ராங்கால் : அமித்ஷா காப்பாத்துவார்! எடப்பாடி நம்பிக்கை! ஸ்டாலின் குடும்பத்தினரைச் சுற்றும் அதிகாரிகள்

ee

""ஹலோ தலைவரே, 12-ந் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த கொரோனா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு முதல்வர் எடப்பாடி கலந்துக்கிட்டார்''’’

""ஆமாம்பா, எடப்பாடியை அந்தக் கூட்டத்துக்கு அழைக்க தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தயங்கியது குறித்தும், அதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தது குறித்தும், போன முறையே நாம் பேசியிருந் தோமே?''’’

eps

""ஆமாங்க தலைவரே, தேர்தல் ஆணையமோ, ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க எந்தத் தடையும் இல்லை, அதேநேரம் எந்தவிதமான புது அறிவிப்பையும் நீங்கள் அறிவிக்கக்கூடாதுன்னு எடப்பாடிக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, ஒன்றரை மாதத்திற்குப் பின் தலைமைச் செயலகம் வந்த எடப்பாடி, அந்தக் கூட்டத்தில் கலந்துக்கிட்டார். அதில், அதிகாரிகள் எழுதிக்கொடுத்த குறிப்பை வச்சிக்கிட்டு, ’இங்கே கொரோனாத் தொற்று 4.55 சதவீதமாகவும் அதில் இறப்போர் 1.38 சதவீதமாகவும் இருக்கின்ற னர். எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கணும். குறிப்பா, அரசு ஊழியர்கள், அலுவலர் கள் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கணும்னு பொத்தாம்பொதுவாப் பேசிட்டுக் கிளம்பிட்டார்.''’’

""எல்லோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கணும்னு, முதல்வர் சொன்னாலும், இங்கே ஊசி மருந்துக்குத் தட்டுப்பாடுன்னு செய்தி வருதே?''’’

""தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவலில் அதிதீவிரமாக இருக்குது. அதனால் இந்த 10 மாநிலத்துக்கும் தட்டுப்பாடு வராத அளவுக்குத் தடுப்பூசிகளை அனுப்புங்கன்னு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருக்கு. அதன்படி தமிழகத்துக்கும் உரிய அளவுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டும் கூட, அதுக்குத் தட்டுப்பாடுன்னு மத்திய அரசுக்குப் புகார்கள் போக ஆரம்பிச்சிடுச்சி. இதைப் பார்த்த சுகாதாரத்துறை, தமிழகத்துக்குத் தாராளமாவே தடுப்பூசி மருந்துகளை அனுப்பிவிட்டோம். அனுப்பிய தடுப்பூசிகளை அவர்கள் வீணடிக்காமல் இருந்தாலே போதும்னு கறார் குரலில் தெரிவிச்சிருக்கு. இதனால் தமிழகத்துக்கு அனுப்பப்படும் தடுப்பு மருத்துகள், வெளி மார்க்கெட்டுக்குப் போகுதோங்கிற சந்தேகம் பரவலா வலுக்க ஆரம்பிச்சிருக்கு.''’’

""ஆட்சி மாற்றம் வரும்

""ஹலோ தலைவரே, 12-ந் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த கொரோனா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு முதல்வர் எடப்பாடி கலந்துக்கிட்டார்''’’

""ஆமாம்பா, எடப்பாடியை அந்தக் கூட்டத்துக்கு அழைக்க தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தயங்கியது குறித்தும், அதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தது குறித்தும், போன முறையே நாம் பேசியிருந் தோமே?''’’

