ஹலோ தலைவரே, தேர்தல் நெருக்கத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க நிர்வாகியை சி.பி.ஐ. கைது செய்ததுபோல, குட்கா ஊழல் வழக்கிலும் அமலாக்கத்துறையின் அதிரடிக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கி இருக்குதே''’’
""ஆமாம்பா, அ.தி.மு.க. மாஜி மந்திரி பி.வி.ரமணா காலத்தில்தான் குட்கா ஊழலுக்கே பிள்ளையார் சுழி போடப்பட்டது. அப்புறம் விஜயபாஸ்கர் பொறுப்பில் கொடி கட்டிப் பறந்தது. இப்ப முதல் கட்டமா ரமணா மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்காங்களே?''’’
""ஆமாங்க தலைவரே... தேர்தல் வரப்போகும் இந்த நேரத்தில் குட்கா வழக்கைத் தீவிரமாக்கினால், அது அ.தி.மு.க. தரப்புக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்னு மத்திய பா.ஜ.க. அரசு எதிர்பார்க்குது. அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருந்தாலும், தாங்கள் நிற்கும் தொகுதிகளில் வெற்றிகிடைத்தால் கூட போதும் என்பதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடாம். அதனால், ஊழலில் கரைகண்ட அ.தி.மு.க. புள்ளிகள் மீது, அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்து, தங்களை நேர்மையின் தூதுவர்களாகக் காட்டிக்க பா.ஜ.க. திட்டமிடுதாம். ஜனவரி இறுதியில் ஆரம்பிச்சி பிப்ரவரி 15-ந் தேதிக்குள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலரையும், ரெய்டு நடவடிக்கையால் கதிகலங்க வச்சிடனும்னு ரூட் போடுதாம் டெல்லி’''’
""அந்த வகையில்தான் மாஜி மந்திரி ரமணாவுக்கு முதலில் ஷாக் டிரீட்மெண்ட்டா?''’’
""ஆமாங்க தலைவரே... திருவள்ளூர் மாவட்ட ஆளுந்தரப்பு அரசியலில் இப்போதும் அவருக்கு தனி செல்வாக்கு இருக்குது. அ.தி.மு.க.வுக் குள்ளேயே அவருக்கு ஆதரவும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. அவரது குட்கா ஊழல் பணம், எங்கெங்கே முதலீடு செய்யப் பட்டிருக்குன்னு அமலாக்கத்துறை கிண்டிக் கிளறுச்சு. அதன் அடிப்படையில், அவர் மீதும், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால்வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், மற்றொரு கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணாகுமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 30 பேர் மீதும் முதல்கட்ட குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் பண்ணியிருக்கு. அடுத்ததா இந்த விவகாரத்தில் தொடர்புடைய
ஹலோ தலைவரே, தேர்தல் நெருக்கத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.க நிர்வாகியை சி.பி.ஐ. கைது செய்ததுபோல, குட்கா ஊழல் வழக்கிலும் அமலாக்கத்துறையின் அதிரடிக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கி இருக்குதே''’’
""ஆமாம்பா, அ.தி.மு.க. மாஜி மந்திரி பி.வி.ரமணா காலத்தில்தான் குட்கா ஊழலுக்கே பிள்ளையார் சுழி போடப்பட்டது. அப்புறம் விஜயபாஸ்கர் பொறுப்பில் கொடி கட்டிப் பறந்தது. இப்ப முதல் கட்டமா ரமணா மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்காங்களே?''’’
""ஆமாங்க தலைவரே... தேர்தல் வரப்போகும் இந்த நேரத்தில் குட்கா வழக்கைத் தீவிரமாக்கினால், அது அ.தி.மு.க. தரப்புக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்னு மத்திய பா.ஜ.க. அரசு எதிர்பார்க்குது. அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருந்தாலும், தாங்கள் நிற்கும் தொகுதிகளில் வெற்றிகிடைத்தால் கூட போதும் என்பதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடாம். அதனால், ஊழலில் கரைகண்ட அ.தி.மு.க. புள்ளிகள் மீது, அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்து, தங்களை நேர்மையின் தூதுவர்களாகக் காட்டிக்க பா.ஜ.க. திட்டமிடுதாம். ஜனவரி இறுதியில் ஆரம்பிச்சி பிப்ரவரி 15-ந் தேதிக்குள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலரையும், ரெய்டு நடவடிக்கையால் கதிகலங்க வச்சிடனும்னு ரூட் போடுதாம் டெல்லி’''’
""அந்த வகையில்தான் மாஜி மந்திரி ரமணாவுக்கு முதலில் ஷாக் டிரீட்மெண்ட்டா?''’’
