"ஹலோ தலைவரே, மறுபடியும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக் குரல் பலமா ஒலிக்கத் தொடங்கிடிச்சி...''
""ஆமாம்பா, எல்லா மாநிலங்களிலும் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் பலவந்தமாகத் திணிக்க முயலுது மத்திய பா.ஜ.க அரசு. இதற்கு எதிராக எழுந்திருக்கும் புதிய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, இப்ப மற்ற மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கியிருக்கே?''
""உண்மைதாங்க தலைவரே, சென்னை விமான நிலையத்தில் இந்தி வெறி கொண்ட காவலர் காட்டிய அடாவடியை எதிர்த்து கனிமொழி எம்.பி., அண்மையில் கடுமையாகக்குரல் கொடுத்தார். அதற்குப் பெருகிய ஆதரவு டெல்லிவரை அதிர்வலைகளை உருவாக்குச்சு. இப்ப அதன் தொடர்ச்சியாக, தமிழகத் திரைத்துறையினரும் உணர்ச்சிப் பெருக்கோடு ’டீசர்ட் புரட்சியில் இறங்கியிருக்காங்க. குறிப்பா சொல்லனும்னா, இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர்கள் சாந்தனு, அவர் மனைவி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மெட்ரோ சிரீஷ் உள்ளிடோர், "இந்தி தெரியாது போடா'ங்கிற வாசகம் பொறிக்கப்பட்ட டீ சர்ட்டுகளை அணிந்தபடி, சமூக வலைதளங்களில் உணர்ச்சி நெருப்பைப் பத்த வச்சிருக்காங்க. யுவன்சங்கர் ராஜாவை கனிமொழி பாராட்டிய நிலையில், தமிழக இளைஞர்கள் பலரும் இதே பாணியில் வரிஞ்சிகட்ட ஆரம்பிச்சதால், தமிழக பா.ஜ.க.வினர், எரிச்சலாகி டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பறாங்க.''
""இவங்க ரிப்போர்ட் பண்ணி என்ன ஆகப்போகுது? "இந்தி தெரியாது போடா'ங்கிற டீசர்ட் புரட்சி, இப்ப "இந்தி தெரிஞ்சாலும் பேசமாட்டோம் போடா'ங்கிற அதிரடி ட்ரெண்ட்டா மாறிக்கிட்டு இருக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, தமிழகத் திரைப்படத் துறையினர் பத்த வச்ச நெருப்பு, வடக்குவரை பத்திக்க ஆரம்பிச்சிருக்கு. இந்தி கத்துக்க வேண்டியது அவசியம்னு ஏற்கனவே ட்வீட் போட்டுக்கிட்டிருந்த சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நம்ம ட்விட்டர் மக்கள் கண்டனம் தெரிவிச்சிக் கிட்டிருந்தாங்க. இந்த முறை அவரும், தமிழகத்தில் இந்திக்கு எதிராக ’போடா’ டிரெண்ட் உருவாகியிருக்குன்னு டுவிட் பண்ணி, அங்கே உள்ளவங்களுக்கும் தெரிய வச்சிட்டாரு. பீகார் இளைஞர்களும் கூட, எங்கள் தாய் மொழியான மஹதியை அழிச்சிட்டுதான் இந்தி தன் ஆதிக்கத்தை காட்டிக்கிட்டு இருக்குன்னு பதிவு பண்ணியிருந்தாங்க. இந்த
"ஹலோ தலைவரே, மறுபடியும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக் குரல் பலமா ஒலிக்கத் தொடங்கிடிச்சி...''
""ஆமாம்பா, எல்லா மாநிலங்களிலும் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் பலவந்தமாகத் திணிக்க முயலுது மத்திய பா.ஜ.க அரசு. இதற்கு எதிராக எழுந்திருக்கும் புதிய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, இப்ப மற்ற மாநிலங்களுக்கும் பரவத் தொடங்கியிருக்கே?''
