""ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் மத அரசியலை எப்படியாவது உருவாக்கிடணும்னு படாதபாடு படுறாங்களே?''

""ஆமாம்பா, கறுப்பர் கூட்டத்தின் கந்த சஷ்டி கவசம் வீடியோவோடு தி.மு.க.வை கோர்த்துவிட இந்துத்வா சக்திகள் படுமும்முரமா முயற்சி செய்யுதே?''

""முரசொலியில் தி.மு.க. தலைவர் மு.க..ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய உங்களில் ஒருவன் கடிதத்தில், பிற்பட்டோருக்கான 69% இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கான 3.5% போக, மீதமுள்ள 65.5% இடஒதுக்கீட்டையும் பெரும்பான்மை மதமான இந்து மதத்தினருக்கு ஒதுக்கியது தி.மு.க.தான்னும், இன்னைக்கு ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் மருத்துவர்கள், பொறியாளர் கள்ன்னு உருவாவதற்கு கலைஞரின் சமூக நீதிக் காரணம்னு அதே நேரத்தில், மத்திய அரசின் சார்பிலான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் பா.ஜ.க.தான் இந்து விரோதின்னும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இந்துக்களைக் கொச்சைப்படுத்தியதும் பா.ஜ.க.தான்னும் போட்டுத் தாக்கியிருக்காரே.''

stalin

Advertisment

""பா.ஜ.க. தொடர்ந்து மத அரசியலை வச்சித் தானே விளையாடுது.''

""தி.மு.க. ஆட்சிக்கு வந்திடக் கூடாதுன்னு பா.ஜ.க. ப்ளான் போட்டு வேலை செய்யுது. அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் இருக்கிற செல்வாக்கையும் டெல்லித் தலைமை தெரிஞ்சி வச்சிருக்கு. ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஒன்றுக்கு மேற்பட்ட தலைமையும், மந்திரிகள் பலர் முதல்வர் போலவே செயல்படுவதாலும் அதை பா.ஜ.க. தலைமையால் முழுசா நம்பமுடியலை. அதனால் தி.மு.க.வை எதிர்த்தபடியே அதை எப்படியாவது தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துடனும்ங்கிற முயற்சியும் ஒரு பக்கம் நடக்குது. அதனால் ரெய்டு பயம் காட்டி, தி.மு.க. பெரும்புள்ளிகளின் வீக் பாயிண்டுகளை டச் பண்ணுது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடர்பான விவகாரங்கள், அவர் நிறுவனத்தின் இலங்கை முதலீடுகள் இதையெல்லாம் பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பதை ஏற்கனவே பேசியிருக்கோம்.''

""ம்...''

Advertisment

""அதோட நாம் ஏற் கனவே பேசிக்கிட்ட மாதிரி, காவல்துறை அதிகாரியான ஜாபர் சேட் டிரான்சாக்ஷன் குறித்தும் ஜெகத்துக்கு கடுமையான சிக்கலாம். அதைப் புரிஞ்சிக்கிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு அவரை கெய்டு பண்ண ஆரம்பிச்சிருக்கு தாம். மேலும் பா.ஜ.க. வோடு தி.மு.க. மனப் பூர்வ மாகக் கைகொடுக்க முன் வந்தால், பல சிக்கல்கள் தீரும்னு அவருக்கு அறிவுறுத் தப்பட்டிருக்குதாம். அதேபோல் சித்தரஞ்சன்தாஸ் சாலையில் உள்ள குடும்ப உறவுகள் மூலமும் ஆடிட்டர் தரப்பு மூவ் பண்ணுதாம்.''

""இதற்கு பா.ஜ.க. தலைமையின் ரெஸ்பான்ஸ் என்னவாம்?''

