ராங்கால் 40% அ.தி.மு.கவிடம் பா.ஜ.க. டிமாண்ட்! துணை முதல்வர் உதயநிதி?

rr

"ஹலோ தலைவரே... நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் சூழல் உருவாகியிருக்கு.''”

"கொரோனா பரவல்தான் காரணமா?''”

"அதுவும் ஒரு காரணம்தாங்க தலைவரே... பொங்கல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்திடணும்னு முதல்வர் ஸ்டாலின் நினைச்சார். ஆனால் இப்ப கொரோனாவும் ஒமிக்ரானும் வேகமாப் பரவிக்கிட்டு இருக்கு. அதனால முதல்வருக்கு தேர்தலை நடத்துவதில் தயக்கம் ஏற்பட்டிருக்கு. அதோடு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு நெருக்கடியை உண்டாக்கிடிச்சி. மாநகராட்சியில் இருக்கும் 200 வார்டுகளில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீடுபடி 100 வார்டுகளை ஒதுக்கணும். ஆனா, 2016-ல் மண்டலவாரியா பிரிச்சி ஒதுக்கியதில் மொத்தம் 105 வார்டுகளை ஒதுக்கிட்டாங்க. இது சட்டவிரோதம்னு வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டபோதும், 11-ந் தேதியன்னைக்கு உயர்நீதிமன்றம், மண்டல வாரியாக கொடுக்கப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், "மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டு அதில் 50 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குங்கள்'னு உத்தரவு போட்டது. இதனால், எல்லா வேலைகளையும் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டியிருப்பதால், தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கு.''”

rr

"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. மூணுமே வரிந்து கட்டி நின்னுச்சே?''”

"ஆமாங்க தலைவரே... அ.தி.மு.கவில் சமீபத்தில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர்களிடம் தனித்தனியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து பல்ஸ் பார்த்திருக்கிறார் எடப்பாடி. அவரை பொறுத்தவரை இந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்ட

"ஹலோ தலைவரே... நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகும் சூழல் உருவாகியிருக்கு.''”

"கொரோனா பரவல்தான் காரணமா?''”

"அதுவும் ஒரு காரணம்தாங்க தலைவரே... பொங்கல் முடிந்த கையோடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்திடணும்னு முதல்வர் ஸ்டாலின் நினைச்சார். ஆனால் இப்ப கொரோனாவும் ஒமிக்ரானும் வேகமாப் பரவிக்கிட்டு இருக்கு. அதனால முதல்வருக்கு தேர்தலை நடத்துவதில் தயக்கம் ஏற்பட்டிருக்கு. அதோடு உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கு சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு நெருக்கடியை உண்டாக்கிடிச்சி. மாநகராட்சியில் இருக்கும் 200 வார்டுகளில் பெண்களுக்கான 50% இட ஒதுக்கீடுபடி 100 வார்டுகளை ஒதுக்கணும். ஆனா, 2016-ல் மண்டலவாரியா பிரிச்சி ஒதுக்கியதில் மொத்தம் 105 வார்டுகளை ஒதுக்கிட்டாங்க. இது சட்டவிரோதம்னு வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டபோதும், 11-ந் தேதியன்னைக்கு உயர்நீதிமன்றம், மண்டல வாரியாக கொடுக்கப்பட்ட பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், "மொத்த எண்ணிக்கையை கணக்கிட்டு அதில் 50 சதவீத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குங்கள்'னு உத்தரவு போட்டது. இதனால், எல்லா வேலைகளையும் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டியிருப்பதால், தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கு.''”

rr

"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக தி.மு.க., அ.தி.மு.க, பா.ஜ.க. மூணுமே வரிந்து கட்டி நின்னுச்சே?''”

"ஆமாங்க தலைவரே... அ.தி.மு.கவில் சமீபத்தில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர்களிடம் தனித்தனியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து பல்ஸ் பார்த்திருக்கிறார் எடப்பாடி. அவரை பொறுத்தவரை இந்த தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வேண்டாம்ங்கிற மனநிலையில் இருந்தார். இதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஓ.பி.எஸ்.சிடம் பேசிய எடப்பாடி, "உள்ளாட்சி தேர்தலில் 95 சதவீத இடங்களில் தி.மு.க. போட்டியிடும்னு தெரியுது. அதனால தி.மு.க போட்டியிடுகிற எண்ணிக்கை களுக்கு ஏற்ப நாமும் போட்டியிடணும். எனவே நாம் பா.ஜ.க.வுக்கு அதிக இடங்களை கொடுத்துடக்கூடாது. அதுக்கு பா.ஜ.க. ஒத்துக்காட்டி, தனிச்சிப் போட்டியிடக் கூட நாம் தயங்கக்கூடாது'ன்னு சொல்லி யிருக்கார். ஆனால் ஓ.பி.எஸ். ஸோ, "பா.ஜ.க.வை மட்டும் எக்காரணம் கொண்டும் நாம் விட்டுவிடக் கூடாது'ன்னு அழுத்தமாச் சொல்லியிருக்கார். இந்தச் சூழலில், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதால், எடப்பாடியின் டென்ஷன் சற்று குறைந்திருப்பதாக சொல் கிறார்கள்.''”

