""ஹலோ தலைவரே, சிறையில் இருந்து விடுதலையாகி சென்னையில் தங்கியிருக்கும் சசிகலா, முதல்முறையாக தஞ்சாவூர் பக்கம் போய்வந்திருக்கிறாரே.''’’
""ஆமாம்பா.. டெல்டா மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்த நேரத்தில், சசிகலா அங்கே போனதால் ஏற்பட்ட பரபரப்பு பற்றி நம்ம நக்கீரனில் தனி ஸ்டோரியே வந்திருக்கு.''’’
""கூடுதலா சில விவரங்களை சொல்றேங்க தலைவரே.. நடராஜனின் குலதெய்வக் கோவிலான விளார் வீரனார் கோவிலுக்கு உறவினர்கள் புடைசூழச் சென்ற சசிகலா, கோவிலின் பீடங்களில் பொறிக்கப்பட்டிருந்த சில முக்கிய வாசகங்களை வினோதமாகப் பார்த்திருக்கார். குறிப்பாக ‘ "நட்பும் நன்றியும் மறவோம்' என்ற வாசகத் தையே அவர் வெறித்துப் பார்த்தபடி பல நிமிடங்கள் நின்னுருக்கார். அப்ப, அவர் உறவினர்கள்.. "இது நடராஜன் மாமாவுக்கு ரொம்பவும் பிடிச்ச வாசகம். அடிக்கடி எங்களிடம் இதை சொல்லிக்கொண்டே இருப்பார். குலதெய்வம் கோவிலுக்கு வரும் நம் குடும்பத்தினர் மனதிலும் இந்த வாசகம் இருக்கணும்னுதான் அவர் இதை எல்லாம் பொறிக்கச் சொன்னார்'னு சொல்ல, சசிகலா கண் கலங்கிவிட்டாராம். அதேபோல், 20-ஆம் தேதி தினகரன் விளாருக்கு வர்றாருன்னு தெரியவர, அவரை சந்திக்க வேணாம்ன்னு நினைச்சி, 19-ஆம் தேதி இரவே விளாருக்குச் சென்று, கண்ணீர்வடிச்சி மௌன அஞ்சலி செய்தாராம் சசிகலா.''’’
""சசிகலாவின் அரசியல் துறவறம் விரைவில் கலையலாம் என்று அவர் தரப்பிலேயே டாக் அடிபடுதே?''’
""ஆமாங்க தலைவரே, தஞ்சையில் தன்னை சந்திச்ச உறவினர்களிடம், "விரைவில் உங்களுக்கெல்லாம் நல்ல செய்தி கிடைக்கும்'னு புன்னகையோடு சொன்னாராம் சசிகலா. "இதுக்கு என்ன அர்த்தம்'னு அவர்கள் தரப்பிடமே நாம் கேட்டப்ப, "சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைச்சிக்கணும்னு பா.ஜ.க. சொல்லியும் எடப்பாடி அதைக் கேட்கலையாம். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டு, எடப்பாடியின் செல்வாக்கு சரிந்தால், அதன்பின் பா.ஜ.க. காம்ப்ரமைஸ் செய்து சசிகலாவை அ.தி.மு.க.வுக்குள் கொண்டுபோகுமாம். அப்போது கட்சியில் அவருக்கு முக்கியமான பொறுப்பு கிடைக்குமாம். இதுதான் சசிகலா விரைவில் வரப்போவதாகச் சொல்லும் நல்ல செய்தி'ன்னு விளக்கமும் கொடுக்கறாங்க.''’’
""தேர்தல் களம் விறுவிறுப்பாகி, மீடியாக்கள் சைடிலிருந்தும் உளவுத்துறை சைடிலிருந்தும் கணிப்புகள் வந்துகொண்டிருக்கிற நிலையில், முதல்வரான தனக்கு எதிரா தன் கண்ட்ரோலில் உள்ள தமிழக போலீஸ் செயல்படுதுன்னு எடப்பாடி புலம்பறாரே?''’’
