கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி மத்திய அரசை வலியுறுத்தும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கடந்த 23-ந் தேதி நடத்தி முடித்திருக்கிறார்கள் தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர்.

சங்கத்தின் நிறுவனர் தலைவர் சகிலன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கேபிள் ஆபரேட்டர்கள், அவரது குடும்பத்தினர் என சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பா.ஜ.க.வை தவிர்த்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் கேட்டிருந்தனர். தி.மு.க., காங்கிரஸ், சி.பி.எம்., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் ஆதரவை தெரிவித்தன.

cc

உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய அனைவரும், மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமல் படுத்திவரும் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டினார்கள்.

Advertisment

சங்கத்தின் மாநில தலைவர் வெள்ளைச் சாமி, "கட்டண சேனல்கள் அதிகபட்சமாக 19 ரூபாயாக தங்களது சேனல் விலையை நிர்ணயித்திருப்பதை 5 ரூபாயாகக் குறைக்க வேண்டும். கேபிள் டி.வி. தொழிலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். கட்டண சேனல்கள் ஆண்டுதோறும் தங்களின் சேனல்களுக்கான விலையை உயர்த்திக்கொள்ள லாம் என்கிற அனுமதியை உடனடியாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்யவேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத் திருக்கிறோம்''’என்றார்.

போராட்டத்தில் நிறைவுரையாற்றிய சங்கத்தின் நிறுவனர் தலைவர் சகிலன் பேசும்போது, ‘’"கட்டண சேனல்களுக்கான விலையை அந்த சேனல்களே நிர்ணயித் துக் கொள்ளும் அதிகாரத்தை 2019-ல் ட்ராய் (தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) வழங்கியது. இதனால் 30 ரூபாயாக இருந்த சன் டி.வி.யின் பேக்கேஜ் இன்றைக்கு 49 ரூபாய். 25 ரூபாயாக இருந்த விஜய் டி.வி.யின் கட்டணம் இன் றைக்கு 48 ரூபாய். ஜீ தமிழ் 6 ரூபாயாக இருந்தது, இன் றைக்கு 22 ரூபாய். இப்படி கட்டண சேனல்களின் விலை ssஅதிகரித்தபடியேயிருக்கிறது. இதனால் ஆபரேட்டர்களும் கேபிள் டி.வி தொழிலும் தொடர்ந்து பாதிக்கப்படுகிற போதெல்லாம் உங்களுக்காக போராடினோம். ஒட்டுமொத்த ஆப்ரேட்டர்களும் பாதுகாக்கப் படவேண்டும் என்கிற லட்சியம் மட்டுமே எங்களுக்கு உண்டு. பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேனல் ஒளிபரப்பை செய்ய வேண்டு மென்பதுதான் நமது நோக்கம்.

விஜய் டி.வி.க்கு நாம் மாதந்தோறும் கொடுக்கும் தொகை எட்டரை கோடி ரூபாய். ஆண்டுக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய். சன் டி.வி.க்கு மாதாமாதம் நாம் செலுத்துவது 9 கோடி ரூபாய். வருசத்துக்கு கிட்டத்தட்ட 108 கோடி. இப்படி அனைத்து சேனல்களையும் எடுத்துக் கொண்டால் மாதம் 20 கோடி ரூபாய் நாம் செலுத்துகிறோம். வருசத்துக்கு கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் நம்மிடமிருந்து பெறு கிறார்கள். ஆனால், ஆபரேட்டர்களின் நலனையும் பொதுமக்களின் நலனையும் பற்றி கவலைப்படாமல் கட்டண சேனல்களின் ஆதிக்கம் அதிகரிக்கிறது. கட்டண சேனல்கள் நேர்மையாக தொழில் செய்ய விரும்பவில்லை.

Advertisment

ஹாட் ஸ்டார் எனும் அமெரிக்க நிறுவனம் இன்றைக்கு அம்பானியின் ரிலையன்ஸுக்கு விற்றுவிட்டது. ரிலையன்ஸ் கட்டுப்பாட்டில் 68 சதவீத பங்குகள் போய்விட்டன. வெறும் 32 சதவீதம்தான் ஹாட் ஸ்டார். கார்ப்பரேட்மயமாகிவிட்டது ஓ.டி.டி. பிளாட்பார்ம்! வருங்காலத்தில் 100 சதவீதம் கட்டணத்தை உயர்த்தப்போகிறார்கள். அப்போது ஸ்டார் விஜய்யின் பேக்கேஜ் 70 ரூபாய்க்கும் அதிகமாக இருக்கப்போகிறது.

அப்போது நாமெல்லாம் தொழில் செய்ய முடியாமல் விரட்டப்படுவோம். ஆபரேட்டர் களின் குடும்பம் நடுத்தெருவில் நிற்கக்கூடிய நிலைமை வரப்போகிறது. கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஏழைகளைப் பற்றி கவலையிருக் காது. ஆனால், சங்கத்தின் தலைவனாக நாங்கள் கவலைப்படுகிறோம். பெருமுதலாளிகள், சில கயவர்களைப் பயன்படுத்தி நம்மை அழிக்க நினைக்கிறார்கள். இப்படி கடந்த 25 ஆண்டு காலமாக அழிக்க நினைக்கும்போதெல்லாம் இந்த சங்கம் எங்களை காப்பாற்றியது; இனியும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில் இங்கே கூடியிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை வீண் போகாது; உங்களை நாங்களும், இந்த கூட்டு றவு சங்கமும் கைவிடாது என்பதை உறுதிபடக் கூறிக் கொள்கிறேன். கேபிள் டி.வி. தொழிலையும், ஒன்றரை கோடி ஆபரேட்டர்களையும் பாதுகாக்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை நமது இயக்கம் எடுத்துக்கொண் டிருக்கிறது''’என்று ஆவேச மாக கர்ஜித்தார் சகிலன். ஒட்டுமொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது.

சேனல் தொழிலை ஆக்கிரமித்து கேபிள் டி.வி. தொழிலை அழிக்கத் துடிக்கும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள இந்த சங்கத்தினர்... கார்ப்பரேட் நிறுவனங்களை மத்திய அரசும், இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையமும் கட்டுப்படுத்த வேண்டும்; இல்லையேல், அடுத்தகட்ட போராட்டத்தை வேறு வகையில் நடத்தத் திட்டமிட்டிருக் கிறார்கள் சங்கத்தின் தலைவர்கள்.

-இளையர்