"பா.ஜ.க.வின் வியூகம் என்னவாம்?''”

"பா.ஜ.க. வேற மாதிரி கணக்கில் இருக்குதுங்க தலை வரே. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் இல்லாததால், மொத்த இடங் களில் 40 சதவீத இடங்களை அ.தி.மு.க.விடம் இருந்து கைப்பற்றியாகணும்னு பா.ஜ.க. திட்டமிடுது. இப்படி அதிகமாக் கேட்டால்தான் குறைந்தபட்சம் 25 சதவீத இடங்களாவது கிடைக்கும் என்பது பா.ஜ.க தலை வர்களின் கணக்கு. இப்பவே, விருப்ப மனு கொடுத்தவர்களி டம் நேர்காணலை பா.ஜ.க. நடத்திவிட்டது. அதில் ஒருவர் 25 எல் ஹாட் கேஷை, நேர்காணல் செய்பவர்களின் மேஜையில் கொட்டி பரபரப்பை ஏற்படுத் திட்டாரு. சென்னை மாநகராட்சி வார்டில் நிக்கணும்னா 1 கோடி ரூபாய் வரை செலவு செய்ய ணும். அதுக்கு இப்பவே 25 லட்ச ரூபாயை டெபாஸிட்டா காட்டணும்னு அது தெம்பாவே சொல்லியிருக்குதாம்.''”

"கறுப்புப் பணத்தை ஒழிக் கிறதா மோடி அரசாங்கம் சொன் னதே... அது இப்படித்தானா?''”

"நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தல் தள் ளிப்போகப் போகுதுன்னு செய்தி வருவதால், நிம்மதியா இருப்பவர் தே.மு.தி.க.வின் பிரேம லதாதான். ஏற்கனவே அவரோட அட்வைஸ் படி தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சி மா.செ.க்கள் கலந்துரையாடினாங்க. அப்ப, "தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை'ன்னு பெரும்பாலோர் சொல்லியிருக்காங்க. ஆனால், தேர்தலில் நின்னாதான் அரசியல் பண்ணமுடி யும்னு மா.செ.க்கள் சொல்ல... "அப்படின்னா, தேர் தல் செலவுக்கு தலைமைதான் பணம் தரணும். எங்களிடம் பணம் கிடையாது. கடன் கொடுக்க வும் யாரும் இல்லை'ன்னு எல்லோரும் ஒரே மாதிரி கோரஸா வாய்ஸ் கொடுத்திருக்காங்க. அதனால்தான் தேர்தல் தள்ளிப்போகணும்னு பிரேமலதா பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருந்தாராம்.''”

"கொரோனா கட்டுப்பாடுகள் இப்போதைக்கு முடிவுக்கு வர்ற மாதிரி தெரியலையே?''”

"ஆமாங்க தலைவரே, கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்திருப்பதால் தி.மு.க. அரசு, கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கு.. அதன்படி வழிபாட்டுத் தலங்களுக்கு பொங்கல் நேரத்தில் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டிருக்கு. டாஸ்மாக் கடைகள், மால்கள், தியேட்டர்கள் போன்ற இடங்களில் எல்லாம் கொரோனாக் கட்டுப்பாடுகள் மீறப்படுது. அதையெல்லாம் மூடாமல், வழிப்பாட்டுத் தலங்களுக்கு மட்டும் தடை விதிக்க லாமான்னு பெண் பக்தர்கள் கேள்வி எழுப்புறாங்க. தி.மு.க.வை இந்துவிரோதக் கட்சியா விமர்சனம் செய்யும் பா.ஜ.க. தரப்பு, இதைப் பயன்படுத்திக்க தீவிரமா ஆலோசிக்குதாம். இது தி.மு.க அரசுக்கும் தெரியவர... "வைகுண்ட ஏகாதசி நாளில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி உண்டு' என அறிவிக்கப்பட்டது.''”

"ம்...''”