eps

""ஆமாங்க தலைவரே, தேர்தல் ஆணையமோ, ஆலோசனைக் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்க எந்தத் தடையும் இல்லை, அதேநேரம் எந்தவிதமான புது அறிவிப்பையும் நீங்கள் அறிவிக்கக்கூடாதுன்னு எடப்பாடிக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, ஒன்றரை மாதத்திற்குப் பின் தலைமைச் செயலகம் வந்த எடப்பாடி, அந்தக் கூட்டத்தில் கலந்துக்கிட்டார். அதில், அதிகாரிகள் எழுதிக்கொடுத்த குறிப்பை வச்சிக்கிட்டு, ’இங்கே கொரோனாத் தொற்று 4.55 சதவீதமாகவும் அதில் இறப்போர் 1.38 சதவீதமாகவும் இருக்கின்ற னர். எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கணும். குறிப்பா, அரசு ஊழியர்கள், அலுவலர் கள் இரண்டு வாரங்களுக்குள் தடுப்பூசி போட்டுக்கணும்னு பொத்தாம்பொதுவாப் பேசிட்டுக் கிளம்பிட்டார்.''’’

""எல்லோரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கணும்னு, முதல்வர் சொன்னாலும், இங்கே ஊசி மருந்துக்குத் தட்டுப்பாடுன்னு செய்தி வருதே?''’’

""தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவலில் அதிதீவிரமாக இருக்குது. அதனால் இந்த 10 மாநிலத்துக்கும் தட்டுப்பாடு வராத அளவுக்குத் தடுப்பூசிகளை அனுப்புங்கன்னு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டிருக்கு. அதன்படி தமிழகத்துக்கும் உரிய அளவுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டும் கூட, அதுக்குத் தட்டுப்பாடுன்னு மத்திய அரசுக்குப் புகார்கள் போக ஆரம்பிச்சிடுச்சி. இதைப் பார்த்த சுகாதாரத்துறை, தமிழகத்துக்குத் தாராளமாவே தடுப்பூசி மருந்துகளை அனுப்பிவிட்டோம். அனுப்பிய தடுப்பூசிகளை அவர்கள் வீணடிக்காமல் இருந்தாலே போதும்னு கறார் குரலில் தெரிவிச்சிருக்கு. இதனால் தமிழகத்துக்கு அனுப்பப்படும் தடுப்பு மருத்துகள், வெளி மார்க்கெட்டுக்குப் போகுதோங்கிற சந்தேகம் பரவலா வலுக்க ஆரம்பிச்சிருக்கு.''’’

""ஆட்சி மாற்றம் வரும்னு பல தரப்பும் அழுத்தமா நம்பும் நிலையில், மாநில உளவுத்துறை, இப்ப எடப்பாடிக்கு வேறுமாதிரியா ரிப்போர்ட் கொடுத்திருக்காமே?''’’

stalin

""ஆமாங்க தலைவரே, தற்போதைய உளவுத்துறை ஐ.ஜி.யான ஈஸ்வர மூர்த்தி, முதல்வர் எடப்பாடிக்கு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கார். அதில் 120 சீட் வரை அ.தி.மு.க.வுக்குக் கிடைக்கலாம்னு சொல்லியிருக்கார். இதைப் பார்த்து கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்த எடப்பாடி, அதில் ஒருசில சீட்டுகள் குறைஞ்சாக்கூடப் பரவா யில்லை. அமித்ஷா மேனேஜ் பண்ணிக் காப்பாத்திடுவாருன்னு நம்புறாராம். அதேசமயம் எதிர்த்தரப்பு, ஏக உற்சாகத்தில் இருப்பதுதான் டவுட்டைக் கிளப்புது. அவங்க தரப்பை இப்பவே அதிகாரிகள் பலரும் மூவ் பண்றாங்கன்னும் செய்தி வருதுன்னு ரொம்பவே கவலைப்பட்டிருக்கார். எஸ்.பி. சி.ஐ.டி.யின் கீழ்நிலை அதிகாரிகள், எந்த அடிப்படையில் டேட்டா சேகரிச்சாங்கன்னும் உயரதிகாரி உள்பட பலரும் ஆய்வு செய்றாங்களாம்.''