""கடந்தவாரம், ஆடிட்டர் தரப்பு ஜெகத்துக்கு அமித்ஷாவிடம் அப்பாயின்மெண்ட் வாங்கிக் கொடுத்திருக்கு. இதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலுவோடு போய் அமித்ஷாவை சந்திச்சிருக்கார் ஜெகத். அப்ப அமித்ஷா, தமிழ்நாட்டின்மீது மோடிஜி ரொம்பவும் அக்கறைவச்சிருக்கார். அதனால்தான் அவர் திருக்குறளை அடிக்கடி கையில் எடுக்கிறார். ஆனால் தி.மு.க.வோ, மோடிஜியின் ஒட்டுமொத்த இமேஜையும் ஸ்பாயில் பண்ற மாதிரியே செயல்படுதுங்கிற வருத்தம் அவருக்கு இருக்குதுன்னு சொல்லியிருக்கார். அதேபோல் பிரசாந்த் கிஷோர், தி,மு.க.வை பா.ஜ.க.வுக்கும் இந்துமதத்தினருக்கும் எதிரா இயக்கப் பார்க்கிறாருன்னும் அமித்ஷா குறைபட்டிருக்கார்.''

dd

""ஓ...''

""இந்த வாரம் இரண்டாவது சந்திப்பும் நடந்திருக்கு. இதில் தி.மு.க. சைடில் ஆ.ராசாவும் இணைந்திருந்தாராம். டெல்லியில் தி.மு.க மூவ் பற்றி அங்குள்ள சீனியர் அரசியல் தலைவர்களைக் கேட்டப்ப, எம்.பி.யா இருக்கிறதால மத்திய அமைச்சரின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதும் சந்திப்பதும் இங்கே வழக்கம்தான்னு சொல்றாங்க. அதே நேரத்தில், தமிழகத்தில் பகை-டெல்லியில் உறவுன்னும் பேச்சு கிளம்பியிருக்கு. ஸ்டாலினைப் பொறுத்தவரை, பா.ஜ.க. எதிர்பார்க்கும் வகையில் எந்தவித ரீயாக்ஷனையும் இதுவரை காட்டலை.''

""தி.மு.க.-பா.ஜக. மூவ்களை அ.தி.மு.க. எப்படி பார்க்குது?''’’

""ஒரே கூட்டணியில் இருந்தாலும் நாங்க வேற கட்சி, பா.ஜக. வேற கட்சின்னு அ.தி.மு.க. அமைச்சர் காமராஜ் சொல்ல வேண்டிய நிலைமை வந்திருக்குது. கொரோனா கட்டுப்பாடு தொடர்பா 19- ந் தேதி எடப்பாடியைத் தொடர்பு கொண்ட மோடி, எடுத்த எடுப்பிலேயே, தமிழகத்தின் கொரோனா ரிப்போர்ட்டை எடுத்துச் சொல்லி அதிருப்தி தெரிவித்து, நோய்த்தொற்றும் மரணங்களும் அதிகரிப்பதைப் பற்றி காரமான குரல்லயே பேசியிருக்காரு. கிட்டத்தட்ட ஒரு விசாரணையை போலவே மோடியின் வார்த்தைகள் இருந்ததாம். எடப்பாடி ரொம்பவும் பவ்யமா, கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துச் சொல்லி, ஜூலைக்குள் நிலைமை ஓரளவு சரியாயிடும்னும், மத்திய அரசும் மருத்துவத்துறையும் சொல்லும் வழிகாட்டு நெறிகளின்படிதான் செயல்படறோம்னும் சொல்லியிருக்கார்.''

""கொரோனா ரிப்போர்ட் போல ஊழல் ரிப்போர்ட்டும் மோடி கையில் இருந்திருக்குமே?''

""ஆமாங்க தலைவரே, கொரோனா உபகரணக் கொள்முதல் பற்றிய சர்ச்சைகளை சீரியசாக நினைவூட்டிய மோடி, "பாரத் நெட் டெண்டர்' விவகாரங்கள் பற்றியும் கேள்வி எழுப்பியிருக்கார். எடப்பாடியிடம் சரியான பதில் இல்லை. எரிச்சலான மோடி, உங்க குளறுபடிகளால்தான் அந்த டெண்டர்களை ரத்து செய்தோம். இனி, மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் அந்தத் திட்டத்தை நாங்க செயல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குன்னு சொல்லி, எடப்பாடியை ரொம்பவே அப்செட்டாக்கிட்டாராம்.''