"தலைவரே... ஆனானப்பட்ட ஜெயலலிதாவையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர் சசிகலா. இப்போது அவரே, தனது அண்ணி இளவரசியின் மகன் விவேக்கோட கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் தரப்பே சொல்கிறது. அண்மைக்காலமாக சசிகலாவை சந்திக்கவேண்டும் என்று அவரது உதவியாளர் கார்த்தியை யார் அணுகினாலும், "விவேக்கிடம் அனுமதி பெற்று வாருங்கள்' என்கிறாராம். இதைப்பார்த்த பலரும், "சசிகலாவுக்கு என்ன ஆச்சு?' என்று குழம்புகிறார்கள். இந்த நிலையில், ஜெ.’ இறந்த பிறகு மட்டும் சசிகலா 158 நிறுவனங்களைத் தொடங்கி, பெரிய அளவில் முதலீடு செய்திருப்பதாக வருமானவரித்துறை தோண்டித் துருவிக் கண்டறிந்திருக்கிறது.''”

"உளவுத்துறை ஐ.ஜி.யாக பெண் அதிகாரி முதன்முதலில் நியமிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பாராட்டு பெற்றிருக்கே?''”

rr

"ஆனா, முதல் பெண் ஐ.ஜி.யாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டிருப்பது பற்றி காவல்துறை வட்டாரத்தினர், "ஆற்றல் மிகுந்த அதிகாரிகள் பலரும் இருக்கும்போது, இந்தப் பொறுப்புக்கு இவரை எப்படி நியமித்தார்கள்'னு விவாதிக்கப்படுது. ஆசியம்மாள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதிலும் மாநில உளவுத்துறையின் தலைவ ரான டேவிட்சன் தேவஆசிர் வாதத்தின் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கொங்கராயக் குறிச்சியைச் சேர்ந்தவர். இந்த பக்கத்து ஊர் தகுதியே, அவருக்கு இந்தப் பொறுப்பை பெற்றுத் தந்திருக்கிறது என்கிறார்கள்.''”

"ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைவர் மரணம் குறித்து, விரைவில் சில அதிரடித் தகவல்கள் வரும்னு சொல்லப்படுதே?''”

"ஆமாங்க தலைவரே... பிபின் ராவத் குடுபத்துடன் பயணித்த அந்த ஹெலிகாப்டர் ரஷ்ய தயாரிப்பாம். மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன், லேசில் தீப்பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டது அது என்கிறார்கள். எனவே, அந்த ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்தது என்று ராணுவ அதிகாரிகள் இன்னும் கேள்விகளுடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர் நிறுவனம், எப்படி இந்த விபத்து நடந்தது என்று கண்டுபிடிக்க, ஒரு தொழில்நுட்பக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி யிருக்கிறது. அது ஹெலிகாப்டர் பாகங்களையும் அதன் கருப்புப் பெட்டியையும் ஆராய்ந்துகொண்டி ருக்கிறதாம். அது விரைவில் அறிக்கை கொடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் வில்லங்கமான தகவல்கள் வெளிப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.''”

"கொடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் சில திடீர்த் திருப்பங்கள் இருக்கும் போலிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, இதுவரை விசாரணை பரவலாகப் பல வழிகளிலும் நூல் பிடித்துச் சென்றது. இப்போது விசாரணை டீமுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு, சேலம் இளங்கோவனிடம் இருந்து தொடங்குகிறதாம். அங்கிருந்து சஜீவன், எடப்பாடி, கொடநாடு பங்களா மேனேஜர் நடராஜன் என்று ஒரே நேர்கோட்டில் செல்கிறதாம். இதற்கான ஆதாரங்களைத் திரட்டியிருக்கும் விசாரணை டீம், விரைவில் அடுத்தடுத்து தனது அதிரடிக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று காவல்துறை வட்டாரத்திலேயே டாக் அடிபடுகிறது.''”

uu

"அதிரடிக் கைதுகளைவிட, சட்டரீதியான வலுவான கைதுகள்தான் தேவை. ராஜேந்திர பாலாஜியை விரட்டிப் பிடித்து கைது பண்ணிய நிலையில், அவர் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனு மீதான விசரணையில் நிபந்தனை ஜாமீன் கொடுத்திருக்கு உச்சநீதிமன்றம். நாம போனமுறையே இதைப் பற்றி பேசியிருந்தோம்.''

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். திமு.க. இளைஞரணியினரும் கட்சியின் பல்வேறு அமைப்பினரும் உதயநிதியை அமைச்சராக்கணும்னு வலியுறுத்துவதும், தீர்மானம் போடு வதுமா இருக்காங்க. மே மாதம் அவர் அமைச்சராவார் அப்புறம், துணை முதல்வரும் ஆகலாம்னு எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்குது.''’

nkn150122
இதையும் படியுங்கள்
Subscribe