""அதிகாரிகள் தரப்பு எதிரணியை அணுகறதா, எதை வைத்து எடப்பாடி சொல்கிறார்?''’’

""அதிகாரிகள் மத்தியிலேயே பகிரங்கமாகவே இப்படியொரு டாக் இருக்குங்க தலைவரே. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜெ.விடமும் சசிகலாவிடமும் மிகநெருக்கமாக இருந்தவர் பா.ஜ.க. சின்னத்தின் மலரின் பெயரைக் கொண்ட காவல்துறை அதிகாரி. இப்ப, தி.மு.க. தலைமையை அணுகியிருக்காராம். சசிகலாவுக்கு நான் நெருக்கம் என்பதால் எடப்பாடி என்னை ஓரம்கட்டிட்டார். நீங்களாவது என்னைப் புரிஞ்சிக்கங்கன்னு அவர் உருக்கமாச் சொல்லியிருக்கார். அதேபோல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும், அடுத்து அமையும் ஆட்சியில் நல்ல போஸ்ட்டிங் வேணும்னு ஸ்டாலினுக்குத் தூது விடறாங்களாம். குறிப்பா அ.தி.மு.க.வின் சீனியர் அமைச்சர் ஒருவரிடம் பி.ஆர்.ஓ.வாக இருக்கும் ’புலவர்’ பெயர்கொண்ட ஒரு அதிகாரி, ஸ்டாலினை அவர் மருமகன் சபரீசனின் நண்பர்கள் மூலம் அணுகி, நீங்கள் முதல்வரானால் என்னை உங்க பி.ஆர்.ஓ.வா வச்சிக்கங்கன்னு இப்பவே மனு போட்டிருக்காராம். இப்படி கிச்சன் டீம் மூலமும் பலரும் அணுகறாங்களாம்.''’’

""ஓ...''’’

""மத்தியப் புலனாய்வு அமைப்பான ரா’வில் பணியாற்றும் ஒரு அதிகாரியும், அவர் தம்பியும். ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.சி.ஆர். பிரமுகருக்கு நண்பர்களாம். அவங்க ரெண்டு பேரும்தான், தி.மு.க. ஆட்சி வந்தால் எந்தெந்தத் துறைக்கு எந்தெந்த அதிகாரிகளை நியமிக்கலாம்னு இப்பவே லிஸ்ட் போடறாங்களாம். இவங்களுக்கு சித்தரஞ்சன் சாலை வீட்டிலும் செல்வாக்காம். இந்த இருவரையும், அதிகாரிகள் பலரும் இப்பவே மொய்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.''’’

""நடிகர் விஜய், தேர்தல் அன்று வாக்களிக்க சைக்கிளில் வந்தாரே, அது தி.மு.க. தரப்பு வகுத்துக் கொடுத்த திட்டம்னு டாக் அடிபடுதே?''’’

amitsha

""மு.க.ஸ்டாலின், அடிக்கடி அதிகாலை நேரங்களில் சைக்கிள் சவாரி போவது வழக்கம். அது அவருக்கு நல்ல இமேஜைக் கொடுத்திருக்கு. அதே பாணியில், நீங்களும் ஓட்டுப் போட சைக்கிளில் வந்தால், பலரது கவனம் உங்கள் பக்கம் திரும்பும். உங்கள் இமேஜும் உயரும்னு, உதயநிதி ஸ்டாலின், தனது நண்பர்கள் மூலம் நடிகர் விஜய்க்கு ஐடியா கொடுத் தாருன்னும். அதை ஏத்துக்கிட்டு தான் விஜய் அப்படி சைக்கிள்ல வந்தாருன்னும் ஒரு தரப்பு சொல்லுது. இன்னொரு தரப்போ... விஜய் இயல்பா, கேஷுவலா சைக்கிளில் வந்ததை, பெட்ரோல் உயர்வை சுட்டிக்காட்டத்தான் அவர் அப்படி வந்தாருன்னு, தி.மு.க. அதைத் தனக்குச் சாதகமா மாத்திக்கிச்சின்னு இன்னொரு தரப்பு சொல்லுது. விஜய் ரசிகர்களோ, "எது எப்படி வேணும் னாலும் இருக்கட்டும். எங்க விஜய் சைக்கிளில் வந்ததால், எங்க உற்சாகம் மேலும் அதிகமாயிடிச்சி'ன்னு சொல்லுது.''’’