""ஆமாங்க தலைவரே, எடப்பாடியின் கொங்கு மண்டலத்தில் இருக்கும் போலீஸைத் தவிர தமிழகம் முழுக்க இருக்கும் போலீஸ், எடப்பாடிக்கு எதிரான மன நிலையில்தான் இருக்குதாம். அதுக்குக் காரணம் டி.ஜி.பி. திரிபாதிதானாம். பெண் எஸ்.பி. விவகாரத்தில் குற்றவாளியான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸுக்கு எடப்பாடி கொடுத்து வந்த அதிகப்படியான செல்லம்தான், அவரை ஏகத்துக்கும் எரிச்சலடைய வச்சிடுச்சாம். அதனால், முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி டீம் மூலம் தமிழகம் முழுக்க, தேர்தல் செலவுக்காகக் கொண்டுசெல்லப்படும் பணத்தை, திரிபாதி குறிவச்சி மடக்கிவிடுகிறாராம். ஆளுங்கட்சியா அ.தி.மு.க. இருக்கும் சூழலில், காவல்துறையும் தனது நேரடி இலாகாவாக இருக்கிறப்ப, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதைப் பார்த்து டென்ஷனாகியிருக்கும் எடப்பாடி, "வெளியில் சொன்னா வெட்கக்கேடு... போலீஸ் டிபார்ட்மெண்டே எனக்கு எதிராக செயல்படுது'ன்னு சக அமைச்சர்களிடம் ரொம்பவே புலம்பறாராம்''’’
""நியாயமான புலம்பல்தாம்பா.. ஜெ. முதல்வரா இருந்த 2006, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் கள நிலவரம் பற்றிய ரிப்போர்ட்டுகள் வந்தப்பவும், போலீசையும் உளவுத்துறையையும் தன் கண்ட்ரோலில் வச்சிக்கிட்டு, முடிஞ்சளவு ஆளுங்கட்சிக்கு சாதகமான களத்தை உருவாக்க ஜெ முயற்சி எடுப்பாரு. போலீஸ் டிபார்ட்மெண்ட்டும் விறைப்பா அந்த வேலையை செய்யும். ஆனா, அம்மா ஆட்சின்னு சொல்ற எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்குது போலீசு.''’’
""நீங்க சொல்றது சரிதாங்க தலைவரே.. அப்போது ஜெ.வோட சசிகலாங்கிற சைலண்ட் அட்மினிஸ்ட்ரேட்டர் இருந்தாரு. போலீஸ் உயரதிகாரிகளாகவும் உளவுத்துறை அதிகாரிக ளாகவும் அவருக்கு வேண்டிய ஆட்கள் இருந்தாங்க. இப்ப நிலைமை வேற.''’’
""ம்... "ஊழலுக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கப் போகிறோம்'னு முழங்கும் மக்கள் நீதி மய்ய கமல், தி.மு.க.வுக்குப் போகக்கூடிய அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பார்னு எதிர்பார்க்கப்படுது. அவரை பா.ஜ.க.வின் பி டீம்னும் விமர்சிக்கிறாங்க. ஆனா அவர் தரப்பையே பா.ஜ.க சைடிலிருந்து குறி வச்சி, ரெய்டு வரைக்கும் போயிருக்காங்களே?''’’
