""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி தன் பரப்புரையில் அறிவிப்புகளா வெளியிட்டுக்கிட்டிருக்காரே?''
""அவரே போட்ட வழக்குகளை அவரே வாபஸ் வாங்குறதா அறிவிக்கிறாரு. நாளொரு தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுது.''
""அந்த லிஸ்டில் 8000 கோடி ரூபாய் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கூட்டுறவுக் கடன் பற்றிய அறிவிப்பும் வரலாம். அதேபோல் வன்னியர் சமூகத்திற்கான உள் இடஒதுக்கீட்டை வழங்கு வது தொடர்பாவும் விவாதிச்சிருக்கார். அப்ப, இதனால் மற்ற சமூகத்தின் ஆதரவை நாம் இழக்க வேண்டியிருக்கும்ன்னு ஒரு சில அமைச்சர்கள் சொன்னதால் அவர் யோசிக்கிறாராம்னும் இருக்குது.''
""காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஓ.பி.எஸ்.சுடன் சேர்ந்து அடிக்கல் நாட்டியிருக்கிறாரே எடப்பாடி?''
""அந்த நிகழ்ச்சிக்கு வந்த போது எடப்பாடிக்கு காய்ச்சல் இருந்ததால ரொம்ப கவனமா இருந்தாரு. பொற்கொல்லர் மாநாட்டில் கலந்துக்க வேண்டிய ஓ.பி.எஸ், நிகழ்ச்சியை ரத்து செய்ததால், எடப்பாடியை அழைக்க அந்தத் தரப்பு முயற்சி செய்திருக்கு. காய்ச்சல் இருந்ததால அவர்களையும்
""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி தன் பரப்புரையில் அறிவிப்புகளா வெளியிட்டுக்கிட்டிருக்காரே?''
""அவரே போட்ட வழக்குகளை அவரே வாபஸ் வாங்குறதா அறிவிக்கிறாரு. நாளொரு தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுது.''
""அந்த லிஸ்டில் 8000 கோடி ரூபாய் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கூட்டுறவுக் கடன் பற்றிய அறிவிப்பும் வரலாம். அதேபோல் வன்னியர் சமூகத்திற்கான உள் இடஒதுக்கீட்டை வழங்கு வது தொடர்பாவும் விவாதிச்சிருக்கார். அப்ப, இதனால் மற்ற சமூகத்தின் ஆதரவை நாம் இழக்க வேண்டியிருக்கும்ன்னு ஒரு சில அமைச்சர்கள் சொன்னதால் அவர் யோசிக்கிறாராம்னும் இருக்குது.''
""காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஓ.பி.எஸ்.சுடன் சேர்ந்து அடிக்கல் நாட்டியிருக்கிறாரே எடப்பாடி?''
""அந்த நிகழ்ச்சிக்கு வந்த போது எடப்பாடிக்கு காய்ச்சல் இருந்ததால ரொம்ப கவனமா இருந்தாரு. பொற்கொல்லர் மாநாட்டில் கலந்துக்க வேண்டிய ஓ.பி.எஸ், நிகழ்ச்சியை ரத்து செய்ததால், எடப்பாடியை அழைக்க அந்தத் தரப்பு முயற்சி செய்திருக்கு. காய்ச்சல் இருந்ததால அவர்களையும் சந்திக்க அனுமதிக்கலையாம்.''
""எம்.எல்.ஏ.க்கள் மேலேயும் எடப்பாடிக்கு சந்கேகம் இருக்குதாமே?''
""தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்ட சிலர் தி.மு.க.வுடன் டீலிங்கில் இருப்பதாக எடப்பாடிக்குத் தகவல். சத்யா மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு தன் சொந்தக் காசில் கொடைக்கானலில் இடம் வாங்கி கொடுத்த எடப்பாடி, அண்மையில் அங்கே சொகுசு வீடுகள் கட்டிக்கொள்ள அவர்களுக்குத் தொகையும் கொடுத்தாராம். அப்படியிருந்தும் வேலையைக் காட்டுறாங்கன்னு எடப்பாடி டென்ஷனானதா அவர் தரப்பிலேயே சொல்றாங்க.''
""ஜெ சமாதியை மறுபடியும் எப்ப திறக்கப் போறாங்களாம்?''
