சேலத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் அண்மைக்காலமாக தொடர் சர்ச்சையில் சிக்கிவரு கிறது. ‘"எது தாழ்ந்த சாதி?'’ என செமஸ்டர் தேர்வில் கேள்வியை வைத்து, அண்மையில் பெரும் கண்டனத்தைச் சம்பாதித்த இந்தப் பல்கலைக் கழகம், இப்போது பாலியல் புகாரில் சிக்கியிருக்கிறது.
இது தொடர்பாக பெரியார் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது “"வேதி யியல் துறை பேராசிரியரான கோபி, கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராகவும் இருந்து வருகிறார். அவரிடம், சேலத்தைச் சேர்ந்த மோனிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் உள்பட 8 மாணவ, மாணவிகள் பிஹெச்.டி., படிப்பு படித்து வருகின்றனர். விதிமுறைக்கு மாறாக கடந்த 24ஆம் தேதி, பேரா சிரியர் கோபி, பிஹெச்.டி., ஆராய்ச்சி கட்டுரையில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று கூறி மோனிகாவை அழைத் துள்ளார். இதனால் குழம்பிப்போன அவர், தனது உறவினர் மகன்கள் மூன்று பேரைத் துணைக்கு அழைத் துக் கொண்டு, கோபியைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். உடன் வந்த நண்பர்களை வீட்டுக்கு வெளியே அமர வைத்துவிட்டு, மோனிகா வை மட்டும் உள்ளே வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ந்துபோன அந்த மாணவி, அவரை உதறித் தள்ளிவிட்டு வெளியே ஓடி வந்திருக்கிறார். இதையறிந்து மாணவியுடன் வந்த அவரது உறவினர்கள், கோபியை வீடு புகுந்து சரமாரியாகத் தாக்கி யுள்ளனர். இதில் அவருக்கு மூக்கு, கண் பகுதியில் ரத்தக் காயமும் ஏற்பட்டுள்ளது'' என்கிறார்கள் சங்கடத்தோடு.
தாக்குதலுக்கு ஆளான கோபி, தன்னை மூன்று வாலிபர் கள் தாக்கியதாக, கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். காவல்துறையோ பதிவாளர் கோபியை தாக்கியது மணிகண்டன், தனுசியன், அருண்பாஸ்கர் ஆகிய மூவர் என்பதை அறிந்து அவர்களை மடக்கி விசா ரித்தது. அப்போதுதான் பதிவாளரின் பாலியல் அத்துமீறல் போலீஸுக்குத் தெரிய வந்தது.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர், பதிவாளர் கோபியை கடந்த 25-ஆம் தேதி கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர் மீது இ.த.ச. பிரிவுகள் 354 ஏ, 354 பி மற்றும் பெண் கள் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாணவியின் நண்பர்கள் கோபியை தாக்கியதுடன், அவரை மன்னிப்பும் கேட்க வைத்துள்ளனர். அவரும் மோனிகாவின் காலில் மூன்று முறை விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
இதற்கிடையே, கோபியின் மீது வேறு ஒரு பழைய புகார் குறித்தும் சிலர் சொன்னார்கள். ”கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாமி நாதன் துணைவேந்தராகப் பணியாற்றியபோது, பேராசிரியர் கோபி தன்னிடம் படித்து வந்த பிஹெச்.டி., மாணவிகள் சிலரை, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவர்களை ஆர்டர்லி போல வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி வந்ததாக ஒரு புகார் கிளம்பியது. அப்போதே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டியவர். ஆனால் பல்கலையின் உச்ச அந்தஸ்தில் இருந்த ஒருவர், அதையே சாக்காக வைத்து கோபியிடம் இருந்து பல லகரங்களை கறந்துகொண்டு, அவரைத் தப்பிக்கவிட்டுவிட் டார். இவருடைய பணி நியமனம் குறித்த புகாரும் இருக்கிறது. பாலியல் புகாரில் சிக்கிய மாணவியும், கோபியும் பட்டியல் சமூகத்தைத் சேர்ந்தவர்கள் என்பதால் சாதி ரீதியான அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதது மட்டும் இப்போதைக்கு ஆறுதல்” என்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக, கோபியின் மனைவியும் திருவாரூர் மத்திய பல்கலையின் இயற்பியல் துறைத் தலைவருமான கவிதாவிடம் கேட்டபோது, "என் கணவர் என்பதற்காக அல்ல. சக பேராசிரியராகவும் அவருடன் ஆராய்ச்சிகளில் பணியாற்றி இருக்கிறேன். அவ ரைப் போல நேர்மையான ஒருவரை பார்க்க முடியாது. அவர் மீது திட்டமிட்டு பொய்யான புகாரை கூறியுள்ளனர்''’என்றார் கலக்கமாய்.
கோபியைப் போலவே அங்கே இருக்கும் இயற்பியல் துறைத் தலைவர் செல்வம், லிஃப்டில் உடன் வந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அண்மை யில் புகார் எழுந்தது. அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். மேலும், கல்வியியல் துறை ஆசிரியர் ஒருவரும், உணவு அறிவியல் துறை ஆசிரியர் ஒருவரும் வகுப்பறையிலேயே மாணவிகளுடன் காதல் லீலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது.
இது குறித்தெல்லாம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டபோது "பேராசிரியர் கோபி, உலகளவில் அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளதில் 'டாப்-2' இடத்தில் இருக்கி றார். அடுத்து, சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் அவரை பதிவாளர் பொறுப்பில் நியமித்தோம். அதற்குள், இப்படியொரு புகாரில் சிக்கிக் கொண்டார். புகார் பற்றி பதிவாளர் கோபியிடம் விசாரித்த போது, அவர் குற்றச்சாட்டை மறுத்தார். மாணவியுடன் வந்தவர்கள், நீ எப்படி பதிவாளராக இருக்கேன்னு பார்த்துக்கறோம் என்று சொல்லித் தாக்கியதாகவும் அவர் சொன்னார். இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் மோட்டிவ் இருக்கிறதா? எனத் தெரியவில்லை,'' என்று முடித்துக்கொண்டார்.
”புகார் கொடுக்க விரும்பாத மாணவி யிடம் கட்டாயப்படுத்தி புகாரைப் பெற்று, உடனுக்குடன் கோபியைக் கைது செய்திருக் கிறார்கள்” என்கிறார்கள் கோபி தரப்பினர்.
பல்கலைக் கழகங்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிக்குவது, அவற்றின் மாண்புக்கு அழகல்ல.
-அகராதி