""இதன் பின்னணியில் இன்னொரு அரசியல் இருக்குங்க தலைவரே, ஊழல் இல்லாத அரசியல்னு குரல்கொடுக்கும் கமல், கோவை தெற்குத் தொகுதியில் களமிறங்கியிருக்கார். அந்த தொகுதியை ரொம்பவும் நம்பி இருப்பவர், பா.ஜ.க வேட்பாளரும் கட்சியின் அகில இந்திய மகளிர் அமைப்பின் தேசியத் தலைவியுமான வானதி சீனிவாசன். அவரோட சமுதாய ஓட்டுகளும் பலமா இருக்குது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மயூரா ஜெயக்குமாரும் வெயிட்டா நிக்கிறாரு. இந்த நிலையில், கமல் எந்த வகையிலும் தன் ஆதரவு ஓட்டுக்களை பிரிச்சிடக் கூடாதுன்னு வானதி தரப்பு நினைக்குது. பா.ஜ.க., காங்கிரசுக் கிடையிலான போட்டியில் கமல் ஜெயிச்சிடக்கூடாதுன்னும் வியூகம் வகுக்கும் பா.ஜ.க. தரப்பு, அவருக்கு பணம் வரும் வழிகளை அடைக்கத் திட்டமிட்டது. இதன் அடிப்படையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தொடர்புகொண்டார் வானதி. அதைத்தொடர்ந்து மோடிவரை தகவல் கொண்டுசெல்லப்பட்டிருக்கு. டெல்லியில் இருந்து அதிரடியாக வந்த உத்தரவையடுத்துதான் அந்த ரெய்டு நடவடிக்கையாம்.''’’
""ஓ... ம.நீ.ம. பொருளாளர் அந்தளவுக்கு பொருள் வளம் உள்ள வெயிட் பார்ட்டியா?''’’
""திருப்பூரில் இருக்கும் மக்கள் நீதி மய்ய பொருளாளரான சந்திரசேகரை வருமான வரித்துறையினர் குறிவச்சாங்க. அவரது அனிதா டெஸ்காட் உள்ளிட்ட நிறுவனங்கள் சுற்றி வளைக்கப் பட்டன. 2 நாட்கள் நடந்த இந்த ரெய்டில் கணக்கில் வரவு வைக்கப்படாத ஏறத்தாழ 80 கோடி ரூபாய்களுக்கான ஆவ ணங்களைக் கைப்பற்றியதோடு, 11.5 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும் கைப்பற்றி இருக் காங்க. இந்த சந்திரசேகர் கமலின் ம.நீ.ம. பொருளாளராக இருந்தபோதும், எடப்பாடி அரசின் சமூகநலத் துறை யில் நுழைந்து, ஏகப்பட்ட டெண்டர்களை எடுத்திருக் கிறாராம். அந்த வகையில் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவராகவும் இருந்திருக்கிறார். இப்படிப் பட்ட தொடர்புகளில் இருக்கும் சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம், கமலின் ஊழல் ஒழிப்பு முகத்திரையையும் பா.ஜ.க. கிழித்திருப்பதாக அக்கட்சியினரே சொல்லிக்கிட்டு இருக்காங்க.''’’
""பா.ஜ.க. நிற்கும் 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், அங்கே இன்னும் உள்நாட்டுக் குழப்பம் நிக்கலையே?''’’
""ஆமாங்க தலைவரே, கட்சி சீனியர் களுக்கு சீட்டைக் கொடுக்காமல், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு தனிப்பட்ட விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் சார்ந்து சீட் கொடுத்துட்டாருன்னு பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன்மீது சொந்தக் கட்சிக்காரர் களே குற்றச்சாட்டை வைக்கிறாங்க. இதற்கு உதாரணமாக பா.ஜ.க.வில் காலையில் சேர்ந்த தி.மு.க.வின் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணனுக்கு, மாலையிலேயே மதுரையில் சீட் கொடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டறாங்க. இதேபோல் அண்மையில் கட்சியில் சேர்ந்த நடிகை குஷ்பு, திருவண்ணா மலை தணிகைவேல், வி.ஆர்.எஸ் கொடுத்த ஐ.பி.எஸ் அண் ணாமலை, பா.ம.க.விலிருந்து வந்த கலிவரதன் உள்ளிட்டவர் களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, தாராளமா கொடுக் கப்பட்டிருக்குன்னு பரவலா குற்றச்சாட்டுகள் வைக்கப்படுது.''
