ஹலோ தலைவரே, பா.ஜ.க. பிரமுகரான நடிகை குஷ்பு, கண்டத்தில் இருந்து தப்பிச்சிருக்கார்.''
""ஆமாம்பா, அந்த விபத்து பற்றிய செய்தியை நானும் பார்த்தேன். அவர் வாகனம் கடுமையா சேதம் அடைஞ்சிருந்ததே?''
""உண்மைதாங்க தலைவரே, 18-ந் தேதி கடலூரில் நடக்கும் வேல் யாத்திரையில் கலந்துக்கறதுக்காக அன்று காலையில் சென்னையில் இருந்து குஷ்பு கிளம்பினார். அவருடைய கார் மேல்மருவத்தூர் அருகில் போய்க்கிட்டிருந்த போது, ஒரு டேங்கர் லாரி, எதிர்பாராத விதமாக உரச, அதில் காரின் பக்கவாட்டு கதவு முழுசா நசுங்கிடிச்சின்னு செய்தி வந்தது. குஷ்புக்கு காயம் ஏற்படலை. முன் பக்கம் உட்கார்ந்திருந்த அவர், பலமான அதிர்ச்சிக்கு ஆளாயிட்டார். அவரை நாம் தொடர்புகொண்டபோது, "இது எதிர்பாராமல் நடந்த விபத்து. வேல் யாத்திரைக்குக் கிளம்பிய என்னை முருகன்தான் காப்பாத்தினார். இதன்மூலம் வேல் யாத்திரைக்கு என்னை அவர் அழைச்சிருக்கார்னு சொல்லிவிட்டு மாற்றுக் காரில் கடலூருக்குக் கிளம்பிவிட்டார். காயம் ஏற்படாத இந்த விபத்து எப்படி நடந்ததுன்னு விசாரணை போய்க்கிட்டிருக்கு.''
""தமிழகத்துக்கு 21-ந் தேதி வர இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க தடபுடலா ஏற்பாடுகள் நடக்குதே.''
""ஆமாம்ங்க தலைவரே, தமிழக அரசுடன் இணைந்து புதிய நீர்த் தேக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தல், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தல், சென்னை வர்த்தக மையம் தொடர்பாக 67 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முடுக்கிவிடுதல்னு அமித்ஷா பல்வேறு நலத்திட்ட விழாக்களில் கலந்துக்கறார். அவரது மனதைக் குளிரவைக்கும் வகையில், அவருக்கு மதிய விருந்தையோ, அல்லது அரசு நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஒரு டீ பார்ட்டியையோ வச்சி அசத்திடனும்னு முதல்வர் எடப்பாடி ஆசைப்பட்டார். இதுகுறித்து அரசுத் தரப்பு டெல்லிக்குத் தெரிவிக்க, பிரதமர் அலுவலகமோ, மிக முக்கியமான 5 நபர்கள் மட்டுமே பங்குகொள்ளும் வகையில், அந்த விருந்தை நடத்தலாம்ன்னு சிக்னல் கொடுத்திருக்குதாம்.''
""இந்த சந்திப்பின்போது எடப்பாடியுடன் தொகுதி உடன்பாடு பற்றி அமித்ஷா பேசப் போகிறாருன்னும் தகவல் வருதே?''
""பா.ஜ.க.வுக்குச் ச
ஹலோ தலைவரே, பா.ஜ.க. பிரமுகரான நடிகை குஷ்பு, கண்டத்தில் இருந்து தப்பிச்சிருக்கார்.''
""ஆமாம்பா, அந்த விபத்து பற்றிய செய்தியை நானும் பார்த்தேன். அவர் வாகனம் கடுமையா சேதம் அடைஞ்சிருந்ததே?''
""உண்மைதாங்க தலைவரே, 18-ந் தேதி கடலூரில் நடக்கும் வேல் யாத்திரையில் கலந்துக்கறதுக்காக அன்று காலையில் சென்னையில் இருந்து குஷ்பு கிளம்பினார். அவருடைய கார் மேல்மருவத்தூர் அருகில் போய்க்கிட்டிருந்த போது, ஒரு டேங்கர் லாரி, எதிர்பாராத விதமாக உரச, அதில் காரின் பக்கவாட்டு கதவு முழுசா நசுங்கிடிச்சின்னு செய்தி வந்தது. குஷ்புக்கு காயம் ஏற்படலை. முன் பக்கம் உட்கார்ந்திருந்த அவர், பலமான அதிர்ச்சிக்கு ஆளாயிட்டார். அவரை நாம் தொடர்புகொண்டபோது, "இது எதிர்பாராமல் நடந்த விபத்து. வேல் யாத்திரைக்குக் கிளம்பிய என்னை முருகன்தான் காப்பாத்தினார். இதன்மூலம் வேல் யாத்திரைக்கு என்னை அவர் அழைச்சிருக்கார்னு சொல்லிவிட்டு மாற்றுக் காரில் கடலூருக்குக் கிளம்பிவிட்டார். காயம் ஏற்படாத இந்த விபத்து எப்படி நடந்ததுன்னு விசாரணை போய்க்கிட்டிருக்கு.''