""ஆமாங்க தலைவரே... திருவள்ளூர் மாவட்ட ஆளுந்தரப்பு அரசியலில் இப்போதும் அவருக்கு தனி செல்வாக்கு இருக்குது. அ.தி.மு.க.வுக் குள்ளேயே அவருக்கு ஆதரவும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. அவரது குட்கா ஊழல் பணம், எங்கெங்கே முதலீடு செய்யப் பட்டிருக்குன்னு அமலாக்கத்துறை கிண்டிக் கிளறுச்சு. அதன் அடிப்படையில், அவர் மீதும், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்முருகன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார், கலால்வரித்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், மற்றொரு கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், ஆந்திராவை சேர்ந்த அருணாகுமாரி, சூரிய புஷ்பாஞ்சலி உள்ளிட்ட 30 பேர் மீதும் முதல்கட்ட குற்றப் பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் பண்ணியிருக்கு. அடுத்ததா இந்த விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய காவல்துறை அதிகாரிகளையும், அதில் பெரிதாக கேம் ஆடிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் தனது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கு''’’
""அமைச்சர் விஜயபாஸ்கரின் பி.ஏ.க்களையும் அமலாக்கத்துறை தீவிரமாகக் குறிவச்சிருக்குதே?''’’
""உண்மைதாங்க தலைவரே... அமைச்சர் விஜயபாஸ்கரும் அவர் பி.ஏ.க்களும் இந்த விவகாரத்தில் ஏகத்துக்கும் புகுந்து விளையாடி இருக்காங்களாம். அமலாக்கத்துறையால் குறி வைக்கப்பட்ட விஜயபாஸ்கரின் பி.ஏ.க்களில் ஒருவர், அவர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் எண் ணத்தில், முதலில் தாடி மீசையோடு திரிஞ்சிருக்கார். அப்புறம் மொட்டை போட்டுக்கிட்டு தன் தோற்றத்தையே முழுசா மாற்றிக்கிட்டாராம். அப்படியும் அமலாக்கத்துறையினர் துரத்தியதால், இப்ப அவர் வீட்டைவிட்டே எஸ்கேப் ஆயிட் டாராம். அதனால் அவர் குடும்பத்தினர் பெரும் பதட்டத்துக்கு ஆளாகி இருக்காங்களாம். அவரை மடக்கினால் விஜயபாஸ்கரின் முக்கிய ரகசியங் களை எல்லாத்தையும் டிரேஸ் பண்ணிடலாம்னு, அமலாக்கத்துறை அவரைத் தீவிரமாகத் துழாவிக்கிட்டு இருக்குதாம்''’’
""தமிழக அமைச்சர்களுக்கு டெல்லி தரும் நெருக்கடியில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சிக்கியிருக்காராமே?''’’
""உண்மைதாங்க தலைவரே... அமைச்சர் வேலுமணி மீது "அறப்போர் இயக்கம்' தொடர்ந்த ஊழல் வழக்கு, அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்குப் போய்க்கிட்டு இருக்கு. அதேபோல், அவர் மீதான ஊழல் விவகாரத்தை இப்ப லஞ்ச ஒழிப்புத்துறையும் தீவிரமாகத் துருவுது. இது தொடர்பாக எடப்பாடியைத் தொடர்பு கொண்ட டெல்லி, வேலுமணியை காப்பாற்றும் வகையில் செயல்படக் கூடாதுன்னு எச்சரிக்கை பண்ணியிருக்குதாம். இதனால் ஒரு வகையில் எடப்பாடி அப்செட்டா இருந்தாலும், இன்னொரு வகையில், கட்சிக்குள்ளேயே தனக்குப் போட்டி யாளர்களாக உருவெடுத்து வந்த விஜயபாஸ்கரும், வேலுமணியும் இப்ப சட்டத்தின் கிடுக்கிப்பிடியில் சிக்கியிருப்பதை, மனதிற்குள்ளேயே ரசிக்கிறாராம்’''’
""ஆளுங்கட்சி மந்திரிகளை மட்டுமின்றி, எதிர்க்கட்சியான தி.மு.க.வின் முன்னாள் மந்திரிகள் உள்ளிட்ட பிரமுகர்களையும் அமலாக்கத்துறை குறிவைக்குதாமே?''’’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே... தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சரான ஜெகத்ரட்சகனை கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.க. மேலிடம் தோண்டித் துருவிக்கிட்டிருக்குது. இது பற்றி நாம பலமுறை பேசி நம்ம நக்கீரனிலும் வந்திருக்குது. இப்பவும் அவர் மீதான பிடி இறுகுதுன்னு சொல்லும் டெல்லித் தரப்பு ஜெகத்ரட்சகனின் சமீபத்திய அரசியல் அதிரடி சம்பந்தமா தன்னோட கோணத்திலிருந்து ஒரு தகவலையும் சொன்னது.’''’