""கண்காட்சி அரங்கம் ரெடியானதும் பிப்ரவரி 24 ஜெ. பிறந்தநாளில் மறுபடியும் திறக்கப்படும்னு சொல்லப்பட்டிருந்தது. ஆனா, சசி என்ட்ரி ஆகிவிடக்கூடாது என்பதால், சமாதி திறப்பை ஒத்திபோட்டுட்டு, கட்சி அலுவலகத்தில் இருக்கும் ஜெ. சிலைக்கு மாலை போட்டு மரியாதை செலுத்திடலாம்னு எடப்பாடி சொன்னாராம். அதே நேரம் அ.ம.மு.க. தரப்பிலோ, அப்போலோ ட்ரீட்மெண்ட் சமயத்தில் ஜெ.வும் சசியும் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டு அதிர வைக்கத் திட்டமிடுதாம். அதோடு, கூவத்தூர் முகாமில் எடப்பாடி தரப்பு சம்பந்தமான வீடியோவும் வெளியாகுமாம். ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, எடப்பாடிக்கு எதிரா உருக்கமாவும் கண்ணீர் விட்டும் பேட்டி கொடுக்கப் போறாராம்.''
""பொள்ளாச்சி விவகாரத்திலும் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி அதிகமா இருக்குதே?''
""ஆமாங்க தலைவரே.. பெண்களைக் கடத்திய கார் இப்ப சி.பி.ஐ.யிடம் சிக்கியிருப்பதை ஆதாரத்தோடு நம்ம நக்கீரன் வெளியிட்டது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட ஸ்டாலினும் நக்கீரன் செய்தியைக் குறிப்பிட்டுப் பேசினாரு. சி.பி.ஐ. பிடி, பொள் ளாச்சி வி.ஐ.பி.யை நோக்கி இறுகுதாம். அதனால அவரை காங்கேயத்தில் நிறுத்த நினைச்ச எடப்பாடி, சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், பொள்ளாச்சியிலேயே நில்லுங்க. தலைவிதிப்படி நடக்கட்டும்னு சொல்லிட்டாராம். பொள்ளாச்சி வி.ஐ.பி. மேலே பெண்கள் செம கோபத்தில் இருக்காங்க.''
""சசிகலா எப்படி இருக்கிறார்?''
""இப்போதைக்கு சைலண்ட் மோடுக்குப் போயிட்டாரு. எதிர் பார்த்த அளவுக்கு அ.தி.மு.கவில் சப்போர்ட் இல்லை. அமலாக்கத் துறை அவருக்குச் சொந்தமான ஏறத்தாழ 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை முடக்கிவிட்டது. வெளிநாடுகளில் நடராஜன் மூலம் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துக்கள் மட்டும்தான் இப்போது வருவாய் ஆதாரங்களாக இருக்கிறனவாம். அதையும் சசிகலா இழக்க விரும்பவில்லை. அதனால், கொஞ்ச நாள் அதிரடி எதிலும் இறங்காமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறாராம்.''
""தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு சீட் எண்ணிக்கை கன்ஃபார்ம் ஆயிடிச்சா?''
""போன தேர்தல் அளவுக்கு 41 சீட்டுன்னு எதிர்பார்த்த காங்கிரஸ் தலைமையிடம், 15 சீட்டுகள் வரைதான் தரமுடியும்னு தி.மு.க சொல்லிடிச்சி. ப.சி., உள்ளிட்ட முக்கிய தலைவர்களோ, எண்ணிக் கையைவிட வின்னிங் தான் முக்கியம்னு சொன்னதால, ராகுலும் ஏற்றுக் கொண்டிருந்தார். ஆனா இப்ப டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சீனியர்கள் ராகுலிடம், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க நிற்கும் இடங்களைவிட நாம் குறைவாக நின்றால் அது கட்சியின் இமேஜை பாதிக்கும்னு சொல்றதால, தி.மு.க.விடம் மீண்டும் அதிக சீட் கேட்கணும்னு ராகுல் பிடிவாதமா இருக்காராம்.''
""பா.ஜ.க. ஏரியாவில் நடப்பதை நான் சொல்றேன். அங்கே 34 புதிய குழுக்களை உருவாக்கி தேர்தல் வேலையை வேகப்படுத்தியிருக்காங்க. தேர்தல் நிர்வாகக் குழு, தேர்தல் அறிக்கைக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, மீடியாக் குழு, விளம்பரக் குழுன்னு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த குழுக்களில் தலா 4 பேர் வரை இருப்பாங்களாம். எல்லாத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் 13 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில் பா.ஜ.க.வுக்கு அழைக்கப்பட்ட, பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷிடமும், தமிழக பா.ஜ.க.வின் ஆர்கனைசிங் செக்ரட்டரி கேசவ விநாயகத்திடமும் அமித்ஷா ஒப்படைத்திருக்கிறாராம். கடந்த வாரம் கோவையில் நடந்த, இந்தக் கமிட்டிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்ட இருவரும் தேர்தல் பாடம் நடத்த, அதை மாநில பா.ஜ.க. தலைவரான முருகன் உன்னிப்பா கவனிச்சாராம்.''