""இந்த அதிருப்தி நேரத்தில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா, பிரதமர் மோடி அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறாரே?''

""ஆமாங்க தலைவரே, அங்கிருந்த படியே தமிழக அரசை கவனிக்கவும் கண்காணிக்கவுமான பொறுப்பு அமுதா ஐ.ஏ.எஸ்.சிடம் கொடுக்கப்பட இருக்குதாம். பொதுவாக, மத்திய அரசு பதவிகளுக்குப் போகும் அதிகாரிகள்தான் முதல்வரை சந்திச்சி வாழ்த்துப் பெறுவாங்க. ஆனா, அந்தப் பணிக்கு நியமன மான அமுதாவுக்கு முதல்வரும் துணை முதல்வரும் தாமாக முன்வந்து வாழ்த்து சொல்லியிருக்காங்கன்னு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் டாக் அடிபடுது.''

""சரிப்பா, மோடி ஒரு பக்கம் திருக்குறளின் பெருமையை கையில் எடுக்கறார். ஆனால் அவர் தலைமையில் இருக்கும் பா.ஜ.க. அரசோ, மத்திய கல் வித் திட்டமான சி.பி.எஸ்.இ.யில் இருந்து திருவள்ளுவர் பாடத்தை நீக்குதே?''

""உண்மைதாங்க தலைவரே, லடாக்கில் ராணுவ வீரர்களை சந்திச்சப்பகூட திருக்குறளை மேற்கோள் காட்டினார் மோடி. இதுக்காகவே வாரம் தோறும் சனி, ஞாயிறில் தலா 1 மணி நேரம் அவர் திருக்குறளைப் படிக்கிறாராம். ஆனா மத்திய அரசின் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திலோ திருக்குறளை மட்டுமல்லாது குடியுரிமை, ஜனநாயகம், மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்களையும் கொரோனா கால சுமையாகச் சொல்லி நீக்கியிருக்காங்க. தமிழ்நாட்ல, ராமரைவிட முருகன்தான் ஸ்பெஷல்ங்கிறதும் மோடிக்கு சொல்லப்பட்டிருக்கு. அதனால்தான் இப்ப முருகன் மீது கவனம் திரும்பியிருக்கு. மோடியைப் பொருத்தவரை எப்படியாவது தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கனும் என்பதுதான் ஒரே குறிக்கோள்.''

""இந்தியாவில் ராமனை வச்சி அரசியல் பண்ற மாதிரி இப்ப இலங்கை அரசு ராவணனை கைல எடுத்திருக்கே?''

rr

""இலங்கையில் யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இன்னும் சரியாகலை. அதை ஈடுகட்ட, சுற்றுலாத்துறையைத்தான் கோத்தபயாவும் மகிந்தாவும் நடத்துற இலங்கை அரசு நம்புது. முன்பெல் லாம் தாய்லாந்துக்கு உல்லாசப்பயணம் போன இந்தியர்களின் கவனம் இப்ப இலங்கைப் பக்கம் திரும்பியிருப்பதால், அவர்களை அதிகமாக ஈர்க்கும் முயற்சி களும் நடக்குது. இந்த நேரத்தில் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி, ராமன் பிறந்த அயோத்தி, எங்க நாட்லதான் இருக்குன்னு சொல்ல, இலங்கையோ, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வானத்தில் விமானத்தில் பறந்த முதல் மனிதன் ராவணன்தான்னு பெருமிதத்தோடு அறிவிச்சிருக்கு. மேலும் தனது நாட்டு ஏவுகணைக்கு ராவணான்னு பெயர் சூட்டியதோடு, புராண ராவணன் பறந்த வான்வெளித் தடத்தைக் கண்டுபிடிச்சிக் கொடுங்கன்னும் ராவணனின் பெருமைகள் பற்றிய ஆதாரத் தகவல்களைப் பகிர்ந்துக்கங்கன்னும் அரசுத்துறை சார்பில் பொதுமக்களுக்கான விளம்பரமே வெளியிடப்பட்டிருக்கு. இதெல்லாம் இந்தியாவை சீண்டுற வேலையா நம்ம வெளியுறவுத்துறை பார்க்குது.''