""தமிழகத்துக்கு 21-ந் தேதி வர இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க தடபுடலா ஏற்பாடுகள் நடக்குதே.''
""ஆமாம்ங்க தலைவரே, தமிழக அரசுடன் இணைந்து புதிய நீர்த் தேக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தல், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பித்து வைத்தல், சென்னை வர்த்தக மையம் தொடர்பாக 67 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை முடுக்கிவிடுதல்னு அமித்ஷா பல்வேறு நலத்திட்ட விழாக்களில் கலந்துக்கறார். அவரது மனதைக் குளிரவைக்கும் வகையில், அவருக்கு மதிய விருந்தையோ, அல்லது அரசு நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஒரு டீ பார்ட்டியையோ வச்சி அசத்திடனும்னு முதல்வர் எடப்பாடி ஆசைப்பட்டார். இதுகுறித்து அரசுத் தரப்பு டெல்லிக்குத் தெரிவிக்க, பிரதமர் அலுவலகமோ, மிக முக்கியமான 5 நபர்கள் மட்டுமே பங்குகொள்ளும் வகையில், அந்த விருந்தை நடத்தலாம்ன்னு சிக்னல் கொடுத்திருக்குதாம்.''
""இந்த சந்திப்பின்போது எடப்பாடியுடன் தொகுதி உடன்பாடு பற்றி அமித்ஷா பேசப் போகிறாருன்னும் தகவல் வருதே?''
""பா.ஜ.க.வுக்குச் சாதகமான 50 தொகுதிகளின் பட்டியலோடுதான் சென்னைக்கு ரெடியாகியிருக்கிறார் அமித்ஷா. இதில் மயிலாப்பூர், மயிலாடுதுறை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் தொகுதிகளும் குறி வைக்கப் பட்டிருக்குதாம். எடப்பாடியின் கொங்கு மண்டலத் தொகுதிகள் பலவும் இந்தப் பட்டியலில் வருதாம். 50 தொகுதிகளில் எதுவும் மாறக் கூடாதுன்னு எடப்பாடிக்கு அமித்ஷா அழுத்தம் கொடுப்பாராம். அதேபோல் பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவியையும் ஒதுக்கனும்னு அமித்ஷா நிர்பந்திப்பாருன்னும் சொல்லப்படுது.''
""பா.ஜ.க.வுக்கு இவ்வளவு தொகுதிகளை ஒதுக்கனும்னா, அ.தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்கள் பலரின் தொகுதிகள் பறிபோகுமே?''
""ஆமாங்க தலைவரே, அதனால்தான் இப்பவே அ.தி.மு.க.வில் முணுமுணுப்புகள் ஆரம்பிச்சிடுச்சி. குறிப்பா, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கணும்ங்கிற கோரிக்கையை எடப்பாடி அரசுதான் நிறைவேற்றியிருக்கு. அதற்கான அரசியல் லாபத்தை பா.ஜ.க.வுக்கு விட்டுக்கொடுக்கக்கூடாதுன்னு அந்தப் பகுதி ஆளுந்தரப்பு பிரமுகர்கள் சொல்றாங்க. பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கக்கூடாதுங்குற குரலும் அமைச்சர்கள் மட்டத்திலேயே ஒலிக்க ஆரம்பிச்சிடுச்சி. இப்போதைய நிலையில் அ.தி.மு.க.வில் இருக்கும் 90 சதம் பேர், பா.ஜ.க. செலுத்தும் ஆதிக்கத்தையும், அதோடு தொடரும் கூட்டணியையும் விரும்பலைன்னு அக்கட்சியின் சீனியர்களே சொல்றாங்க.''
""அமித்ஷாவின் தமிழக விசிட் பல கட்சிகளை பயமுறுத்தும்னு சொல்லப்பட்டதே?''
