""ஹலோ தலைவரே, தமிழகத்தின் கொரோனா நிலவரம் டெல்லியை ரொம்பவே அதிர வச்சிருக்கு...''

""ஆமாம்பா, அரசாங்கம் எப்படியெல்லாம் மறைக்குதுன்னு நம்ம நக்கீரனில் ஸ்பெஷல் ஸ்டோரி வந்திருக்கு. ஆனாலும் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள், மந்திரி கள்னு பரவி, கவர்னருக்கே கொரோனாத் தொற்று ஏற்பட்டதால் டெல்லிக்கு ஷாக் இருக்கத்தானே செய்யும்.''’

""உண்மைதாங்க தலைவரே, ராஜ்பவனில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கு. அதனால் மிரண்டுபோன கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் கோவிட் பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்திக்கிட்டார். கவர்னருக்குத் தொற்று உறுதின்னதும் டெல்லிக்கு ஷாக். பொதுவாக மாநில கவர்னர்களை அவ்வளவு எளிதாக யாரும் நெருங்கிட முடியாது. கவர்னரின் செயலாளராக இருந்தாலும், பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட டிஸ்டன்ஸை மெயின்டெய்ன் பண்ணுவாங்க. அப்படியிருந்துமே பாசிட்டிவ்வான்னு டெல்லிக்கு அதிர்ச்சி. காவேரி மருத்துவமனை, கவர்னரின் உடல்நிலை பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுத் திருக்குது. கவனமா பார்த்துக்கச் சொல்லி ராஜ்பவனுக்கு டெல்லி அட்வைசாம்.''

ff

Advertisment

""அமித்ஷா மூலமும் டெல்லிக்கு கொரோனா ஷாக் ஏற்பட்டிருக்கே?''

""அமித்ஷாவுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் இருக்குதாம். அதனால் அவரை மருத்துவமனையில் அட்மிட் ஆகச்சொன்ன மோடி, அடிக்கடி அவர் உடல்நலன் பற்றி, அங்குள்ள மருத்துவர்களிடம் விசாரிச்சிக்கிட்டு இருக்கார். கொரோனாவின் டேஞ்சரஸைப் புரிந்து வைத்திருக்கும் மோடி, அடிக்கடி கொரோனா டெஸ்ட் செய்துகொள்கிறாராம். 5-ந் தேதி ராமர் கோயில் பூமி பூஜைக்குக் கிளம்பும் போது கூட அவர் பரிசோதனை பண்ணிக்கிட்டு, ரிசல்ட்டைப் பார்த்துட்டுத்தான் கிளம்பினார்னு டெல்லி தகவல் சொல்லுது. உ.பி. மாநில தொழில் நுட்பத்துறை அமைச்சரான கமல்ராணி, கொரோனாத் தொற்றுக்கு பலியாகி இருக்கார். இதேபோல், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவையும் கொரோனா அட்டாக் பண்ணியிருக்கு. அதுமட்டுமில்லாமல் அங்குள்ள எதிர்கட்சித் தலைவரான சித்தராமையாவையும் அது விட்டுவைக்கலை.''

""கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா எப்படி இருக்காராம்?''

Advertisment

""அவரும் கொரோனா பீதியில் முகம் வெளிறிப் போயிருக்காராம். அவர் அடைக்கப் பட்டிருக்கும் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹாரா சிறையில் ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்குதாம். சிறைக்குள்ளேயே இருக்கும் கோயிலுக்கு தினசரி போய்வரும் சசிகலா, அங்கு எதிர்ப்படும் கைதிகள் சிலரிடம் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அப்படி அவரோடு பேசிப் பழகிய சிலரும் கொரோனாத் தொற்றுக்கு ஆளானதால், சசிகலா திகிலில் இருக்கார். இப்போது அவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டிருக்கு.''