""தேர்தல் முடிவு வர்றதுக்கு முன்பாகவே, ஸ்டாலினுக்கு எதிரான வழக்கொன்றையும் ஆளும் கட்சித் தரப்பு தூசு தட்டுதே?''’’

""உண்மைதாங்க தலைவரே, 2011 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான சைதை துரைசாமி, ஏறத்தாழ 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இருந்தும் ஸ்டாலினின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கும்படி அவர் உயர்நீதிமன்றத் தின் கதவைத் தட்டினார். நீதிமன்றமோ, ஸ்டாலின் வெற்றிபெற்றது சரிதான்னு தீர்ப்பளித்தது. ஆனாலும் விடாத சைதை துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கே இந்த வழக்கு விசாரணைக்கு வராமலே கிடப்பில் கிடந்தது. இந்த வழக்கைத்தான் மறுபடியும் தூசு தட்டும்படி எடப்பாடி சொல்ல, மறுபடியும் உச்சநீதிமன்றத்திடம் அவர் மனு கொடுத்திருக்காராம் . தி.மு.க. தரப்போ, முகாந்திரம் இல்லாத இந்த வழக்கை முன்புபோலவே ஊதித்தள்ளுவோம் என்கிறது அசால்ட்டாக.''’’

""தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போதே, இட ஒதுக்கீட்டு உத்தரவுகள் போடப்படுதே?''’’

""ஆமாங்க தலைவரே, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர் சமூகத்திற்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தருவதற்கான சட்டத்தை, தேர்தல் நேரத்தில் எடப்பாடி அரசு கொண்டுவந்தது. இதுகுறித்து பல்வேறு சர்ச்சை களும் ssகிளம்பியது. இந்த சட்டத்துக்கு எதிராகச் சிலர் நீதிமன்றங் களை அணுகியபோது, அவை அதற்குத் தடை விதிக்க மறுத்து விட்டன. இந்த நிலையில், வருகிற கல்வியாண்டிலிருந்தே 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தணும்னு தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே எடப்பாடியிடம் பா.ம.க. ராமதாஸ் வலி யுறுத்தினார். இந்த நிலையில், வரும் கல்வியாண்டில் இருந்தே, உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் 10.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற ணும்னு உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பிச்சிருக்கு. தேர்தல் நடத்தை விதி இருந்தாலும், முன்பே நிறைவேற்றப்பட்டதை அமல்படுத்த முடியும்.''’’

""மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் வரப்போகுது. ஆனால் அதற்கு முன்பே, மிச்ச சொச்ச கலெக்ஷனையும் முடிச்சிடணும்னு ஆளும்கட்சித் தரப்பு பரபரக்குதேப்பா.''’’

""உண்மைதாங்க தலைவரே... எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர் அமைச்சர்கள் பலரும், rrதங்கள் துறையின் திட்டங்கள் தொடர்பாக வரவேண்டியதை எல்லாம் வசூலிச்சிட வேண்டும்னு பரபரப்பா இருக்காங்க. இதற்காக அமைச்சர்களின் சீனியர் பி.ஏ.க் கள், துறை அதிகாரிகளிடம் பேசி வருகிறார்கள். குறிப்பாக அமைச்சர்களுக்கு நெருக்கமான காண்ட்ராக்டர்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து போய்ச் சேர வேண்டிய தொகைகளை, விரைவில் செட்டில் செய்யுமாறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருக்கு. இதில் அமைச்சர்களுக்கு மட்டுமல்லாது அதிகாரி களுக்கும் குறிப்பிட்ட சதவீத கமிஷன் கிடைக்கும் என்பதால் பெரிய காண்ட்ராக்டர்களுக்கு மட்டும், லம்பான தொகையை ரகசியமாக ரிலீஸ் செய்துவருகிறார்கள். ஆனால் சின்னச் சின்ன காண்ட்ராக்டர்களைக் கண்டுகொள்ளத்தான் ஆளில்லை.''’’