""உண்மைதாங்க தலைவரே, சென்னை விமான நிலையத்தில் இந்தி வெறி கொண்ட காவலர் காட்டிய அடாவடியை எதிர்த்து கனிமொழி எம்.பி., அண்மையில் கடுமையாகக்குரல் கொடுத்தார். அதற்குப் பெருகிய ஆதரவு டெல்லிவரை அதிர்வலைகளை உருவாக்குச்சு. இப்ப அதன் தொடர்ச்சியாக, தமிழகத் திரைத்துறையினரும் உணர்ச்சிப் பெருக்கோடு ’டீசர்ட் புரட்சியில் இறங்கியிருக்காங்க. குறிப்பா சொல்லனும்னா, இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நடிகர்கள் சாந்தனு, அவர் மனைவி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மெட்ரோ சிரீஷ் உள்ளிடோர், "இந்தி தெரியாது போடா'ங்கிற வாசகம் பொறிக்கப்பட்ட டீ சர்ட்டுகளை அணிந்தபடி, சமூக வலைதளங்களில் உணர்ச்சி நெருப்பைப் பத்த வச்சிருக்காங்க. யுவன்சங்கர் ராஜாவை கனிமொழி பாராட்டிய நிலையில், தமிழக இளைஞர்கள் பலரும் இதே பாணியில் வரிஞ்சிகட்ட ஆரம்பிச்சதால், தமிழக பா.ஜ.க.வினர், எரிச்சலாகி டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பறாங்க.''
""இவங்க ரிப்போர்ட் பண்ணி என்ன ஆகப்போகுது? "இந்தி தெரியாது போடா'ங்கிற டீசர்ட் புரட்சி, இப்ப "இந்தி தெரிஞ்சாலும் பேசமாட்டோம் போடா'ங்கிற அதிரடி ட்ரெண்ட்டா மாறிக்கிட்டு இருக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, தமிழகத் திரைப்படத் துறையினர் பத்த வச்ச நெருப்பு, வடக்குவரை பத்திக்க ஆரம்பிச்சிருக்கு. இந்தி கத்துக்க வேண்டியது அவசியம்னு ஏற்கனவே ட்வீட் போட்டுக்கிட்டிருந்த சுப்ரீம்கோர்ட் முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவுக்கு நம்ம ட்விட்டர் மக்கள் கண்டனம் தெரிவிச்சிக் கிட்டிருந்தாங்க. இந்த முறை அவரும், தமிழகத்தில் இந்திக்கு எதிராக ’போடா’ டிரெண்ட் உருவாகியிருக்குன்னு டுவிட் பண்ணி, அங்கே உள்ளவங்களுக்கும் தெரிய வச்சிட்டாரு. பீகார் இளைஞர்களும் கூட, எங்கள் தாய் மொழியான மஹதியை அழிச்சிட்டுதான் இந்தி தன் ஆதிக்கத்தை காட்டிக்கிட்டு இருக்குன்னு பதிவு பண்ணியிருந்தாங்க. இந்தி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களிலும், இந்தி வேணாம் போடான்னு அவங்கவங்க தாய்மொழியில் எதிர்ப்பு காட்டறாங்க.''
""இந்திய குடிமக்களின் மனநிலை இப்படி இருக்குதுன்னா, முதல் குடிமகன் பொறுப்பில் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கே?''