""பா.ஜ.க தரப்பில்தான் பதற்றம் அதிகமா தெரியுதுங்க தலைவரே, ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றி இந்தமுறை இரண்டில் ஒன்று கேட்டுவிடுவதுன்னு அமித்ஷா முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக ரஜினியை அமித்ஷா சந்திப்பதற்கான சீக்ரெட் ஏற்பாடுகள் கடைசிக் கட்டம் வரை நடந்தது. அரசியல் இடைத் தரகர்களாக இருப்பவர்கள், ரஜினியை வைத்து பாலிடிக்ஸ் பண்ணுவதால், பா.ஜ.க.வில் ஐக்கியமா? இல்லை, தனிக்கட்சியான்னு தானே ரஜினியின் முடிவைத் தீர்க்கமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறாராம் அமித்ஷா. அதேபோல் தமிழகம் வரும் அவரை ஏழுபேர் விடுதலை தொடர்பான கேள்விகள் வழிமறிக்கலாம் என்பதால், இவர்களை விடுவித்தால் வெடி குண்டு வழக்கில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் தீவிரவாதிகளையும் விடுவிக்கும்படி கேட்பார்கள். அதனால் சட்ட ரீதியாக ஆராய்ந்து முடிவெடுப்போம் என்ற ரீதியில் அதற்கும் மழுப்பலான பதிலை அவர் தரப்பு தயாரித்து தந்திருக்குதாம்.''
""அமித்ஷாவை அசத்திடனும்னு தமிழக பா.ஜ.க. தரப்பும் வரிஞ்சிகட்டுதே?''
""உண்மைதாங்க தலைவரே, இங்குள்ள கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து அமித்ஷா விவாதிக்க இருக்கிறார். அந்த சமயத்தில் தேர்தலைப் பற்றி புதுசா எதையாவது சொல்லி அவரிடம் நல்ல பெயர் எடுக்கனும்ன்னு, ஆளாளுக்கு ஹோம் வொர்க் பண்றாங்க. இந்த வரிசையில் அக்கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவராக இருக்கும் நடிகை காயத்ரி ரகுராம், இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை கௌரவிக் கும் வகையில் பிரதமர் தலைமையில் அவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, தமிழக மக்களின் மனதைக் கவர்ந்து, ஓட்டுகளாக மாற்றலாம்னு அமித்ஷாவிடம் தன் ஆலோ சனையைச் சொல்ல ரெடியாயிட்டாராம்.''
""ஆட்சியில் தன் அதிகாரத்தைச் செலுத்தும் எடப்பாடியைப் போல், கட்சி விவகாரங்களில் தன் அதிகாரத்தை ஓ.பி.எஸ். நிலைநாட்ட தொடங்கிவிட்டாராமே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், மா.செ.க்களையும் மா.செ.க்களாக இருக்கும் அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு, தேர்தல் பணிகள் குறித்து தனிப்பட்ட முறையில் ஓ.பி.எஸ். விவாதிக்கிறாராம். அ.தி.மு.க.வுக்கு பலவீனமாக இருக்கும் தொகுதிகளைச் சுட்டிக்காட்டி, அங்கே கூடுதல் கவனம் செலுத்தும் படியும் சொல்கிறாராம். வேட்பாளர்கள் தேர்வில் இருக்கும் எடப்பாடி, தொகுதிக்கு மூன்று பேரை டிக் செய்து, உளவுத்துறையிடம் அவர்களைப் பற்றிய ரிப்போர்ட்டைக் கேட்டிருக்கிறாராம். இது கட்சியின் மண்டல பொறுப்பாளர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கு. இதையறிந்த ஓ.பி.எஸ், 20-ந் தேதி கட்சியின் தலைமையகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில், உங்கள் கருத்துக்களை தைரியமாகப் பேசுங்கள்ன்னு அவர்களை உசுப்பி விட்டிருக்கிறாராம். அவரது திடீர் வேகம் எடப்பாடியை யோசிக்க வைத்திருக்கிறதாம்.''
""தமிழகத்தில் துப்பாக்கிக் கலாசாரம் பெருகுதே?''
""நம்ம நக்கீரன்தான் அதைத் தொடர்ந்து சொல்லிக்கிட்டிருக்கு. இந்த நிலையில், மத்திய உளவுத்துறை இது தொடர்பான தகவல்களைச் சேகரிச் சிருக்கு. குறிப்பாக, சென்னை ரைஃபிள் க்ளப்பை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர், துப்பாக்கி லைசன்ஸைப் பெற்றுத் தருவதை ஒரு பிஸ்னசாகவே செய்கிறாராம். இதேபோல் இந்த லைசன்ஸை வாங்கித் தர சென்னை, கோவை, மதுரை, திருச்சின்னு பல மாவட்டங்களின் எஸ்.பி. அலுவலகத்திலும் புரோக்கர்கள் அதிகமா இருக்காங்களாம். அதேபோல் தமிழக அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் துப்பாக்கி லைசன்ஸை வாங்கியிருப்பதோடு, தங்கள் நண்பர்களுக்கும் வாங்கித் தந்திருக்காங்களாம். இதெல்லாம் உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்குதாம்.''
""தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு இடையில் குவாரி விவகாரம் வெடிச்சிருக்கே?''