""வேளச்சேரியில் மறு வாக்குப்பதிவு நடக்குதே?''’’

""ஆமாங்க தலைவரே, வேளச்சேரி தொகுதியில் உள்ள டான்சி நகரின் 92 ஆம் எண் கொண்ட பூத்தில், வாக்குப்பதிவு எந்திரங்களை ஆளும்கட்சியினர் அத்துமீறி எடுத்துச்சென்ற விவகாரம், அப்போதே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துச்சு. ஆனாலும், அங்கே எந்தத் தவறும் நடக்கலைன்னு தமிழகத் தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, கிளிப்பிள்ளைபோல் சொல்லிக்கிட்டே இருந்தார். அதிரடியாக வீடியோ ஆதாரங்கள் வெளியான பிறகே, அந்த அத்துமீறலை அவர் ஒத்துக்கிட்டார். இதைத்தொடர்ந்து, டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் மறு வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 17-ந் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படுது.''’’

""சென்னையில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா. சாலையின் பெயரை, தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி அரசு மாற்றிவிட்டதே.''’’

""சென்னை மாநகராட்சியில் இருந்து துவங்கும் 14 கி.மீ. தூரத்துக்கு நீளும் பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு, பெரியார் ஈ.வே.ரா. சாலை என்ற பெயரை, அப்போதைய முதல்வரான எம்.ஜி.ஆர்., 1979-ல் சூட்டினார். அவர் சூட்டிய பெயரையே, அவர் நிறுவிய கட்சியை நடத்தும் எடப்பாடி தரப்பு, டெல்லியின் உத்தரவால் கவலைப்படாமல் மாற்றி இருக்கு. இதை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்து வருகிறார்கள். மக்களிடமும் இது கொந்தளிப்பை ஏற்படுத்திட்டு இருக்கு. பெரியார் பூமியான தமிழகத்தின் அடையாளத்தையே மாற்றணும்னு பா.ஜ.க. நினைக்கிறது. தமிழ்நாட்டை தட்க்ஷிணப் பிர தேசம்னு மாற்றுவது வரை பல ப்ளான் இருக்காம். அதனுடையை அசைன்மெண்டுகளில் ஒன்றுதான் இதுவாம்.''’’

ra

""நானும் முக்கியமான தகவலைச் சொல்றேன். ஜெ.,’சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவர்களுக்கு அதிரடியான தீர்ப்பை வழங்கி, தைரியமும் நேர்மையும் கொண்ட நீதியரசர் குன்ஹா, அண்மையில் பணி ஓய்வுபெற்றார். இதைத் தொடர்ந்து அவரை சந்தித்த, தி.மு.க.வைச் சேர்ந்த தமிழக சட்டத்துறை வல்லுநர்கள் சிலர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ வாய்ப்பிருக்கு. அப்படி தி.மு.க. ஆட்சி அமைந்ததும், உங்கள் தலைமையில் விசாரணை ஆணை யத்தை அமைக்கலாம் என்பது எங்கள் எண்ணம். அதன்மூலம் நீங்கள் தான் எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை சட்டரீதியாக விசாரிக்கணும்னும் கேட்டிருக்காங்க. குன்ஹா அதற்கு நோ சொல்லிவிட்டாராம்.''

nkn170421
இதையும் படியுங்கள்
Subscribe