""அரசியல், சிறை சிக்கல்களைவிடவா அவருக்கு கொரோனா பெரிய சிக்கலா இருக்கும்?''

""உண்மைதாங்க தலைவரே, சசிகலா விரைவில் ரிலீஸாவார்னு அவர் தரப்பு, பலத்த எதிர்பார்ப் போடு இருக்கும் நிலையில், டெல்லியில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் கர்நாடக மாநில உள்துறைச் செயலாளராக ரூபா என்கிற ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப் பட்டிருக்கார். இவர்தான், சிறை அதிகாரிகளுக்கு சசிகலா பெருமளவில் லஞ்சம் கொடுத்து ஜெயிலில் சொகுசு வாழ்க்கையும்- வெளியே போய் ஷாப்பிங் பண்ணிட்டு வரும் அளவுக்கு ஃப்ரீயா இருந்தார்னும் கண்டுபிடித்த சிறைத்துறை அதிகாரி. இவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டு அதன் அறிக் கையும் அங்கே வெயிட்டிங்கில் இருக்கு. இந்த நிலையில் ரூபா, சசியின் விடுதலையைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்திருப்பது அவர் தரப்பை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கு. அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வர இருக்கும் நிலையில், சசிகலா விவகாரத்தில் டெல்லி பா.ஜ.க டபுள் கேம் நடத்துகிறதோ என்ற எண்ணம் பலரிடமும் இருக்கு.''

ss

""சசிகலா, அ.தி.மு.க, தி.மு.க.ன்னு தமிழகத்தில் தேர்தல் ஆட்டத்தை பா.ஜ.க. ஆரம்பிச்சிடிச்சே?''

""உண்மைதாங்க தலைவரே, திராவிட மண்ணுன்னு சிறப்பிக்கப்படும் தமிழகத்தில், எப்படியாவது தாமரையை மலரவச்சே தீர்வதுன்னு ஒத்தைக் காலில் நிக்கிது பா.ஜ.க. தலைமை. பல மாநிலங்களிலும் பின்வாசல் வழியா நுழைஞ்ச மாதிரியே இங்கேயும் ப்ளான் போடுது. சமீபத்திய உளவுத்துறை சர்வேயின்படி தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு 29 முதல் 32 சதவீதம் வரை இருப்பதாகவும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 26-ல் இருந்து 29 சதவீதமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கு. கமலுக்கு 5 சதவீத வாக்குகள் கிடைக்கலாமாம். ரஜினி களமிறங்கினால் 10 சதவீத வாக்குகளைப் பிரிப்பார் என்றும் சொல்லப்பட்டிருக்காம்.''

""ஓஹோ...''

""தினகரனின் அ.ம.மு.க.வுக்கு தென்மாவட்டங்களில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 10 ஆயிரம் வாக்குகள்வரை இருப்ப தாகவும் சொல்லியிருக்கும் அந்த சர்வே, இது அ.தி.முக.வில் இருந்து பிரிக்கும் வாக்குகளாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்குதாம். கடைசியில் ரஜினி கட்சியைத் தொடங்கி, அவர் அ.தி.மு.க., பா.ஜக.வோடு கூட்டணியை வைத்துக்கொண்டால், நிச்சயம் வெற்றி வாய்ப்பு உண்டு என்றும் கூட்டிக்கழித்து ஒரு கணக்கும் டெல்லிக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம். இதைப் பார்த்த பா.ஜ.க. தலைமை, அ.தி.மு.க.வைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், தி.மு.கவை பலவீனப்படுத்த பக்கா ப்ளான் பண்ணியிருக்கு. அதற்கான ஸ்பெஷல் அசைண்மெண்ட்டுகள் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் உள்ளிட்ட சிலரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.''

""முதல் விக்கெட்டா தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கட்சி மாறியிருக்காரே?''