""அரசாங்கத்தோடும் அதிகாரத்தோடும் தொடர்புடையவர்கள் தங்கள் பெயரிலோ, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அரசுக்குக்குச் சொந்தமான சொத்துக்களை வாங்கவோ, டெண்டர் எடுக்கவோ கூடாது என்பது விதி. இதை மீறி விழுப்புரம் மாவட்ட திருவக்கரையில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. சக்கரபாணியின் மகனுக்கு, கனிமவளத்துறையை வைத்திருக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம் உரிமம் வழங்கியது தவறுன்னு மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் சொன்ன சி.வி.சண்முகம், துரைமுருகன் மகன் எம்.பி.யாக இருக்கும்போது அவரது மருமகள் குவாரி எடுத்திருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இதே துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தன் மகனுக்கும் குவாரி அனுமதி வழங்கினார்ன்னு ஏகத்துக்கும் போட்டுத் தாக்க, இருகட்சிகளின் கீழ் மட்டத் தொண்டர்களும் இந்த லாவணியை ஏக்கத்தோடு பார்த்து வருகிறார்கள்.''
""சசிகலா தரப்பில் அதிக பரபரப்பு தெரியுதே?''
""உண்மைதாங்க தலைவரே, சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையான 10 கோடி ரூபாயை, சில சட்டச் சிக்கல் காரணமாக செலுத்த முடியாமல் அவர் தரப்பு திணறிவந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, இது ஜெ.வும் சசியும் குற்றவாளிகள்னு நிரூபணம் ஆன வழக்கு. அதனால் வழக்கில் இணைக்கப்பட்ட இருவரின் சொத்துக்களை விற்றுதான் அதைக் கட்டவேண் டும் என்றது. இதனால் திகைத்த சசி தரப்பு, ஜெ. இறந்துவிட்டதால், அவர் வழக்கில் இருந்து விடு விக்கப்பட்டுவிட்டார். அதனால் சசிகலாவிற்கான அபராதத் தொகையை நாங்கள் கட்டுகிறோம் என்று போராடி வந்தது. இந்த நிலையில் நீதிமன்றம், சம்மதம் தெரிவித்ததால் கர்நாடக சிறப்புக் கோர்ட் நீதிபதி முன்னிலையில் 10 கோடி ரூபாய் அபராதத்துக்கான காசோலையை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்குமார் செலுத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து சசிகலா ரிலீஸ் ஆகும் நாள் விரைந்து வந்துகொண்டிருக்குன்னு அவர் தரப்பு உற்சாகத்தில் திளைக்கிது.''
""நானும் அது சம்பந்தமா முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். சசிகலாவின் அபராதத் தொகைக்காக சசி தரப்பைச் சேர்ந்த பழனிவேல் 3.25 கோடிக்கும், வசந்தா தேவி என்பவர் 3.75 கோடிக்கும், ஹேமா என்பவர் 3 கோடிக்கும் டி.டி. எடுத்ததாகவும், அதேபோல் இளவரசி மகன் விவேக் பெயரில் 10 ஆயிரம் ரூபாய்க்கு டி.டி. எடுக்கப் பட்டதாகவும், இவையே சசிகலாவுக்காக நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டதாகவும் ஒரு செய்தி பரவி, விறுவிறுப்பை உண்டாக்கியிருக்கிறது.''
_____________
இறுதிச் சுற்று : அமித்ஷா அடிக்கல் நாட்டும் ஊழல் பாலம்!
மத்திய அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்கும் பல்வேறு திட்டங்களில், கோவை- அவினாசி சாலையில் 10 கிலோ மீட்டர் உயர்மட்ட மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது மிக முக்கியமானதாக இருக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத்துறையின் திட்டமான இதன் மதிப்பு சுமார் 1700 கோடி ரூபாய். ஹைதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு சாதகமாக டெண்டரை ஒதுக்கீடு செய்யும் வகையில் டெண்டர் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி ஜூலை மாதமே தமிழக நெடுஞ்சாலைத் துறை செக்ரட்டரி கார்த்திக் ஐ.ஏ.எஸ்.சிடம் புகார் தெரிவித்திருந்தார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவி. ஆனாலும், அந்த நிறுவனத்துக்கே பணியை ஒதுக்கியுள்ளார் நெடுஞ்சாலைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி. இதில் உள்ள ஊழல்களை சுட்டிக்காட்டி, அடிக்கல் நாட்டு விழாவைத் தவிர்க்குமாறு அமித்ஷாவுக்கு மெயில் அனுப்பியுள்ளார் ரவி. அமித்ஷா வருகை நேரத்தில் இந்த மெயில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் உருவாக்கியது.
-இளையர்