""ஆமாங்க தலைவரே, பிரணாப் முகர்ஜி, ஆர்ப்பாட்டமில்லாத அதே நேரத்தில் அழுத்தமான அரசியல்வாதின்னு பெயரெடுத்தவர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்த அனுபவம் பெற்றவர். பிரதமர் பதவிங்கிறதுதான் அவரது பெருங்கனவு. அதுக்காக எவ்வளவோ முட்டி மோதியும் அதை அடைய முடியலை. சமாதானப்படுத்தும் வகையில், காங்கிரஸ் ஆட்சியில் குடியரசுத் தலைவராக ஆக்கப்பட்டார். இருந்தும் பிரதமர் பதவி தராத காங்கிரஸுடன் கருத்து முரண்பட்டு, பா.ஜ.க.வுடன் அவர் நட்பை வளர்த்துக்கிட்டார். அது ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்கும் அளவுக்கு அவருடைய நிலைப்பாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்துச்சு. ஈழத்தில் நடந்த கடைசி இன அழிப்புப் போரின் போது, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பிரணாப்பின் செயல்பாடுகள், தமிழர்களுக்கு எதிராகவே இருந்ததால் கடும் விமர்சனங்களுக்கு அவர் ஆளாக நேர்ந்தது. இருந்தபோதும் கலைஞர், வைகோ உள்ளிட்ட பெரிய தலைவர்களிடம் நட்பு பாராட்டியவர் பிரணாப். அவரது மரணத்துக்கு தமிழகத் தலைவர்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிச்சிருக்காங்க.''
""கொரோனா காலத்தில் அரசியல் பரபரப்புகள் குறைவா இருந்தாலும், ரஜினியை மையமா வச்சி நிறைய பரபரப்பு செய்திகள் வருதே?''
""ஆமாங்க தலைவரே.. வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான விவாதங்கள் ரஜினித் தரப்பில் நடந்துக்கிட்டு இருக்குன்னு செய்தி கசியுது. அரசியலுக்கு வரும் நடிகர்களின் சென்ட்டிமென்ட் படி மதுரையில் கட்சி தொடக்க விழாவை தமுக்கம் மைதானத்திலே நடத்தலாம்னு அவர் ப்ளான் பண்ணியிருப்பதா ஒரு தகவல். தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி ரஜினி மக்கள் மன்றப் பிரமுகர்கள் பலரோடும் ரஜினி இது குறித்து ஆர்வமாக விவாதிச்சிக்கிட்டு இருக்காராம்.''
""கொரோனா காலம் முடிகிற வரைக்கும் அரசியலுக்கு ரஜினி வரப்போவதில்லைன்னு அவரோட மக்கள் மன்றத்தின் மூத்த நிர்வாகி சொன்னதா ஒரு தகவல் வந்ததே?''
""ரஜினியைப் பொறுத்தவரைக்கும் இந்த கொரோனா காலத்தில் எந்த நிகழ்ச்சிக்காகவும் வெளியே போகலை. நேரடி சந்திப்புகளையும் பெருமளவு தவிர்த்திருக்காரு. ரஜினி கட்சிக்கு ஃபண்ட் பண்ணுவாருன்னு எதிர்பார்க்கப்பட்ட ஏ.சி.சண்முகத்துக்கே அப்பாயிண்ட்மெண்ட் இல்லைன்னு அவரோட மாவட்டத் தைச் சேர்ந்த மன்ற நிர்வாகிகள் சொல்றாங்க. அதோடு, தன் மன்றத்தினரையும் கொரோனா காலத்தில் அலைக்கழிக்க ரஜினி விரும்பலை. ஆரம்பத்தில் நிவாரண உதவிகளை மன்றத்தின் சார்பில் செய்தவர்களும் அதன்பிறகு செய்யலை. மன்ற செயல்பாடுகள் குறித்து மாதந்தோறும் தலைமையிடமிருந்து கேட்கப்படும் ரிப்போர்ட்டையும் 5 மாதமா ரஜினி தரப்பு கேட்கலையாம்.''
""ஏன்?''
""மன்றத்தில் செலவு செய்யக்கூடிய பலரும் தங்களோட உழைப்பால் சம்பாதிச்சி முன்னேறி வந்தவங்க. உழைப்பின் அருமை ரஜினிக்கும் தெரியும். அவங்களோட சோர்வையும் அவர் புரிஞ்சிருக்காரு. அதோடு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளும் இன்னும் முழுசா முடியலை. மன்றப் பொறுப்பு கேட்டு போட்டா போட்டியும் அதிகம். எல்லாம் அவரை யோசிக்க வைத்தாலும், கட்சி ஆரம்பிக்க சொல்லி டெல்லி நிர்பந்தம் தொடருதாம்.''