’""ஆமாப்பா...… சென்னை பா.ஜ.க.வினரும் துறைமுகம் தொகுதி வேட்பாளர் வினோஜ் செல்வம் மேலே புகார்களை அடுக்குறாங்க. மோடியின் செல்ல வேட்பாளர்னு இமேஜ் டெவலப் பண்ணிய இவர், குஜராத்தில் அதிரடி ரவுடித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மனோஜ் பாவ்லான்னும், தமிழ்நாட்டில் பெயரை மாற்றிக்கிட்டு, மாநில கட்சிக்குள் ஊடுருவிட்டாருன்னு குற்றம் சாட்டுறாங்க.''’’
""வேட்புமனு பரிசீலனையில்கூட பெயர் சர்ச்சை பெரிய விவகாரமாச்சுங்க தலைவரே... இப்படி பல பிரச்சினைகள். தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தை எல்.முருகன் கூட்டுனப்ப, தேர்தல் பணிகளில் கட்சி நிர்வாகிகள் யாருக்கும் பெரிதாக ஆர்வம் இல்லைன்னு சொல்ல, கொதித்துப்போன ஏனைய நிர்வாகிகள், மாநிலம் கட்டமைப்பே இல்லாத இந்தக் கட்சிக்காக உழைச்சி உழைச்சித் தேஞ்சு போயிருக்கோம். ஒரு வருசத்துக்குள்ள தலைவரான உங்களுக்கும் நேத்து வந்த ஆளுங்களுக்கும் சீட் கொடுத்திருக்கீங்கனு நேரடியா முருகனை வறுத்தெடுத்திருக்காங்க. சீட் சேல்ஸ் பற்றி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிடோருக்கு புகார்களையும் அவர்கள் அனுப்பி வருகிறார்களாம்.''’’
""தி.மு.க.வில் எப்போதுமே பணப்பட்டுவாடா நேரத்தில் சலசலப்பு கேட்கும். இப்பவும் அதேதானா?''’’
""ஆமாங்க தலைவரே, களத்தில் உள்ள தி.மு.க. வேட்பாளர்களுக்கு முதற்கட்டமா பூத் கமிட்டிக்கான செலவிற்காக சில லகரங்கள் கொடுக்கப் பட்டிருக்கு. ஆனால் வழக்கம்போல இதில் பல புகார்கள். முசிறி தொகுதி வேட்பாளரான காடுவெட்டி தியாக ராஜனுக்காக ஐ.ஜே.கே. கட்சியைச் சேர்ந்த தி.மு.க. எம்.பி.பாரிவேந்தர், 50 எல் கொடுத்தாராம். அதில் 45 எல் மட்டும் தொகுதிக்குள் அடங்கிய ஒன்றியம் மற்றும் பஞ்சாயத்துக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்குது. அதுவும் முறையாக பூத் கமிட்டிகளுக்குப் போய்ச் சேரலையாம். இது தொடர் பாக விசாரிக்க அனுப்பப்பட்ட கே.என். நேரு, முசிறி எல்லை வரை போயிட்டு, காரை திருப்பிவிட்டாராம். மேலிடத்துக்கு எப்படி சொல்றதுன்னு உடன்பிறப்புகள் யோசிக்கிறாங்க.''’’ ’’
""நானும் தேர்தல் தொடர்பான ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக் கறேன். நடைமுறைக்கு சாத்தியமில்லாத இலவச அறிவிப்புகளைக் கொண்ட தேர்தல் அறிக்கைகள் பத்தி, நம் நக்கீரன் இதழில் விரிவான கட்டுரை வந்தது. இந்த நிலையில், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சாத்தியமில்லாத பல அறிவிப்புகள் இருப்பதால் அதற்குத் தடை விதிக்கனும்ன்னு வழக்கறிஞர்கள் பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தபடி இருக்கிறார்கள். கோட்டையில் இருக்கும் தேர்தல் அதிகாரிகளோ, டெல்லிக்கு இதை யெல்லாம் அனுப்பினாலும் அவங்க அதைக் கண்டுக்கிற மன நிலையிலேயே இல்லைன்னு முணுமுணுக்கிறாங்க''’’