""என்ன தகவல்?''’’
""ஜெகத்ரட்சகனை நோக்கி அமலாக்கத் துறையின் மூவ்கள் இருப் பதைத் தெரிஞ்சிக்கிட்ட தி.மு.க. தலைமை, அது பற்றித் தீவிர மாக ஆலோ சித்தது. அப்போது தி.மு.க.வின் ஆலோசனை டீமான ஐபேக், "இதேபோல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீதும் அமலாக்கத்துறை வழக்குகள் இருந்தது. அவர் ஆந்திர முதல்வரானதும், அந்த வழக்குகளை எல்லாம் அவரால் மேனேஜ் பண்ண முடிஞ்சிது. அதனால் ஜெகத்தை புதுவை மாநில முதல்வர் வேட்பாளராகக் கொண்டு செல்லலாம்'னு ஆலோசனை சொன்னதாம். அதனால்தான், புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சின்னு ஜெகத்தை தி.மு.க. தரப்பு முன்னிறுத்தியதா டெல்லித் தரப்பு நினைக்குது. ஆனா, புதுச்சேரி அரசியலில் ரொம்ப காலமா பாடுபடுற லோக்கல் தி.மு.க. புள்ளிகளுக்கு ஜெகத் வருகை அத்தனை உற்சாகமா இல்லையாம். சித்தரஞ்சன் சாலையிலும் ஜெகத்துக்கு பிரேக் போடப்படுதாம்.’’
""55 நாட்களுக்கு மேல டெல்லி குளிரை தாங்கிக்கிட்டு விவசாயிகள் போராடிக்கிட்டிருக்கிற நேரத்தில், மத்திய பா.ஜ.க. அரசு தனது பட்ஜெட் டைத் தாக்கல் செய்ய தயாராகிக் கிட்டு இருக்குதே... வேளாண் சட்டங்கள் தொடர்பா மறுபரிசீலனை செய்யுமா?''’’
""தலைவரே, 2021-க்கான முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர், வர்ற 29-ந் தேதி தொடங்குது. இதையொட்டி மோடி அரசு தனது பட் ஜெட்டை 1-ந் தேதி தாக்கல் செய்யப் போகுது. இதற்கான தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன். ஏப்ரல், மே மாதங்களில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடக்கப்போவதால், வாக்காளர்களைக் கவரும் வகையில் சில முக்கிய சலுகை அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் மோடி அரசு அறிவிக்கப் போகுதாம்''’’
""இங்குள்ள எடப் பாடி அரசும் பட்ஜெட் கூட்டத்தை நடத்தி யாகணுமே?''’’
""ஆமாங்க தலைவரே... இந்தாண்டு தேர்தல் காலம் என்பதால் தமிழக அரசால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். இதை பிப்ரவரியில் தாக்கல் செய்வதற்கு வசதியாக, ஜனவரி இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டமன்றத்தைக் கூட்டணும்னு நினைச்ச எடப்பாடி, இது தொடர்பாக கவர்னர் பன்வாரி லால் புரோகித்துக்கு ஏற்கனவே நோட் அனுப்பி யிருந்தார். ஆனால் இதுவரை அவரிடமிருந்து எந்த விதமான பதிலும் வரலை. அதனால் தலைமைச் செயலாளர் சண்முகம், தற்போது ராஜ்பவனைத் தொடர்பு கொண்டு நினைவூட்டியிருக்கிறாராம். கவர்ன ரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் எடப்பாடி அரசு, தானும் தன் பங்கிற்கு வாக்காளர்களுக்குத் தூண்டில் போடும் வகையில், பட்ஜெட்டில் சில சலுகை அறிவிப்பு களை வெளியிடும் எண்ணத்தில் இருக்குதாம்''’’
""ஜெ’வின் நினைவிடத்தை அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24-ல் திறக்காமல், ஜனவரி 27-ந் தேதியே திறக்க இருக்கிறாரே எடப்பாடி?''’
""கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி பக்கத்தில் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள ஜெ. நினவிடத்தை திறக்க பிரதமரை அழைக்க எடப்பாடி முயற்சித்ததையும் பிரதமர் தயங்கியதையும் பற்றி ஏற்கனவே பேசியிருக்கோம். அதனால எடப்பாடியே திறக்குறதா முடிவாகி, சசிகலா விடுதலையாகிற 27-ந் தேதியையே ஃபிக்ஸ் பண்ணிட்டாரு. சசிகலாவை வரவேற்பதில் அ.தி.மு.க அமைச்சர்கள் உள்பட பலரும் ஆர்வமா இருப்பதால, அதை திசைதிருப்பும் வகையில் ஜெ.’ நினைவிடத் திறப்பை கோலாகலமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம். இதற்குத் தமிழகம் முழுதிலும் இருந்து தொண்டர்களைத் திரட்டி, கட்சியின் பலத்தை நிரூபிக்கணும் என்பதும் எடப்பாடியின் விருப்பமாம். இது குறித்து விவாதிக்கத்தான் தங்கள் கட்சி மா.செ.க்களின் கூட்டத்தை 22-ல் அவர் நடத்த இருக்கிறாராம். அதேநேரம் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், இப்படி கூட்டத்தைக் கூட்ட நினைப்பது சரிதானா?ங்கிற கேள்வி, அ.தி.மு.க. தரப்பிலேயே எழுந்திருக்கிறது''’’
""முதல்வர் எடப்பாடியின் டெல்லி விசிட் பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா படிக்கலாம். உன்கிட்டே ஏதாவது தகவல் இருக்குதா?''“
""இந்த சந்திப்பின்போது தமிழகத்துக்குக் கூடுதல் நிதி கேட்ட எடப்பாடி, அப்படியே தேர் தல் நேர சாதகத்தைச் சுட்டிக்காட்டி, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழுபேர் விடுதலை பற்றியும் கேட்டிருக்கிறார். அதற்கு மோடியும் அமித்ஷாவும், "அதுபற்றி நீங்க தனியா கவலைப்பட வேண்டாம். எல்லாத்தையும் கவர்னர் பார்த்துக்குவார்'னு சொல்லி அனுப்பிவச்சிட்டாங்களாம். மறுநாள் 20-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் நடந்த பேரறி வாளன் மனு மீதான விசாரணையில், "7 பேர் விடு தலை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா ஜனாதிபதிக்கு இருக்கிறதா'ன்னு புது ரூட்டில் குழப்ப ஆரம்பிச்சார் மத்திய அரசின் வழக்கறிஞர்.''’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந் துக்க விரும்பறேன். ஊழலில் திளைக்கும் கொங்கு பகுதி சூப்பர் அமைச்சருக்கு லஞ்சஒழிப்புத் துறையினரின் நெருக்கடி அதிகமாவதை உணர்ந்த அவரது சகோதரர், லஞ்சஒழிப்புத் துறையினருக்கே லஞ்சம் கொடுத்து சரிக்கட்ட நினைத்து, ஒரு காரில் "10 சி'’யை வைத்து, தட்சணையாக ஏற்றுக்கொள்ளும்படி பணி வோடு அனுப்பிவைத்தாராம். போனவேகத்திலேயே அந்தக் கார் ரிட்டன் ஆகிவிட்டதாம். கூடவே, "நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங் களா?'ன்னு கடும் எச்சரிக்கையும் கறார் குரலில் அவர் தரப்புக்கு விடுக்கப்பட்டிருக்குதாம். இதைச் சொல்லிச் சொல்லி, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. புள்ளிகளே சிரிக்கறாங்க.''’’
________
இறுதிச்சுற்று
ஓயாத விவசாயிகள் போராட்டம்!
வேளாண் சட்டத்துக்கெதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கி 60 நாட்களை எட்டுகிறது. தற்போதுதான் உச்சநீதிமன்றம் தலையிட்டு, வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடைவிதித்து, சட்டங்கள் குறித்து ஆராய சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கிடையில் குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்தும் டிராக்டர் பேரணிக்கு தடை கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு, அதை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. டெல்லி காவல்துறை என்பது மத்திய அரசின் அதிகாரத்தில் இருப்பதால், குடியரசு நாள் அணிவகுப்பை கருத்தில்கொண்டு விவசாயிகளைக் கட்டுப்படுத்தக்கூடும் ஜனவரி 20-ஆம் தேதியன்று நடந்த 10-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஒன்றரை வருடம் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
-.க.சு