""அதற்கு மன்றத்தினர் ரியாக்ஷன் என்ன?''
""கட்சியைத் தொடங்குவது நல்லதுதான். அதேசமயம், எந்தக் காரணத்தைக் கொண்டும் பா.ஜ.க.வோடு உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க நேரும்ன்னு எச்சரிச்சிருக்காங்களாம். அதோட, கொரோனாவின் கொடுமையான பிடியில் மக்களை ஒப்படைத்திருப்பவர்கள் அந்த மோடியும் இந்த எடப்பாடியும்தான். அதனால் மக்கள் அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்க. அதனால் அவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டு, நாம் தனியாக நின்னு நம் பலத்தை மக்களிடம் நிரூபிக்கவேண்டும். நாம் தனித்து நின்றால் அ.தி.மு.க., பா.ஜ.க. வாக்குகளையும், தி.மு.க.வாக்குகளையும் பெறமுடியும்னும் ரஜினியிடம் சொல்றாங்களாம். வழக்கம்போல எல்லாக் கருத்துகளையும் உன்னிப்பா கேட்டிருக்காரு ரஜினி.''
""தி.மு.க.வுக்கு எதிரா ரஜினியை நிறுத்த பலரும் வரிந்துகட்டும் நிலையில், தி.மு.கவின் புதிய பொதுச்செயலாளர்- பொருளாளர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்திருக்காரரே?''
""ஆமாங்க தலைவரே... உதயநிதி இளைஞரணி பதவிக்கு வந்தப்ப ரஜினி வாழ்த்தலை. ஸ்டாலின் பிறந்தநாளிலும் வாழ்த்தலை. ஆனா, துரைமுருகனுக்கும், டி.ஆர்.பாலுவுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லியிருக்கார். தி.மு.க. நிர்வாகிகளை ரஜினி வாழ்த்திய செய்தியை முரசொலியில் பிரசுரிக்கவும் செய்தார் ஸ்டாலின். இந்த நிலையில், ரஜினியைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் தி.மு.க.வின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர். தமிழகத்தில் தங்கள் ஐபேக் நிறுவனம் எடுத்துள்ள சர்வே முடிவு களை அவர் ரஜினியிடம் பகிர்ந்து கொண்டதாகச் சொல்கிறார்கள்.''
""பா.ஜ.க. புள்ளிகள் ஆளாளுக்கு அ.தி.மு.க. வைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்களே?''’
""பா.ஜ.க.வினரின் இந்த திடீர் அட்டாக்குகள் எடப்பாடியை ரொம்பவே அதிரவச்சிருக்கு. இதெல்லாம் டெல்லியின் கைகாட்டலில்தான் நடக்குதோன்னு குழம்பிப்போன அவர், இதன் பின்னணி பற்றி டெல்லித் தரப்பில் விசாரிக்கச் சொல்லியிருக்கார். ஆனால் டெல்லியோ இது பற்றி எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கலையாம். இருந்தும், விசாரிக்கப் பணிக்கப்பட்ட நபர்கள், டெல்லி கொடுத்த சிக்னலின் அடிப்படையிலேயே தமிழக பா.ஜ.க.வினர் அ.தி.மு.க.வைத் தாக்குகிறார் கள் என்று சொல்ல, இதைக்கேட்டு அதிர்ச்சியான எடப்பாடி, வேறு வழியில்லை. நாமும் பதிலடி கொடுத்தாத்தான் அரசியல் பண்ணமுடியும்னு தங்கள் கட்சியின் சீனியர்களிடம் சொல்லியிருக்காராம்.''
""அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகம் என்னவாம்?''