""ரஜினி அரசியலுக்கு வருவாருங்கிற எதிர்பார்ப்பும் மறுபடியும் தூண்டப்படுதே?’’

rr

""ரஜினி தினமும், காரில் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்குப் போய், இரவில் திரும்பறது பத்தி நம் நக்கீரனில்தான் முதன்முதலில் பதிவு செய்திருந்தோம். 20-ந் தேதியன்னைக்கு லாம்போர் கினிகாரை அவர் ஓட்டிச் சென்ற புகைப்படம் வைரலானது. 6 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் கார் அவரது இரண்டாவது மகளின் கணவரான விசாகனுடையது. மகள் சௌந்தர்யாவும், மருமகன் விசாகனும் வலியுறுத்தியதால் பண்ணை வீட்டுக்கு ஓட்டிட்டுப் போயிருக்கிறார் ரஜினி. தனது அரசி யல் நடவடிக்கைகளை நவம்பரில் இருந்து துவக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வருது.''

""சென்னை மாவட்டத்துக்கு வெளியே உள்ள கேளம்பாக்கத்துக்கு கார் ஓட்டிச் செல்ல இ-பாஸ் வாங்கினாரா ரஜினிங்கிற கேள்வியும் வெளிப்பட்டிருக்கே?''

""அதுபற்றி விசாரித்து சொல்லப்படும்னு மீடியாக்கள்கிட்டசென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் சொல்லியிருக்காரு. கந்த சஷ்டி விவகாரம் தொடர்பா, கறுப்பர் கூட்டம் மீதான நடவடிக் கைக்காக மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்து, கந்தனுக்கு அரோகரான்னு ரஜினி ட்வீட் போட்டி ருந்தாரு. பெரியார் சிலை மீதான தாக்குதலுக்கு அவரோட ட்வீட்டர் பக்கம் சைலண்ட்டா இருந் தது. அதனால திராவிட அரசியலுக்கு எதிரான ஆன்மீக அரசியலை தேர்த லுக்கு முன்னாடி ஆரம்பிப் பார்னு அவருக்கு நெருக்கமா இருக்கிறவங்களும் நெருக்கடி தர்றவங்களும் சொல்றாங்க.''

""நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை ஆகஸ்டில் தொடங்குவதற்காக மூவ்கள் தெரியுதே?''

r

""கொரோனாவால் கூட்டத் தொடர் நடைபெறாத நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துவது பற்றி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவோடும், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவோடும் ஆலோச்சிச்சிருக்கார் மோடி. இந்தக் கூட்டத் தொடரில் சில முக்கிய மசோதாக்களுக்கு இரு அவையிலும் ஒப்புதல் பெற வேண்டிய நிலை இருக்கு. இந்த நிலையில், 22-ந் தேதி ராஜ்யசபா வுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணியின் 2 எம்.பிக்கள் உள்பட தேர்வான 62 பேரில் பெரும் பாலானோர் அன்று பதவி ஏற்றுக்கிட்டாங்க.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்... அண்மைக்காலமா அரசு தொடர்பான காரியங்களைச் சாதிச்சிக்கிறதுக்கு, பலரும் ஓடறது பிரகதீஷ் என்கிற ஒரு பெரும்புள்ளியை தேடித்தானாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மலேசியாவில் மதுபானத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவராம். ஆட்சியாளர்களின் பல முதலீடுகள், இவர் மூலம் மலேசியாவில் ரகசியமாக நடக்குதாம்.''