"ஹலோ தலைவரே, பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு அமைந்த தி.மு.க. ஆட்சியின் பதவியேற்பு விழாவில், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்'னு மு.க.ஸ்டாலின் உறுதிமொழி எடுத்தது டெல்லிவரை தெறிக்கவிட்டிருக்கு''”
"ஆமாம்பா... பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பா.ஜ.க. தலைவர் கள் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் "வெற்றிவேல் வீரவேல்'னு சொல்லி தி.மு.க.வை இந்துவிரோத கட்சியா காட்ட நினைச்சாங்க. அதை முறியடிச்ச ஸ்டாலின், தன்னோட பதவியேற்பில் மு.க.ஸ்டாலின்னு சொல்லாம "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்'னு சொன்னது, கலைஞரை நினைவுபடுத்தி, பா.ஜ.க.வை அதிர வச்சிடிச்சி.''”
"ஆமாங்க தலைவரே... எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வுக்குப் பிறகு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தை ஜூன் மாதம் நடத்தவும், முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருக் கார். அதில் நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை அதிரடியாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பும் முடிவிலும் ஸ்டாலின் இருக்கிறதா டெல்லிக்கு தகவல் போயிருக்கு.''”
"கொரோனா பரவல் கடுமையா இருக்குதே. முதல்வர் அமைத்திருக்கும் வார் ரூமுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தாரேஷ்அகமது ஒருங்கிணைப்பில் 6 பேர் குழு போடப்பட்டிருக்கு. ரெம்டிசிவிர் மருந்து சென்னையைப்போல மற்ற பெரிய நகரங்களிலும் கிடைக்கும்னு சொல்லியிருக்காங்க. 15 நாள் ஊரடங்கும் நடைமுறைக்கு வந்திடிச்சி. ஆனாலும், என்னாகுமோன்னு மக்கள் உயிர் பயத்தில் இருக்காங்கப்பா.''”
"உண்மைதாங்க தலைவரே... ரெம்டிசிவிர் மருந்துக்காக விடியவிடிய காத்திருக்காங்க. ஊரடங்கால மீண்டும் மக்கள் வாழ்க்கையில் நெருக் கடி ஏற்பட்டிருக்கு. முதல்வர் அறிவித்த 2000 ரூபாய் நிவாரண நிதியும், டாஸ்மாக் கடை மூடப் பட்டிருப்பதும் ஓரளவு நிலைமையைத் தாக்குப் பிடிக்கும். மாவட்டவாரியா நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் டீம், மக்கள் பக்கம் நிற்கணும்.''”
"அதிகாரிகளும் நிற்கணும்.''”
"ஆமாங்க தலைவரே, ஸ்டாலின் தேர்ந் தெடுத்துள்ள அதிகாரிகள் பற்றி பொதுவா நல்ல அபிப்ராயம் பொதுமக்களிடம் இருக்குது. தேர்தல் நேரத்தில் "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'’ மூலம் பொதுமக்களிடம் வாங்கிய மனுக்களை "உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷில்பாபிரபாகர் சதீஷ் என்பவ ரிடம் ஒப்படைக்கப்பட்டி ருக்கு. நெல்லை மாவட்ட ஆட்சியராக இவர் இருந் தப்ப, தாமிரபரணி ஆற்றில் கனிமவள உதவி ஆணையராக இருந்த ஷிபாங்கிறவர் துணையோடு கனிம வளம் நிறைந்த மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது பற்றி சுடலைக்கண்ணு என்பவர் புகார் கொடுத்ததையும், கோர்ட்டே சரமாரியாக கேள்விகள் கேட்டதையும் நம்ம நக்கீரன் விரிவா எழுதியிருக்கு. மணல் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்பிருக்குதாம். அதோடு, இந்த வழக்கில் ஷில்பாபிரபாகர் பெயரும் இருப்பதால தீர்ப்பு எதிரா வந்தால் நெருக்கடி யாகும்னு சொல்றாங்க.''”
"மற்ற அதிகாரிகள் எப்படி?''”
"உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் அ.தி.மு.க ஆட்சியிலும் செல்வாக்கா இருந்தவரு. சங்கரராமன் கொலையின்போது காஞ்சி எஸ்.பி.யா இருந்தாரு. இவர் கிறிஸ்தவருங் கிறதால விசாரிக்கக்கூடாதுன்னு சுப்ரீம்கோர்ட் வரை சங்கரமடம் போனது. ஜெ. காலத்துக்குப் பிறகு ஓ.பி.எஸ்.சுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த டேவிட்சன், கூவத்தூரில் சசிகலா ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டபோது, அதிலிருந்து தூத்துக்குடி சண்முகநாதனையும், மாஃபா பாண்டியராஜனையும் தப்பவைத்தவர். எஸ்.பி. முத்தரசி மூலம் ரெய்டு நடத்தவும் செய்தார். மெல்ல தி.மு.க. பக்கமும் நட்பாயிட்டார். தேர்தல் நேரத்தில், தி.மு.க. தரப்பு இவரை கோவை மாநகர காவல் ஆணையராக, சபரீசனின் நண்பரான "ரா'வில் பணிபுரியும் சர்வேஸ் மூலம் கொண்டுவந்ததாம். ரிசல்ட்டுக்குப் பிறகு புதியஆட்சி அமைந்த நிலையில், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக ஆக்கப்பட்டிருக் கிறார். சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. யாக நியமிக்கப்பட்டிருக்கும் தாமரைக்கண்ணனும் அ.தி.மு.க.- தி.மு.க.ன்னு இரண்டு ஆட்சியிலும் செல் வாக்கை காட்டியிருக்கிறார். சசிகலாவுக்கு வேண்டியவரான இவரும் அந்த "ரா'’பிரிவு அதிகாரி மூலம் தேர்தல் நேரத்திலேயே கோவையில் போஸ்டிங் போடப்பட்டு இப்ப இந்தப் பதவிக்கு வந்திருக்காராம்.''”
"ஆவின்பால் விலையை குறைத்து ஸ்டாலின் கையெழுத்துப் போட, அது தொடர்பான அரசாணை குழப்ப மாயிடிச்சே?''”
"தேர்தல் வாக்குறுதிப்படி பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து கையெழுத்திட்டார் ஸ்டாலின். இதற்கான அரசாணையை அந்தத் துறை வெளியிட்டப்ப, முந்தைய எடப்பாடி அரசின் பால் கொள்முதல் -விற்பனை விலை பற்றிய அரசாணை விவரங்களை நம்பர் 1 என்றும், தற்போதைய விலை குறைப்பை நம்பர் 2 என்றும் வெளியிட்டது. அதில் இருந்த பழைய விவரத்தைப் பார்த்து, 6 ரூபாயை ஏற்றி 3 ரூபாய் குறைப்பதா சர்ச்சை கிளம்பிடிச்சி. அதன்பிறகு, ரகவாரியா விலை என்னன்னு துறையிலிருந்து விளக்கம் வந்து, மக்கள் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது.''”
"ஆவின் நிறுவனத்தில் உள்ள குழப்பங்கள் -மோசடிகள் முழுசா தீருமா?''”
"ஆவின் நிர்வாக இயக்குநராக வள்ளலார் ஐ.ஏ.எஸ். இருந்தப்ப, ஆவின் நிறுவனத்தில் மேனேஜர், டெபுடி மேனேஜர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 780 நபர்களை நியமனம் செய்ய ணும்னு முன்னாள் பால்வளத்துறை மந்திரியான ராஜேந்திரபாலாஜி முயற்சித்தார். அதற்காக தலா 20 லட்சம் முதல் 35 லட்சம்வரை போஸ்டிங் ரேட் நிர்ணயிக்கப்பட்டது. வள்ளலார் ஒத்துழைக்கலை. அதனால அவரை இடமாற்றம் செய்துட்டாரு ராஜேந்திர பாலாஜி. துறைச் செயலாளர் கோபால், ஆவின் எம்.டி.யா நியமிக்கப்பட்ட நந்தகோபால் ஆகியோரின் துணையோடு அந்த நியமனங் களுக்கு வசூல்வேட்டை நடந்தது. இதற்கானத் தேர்விலும் கொஸ்ட்டின் பேப்பர் லீக் உள்பட பல மோசடிகள். பணம் கொடுத்தவர்களுக்கு நேர்முகத் தேர்விலும் மதிப்பெண்களை அள்ளி வீசினார்கள். ஆனா அப்பாயின்ட் மெண்ட்டுக்கு முன்னாடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால, முன் தேதியிட்டு நியமன உத்தரவுகளை வழங்கினார்கள். இது குறித்து அப்போதே நம் நக்கீரன் செய்தி வெளியிட்டது. போஸ்ட்டிங்கை நிறுத்தி வச்சவங்க, இப்ப ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பாக, நியமன ஆர்டர்களை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், தமிழகம் முழுவதும் ட்ரான்ஸ்ஃபர் ஆர்டர்களைப் போட்டும், 175 கோடி ரூபாய் வரை திரட்டி விட்டார்கள். இதில் 60 சதவீதம் ராஜேந்திர பாலாஜிக்கு 40 சதவீதம் அதிகாரிகளுக்கு என பங்கு பிரிக்கப்பட்டிருக்கு. ஆட்சி மாறினாலும் கோட்டையில் உள்ள செல்வாக்கை வைத்து இப்ப டிப்பட்ட அதிகாரிகள் கொட்டமடிக்கிறாங்க.''”