""ஆமாங்க தி.முக.வை உடைக்கவேண்டும். அல்லது தி.மு.க புள்ளிகள் பலரையும் பா.ஜ.க. பக்கம் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அசைன்மெண்ட். முருகன் ஏற்கனவே முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியை, தி.மு.க.வில் இருந்து தங்கள் பக்கம் இழுத்துச்சென்றது போல், இப்போது தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான கு.க.செல்வத்தையும் தங்கள் பக்கம் நகர்த்திக்கொண்டு வந்துவிட்டார். இன்னும் பலருக்கும் அவர் தூண்டில் போட்டுக்கொண்டிருக்கிறார். அதில் ஜக்கி வாசுதேவ்வும் குதிரைபேரத்தில் ஒரு ஜாக்கியா இருக்காராம்.''

""அவருக்கு என்ன அசைன்மெண்ட்?''

""சட்டச் சிக்கலில் இருக்கும் தி.மு.க. புள்ளிகள் சிலரின் குடுமியைப் பிடித்து டெல்லி ஆட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்த வகையில் டெல்லியிடம் இப்போது சிக்கியிருப்பவர் மாஜி மத்திய மந்திரியான ஜெகத்ரட்சகன். இலங்கையில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் இவரது 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான முதலீட்டை அண்மையில் அமலாக்கத்துறை தோண்டித் துருவி எடுத்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது. அதோடு தமிழக காவல்துறை அதிகாரி ஜாபர்சேட்டுடன் அவர் தரப்பில் நடந்த பணப்பரிவர்த்தனை விவகாரமும் ஆதாரத்துடன் சிக்கியிருக்கிறது. இது குறித்தெல்லாம் நாம் முன்பே சில முறை பேசியிருக்கிறோம்.''

""ஆமாம்பா, இது தொடர்பாக ஜெகத், அமித்ஷாவை 3 முறையும் பிரதமர் மோடியை ஒருமுறையும் சந்திச்ச தகவலையும் நாம் பரிமாறிக் கொண்டோமே?''

mm

""ஆமாங்க தலைவரே, இந்த சந்திப்புக்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், நோக்கம் வழக்குகளில் இருந்து விடுபடுவதாகத்தான் இருந்தது. இதற்கெல்லாம் மோடி கொஞ்சமும் பிடிகொடுக்க வில்லையாம் .இந்த நிலையில் ஜக்கி வாசுதேவ் மூலம் ஜெகத் ரட்சகனிடம் டீலிங் பேசப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் பிரச்சினை இல்லாமல் jjஇருக்கலாம் என்று ஜக்கி தரப்பு சொல்கிறதாம். ஜெகத்தோ, பா.ஜ.க.வில் இணைந்தால் என் மீதான வழக்கை நீக்குவார்களா? வெறுமனே வழக்கை கிடப்பில் போடுவதால் பயனில்லை. அடுத்தடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் என் கழுத்தைப் பிடிக்கத்தான் செய்வார்கள் என்று தன் கவலையை வெளிப்படுத்துகிறாராம். ஆனாலும் பேரங்களும் டீலிங்குகளும் தொடர்கின்றன. இதேபோல் 2 ஜி வழக்கில் சிக்கியவர்களையும் தங்கள் பக்கம் வளைக்க முயல்கிறது பா.ஜ.க.ன்னு டெல்லி சைடிலிருந்து தகவல் கசியுது.''

""தமிழக தேர்தலுக்கான சர்க்கஸை ரிங்மாஸ்டர் மோடி தொடங்கிட்டாரு. எம்.பி.- எம்.எல்.ஏன்னு எத்தனை தி.மு.க புலிகள் கூண்டில் மாட்டப் போகுதுன்னு பார்ப்போம்.''