""இ.பி.எஸ். அணி-ஓ.பி.எஸ். அணின்னு வெளிப்படையா சர்ச்சை ஏற்பட்டிருக்கிற சூழலில் இரண்டையும் சரிப்படுத்தி, தேர்தல் வியூகங் களை வகுக்கும் வேலையை எஸ்.எம்.எஸ். என்ற டீம்தான் கவனிக்குது. எடப்படியாக இருந்தாலும், ஓ.பி.எஸ்.சாக இருந்தாலும் மத்த அமைச்சர்களாக இருந்தாலும், இந்த எஸ்.எம்.எஸ். அணிக்குத் தெரியாமல் எதையும் பேசக் கூடாதுன்னும், எந்த செயலிலும் தனியாக ஈடுபடக் கூடாதுன்னும் உத்தரவிடப்பட்டிருக்கு.''
""அது என்ன எஸ்.எம்.எஸ். அணி?''
""எஸ்.எம்.எஸ்.னா எடப்பாடியின் அட்வைஸர் சுனில், எடப்பாடியின் மகன் மிதுன், முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்யமூர்த்தி ஆகியோர் பெயரின் முதல் எழுத்துக்கள்தான். இந்த அணிக்குக் கட்டுப்படுவதாக ஓ.பி.எஸ். ஒத்துக் கொண்டாலும், அவர் தரப்பில் முணுமுணுப்பு குறையலையாம். அதுபோல கட்சியின் சீனியர்கள் பலரும், கட்சியில் எந்த பொறுப்புமில்லாத யாரோ மூணு பேரு நம்மை நாட்டாமை பண்ணுவதான்னு கொந்தளிக்கிறாங்களாம். இருந்தாலும், இப்போ தைக்கு எஸ்.எம்.எஸ். மூலம்தான் நிலைமையை சமாளிச்சாக வேண்டிய இடத்தில் அ.தி.மு.க. இருக்குது.''
""பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு தோதான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14 ஆவது இடத்தில் இருக்குதே?''
""உண்மைதாங்க தலைவரே, இது தொடர்பாக மத்திய அரசின் தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாரித்து வெளியிட்டிருக்கும் பட்டியலில், தொழில் முதலீட்டுக்குத் தோதான முதல் மாநிலமாக ஆந்திரா இருக்குது. அடுத்தடுத்த இடங்களில் உ.பி., தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இருக்க, மோடியின் குஜராத் 10 ஆவது இடத்தில் இருக்குது. முன்பே அனைத்து விதமான தொழில் முதலீட்டாலும் நிறைந்திருப்பதால் குஜராத்தில் மேற்கொண்டு தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பில்லைன்னு பா.ஜ.க. தரப்பில் சொல்றாங்க. பலவகையிலும் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலமான நமது தமிழகம் 14 ஆம் இடத்தில் இருக்குது. இதற்கான இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள் வல்லுநர்கள். அதில் ஒன்று, அளவு கடந்த கமிஷன் கேட்கும் அதிகாரவர்க்கம். இன்னொன்று, அரசின் செயல் திட்டங்கள்மீது நம்பிக்கை இழந்த மக்கள், எந்தத் தொழிற்சாலை கொண்டுவரபட்டாலும் அதன் நீண்டகால பாதிப்புகளை உணர்ந்து, எதிர்த்துப் போராடும் இயல்பை பெற்றுவிட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். நாடாளுமன்றக் கூட்டமும் தமிழக சட்டமன்றமும் வரும் 14 ந் தேதி ஒரே நாள்ல கூடுவது பத்தி நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் எம்.பி.க்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாகவே கொரோனா டெஸ்ட் எடுத்துக்கிட்டு, நெகட்டிவ் ரிப்போர்ட்டோட வந்தாதான், அவங்களை அனு மதிப்பாங்களாம். காரணம், பிரதமர் மோடி உள் ளிட்ட பா.ஜ.க. சீனியர்கள் பலரையும் கொரோனா அச்சம் சூழ்ந்திருக்குதாம். இதை கவனித்த எடப்பாடி, தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கும் இதேபோன்ற ரூல்ஸை ஃபாலோ பண்ணலாமான்னு சபாநாயகர் தனபாலுடன் தீவிரமா ஆலோசனை நடத்தியிருக்காரு.''