"இப்படிப்பட்ட பெருச்சாளிகளும் கோட்டையிலே இன்னும் சுத்துதா?''”
"பின்வாசல் வழியா கோட்டைக்குள்ளே நுழைய பல பெருச்சாளிகள் முயற்சிக்குது. முதல்வர் அலுவலகம் கவனமா இருக்கணும்னு தி.மு.க. தரப்பிலேயே சொல்றாங்க. மாநகராட்சியின் தலைமைப் பொறியாளரான நந்த குமார், முன்னாள் உள்ளாட்சி அமைச்சர் வேலுமணியின் வலது கரமாக இயங்கியவர். இவர்மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உண்டு. லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருக்கு. ஆட்சி மாற்றம் நடந்ததும் வேலுமணி சொன்னதன் பேரில், துறையில் நடந்துள்ள ஊழல் கோப்புகளை மறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்காராம். முன்னாள் அமைச்சர் ஐடியாப்படி, இந்நாள் அமைச்சரைப் பார்த்து சரணடையும் முயற்சியும் நடக்குதாம். இந்த ஊழல் அதிகாரிமேல லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கலைன்னா, நீதிமன்றதுக்குப் போகவும் தி.மு.க. தரப்பு தயாராகிவருது.''”
______________
இறுதிச்சுற்று
சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த பரிசு!
தமிழகத்தின் புதிய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கிறார் தி.மு.க.வின் சீனியர் வழக்கறிஞரும் ராஜ்யசபா முன்னாள் எம்.பி.யுமான சண்முகசுந்தரம். இவரது தந்தை ராஜகோபாலும் வழக்கறிஞர்தான். அவரிடம் பயிற்சிபெற்ற பின், மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனிடம் ஜூனியராக இருந்தவர். 1991-96 ஜெ. ஆட்சியில் டான்சி ஊழல் சம்பந்தமான ஆதாரங்களை ஆர்.எஸ்.பாரதியுடன் சேர்ந்து, இவர் தனது அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது, ஜெ. அரசின் கொடூரக் கூலிப்படையால் தாக்கப்பட்டு, உயிர்மீண்டார். சண்முகசுந்தரத்தை தாக்கியது ரவுடி வெல்டிங் குமார் என்பதை நக்கீரன் அட்டைப்படம் வெளியிட்டு அம்பலப்படுத்தியது. அப்போது அ.தி.மு.க.வில் இருந்த சென்னைப் புள்ளிகள் இப்போது தி.மு.கவுக்கு வந்துவிட்டனர். தி.மு.கவுக்கு நெருக்கடி தந்த ஜெயின் கமிஷன் விசாரணை உள்பட பலவற்றிலும் திறமையாக வாதாடியவர் சண்முகசுந்தரம். ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கிலும் இவரது பங்களிப்பு முக்கியமானது. நக்கீரன் மீது ஜெ. அரசு தொடுத்த பொய் வழக்குகள் பலவற்றில் வெற்றிபெற, துணையாக இருந்தவர் சண்முகசுந்தரம்.
-கீரன்