தற்கொலை செய்து கொள்கிற மாணவ- மாணவிகளை எடுத்துக்கொண்டால் நமது மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். சி.பி.எஸ்.சி. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த குழந்தை கள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. அந்த குழந்தைகளின் பெற்றோர்கள், தேர்வு என்பதை ஒரு பயிற்சியாகத்தான் தமது குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறார்களே தவிர, பந்தயக் குதிரையைப் போல நடத்துவ தில்லை. இந்த அணுகுமுறையும் விழிப்புணர்வும் நம் பெற்றோர்களுக்கும் வர வேண்டும். இனி வரும் நாட்களிலாவது தற்கொலை இல்லாத தமிழகம் உருவாக வேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக.

நீட் தேர்வு தற்கொலைகள் குறித்து சென்னையிலுள்ள பிரபல சூர்யா மருத்துவ மனையின் மேனேஜிங் டைரக்டரும் உரிமையாளருமான டாக்டர் ஸ்ரீகுமாரிடம் நாம் விவாதித்தபோது...

"பெற்றோர்களும் சரி, குழந்தைகளும் சரி, மருத்துவப் படிப்பு மட்டும்தான் வாழ்க்கை என்கிற சிந்தனையை முதலில் விட்டொழிக்க வேண்டும். மருத்துவத்தைக் காட்டிலும் பெருமைமிகு படிப்புகள் நிறைய இருக்கிறது. அதில் தங்களுக்குப் பிடித்தமானதை தேர்வு செய்து குழந்தைகள் படிக்க வேண்டும். அதற்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருப்பது அவசியம்.

தேர்வில் தற்கொலை என்பது ஒரு சமுகம் சார்ந்த பிரச்சினையாக இருக்கிறது. டாக்ட ரானால் தான் நம் பரம்பரைக்கே பெருமை என்று தனது எண் ணத்தையெல்லாம் அந்த குழந்தை மீது சுமத்து கிறார்கள். டாக்டருக்கு படித்தவர்கள் பலபேர் வேலையில்லாமல் தவிக்கும் சூழல் எனக்கு தெரியும். தற்கொலைக்கு காரணம் அரசோ, நீட் தேர்வோ கிடையாது. குடும்பங்கள்தான் காரணம். அதனால், குழந்தைகளுக்கு வழிகாட்டியாக, கலங்கரை விளக்காக, ஆதரவாக குடும் பங்கள் இருந்தாலே போதும் தமிழகத்தில் தற்கொலைகள் நடக்காது'' என்கிறார் மிக இயல்பாக.

நீட் தேர்வைப் பொறுத்தவரை அதனை ரத்து செய்வதோ, விலக்களிப்பதோ ஒன்றிய அரசின் கைகளில்தான் இருக்கிறது. ஒன்றிய அரசு மனது வைத்தால் மட்டுமே நீட் தேர்வு ரத்து சாத்தியமாகும். மாநில அரசால் அழுத்தம் மட்டுமே தரமுடியும். காரணம், கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. இந்த உண்மையை மாணவர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்வதுதான் இப்போதைய தேவை.