""தலைவரே, நாடாளு மன்றம் செப்டம்பரில் கூட்டப்படும்போது மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும்னு சொல்லப்படுது. அப்படி அமைச்சரவை மாற்றம் நடக்கும் போது, நாம் ஏற்கனவே சொன்னபடி, தா.ம.க. தலைவர் ஜி.கே.வாசனுக்கு நாற்காலி கொடுக்கப்படுமாம். அதற்கான ஒற்றை நிபந்தனையாக, த.மா.கா.வை பா.ஜ.க.வோடு இணைத்துவிட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம். வாசனோ, முதலில் அமைச்சராக்குங்கள். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உங்களோடு ஐக்கியமாகி விடுகிறோம் என்கிறாராம்.''

""காங்கிரஸ் மாஜி மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தரப்பு டெல்லிக்கே தண்ணி காட்டுகிறதாமே?''

""எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் மீதான வழக்குகளிலும் மோடி அரசு தீவிரம் காட்டி வருகிறது. ப.சி., மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு நிலுவையிலேயே இருக்கிறது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற ஊழலின் பலன்களால், ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்யப்பட்டதைக் கண்டறிந்த அமலாக்கத்துறையும் சி.பி.ஐ.யும், அது தொடர்பான தகவல்களைக் கேட்டு அந்த நாடுகளுக்கு கடிதங்கள் எழுதியிருந்தன. ஆனால் அங்கிருந்து பதில்கள் வராதபடி மேஜிக் செய்து, டெல்லிக்குத் தண்ணி காட்டுகிறதாம் ப.சி. தரப்பு. அதனால் இந்த வழக்கின் விசாரணைக்கு இந்த விசாரணை அமைப்புகள் கால அவகாசம் கேட்டன. டெல்லி உயர்நீதிமன்றமோ, மூன்று மாதத்தில் இந்த வழக்கை விசாரித்து முடிக்குமாறு உத்தர விட்டிருக்கிறது.''’

dd

""முதல்வர் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், முதல்வர் அலுவலகத்தின் பெயரைச் சொல்லியே ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டிருக் கிறதே?''

""உண்மைதாங்க தலைவரே, கடந்த ஜூலை 24 ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் மாவட்ட வாரியாக உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர்களுக்கும் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கும், துறையின் தலைமை ddஅலுவலகத்தில் இருந்து பேசுவதாக போன்கால்கள் போயிருக்கிறது. அதில், பேசியவர்கள், இங்கே முதல்வரின் பி.ஏ.க்கள் கிரிதரன், அருண், சென்னை-கன்னியாகுமரி நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர் சாந்தி ஆகியோர் இருக்கிறோம். உடனடியாக தலைமைக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது. உடனே பணத்தை அக்கவுண்ட்டில் போடுங்கள் என்று, ஒரு வங்கி கணக்கு எண்ணையும் கொடுத்திருக்கிறார்கள். இதை வழக்கமான வசூல் என்று நினைத்துக்கொண்டு, பலரும் ஒரு லட்ச ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை அந்தக் கணக்கில் செலுத்தினர். சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தவர்கள், அந்த அக்கவுண்டில் இருந்த பணத்தையும் அதே வேகத்தில் எடுத்துக்கொண்டு, எல்லோருக்கும் பட்டை நாமம் போட்டிருக்கிறார்கள்.''’’

""அதுக்கு மேல் நடந்ததை நான் சொல்றேன்... திடீர் வசூல் பற்றி டவுட்டான சிலர் முதல்வர் அலுவலகத் தரப்பை தொடர்பு கொண்டப்ப, அவரது பி.ஏ.க்களோ தலைமை பொறியாளர்களோ அப்படி எந்த போனும் பண்ணலைங்கிற உண்மை தெரிஞ்சிருக்கு. இந்த அதிரடி மோசடி பற்றிக் கேள்விப்பட்ட முதல்வர் எடப்பாடி, ஏகத்துக்கும் டென்ஷனானதோடு, டி.ஜி.பி, உளவுத்துறை அதிகாரி மூலம் ரகசிய டீம்களை அமைத்து, குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்கும்படி உத்தர விட்டிருக்கிறாராம்.''